Saturday, March 8, 2025

 பதவி கிடைக்காமல் பரிதவிக்கும் பல மூத்த ஆரசியல்வாதிகள் , சினிமாவில் பெரும் பொருள் சம்பாதித்துவிட்டு வாய்ப்பின்றி கட்டாய ஓய்வு பெரும்நாளில் அரசியலுக்குத் தாவும் நடிகர்கள் , அரசியலில் எப்படியாவது நேர்மைத்தனத்தை புகுத்திவிட மாட்டோமா என்று நிறைவேறாத கனவுகளோடு எந்தப்பின்புலமும் இன்றி  ஆழந்தெரியாமல் அரசியலில் காலைவிடும் விமர்சகர்கள்  எல்லோரும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரே செயல் முறையைத்தான் பின்பற்றி வருகின்றார்கள் .இதைக்கலாங்காலமாய்  கண்டு மீண்டும் மீண்டும் ஏமாந்து போகும் மக்கள் பெரும்பாலும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர்களுடைய பேச்சையும்  செய்முறைகளை கேலிபேசுகின்றார்கள் அல்லது எதிர்வாதம் செய்கின்றார்கள் .

உடைந்த மண்பானையை ஓட்டுவது எளிதில்லை. கெட்டுப்போன சமுதாயத்தை சீர்படுத்தி நேர்மைத்தனத்தை நிலைநாட்டுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. அது உண்மையில் மற்றொரு சுதந்திரப்போராட்டமாகத்தான் இருக்கும் . சமுதாயத்தில் நேர்மைத்தனம் தேவை என்பதற்கான புரிதல் மக்களிடம் சிறிதளவும் இல்லை. சாதி ,மதம், மொழி  எனப் பல்வேறு காரணங்களினால் மக்கள் காலங் காலமாய் பிரித்தாளப்பட்டு வந்திருக்கின்றார்கள் . வாழ்வாதாரம் நலிவந்தடைந்து வருவதால் நேர்மைத்தனம்  அவர்களுடைய எண்ணங்களில் எள்ளளவும்  இல்லை 

ஊழலை ஒழிப்பதுநிச்சியமாக  தனி மனிதர்களால் முடியாது. ஏனெனில் இது ஆட்சியாளர்களின் வருமானமாக இருக்கின்றது .எனவே இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் ஆட்சியில் பங்கேற்கவேண்டும் . அரசியலில் ,சமுதாயத்தில் ஊழலை ஒழிப்பதையும் , நேர்மைத்தனத்தை வளப்படுத்துவதையும்  ஒரே நாளில் நிகழ்த்திவிடமுடியாது என்பதை இவர்கள் உணரவேண்டும் . புதிதாய் அரசியலுக்கு வருபவர்கள் ஏற்கனவே அரசியலில் இருப்பவர்களை விமர்சிப்பதை  மட்டுமே வெற்றிக்கான யுக்தியாக க் கொண்டுள்ளார்கள். அவர்கள் செய்த ஊழல்களை பட்டியலிடுவதால் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதில்லை. அதைத் தடுப்பதற்கான சட்டரீதியிலான வழிமுறைகள் எல்லோரும் அறியுமாறு செய்யவேண்டும் . ஊழலை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும் .

புதிதாக அரசியலில் வருபவர்கள்  அரசியலில் என்ன மாற்றங்களைச் செய்யப்போகின்றோம் , எப்படி செய்யப்போகின்றோம் , ஏன் செய்யப்போகின்றோம்   என்ற முழுமையான விவரங்களை மக்கள் அறியச்சொல்லவேண்டும் . அதற்கான திட்டங்கள், செயல்முறைகள், நீதி போன்றவற்றைத் தெரிவிக்கும் போதுமக்களிடம் நம்பிக்கை மலர்வதை பார்ப்பீர்கள் .இதைப்பற்றி அடிக்கடி மக்களிடம் பேசுங்கள் , கடடுரைகள் எழுதி வெளியிடுங்கள். போலித்தனமான விளம்பரம் செய்யாதீர்கள் . உங்களுடைய சொற்கள் உண்மையானவை  என்ற நம்பிக்கை மக்களிடம் வரும்வரை இதை மட்டுமே செய்யுங்கள் . இதற்கு எதிர்ப்பிருந்தால்  அதற்கு தகுந்த விளக்கம் அளியுங்கள் . அதன் பிறகு நீங்கள் செய்ய விரும்பிய அரசியல் மாற்றங்களை நீங்கள் செய்யவேண்டியதில்லை . அதை மக்களே பார்த்துக்கொள்வார்கள். அத்தகைய மக்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் எதிர்த்தரப்பினரால்  எதுவும் செய்யமுடியாது போகும் .இந்த மாற்றங்கள் மெதுவாக நடைபெறும் என்பதால் அவசரப்பட்டு செய்யும் முயற்சிகள் செயலைப் பாழ் படுத்திவிடும் .  


Sunday, March 2, 2025

 அரசியல் பாதையில்  கொள்ளையடிப்பதை மறைக்கவே  மக்களுக்கு இலவசம் வழங்குவதாக அறிவித்து  ஒரு சிலருக்கு  மட்டும் கொடுத்துவிட்டு  மக்களை அலையவிட்டு , தங்களுக்கு அதிருஷ்டம் இல்லை அதனால் கிடைக்கவில்லை என்று அவர்களாகவே நொந்துகொள்ளுமாறு செய்கின்றார்கள். இந்த இலவசமும் சரி , ரேஷன் கடை விநியோகமும் சரி எதுவும் முழுமையாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை .தவறு செய்து மக்களால் பிடிபட்ட அரசு ஊழியர் உண்மைகளை உளறிக் கொட்டிவிடக்கூடாது  என்று ஊதியத் தோடு விடுப்பு அளித்து விட்டு மக்களைத் திருப்திப்படுத்த பணியிடை நீக்கம் என்று மக்களை ஏமாற்றுகிறார் கள். மக்கள் ஏமாற்றினால் அரசாங்கம் அவர்களை இனமறிந்து தண்டிக்கும் . ஆட்சியாளர்கள் தவறுசெய்தால்  தண்டிப்பதற்கு நம்முடைய அரசியல் அமைப்பில் வழியில்லாதிருக்கின்றது.ஆட்சி என்பது ஒரு சேவையாக இல்லாமல் ஒரு  தொழிலாக இருக்கும் வரை இந்த அமைப்பினால் மக்களுக்கு மேலும் மேலும்  ஏமாற்றங்களே பரிசாக அளிக்கப்படும்.

.மக்களுக்காக நேர்மையாகப் பணியாற்றும் ஆட்சியாளர்களும்  அரசு ஊழியர்களும்  இருப்பதற்கான  ஆட்சியியல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.  ஆட்சியில் அதிகாரத்துடன் கூடிய மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். மையத்தில் மக்கள் சபை போல மாநிலத்திலும் ஒரு மக்கள் சபை அமைக்கலாமே . இதில் கட்சி சார்பில்லாத பலதுறை சார்ந்த அறிஞர்கள்  , நன்மக்கள்  உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் . பல்கலைக்கழக பேராசிரியர்கள், பரிசு பெற்ற எழுத்தாளர்கள் , ஆன்மிக வாதிகள் , எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காகத்  தொண்டாற்றும்  மருத்துவர்கள் , பிரதமரின் விருது பெற்ற காவலர்கள் , விளையாட்டு வீரர்கள் , என ஒரு நூறுபேர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி அரசின் எந்த நலத்திட்டமும் இந்தக் குழுவின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் .என்று வரைமுறைப்படுத்தலாம்.  For that we can reduce the number of ministers in the ministry .


Tuesday, February 25, 2025

 ஒரு நாட்டின்  வளர்ச்சிஎன்பது நாட்டு மக்களின் ஒருமித்த வளர்ச்சியே. கருத்து வேறுபாடுகளை ஒருபாற்கோடாமை இன்றி பேசித் தீர்த்துக்கொள்ளலாம் . அப்போது ஒருவருக்கு ஏற்படும் இன்னல்களையும் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துப் பேசினால் தீர்வு ஏற்படும். சுயநலம் ஒருவரைத் தீயவனாக வளர்த்துவிடுகின்றது. தீயவர்கள் பெரும்பான்மையினராக வளரும் போது தீயவர்களேஆட்சிப்பொறுப்பிற்கு வருகின்றார்கள் . தீயவர்கள் ஆள்பவர்களாக இருக்கும் போது சமுதாயத்தில் தீயவர்களே பெரும்பான்மையாகி விடுகின்றார்கள். தீயவர்களாக இருந்துகொண்டு தீயவர்களை வளர்த்து விடுவதால் காலப்போக்கில் தீயவர்கள் பெரும்பான்மையாகி ,அந்தப் பெரும்பான்மையினைத் தக்கவைத்துக்கொள்ள ஒன்று சேர்ந்து செயல்படு கிறார்கள் . அவர்களுடைய ஒற்றுமையில் நன்மக்கள் அச்சப்பட்டு முடக்கப் பட்டுவிடுகின்றார்கள் .இன்றைக்கு நேர்மையானவர்கள் எவரும் அரசியலில் ஈடுபட விரும்புவதில்லை தப்பித் தவறி வந்தவர்கள் தீயவர்களாக மாற்றப்பட்டு விடுகின்றார்கள் .மாறாதவர் பிழைத்திருக்கவேண்டுமானால் அரசியலை விட்டு விலகவேண்டும்.  இல்லாவிட்டால் மரணத்தை தழுவ நேரிடும்.

நேர்மைத்தனம் விளம்பரம் தேடுவதில்லை . விளம்பரம் தேடும் நேர்மை உண்மையான நேர்மையாக இருப்பதில்லை . விளம்பரமில்லாத நேர்மை மக்களைச் சென்றடைவதில்லை  என்பதால் அதை எதிர்ப்பது விளம்பரத்தால் வாழும் தீயவர்களுக்கு எளிதாக இருக்கின்றது . தீயவர்கள் இந்த அளவிற்கு முன்னேறி வந்ததிற்குக் காரணம் அவர்களுக்குள் இருக்கும் புரிதலுடன் கூடிய உள்ளார்ந்த ஒற்றுமைதான் . உழைப்பின்றி கிடைக்கும் வருமானத்தில் நஷ்டம் என்பதே இல்லை . இலாபத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு விடுவதால்  இந்த ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுவதில்லை . வருமானம்  சீனியர் ,ஜூனியர் அடிப்படையில் பங்கிடப்படுகின்றது . இதில் மாற்றம் ஏற்படும்போது அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்கின்றார்கள். கட்சி மாறுவதும் , புதிய கட்சி தொடங்குவதும் இந்த நிலையின் பின்விளைவுகளே. 

நேர்மையான அரசியல் இந்திய நாட்டிற்குத் தேவை. அதை நேர்மையான  ஒருவரால் மட்டும் தரமுடியாது . நேர்மையானவர்கள் கூட்டு முயற்சியால்       மட்டுமே தரமுடியும் .நேர்மையானவர்கள் ஒன்று சேராவிட்டால் இது ஒருநாளும் கைகூடாது.     


Monday, February 24, 2025

 இன்றைக்கு எல்லோருக்கும் தீர்வு காணமுடியாமல் இருக்கும் பல பிரச்சனைகளுள் ஒன்று விலைவாசி உயர்வைச்சமாளிப்பது .விலைவாசி ஏற்றத் தாழ்வு என்பது உற்பத்தி  மற்றும் தேவை இவை களுக்கிடையே உள்ள இடைவெளியின் அளவைப்பொறுத்தது என்றுதான் முன்பு பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள்.  உண்மையில் அவை மட்டும்தான் விலைவாசியைத் தீர்மானிக்கின்றாதா  என்றால் அது தவறு என்றுதான் தோன்றுகின்றது . ஏனெனில் அவற்றோடு மட்டும் தொடர்புடையதாக இருந்தால் விலைவாசி ஒவ்வொருநாளும் எல்லைமீறி உயராது. சிலசமயம் உற்பத்தி குறையும் போது உயரும் . கூடும்போது குறையும். விலைவாசி உயர்வுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதையே இவை சுட்டிக்காட்டுகின்றன .தேவை அதிகம் என்றால் தொழித்துறையில் உற்பத்தி பெருகி தொழில் வளர்ச்சிப்பாதையில் முன்னேறி விலைவாசியை மட்டுப்படுத்தியிருக்கும் அந்தமுன்னேற்றம் அரசியல் காரணங்களினால் தடைப்படும் போது விலைவாசி கூடுகின்றது . தொழில் தொடங்க இருக்கும் நிபந்தனைகளை இலஞ்சம் வாங்காமல்  மேலும் எளிமைப்படுத்தினால்  தேவைக்கேற்ற உற்பத்தியை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளமுடியும் . தேவை இயல்பானதாக இருக்கும் போது பொருளின் விலையை உயர்த்தி அதிகம் பொருள் சம்பாதிக்க விரும்பும் வர்த்தகர்கள் கூடுதலாக கையிருப்பில் இருக்கும் பொருளை ப்பதுக்கி வைத்து  உற்பத்தி குறைவு  தேவை அதிகம்  என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி  விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் . விலை உயர்விற்கு கூடுதல் செலவோ அல்லது உழைப்போ காரணமாக இருப்பதில்லை. முன்பு நேர்மையான அரசாங்கம் பொருட்களை பதுக்கிவைப்பபவர்களை கண்டுபிடித்து தண்டித்தார்கள் . இன்றைக்கு அதன் மூலம் ஆதாயம் தேடிக்கொள்கின்றார்கள். மேலும்  விற்பனை விலை உயர  கூடுதல் முயற்சியின்றி GST  உயர வருவாய் அதிகரிப்பதாலும் ,இலஞ்சம் பெற வாய்ப்பு அதிகரிப்பதாலும் மக்களிடம் கிளர்ச்சியைத் தூண்டிய, இலஞ்சம் பெறமுடியாத  ஒரு சில முறைகேடுகளைமட்டுமே தடை செய்கின்றார்கள் .

  மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்காத ஆட்சியாளர்களின் சுய நலத்திற்க்காக உருவாக்கிய  அரசாங்கத் திட்டங்களுக்காக வரியை அவ்வப்போது அதிகரிக்கின்றார்கள் . இது விலைவாசியை நேரிடையாகவும் மறைமுக மாகவும்  பாதிக்கின்றது .கல்விக் கட்டணம், போக்குவரத்துக்கட்டணம் , மருத்துவச் செலவு , வீட்டு வரி ,மின்சாரக் கட்டணம் போன்றவை அதிகரிக்கும் போது வர்த்தகர்கள் முன்பு பெற்றஅதே இலாபத்தை த் தக்கவைத்துக்கொள்ள உற்பத்திப் பொருளின் விலையை உயர்த்திவிடுகின்றார்கள் . இதனால் வரி உயர்வின் பாதிப்பு மக்கள் மீது கூடுதலாகிறது . அதாவது வர்த்தகர்களின் இழப்பை  மக்களே ஈடுசெய்ய வேண்டியிருக்கின்றது .,விலைவாசி உயர்வு தாறுமாறாக இருக்கும்போது அதன் தாக்கம் மக்களிடையே எதிர்மறையாக இருக்கின்றது. விலைவாசி ஏற்றத்தை நேர்மையான  ,இயல்பான சம்பாத்தியத்தால் ஈடுசெய்ய முடியாததால் மக்கள் பெரும்பாலானோர் தவறான வழிகளில் பொருள் ஈட்டும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள் .உண்மையான காரணமின்றி விதிக்கப்படும்  கூடுதல் வரிவிதிப்பு அரசியல்வாதிகளுக்கு  நலம் பயக்கலாம் . நாட்டின் நலத்தை மேம்படுத்துவதில்லை .

Saturday, February 22, 2025

 மொழி என்பது ஒருவர் தன்தனித்திறமைகளை   மொழி என்பது ஒருவர் தன் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கருவி . எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொது ஊடகம் . கருத்துப்பரிமாற்றங்களுக்கு ஒரு மொழி போதும். ஆனால் மக்களில் ஒரு பிரிவினர் தங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்கொள்ள விளைந்த போதுபல மொழிகள் உண்டாக்கப்பட்டன . மொழிகள் மூலம் தொழில்  இரகசியங்களை பாதுகாத்துக்கொண்டார்கள் . ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட கருவி போதும். பல கருவிகள் தேவையில்லை . பல கருவிகள் இருந்தால் பணிகளில் சுயசுய சிந்தனை ,  ஏற்படுவதில்லை  .  (A bad workman always quarrels with his tools, too many tools make a labour to become a bad workman) விலையுயர்ந்த ஒரு கருவியை விலைக்கு வாங்குவதால் மட்டும் அந்தக்கருவியை எல்லா நேரங்களிலும் பயனுறுதிறனுடன் பயன்டுத்தும் திறமை வந்துவிடுவதில்லை . அதற்குப் பயிற்சிவேண்டும் .பல மொழிகளை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தேவைஇல்லாத வளர்ச்சி .அதனால் ஒருவர்க்கு கூடுதல் திறமையை பெறுவதற்கான வாய்ப்பு மிகச் சொற்ப அளவு கூடலாம் அனால் தனித்திறமை மொழியால் மட்டுமே கிடைத்துவிடுவதில்லை. திறமைகளும்  , மனித வளமும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத நாட்டில் கூடுதல் மொழியைக் கற்றுக்கொள்ள கட்டாய ப் படுத்துவது மாணவர்களுக்கு கூடுதல் சுமை . மொழியைக் கற்றுக்கொள்ளும் கட்டாயத்தில்  திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புக்களை த் தவறவிட்டுவிடுவதற்கு வாய்ப்பு கள் அதிகம் .  தாய்மொழி மற்றும் ஆங்கிலம்            கட்டாயம் என்றும் மற்றொரு மொழி கற்க விரும்புகின்றவர்கள் தனி நிறுவனங்கள் மூலம் பெறலாம் என்றும் மொழிக்கொள்கையை வகுத்துக்கொள்ள வேண்டும் .


Thursday, February 13, 2025

 கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சில அழிவுப்பூர்வமான மாற்றங்கள் ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளன .மக்கள் எல்லோரும் உள்ளூர சுயநலமிக்கவர்களாக வளர்ந்து வருகின்றார்கள் . சமுதாய அக்கறையை யாரிடமும் காணமுடியவில்லை . அதை மூடிமறைக்க நல்லவர்கள் போல வேஷம் போடுகின்றார்கள் . ஆதாரமின்றி மற்றவர்களைக் குறைகூறுகின்றார்கள் . பெரிய குற்றவாளிகளை விட்டுவிட்டு பலன் கேட்டுப்பெறுகின்றார்கள் . சின்னச் சின்னச் தவறு செய்பவர்களை த் தேடித்கண்டுபிடித்து குன்றவளிகள் என்று தண்டிக்கின்றார்கள் . இந்த பரிணாம வளர்ச்சி எங்கே கொண்டுபோய் விடுமோ ?

Wednesday, February 12, 2025

 மக்கள் தவறான வழிகளில் குறுகிய காலத்தில் உழைப்பின்றி அதிகப் பொருள் சம்பாதிக்க விரும்புகின்றார்கள் . இதற்கு இந்திய அரசியல்வாதிகள் கற்றுக்கொடுத்த பாடம் அரசியலை ஒரு தொழிலாக ஏற்றுக்கொள்வதுதான் .ஆட்சியாளர்கள் மட்டுமே தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் ,பாதுக்காவலர்களாகவும் இருக்க முடியும் என்பதால் ஆளும் கட்சியில் தொண்டர்களாக இருந்துகொண்டு பலனடைகின்றார்கள் . பலனடைபவர்கள் பங்கு கொடுக்கவேண்டும் என்பது உள்ளார்ந்த ஒப்பந்தம் .பலனும் பங்கீடும் ஒருவருடைய அரசியல் சீனியாரிட்டியை க்காட்டும் அளவுகோலாகும். ஒருவருடைய சீனியாரிட்டியை முந்திக்கொண்டு வேறொருவர் முந்திச் செல்ல கட்சித் தொடர்கள் அனுமதிப்பதில்லை  என்றாலும் பலன் மற்றும் பங்கீடுகளில் ஏற்படும் பிழைகளால் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கட்சி தாவலையும் புதிய கட்சிகளின் உதயத்தையும் அவ்வப்போது செய்கின்றார்கள் . நேர்மையான அரசியலை மேற்கொள்ளாத ஆட்சியாளர்களும் , மக்களின் ஆதரவு தனக்கே இருக்கின்றது என்பதை வெளிக்காட்ட இவர்களைப்போன்ற கட்சித் தொடர்களை விளம்பரமாக்கிக் கொள்வதும் , அவர்களால் சமுதாய வீதியில் ஏற்படும் வேண்டாத மாற்றங்களைக் கண்டுகொலாமல் இருப்பதும் இந்திய மக்களால் இன்னமும் இனமறிந்து கொள்ளாத கொரோனா  வைரஸ்ஸாகும் .  மக்களின் நலம் காக்க இரண்டு காட்சிகள் போதும்- ஒரு கட்சி ,ஒரு எதிர்க்கட்சி.  தன்னலம் மிகும் போதுதான் கட்சிகள் பலவாகின்றன