தமிழ்நாடு மாநிலம் தழுவிய முதியோர் இல்லமாகவும் ,அனாதை இல்லமாகவும் மாறிவருகின்றது- ஆதரவற்றோருக்கு ,பெண்களுக்கு உரிமைத் தொகை, இலவச பேருந்து ,பள்ளிகளில் இலவச உணவு , இப்படி பல திட்டங்களினால் .மக்களின் தனித் திறமையை சேவைநோக்குடனும் , வசதிகளை மேம்படுத்தியும் ஊக்குவிக்காமல் தன்னிறைவு பெறவேமுடியாது.
creative thoughts
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Wednesday, February 11, 2026
Tuesday, February 10, 2026
விஞ்ஞானப் பூர்வமாக ஊழலைச் செய்து மக்களையும் நாட்டையும் தொடர்ந்து ஏமாற்றி வரும்போது , சட்டமும் நீதி மன்றமும் விஞ்ஞானப் பூர்வமாகச் சிந்தித்து செயல்படவேண்டும். இல்லாவிட்டால் மக்கள் அரசின் மீது நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் . அரசாங்கத்தின் அனைத்து அமைப்புக்களும் மக்களின் நல வாழ்விற்கு உறுதியளிப்பதற்கு மக்களால் ஏற்படுத்தப்பட்டவை . அரசியல்வாதிகளை விட நீதிமன்றமே அதிக அதிகாரம் கொண்டதாக இருக்கவேண்டும். நேர்மையானவர்களே நீதிபதிகளாகவும் , அரசாலும் நீதிபதிகளாலும் அங்கீகரிக்கப்பட்டவர்களே வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்படவேண்டும் . அதிகாரம் தவறானவர்களின் கைகளில் அடைக்கலமாகக் கூடாது என்பதில் நாம் எல்லோரும் விழ்ப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
Sunday, February 1, 2026
ஜனநாயக நாட்டில் நாடு என்பது தலைவர் இல்லை. அரசு என்பது நாட்டு மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு. தலைவர் சொல்லிவிட்டார் என்று செயல்களைக் கண்மூடித்தனமாக செய்யாமல் சமூக நீதி , நியாயம் மற்றும் நேர்மை கருதி அரசுப் பணியாளர்கள் செயல்படவேண்டும் . எல்லோரும் எல்லாக் காலங்களிலும் சமமாகவும் சுகமாகவும் வாழ இதுவே வழிவகுக்கும்
Friday, January 30, 2026
தமிழக முதல்வர் உங்கள் கண்களுக்கு எதிரியாக இருக்கலாம் . நீங்கள் தமிழகத்தை ஆள விரும்புவதற்கு அவர் தடையாக இருப்பதாக நினைக்கலாம் . அதற்காக தமிழக மக்கள் எல்லோரையும் எதிரியாகப் பார்ப்பது தவறு .ஆட்சியில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டி நேர்படுத்துவதே அரசியல் தர்மம் . மாநில அளவிலேயே பேச்சுவார்த்தை நடத்த முடியாத ஒரு நாட்டின் தலைவர் உலக அளவில் சுமுகமான பேச்சுவார்த்தையை எப்படித் தொடரமுடியும் பெரும்பாலான சூழ்நிலைகளில் பேசாமடந்தையாக இருந்துவிடுகின்றார்கள் .
Thursday, January 29, 2026
ஆள்பவர்களுக்கான ஒரு கதை
ஒரு ஊரில் ஒருவீதியில் அடுத்தடுத்த வீட்டில் இரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரே பிள்ளை . ஒருவர் தன்பிள்ளையை உயர் படிப்பு படிக்கவைத்து , பயிற்சி அளித்து உயர்ந்த வேளையில் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கினார். அவருடைய திட்டம் என்பது இதுதான் . திட்டத்தின் செலவு பிள்ளைகளுக்கு எதிர்கால வரவானது. மற்றொருவர் தன் பிள்ளையை செல்லமாக வளர்ப்பதாகக் கருதி ஒவ்வொரு நாளும் ஊர் சுற்றி வர , மோட்டார் சைக்கிள், கார் , நாகரிக ஆடைகள் என வாங்கிக் கொடுத்து வளர்த்தார் . படிப்பு சரிவர இல்லாததால் அவனுடைய எதிர்காலம் இருண்டகாலமானது . தன்னுடைய செலவுகள் அனைத்தையும் வயதான காலத்திலும் தந்தையே கொடுக்கவேண்டும் என்று முரட்டுத்தனத்தை வளர்த்துக்கொண்டான். இவரும் திட்டமிட்டு செலவு செய்தார் . ஆனால் வரவில்லாத செலவுகள். .வரவில்லாத செலவுகள் குடும்பத்திற்கு சுமை . நாட்டிற்கும் சுமையே
Monday, January 26, 2026
நீண்ட காலம் எல்லோரும் முயன்றும் ஊழல் இன்னும் ஏன் ஒழிக்கமுடியாமல் இருக்கின்றது? உண்மையில் ஒவ்வொருவருடைய சிந்தனையும் வெவ்வேறாக இருப்பதால் இணைந்து செயல்படும் போக்கு ஊழல் செழிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது . வாய்ப்புக் கிடைத்தவர்கள் கூட்டணி ,அதிகாரம் , அரசியல் செல்வாக்கு போன்றவற்றால் ஊழலைச் செய்துவருகிறார் . வாய்ப்புக் கிடைக்காதவர்கள் வாய்ப்புக்களைத் தேடிக்கொண்டே பிறர் செய்யும் ஊழல்களை எதிர்க்கிறார்கள் . இது போலித்தனமான எதிர்ப்பு என்பதால் ஊழல் ஒழிவதற்கான வாய்ப்பின்றி வளர்ந்துவருகின்றது.
Friday, January 23, 2026
மக்களுக்கு என்னென்ன இலவசம் எப்போது கொடுக்கவேண்டும் என்று நானே முடிவுசெய்வேன் என்பதை ஒத்துக்கொள்ளலாம் . ஆனால் அரசு சார்ந்த எல்லாப் பதவிகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை இறுதி முடிவு செய்யலாம் .ஆனால் பட்டியலையே நான்தான் செய்வேன் என்பது தவறு. பொதுத் தேர்தலுக்கு தொகுதிகளில் நிறுத்தவேண்டிய வேட்பாளர்களை குழுவின் உதவியின்றி நானே முடிவு செய்வேன் என்பது தவறு . பரிசும் விருதும் வழங்கும் விழா நீங்கள் ஒருவரே முடிவு செய்யலாம் ஆனால் பரிசுக்கு ம் விருதுக்கும் உரியவரைத் தேர்வுசெய்வது ஒரு தகுதியான குழுவேயன்றி தனியொருவர் இல்லை. அரசின் அணைத்து நிகழ்ச்சிகளும் செயல்பாடுகளிலும் ஒருவரின் முடிவால் மட்டுமே நிகழும் என்றால் அரசு ஊழியர்களை அடிமைகளாக மட்டுமே செயல்படமுடியும். உயர் அதிகாரிகரிகள் கண்காணிக்கலாம். பணிக்கு அவர்களைத் தேர்வு செய்துவிட்டு அவர்களுடைய அடிப்படை வேலையையே தானே செய்வது எதோ உள்நோக்கம் இருக்கும் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது