நில உச்ச வரம்பு, தேசிய உடமையாக்கம் போன்றவை போல கட்சி களுக்கு ம் உச்ச வரம்பு ஏற்படுத்தலாம். .ஒரு தனி நபர் சொத்துக்கும் உச்ச வரம்பு வைக்கலாம். .இதை புதிய சட்டத் திருந்தங்களினால் ஏற்படுத்தாவிட்டால் மக்கள் மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவதற்கான வாய்ப்பே மிகும் . ஒருவர் பல கோடி கோடி கோடி கோடி கோடி ரூபாய்க்கு அதிபதியாகவும் , ஒருவர் ஒன்று மின்றி அன்றாடங் காய்ச்சியாக்கவும் இருக்கின்றார் . இந்த ஏற்றத் தாழ்வு இந்தியாவில் மட்டுமே அதிகம். மக்களுக்கான சட்டங்களை நீதிபதிகளின் குழு மட்டுமே நிறுவவேண்டும் ,மக்களால் புரிதல் இன்றி தேர்ந்தெடுக்கப்படும் அரசியவாதிகளால் அல்ல. ஏனெனில் அவர்களுடைய அடிப்படையான நோக்கமே வேறு .
creative thoughts
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Saturday, August 9, 2025
Thursday, August 7, 2025
பிறரால் பார் க்கப்படுமாறு வெளிப்படையச் செய்யப்படும் பணிகளில் மட்டும் பொறுப்பையும் ,நேர்மைத்தனத்தையும் காட்டும் பொதுமக்களுக்கான அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பிறரால் பார்க்கமுடியாத சூழ்நிலைகளில் அப்படியே இருப்பதில்லை . அவர்கள் செய்யும் தவறுகளை மறைப்பதற்கு அந்த நடத்தையை ஒரு விளம்பரமாகக் கொள்கின்றார்கள்
Saturday, August 2, 2025
ஒரு நாட்டில், ஒரு மாநிலத்தில் நல்லாட்சி செய்ய இரண்டு கட்சிகள் போதும். அரசியலுக்கு வர விரும்பும் புதியவர்கள் இருக்கும் கட்சிக்குள் எதாவது ஒன்றில் சேர்ந்து சேவை புரியவேண்டும்.பணம் சாம்பாதித்து விடவேண்டும் என்ற எண்ணத்தால் அரசியலில் நுழைபவர்களுக்கு மூத்தவர்கள் வழி கொடுக்காததால் புதிய கட்சி தொடங்குகின்றர்கள் அல்லது வளர்ந்த கட்சியை விட்டுவிட்டு வளரும் கட்சியில் இணை கின்றர்கள். இன்றைக்கு பல நூறு கட்சிகள். தங்களுக்கு பதவியும் அதிகாரமும் கிடைத்துவிட்டால் பொருள் சாம்பாதித்து விடலாம் என்று மக்களுக்கு சேவை செய்வதைவிட மாற்றான் கட்சியை குறை கூறுவதையே தொழிலாகாக் கொண்டுள்ளார்கள். அதிக எண்ணிக்கை யில் கட்சிகள் கொண்ட நாடு வளம் பெற்றதாக வரலாறு இல்லை.
Friday, August 1, 2025
நான் நேற்று கண்டனூரில் நடந்த அக்கினி ஆத்தாள் படைப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் படைப்புப் பங்காளிகள் ஆண்களும் பெண்களுமாக ஆயிரம் பேர் ஓவ்வொரு ஆண்டும் கூடி மூதாதையருக்கு படைத்து மகிழ் கிறார்கள்.இது எனக்கு சமுதாய நலம் சார்த்த ஒரு சிந்தனையைத் தூண்டியது . ஒவ்வொரு ஊரிலும் , கிராமங்களிலும் , அங்குள்ள அணைத்து இன மக்களும் ஒன்று கூடி படையல் விழா நடத்தலாம்
இதற்கு பொறுப்பாளர்கள் அப்பகுதி மக்களே. இவர்களில் மூன்று அல்லது நான்கு பிரிவினராகப் பிரித்து அவர்களுள் ஒருவரைச் சுற்றுமுறையில் தலைமை ஏற்கச் செய்து ஒரு பிரிவினர் சுற்றுமுறையில் வரவு செலவுக் கணக்கு பார்ப்பது , ஒரு பிரிவினர் உணவு சமைப்பதற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது, பந்தி பரிமாறுதல் , ஒரு பிரிவினர் சமைத்தல் , முன்னேற் பாடு செய்தல் இப்படி வேலைகளைப் பிரித்துக் கொண்டு செய்யலாம். இரவு ஒரு பெரிய நிலைக் கண்ணாடி முன்பு நின்று ஒவ்வொருவரும் ஜாதி மத மற்றும் இனப்பகுப்பாடின்றி பிரார்த்தனை செய்யலாம். அப்போது ஒவ்வொருவரும் அவரவர் வீடு மங்கள நிகழ்ச்சிகளை மற்றவர்களுக்கு அறிவிக்கும்படி இனிப்புகளையும் பரிசப் பொருள்களையும் வழங்கலாம் .இப்படி கூடி மகிழும் போது மனிதநேயம் மேம்படுகிறது. ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதை மற்றவர்களிடமிருந்து அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கின்றது. இன்னும் நிறைய விதி முறைகள் இருக்கின்றன. இதை மக்களுக்கான மக்கள் அறக்கட்டளையாக அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கல்விக்கடன் , வழங்கலாம், கைத்தொழில் உற்பத்திப் பொருட் களை விளம்பரப்படுத்தலாம் , விவரம் தெரிந்தவர் கள் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கலாம் . இன்னும் இன்னும் எவ்வளவோ இருக்கு .
Wednesday, July 30, 2025
நேற்றைய பசிக்கு இன்னும் ஓராண்டு கழித்துஉணவு கிடைத்தமாதிரி த்தான் நமது தீர்ப்புக்கள் இருக்கின்றன. . விரல்நுனியில் அனைத்து விவரங்களும் என்ற காலத்தில் நாம் நம்மையே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றோம் . கோர்ட் பிறரை முழுமையாகச் சார்ந்திராமல் தனித்து இயங்க வேண்டும். ஒவ்வொரு கோர்ட்டுக்கும் ஒரு சில காவலர்களை நியமித்து அவர்களே கோர்ட் விருப்பதிற்கில்லை ஏற்ப துப்புத் துலங்கவேண்டும்.
Tuesday, July 29, 2025
அரசியல் என்பது மக்களுக்கான ஒரு பொது நலச்சேவை. அரசியலுக்கு வந்துவிட்டால் பாகுபாடின்றி ஒருபாற்கோடாமையைப் பின்பற்றவேண்டும் . மக்கள் எல்லோரும் ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. ஒரு கட்சியின் தலைவர் வேண்டியவர்களுக்கு மட்டுமே நன்மை செய்து வேண்டாதவர்களைப் புறக்கணிக்கக்கூடாது. ஆட்சியாளருக்கு எதிரி நாட்டுத் தலைவனே எதிரி ,தான் ஆளும் நாட்டுமக்களில் யாரும் எதிரியில்லை என்பதை உணர்ந் துக்கொள்ளவேண்டும்.வேண்டாதவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருப்பது அரசியல் இலக்கணம். . அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதி இன்றளவும் இந்தியாவில் என் கண்களுக்குத் தென்படவில்லை .
Sunday, July 27, 2025
காரணமின்றி வெறும் காலத்தால் மட்டும் நம்முடைய வாழ்க்கை விலைவாசி உயர்வால் நலிவடைந்து வருகின்றது என்றால் அதற்குக் காரணம் சமுதாயத்தின் வளர்ச்சி உண்மையானதாகவும் உறுதியானதாகவும் இல்லை என்பதுதான் . ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய உழைப்பில் வாழவும் முன்னேற்றம் காணவும் முயலும்போது இது நிகழ்கின்றது . நேர்மையான கல்வி ,அனைவருக்குமான கல்வி , நேர்மையான ஆட்சிமுறை மாறும் நிர்வாகம் மட்டுமே சமுதாயம் தழுவிய நேர்மையான மாற்றத்தை க் கொண்டுவரமுடியும் .