கார்ட்டூன்
பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா
ஒருவர் : நடக்க முடியாமல் நடந்து மேடையை நோக்கிப் போராறே அவரு யாரு?
மற்றொருவர்: நிஜமாகவே உங்களுக்குத் தெரியாதா ? அவருதான் அண்டை மாநிலத்தின் கவர்னர்.
ஒருவர் மீண்டும்: இந்தியாவில இளைஞர்களுக்கா பஞ்சம் .
மற்றொருவர் மீண்டும் : இவருபரவாயில்லை. பின்னாடி நம்ம முதலமைச்சர் சற்கர நாற்காலியில வராரு.தொடர்ந்து நம்ம மாநில கவர்னர் வறாரு பாருங்க. அவரை நாற்காலியில உட்காரவைத்து நாலு பேரு தூக்கிட்டு வாரங்க.
இந்தியா முன்னேற்ற முயற்சியில் பின்னேறிக் கொண்டிருப்பதற்குக் காரணம் வலுவான ,அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட தலைவர்கள் இல்லை என்பது மட்டுமில்லை, உலக அனுபவங்களை இளைஞர்களோடு பகிர்ந்து கொள்ளாமல் அறைக்குள்ளேயே காட்டிக் கொண்டு காலத்தை ஓட்டும் கிழங்களாக இருக்கின்றார்கள்.புதிய தலைமுறையினருக்கு அப்பா போன்ற ஆசிரியர்களே பழைய தலைமுறையினராக விளங்கும் போது கொள்ளுத் தாத்தா போன்ற அரசியல்வாதிகள் எப்படி ஆள விரும்புகின்றார்கள் ?
No comments:
Post a Comment