creative thoughts
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Tuesday, May 26, 2026
பன்மொழிப் புலவர்கள் செயல் வீரர்களாகவோ திறமையானவர்களாகவோ இல்லை. செயல் வீரர்கள் , திறமையானவர்கள் பன்மொழி அறிந்தவர்களாக இல்லை. மொழி பெயர்ப்பாளர்கள் , பிற மொழிகளில் உள்ள ஆய்வறிக்கைகளை புரிந்து கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள், பிற மொழி பேசும் நாட்டில் பணியாற்றப் போகின்றவர்கள் தான் மூன்றாவது மொழி படிக்கவேண்டும் . எல்லோரும் மூன்று மொழி படிக்கவேண்டும் என்று சொல்வது மாணவர்களுக்கு கூடுதல் சுமை. திறமையை வளர்க்கப் பாருங்கள் . அது கூடுதல் மொழி அறிவால் வருவதில்லை. மாணவர்களிடம் திறமையை வளர்க்க முயற்சி மேற்கொள்ளாவிட்டால் மக்களை அவர்கள் முட்டாளாவும் அடிமைகளாகவும் வைத்திருக்கவே விரும்புகின்றார்கள் என்று அர்த்தம் . சட்டம் தான் புரியோடிப்போன இந்த குறையை சரிசெய்யவேண்டும்
இரு வேறு பொருள்தரும் சொற்றொடர்கள்
முனைவர் மெ.மெய்யப்பன் இயற்பியல் பேராசிரியர் (நிறைவு) அழகப்பா அரசு கலைக்கல்லூரி,காரைக்குடி
மொழி என்பது சிந்தனையில் பூக்கின்ற எண்ணங்களையும் கருத்துக்களையும் பிறருக்குத் தெரிவிக்க அல்லது பிறர் மூலம் தெரிந்து கொள்ள உதவும் ஓர் இடையூடகம். மக்களின் பேச்சு வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்களே காலப்போக்கில் தரப்படுத்தப்பட்டு வழக்காற்றில் நிலைத்து மொழியின் சொல்லகராதியில் இடம் பெற்றன. தமிழ் மொழியில் இன்றைக்கு எல்லோராலும் கையாளப்படும் சொற்கள் யாவும் நம் முன்ர்களின் மொழியியல் சார்ந்த அனுபவங்களே . மக்களின் முன்னேற்றம் என்பது அவர்கள் ஒருவரோடொருவர் எவ்வளவு அதிகமாகக் கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கின்றார்கள் என்பதோடு தொடர்புடையதாக இருப்பதால் மொழியின் வளமே சமுதாயத்தின் வளத்தைத் தீர்மானிக்கக்கூடிய ஓர் உள்ளார்ந்த அடிப்படைக் காரணமாக இருக்கின்றது எனலாம் .மொழியின் வளமின்றிச் சமுதாயமும் , சமுதாய வளமின்றி மொழியும் வளர்ச்சியடைவதில்லை . மொழிவளர்ச்சி என்பது இருப்பதை பாதுகாப்பது என்பது மட்டுமில்லை அதன் புத்தாக்கத்திற்கும் துணை போவதாகும் . ஏனெனில் இயற்கையில் ஒன்றின் வளர்ச்சி என்பது முடிவில்லாத பயணம்,ஒரு குறிப்பிட்ட நிலையோடு முற்றுப் பெறுவ தில்லை. மொழியின் வளர்ச்சி என்பது அந்த மொழி தன் சமுதாயத்திற் குக் கொடுக்கும் உயரிய பாதுகாப்பாகும்.எல்லோரும் எல்லோருக்கும் கொடுக்கும் பாதுகாப்பு என்பதால் அது வலிமையானது மட்டுமில்லை நிரந்தரமானதுமாகும். மக்களின் பாதுகாப்பு , முன்னேற்றம் , நலம் என்ற வகையில் மொழி ஆய்வு என்பது ஒவ்வொரு மொழிக்கும் இன்றியமை யாததாகும். .
மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழி தனித்துவமானது.முதன்மைக் குறிப்பொலிகளுக்காக உண்டான உயிரெழுத்து 12 ம் மெய்யெழுத்து 18 ம் ஒலி வேறுபாட்டிற்கு உயிர்மெய் கலப்பாக 12 x 18 = 246 எழுத்துக்களும் தனித்த சிறப்பொலிக்கு ஆயுத எழுத்து 1 ம் ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழ் மொழியில் உள்ளன குறிப்பொலிகளின் சேர்க்கையே தமிழில் சொற்களாகின்றன. பிற மொழிகள் போலன்றி தமிழில் அதிக எண்ணிக்கையில் எழுத்துக்கள் இருப்பினும் அதன் இலக்கண வரம்பை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைத்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். தமிழ் எழுத்துக்களின் உயரிய சிறப்பு அவை தனித்திருந்தாலும் அல்லது சொற்களாகச் சேர்ந்திருந்தாலும் அவற்றின் உச்சரிப்பொலியில் வேறுபாடு இல்லாதிருக்கும்.சிலவிடங்களில் சொற்களை உச்சரிப்பதற்கு எளிதாக ஒலிக்குறுக்கம் ஏற்படுவதுண்டு. தடையில்லா உச்சரிப்புக்கு இணக்கமாக குறுக்கம் ,புணர்ச்சி , போன்ற இலக்கண நெறி முறைகள் பயன்படுத்தப்படுகின்றன .இதனால் தான் தமிழ் மொழி இயற்கை மொழி என்று சொல்லப்படுகின்றது. தமிழ் மொழியின் ஒலிப்பு மாறாக்கோட்பாடு காரணமாக கணணிக்கு ஏற்ற மொழிகளுள் தமிழ் மொழி சாலச் சிறந்தது என்பர். கற்கும் போது ஒவ்வொருவரும் தமிழ்மொழியைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வதற்கு இது உள்ளார்ந்த காரணமாக அமைகின்றது. தமிழ் மொழியின் அழகு , கட்டமைப்பிற்குக் காரணமான துல்லியமான இலக்கணம் போன்றவை பின்தோன்றிய பல இந்திய மொழிகளுக்கு மூலமாக விளங்கின என்றால் மிகையில்லை.
மொழியின் வழக்காற்றில் உள்ள சொற்கள் யாவும் அவை குறிப்பிடும் பொருளின் வடிவம் ,தோற்றம் ,நிறம் போன்ற தனிச் சிறப்பான புறத் தோற்றங்கள் .செயல் ,ஆக்கம் ,மூலம் ,பயன்பாடு போன்ற தன்மைகள் ,இடம்,காலம், காரணம் போன்ற குறிப்புக்கள் போன்றவற்றுள் அதன் தனித்தன்மையை சட்டென சுட்டிக்காட்டுகின்ற ஒன்றைக் கொண்டு அதற்குரிய சொல்லை வடிவமைக்கின்றார்கள்.பொருளின் முதன்மைப் பண்பினை கருத்திற்கொண்டு சொற்களை உருவாக்கி புழக்கத்தின் மூலம் தரப்படுத்தி வழக்காற்றில் நிலைப்படுத்தியுள்ளனர்.ஒரு பொருளுக்குப் பல சிறப்பியல்புகள் இருப்பதால் அதன் பொருட்டு அதற்குப் பல சொற்கள் இருப்பதுண்டு.அதுபோல ஒரே சொல்லுக்கு பல பொருண்மைகளும் இருப்பதுண்டு இது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது என்று சொன்னாலும் தமிழ் மொழியின் தனித்துவம் சிறப்பானது .
உலகில் எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் அதிலுள்ள சொற்கள் எல்லாம் வெறும் தனிச் சொற்கள் இல்லை . வேற்றுமை உறுபுகளை ஏற்றல் , விகுதிச் சேர்க்கை அல்லது பின்னொட்டு ,பெயரடை அல்லது முன்னொட்டு,சொல்லொட்டு போன்ற வழிமுறைகளினால் கொள்ளப் பட்டுள்ளன.
சொற்களைப் போல ஒரே சொற்றொடர் இரு வேறு கருத்துக்களை குறிப்பிடுவது போல சொல்லமுடியும் . அப்படிச் சொல்லும் போது சொல்பவர் எதைக் குறிப்பிட்டுச் சொல்கின்றார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமற் போவதாலும் , கேட்பவருக்கு கருத்துக் குழப்பத்தை ஏற்படுத்துவதாலும் இது மொழியைப் பலவீனப்படுத்திவிடும். உண்மையில் இது மொழியின் பிழையன்று மொழியின் இலக்கணத்தை சரியாகப் பின்பற்றாததாலும் , வரம்பு மீறி பின்பற்றுவதினாலும் ஏற்படும் சிக்கல். தவிர்க்கப்படவேண்டிய ஒலிக்குறுக்கம் , அல்லது தவறான ஒலிக்குறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் நிலையாகும் .இது பற்றி சற்று விரிவாக இக்கட்டுரையில் பார்ப்போம் . மொழியின் அமைப்பில் இணைந்துள்ள இலக்கண நுட்பத்தை புலப்படுத்திக்காட்ட ஒரு சில எடுத்துக்காட்டுகளை இங்கு குறிப்பிடுகின்றேன்.
(1) "அப்பா தந்த லிங்கம் எங்கே?"
இந்தச் சொற்றொடர் இருவேறு கருத்தை எடுத்தியம்புவது போல இருக்கின்றது . "அப்பா தந்த லிங்கம் எங்கே?" என்றால் அப்பா கொடுத்த லிங்கம் எங்கே என்றும் இல்லை தந்தத்தால் ஆன லிங்கம் எங்கே என்று அப்பாவிடம் கேட்பது போலவும் அமைகின்றது.அப்பா ,தந்தத்தாலான அந்த லிங்கம் எங்கே இருக்கின்றது என்று ஒருவர் தன் அப்பாவிடம் கேட்பது போல இருக்கின்றது. அப்பா கொடுத்த லிங்கம் எங்கே இருக்கின்றது என்று ஒருவர் மற்றவரிடம் கேட்பது போலவும் இருக்கின்றது. ஒரே சொற்றோடருக்கு இரு வேறு அர்த்தம் இருந்தால் குழப்பம் தரும். அக்குழப்பத்திற்கான தீர்வை சொல்லிடைவெளி தெரிவிக்கின்றது. ஒரு சொற்றொடரின் கருத்து அதிலுள்ள சொற்களால் மட்டுமின்றி சொற்கள் உச்சரிக்கப்படும் போது கொடுக்கப்படும் சொல்லிடைக்கால இடைவெளியைப் பொருத்தும் மாறுபடுகின்றது. அப்பாவிற்கும், தந்த லிங்கத்திற்கும் உள்ள கால இடைவெளியை சற்று குறைத்தும் நீட்டித்து சொல்லும் போது இந்தக்குழப்பம் மேலிடுகின்றது நீட்டிக்கும் போது அது தந்தத்தால் ஆன அந்த லிங்கம் எங்கே என்று அப்பாவிடம் கேட்பதாகும். அந்த கால இடைவெளி இல்லாவிட்டால் அப்பா கொடுத்த லிங்கம் எங்கே என்று கேட்பதாகும்.
(2) "தங்க வீடு வேண்டும் , தங்களிடம் இருக்கா ? "
இப்படியொரு கேள்வியை ஒருவர் கேட்டால் அதற்கு அவர் என்ன பதில் கூறமுடியும் .அவர் தங்கத்தால் கட்டப்பட்ட வீட்டின் உருவத்தை குறிப்பிடுகின்றாரா அல்லது வாடகைக்கு தங்கிச் செல்ல வீடு கேட்கின்றாரா என்று தெரியாமல் குழம்பிப் போவதால் சட்டெனெ பதில் கூற முடிவதில்லை. தங்கத்தாலான வீடு வேண்டும் என்றும் ,தங்குவதற்கு வீடு வேண்டும் என்றும் இரு வேறு பொருள் கொள்ளும் நிலை ஏற்படுவது தவிர்க்கயிலாததாக இருக்கின்றது .புணர்ச்சி விதிகளை முழுமையாகப் பின்பற்றாத போழ்து "தங்க வீடு வேண்டும்" என்று ஒருவர் சொன்னால் அது தங்கத்தாலான வீட்டையும் குறிக்கும் , தங்குவதற்குத் தேடும் வீடாகவும் இருக்கும். தங்கத்தாலான வீடு, தங்குவதற்கான வீடு , இரண்டும் சுருங்கும் போது தங்க வீடாகிவிடுகின்றன .
தங்கத்தாலான வீடு ⇨ தங்கம்+ வீடு ⇨ தங்க வீடு தங்குவதற்கான வீடு ⇨ தங்கு + வீடு ⇨ தங்க வீடு
தங்கத்தாலான வீடு ,தங்குவதற்கான வீடு இரண்டும் சுருங்கி தங்கவீடாக மாறியிருக்கின்றது. 'ம்' அல்லது 'ல்' உடன் முடியும் பெயர்ச்சொற்களை பெயரடையாகப் பயன்படுத்தும் போது இந்த மெய்யொற்று நீக்கமுறுகின்றது.
தகரம் +வீடு ⇨ தகர வீடு , ஈயம் + வீடு ⇨ ஈய வீடு , பிளாட்டினம் + வீடு ⇨ பிளாட்டின வீடு , கற்பூரம் + வீடு ⇨ கற்பூர + வீடு செங்கல் + வீடு ⇨ செங்க வீடு , மஞ்சள் + வீடு ⇨ மஞ்ச வீடு
பெயர்ச்சொல் உயிர் மெய்யெழுத்துக்களுடன் முடிவடைந்திருந்தால் பெயர்ச் சொல்லே பெயரடைச் சொல்லாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுவது இலக்கண வரம்பாகின்றது.எ.கா.,
பித்தளை + வீடு ⇨ பித்தளை வீடு இரும்பு + வீடு ⇨ இரும்பு வீடு வெள்ளி + வீடு⇨ வெள்ளி வீடு அரக்கு + வீடு ⇨ அரக்கு வீடு
இந்தப் பிழையை மொழியின் இலக்கணம் எப்படி சரி செய்கின்றது?மெய்யொற்றுக்களைச் சேர்த்தும் ,தவிர்த்தும் ஒரே சொற்றொடர் இருவேறு பொருளுரைக்கும் தன்மையை நுட்பமாக தவிர்த்துக் கொள்கின்றார் கள்.செங்க வீடு,மஞ்ச வீடு என்பதை விட செங்கல் வீடு,மஞ்சள் வீடு என்பன நிறைமொழியாக இருக்கின்றன. இதை நாம் பின்வரும் எடுத்துக்காட்டுகளினால் உறுதி செய்துகொள்ளலாம் /
பின்னல் + வலை ⇨ பின்னல் வலை / பின்ன வலை பந்தல் + வீடு ⇨ பந்தல் வீடு /பந்த வீடு
கூந்தல் + வனப்பு ⇨ கூந்தல் வனப்பு /கூந்த வனப்பு
இந்த எடுத்துக்காட்டுகள் லகரக் குறுக்கத்தை எதிர்க்கின்றன . லகரக் குறுக்கத்தை தவிர்ப்பதால் மொழிப்பிழை இல்லை . ஏனெனில் சொல்லவரும் கருத்தை புரிந்து கொள்வதில் பிழையேதும் இருக்கக் கூடாது என்பது மொழியின் முதன்மைக் கூறு. தங்கத்தாலான வீடு என்பதே காலப்போக்கில் தங்க வீடு என்று குறுக்கமுற்று குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.
தங்கம் + வீடு = தங்க வீடு/தங்கம் வீடு . மகரக் குறுக்கத்தை அனுமதித்தால் தங்க வீடு மறுத்தால் தங்கம் வீடு . .தங்கம் பெயர்ச் சொல் ,தங்கம் வீடு தங்கத்தால் வீட்டையே குறிக்கும்.தங்கும் + வீடு = தங்க வீடு , தங்க என்பது வினையெச்சம் , தங்குவதற்கு ,தங்குவதற்கான என்ற சொல்லே சுருங்கி 'தங்க' என்றானது .இங்கு மகரக் குறுக்கம் இயல்பானது எனவே தங்க வீடு என்றால் தங்குவதற்கான வீட்டையே குறிக்கும் எனலாம். சொல்லொட்டுகளில் பெயர் அல்லது வினைச் சொற்கள் ,பெயர் அல்லது வினைச்சொற்களுடன் இணையும் போது மெய்யொற்றுக் குறுக்கத்தை இணையும் சொற்களின் பொருளை மாற்றாமல் இருக்கும்படி மேற் கொள்ளவேண்டும். வினையெச்சம் ,பெயரெச்சம் , வேற்றுமை உறுப்புக்களுடன் கூடிய சொற்களுடன் கூடும் போது எழுத்துச் சுருக்கத்தை கவனமாக் மேற்கொள்ளவேண்டும் .ஒரு பெயர்ச்சொல் மெய்யொற்றுக் குறுக்கத்தால் வினைச் சொல்லாக அல்லது வினையெச்சமாக மாறும் போது இந்த சிக்கல் ஏற்படுகின்றது.எழுத்துச் சுருக்கம் மேற்கொள்ளும் போது மரபு இலக்கணம் மீறிய நிலையில் பின்பற்றப்பட்டு , தரப்படுத்தப்படாமலேயே மக்கள் வழக்காற்றில் நிலைப்படும் போது இதுபோன்ற சிக்கல்கள் பின்தொடர்வோருக்கு ஏற்படுகின்றன.
(3) "வேலை கேட்டான்" "அந்த வேலை யார் செய்தது ?"
வேலைக் கேட்டான் என்றாலோ ,அந்த வேலை யார் செய்தது என்றாலோ கருத்துக் குழப்பம் ஏற்படலாம். தொழில் செய்வதற்கு வேலை கேட்டான் என்றும் , வேல் என்றொரு கருவியைக் கேட்டான் என்றும் இரு பொருள்படும் முன்னதில் மெய்யொற்றைத் தவிர்ப்பதாலும் பின்னதில் மெய்யொற்றை இணைத்துக்கொள்வதினாலும் சொற்றொடரின் பொருளை நுட்பமாய் வேறுபடுத்த முடிகின்றது . வேல் என்ற பெயர்ச்சொல் வேற்றுமை உறுப்புடன் சேர்ந்து வேலை ஆனது . இது பெயரெச்சமாகவும் .பெயர்ச் சொல்லாகவும் இருக்கின்றது வேலை என்பது வேல் என்ற கருவியை ,பொருளைக் குறிப்பிடுகின்றது . வேலை என்பது செய்யும் ஒரு செயலைக் குறிப்பிடுகின்றது.
வேலைக் கேட்டான் - வேலைத் தருமாறு கேட்டான் வேலை கேட்டான் - வேலை தருமாறு கேட்டான்/ வேலையைக் கேட்டான்
முன்னதில் மெய்யொற்று இணைவதாலும்பின்னதில் தவிர்க்கப்படுவதா லும் சொற்றொடர்களின் பொருள் நுட்பமாய் வேறுபடுத்தப்படுகின்றன. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினை நாம் வேறு சில எடுத்துக்காட்டுகள் மூலம் உறுதிசெய்துகொள்ளலாம்
ஓட்டை போட்டான் ஓட்டைப் போட்டான்
.ஓடு என்ற பெயர்ச் சொல் வேற்றுமை உறுப்புடன் சேர்ந்து ஓட்டை என்றானவுடன் வினைச் சொல்லுடன் சேரும் போது ஓட்டைப் போட்டான் என்றாகிறது . ஓட்டை என்பது பெயர்ச்சொல்லாக இருக்கும் போது வினையுடன் சேர்ந்து ஓட்டை போட்டான் என்றோ அல்லது வேற்றுமை உறுப்புடன் சேர்ந்து ஒட்டையைப் போட்டான் என்றோ மாற்றத்தை ஏற்படுத்தி வேற்றுமையை உணர்த்திக்காட்டும் .
கத்தி கொண்டு/ கத்தியை எடுத்துக்கொண்டு ஓடினான் , கத்திக் கொண்டு ஓடினான் .
இதில் வரும் மெய்யொற்று பொருள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கின்றது கத்தி என்பது ஒரு கருவி. கத்தி கொண்டு என்பது கத்தியை எடுத்துக்கொண்டு என்பதின் சுருக்கம் அதனால் அங்கு மெய்யொற்று இடைவருவதில்லை. கத்தி என்பது கத்து என்பதின் செய்வினையெச்சம் .கொண்டு என்ற விளக்கச் சொல்லோடு இணையும் போது மெய்யொற்று இடைவருகின்றது
(4)"வாங்க, வாங்க"
இதுவோர் அடுக்குத் தொடர் . திருமணம் போன்ற விழாக்களுக்கு வரும் விருந்தாளிகளையும் வீட்டிற்கு வரும் உறவினர்களையும் மகிழ்ச்சி பொங்க வரவேற்கும் போது பலரும் இந்த சொற்றொடரைப் பயன் படுத்துவார்கள் . இங்கு இரு சொற்களுக்கும் ஒரே பொருள் கொடுக்கப்படுகின்றது.இவை இரண்டும் வினை முற்றாகும் ஒரு பொருளை விற்பனை செய்யும் கடைக்காரர் இந்த சொல்லைப் பயன்படுத்தினால் அது மற்றொரு பொருளையும் குறிப்பிடுகின்றது. இங்கு இரு சொற்களுக்கும் வெவ்வேறு பொருளைக்குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பொருளை விலைக்கு வாங்க கடைக்குள் வாங்க என்று வேற்றுப்பொருள் சுட்டுவதைக் காணலாம் . முதல் 'வாங்க' கடையிலுள்ள பொருளை வாங்குவதற்கான வாங்க என்றும் இரண்டாவது 'வாங்க' அதற்காக கடைக்குள் வாங்க என்ற அழைப்பு விடுத்ததுமாகும். இவை இரண்டும் வினையெச்சங்களாகும்
(5) "மாட்டினால் ஆபத்து" "காட்டினால் நன்மையா தீமையா ?"
போன்ற சொற்றொடர்கள் இரு வேறு கருத்துக்களை க்கூறுவது போல இருக்கின்றது.மாட்டினால் ஆபத்து என்று சொன்னால் ஒரு குறிப்பிட்ட மாட்டால் ஆபத்து என்றும், ஒருவரிடம் மாட்டிக்கொண்டால் ஆபத்து என்றும் பொருள் கொள்ளத் தோன்றும்.மாட்டினால் என்பதை விட மாட்டால் ஆபத்து என்று குறிப்பிடும் போது பொருள் சிதைவு ஏற்படுவதில்லை . மாட்டினால் ஆபத்து என்றால் மாட்டிக்கொண்டால் ஆபத்து என்பதையே குறிப்பிடும்.
காடு என்பது பெயர்ச்சொல். காட்டினால் நன்மையா தீமையா ?" என்பதை விட "காட்டால் நன்மையா தீமையா" என்றுரைப்பதே உரிய பொருளைத் தெரிவிக்கின்றது. காட்டு என்பது வினைச் சொல் . காட்டினால் ஆபத்து என்ற செய்தி ஒரு இரகசியத்தை ஒருவருக்குத் தெரியப்படுத்தினால் ஆபத்து என்ற கருத்தைக் கூறுவதாகும்.
(6) "நல்ல எண்ணெய் இருக்கா ?"
ஒரு திரைப்படத்"தில் "நல்ல எண்ணெய் இருக்கா?" என்று கேட்டு ஒரு நகைச்சுவை நடிகர் ஒரு கடைக்காரரை வம்புக்கு இழுப்பார். இது நல்லெண்ணெய்,நல்ல எண்ணெய் என்று உச்சரிப்பதால் ஏற்படும் குழப்ப மாகும்.நல்லெண்ணெய் எள்ளிலிருந்து பிரித்தெடுத்த எண்ணெயைக் குறிக்கும் நல்லெண்ணெய் நல்லதாக வேண்டுமென்றால் அதை நல்ல நல்லெண்ணெய் என்று கேட்க வேண்டும் . நல்லெண்ணெயை நல்ல எண்ணெய் என்று விரித்துக் கூறும்போது குழப்பம் ஏற்படுகின்றது
நல்ல எண்ணெய் என்பதில் வரும் நல்ல பெயரெச்சமாகும். அது எண்ணையின் சிறப்பைக் குறிக்க வருகின்றது கெட்டுப்போகாமல் சுத்தமாக இருக்கும் எண்ணெயைக் குறிப்பிடுகின்றது இது நல் நல்லெண்ணெய்க்கு மட்டுமின்றி கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் போன்ற பிற எண்ணெய்களையும் குறிப்பிடும்
Wednesday, May 20, 2026
ஒன்றை நாம் எல்லோரும் சரியாகப் புரிந்து கொள்ளாமலேயே எல்லோருக்குமான மாற் றத்தை விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.ஒரு மனிதனின் பல விருப்பங்களில் எது அதிகம் விரும்பப்படுகின்றதோ அதுவே முதலில் நிறைவேறும் என்பது அறிவியல்.இது சமுதாயத்திற்கும் பொருந்தும். தீயவர்கள் பெருகி நல்லவர்கள் குறுகி வர நல்லவர்களும் தீயவர்களாக மாறும் நிலையே வளரும். தீயவர்கள் ஆட்சியை விரும்புவதில்லை.அதிகாரத்தையே விரும்புகின்றர்கள்.
Saturday, May 16, 2026
அரசியல்வாதிக்களுக்கென ஒரு தனித் தகுதி வகுக்கப் பட்டு சட்டமாக்கப் படவேண்டும். குறைந்த பட்சம் ஒரு டிகிரி. சட்டம் கற்றிருப்பது கட்டாயம்.அமைச்சகர்களுக்குதுறை சார்ந்த கல்வி பெற்றிருக்க வேண்டும். சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் ஆகியும் முன்னேற்றம் வளர்ச்சி என்பது நமது வாயில் மட்டுமே.பிற நாடுகளோடு ஒப்பிடும் போது அது தெளிவாகத் தெரிய வருகின்றது. உணர்ச்சிவசப்படும்போது நாம் பெரிய தவறுகளைச் செய்துவிடுகின்றோம். மக்களுக்கான சட்டங்களை விட ஆட்சியாளர்களுக்கான சட்டங்கள் இன்னும் தெளிவாகவும் வலிமையாகவும் இருக்கவேண்டும்.
Monday, May 11, 2026
பொய்யையும் போலியையும் கண்டு உண்மையும் நேர்மையும்எதிர்த்த காலம்காணாமற் போய்விட்டது. ஒருபொய்யைஒரு போலியை மற்றொருபொய்யும்போலியும் தான்எதிர்க்கின்றது. வெற்றியும்கொள்கின்றது. எது போலி எது பொய் என்பதை அறியாத மக்கள் நம்புவதோடு அதை ப் பரப்பவும் செய்கின்றர்கள் அறிந்தவர்கள் கூட்டுச் சேர்ந்து பயன் பெறுகின்றார்கள்.
Monday, May 4, 2026
Monday, March 30, 2026
The secret of long life
நூறாண்டுகள் இல்லை பல நூறாண்டுகள் கூட வாழ்வதற்கு இருக்கும் வாழ்க்கை இரகசியத்தை இயற்கை ஒவ்வொருநாளும் நமக்கு அறிவுறுத் தத் தவறுவதில்லை . இயற்கையின் மவுன மொழியை மொழிபெயர்க்கத் தெரிந்ததால் நீண்ட கால வாழ்க்கைக்கு இயற்கைபின்பற்றும் வழிமுறையை அறிந்துகொள்ளலாம் .இயற்கையில் எல்லாப்பொருட்களும் மூன்று நிலைகள் உண்டு. நாம் அவற்றை இரு வேறு நிலைகளுக்குள் அடக்கிவிடுவதால் மூன்றாவது நிலையின் தனித்துவத்தை அறிந்துகொள்ள முடியாதிருக்கிறது .இயக்க நிலை ஓய்வு நிலை என்று அவற்றை நாம் வகுத்துக்கொண்டாலும் ஓய்வு நிலையில் தாற்காலியக ஓய்வு நிலை என்றும் நிரந்தர ஓய்வு நிலை என்றும் மேலும் இரண்டாகப் பிரிகின்றன. தாற்காலியக ஓய்வு நிலை என்பது இயக்கமற்ற நிலை என்றாலும் பழுதின்றி இருப்பதால் செயல்பாடு நிலைக்கு மீட்ருருவாக்கம் செய்துகொள்ளமுடியும் . நிரந்தர ஓய்வு நிலை என்பது பழுதுற்ற நிலை என்பதால் அதை மீண்டும் செயல்பாடு நிலைக்கு புறஉதவியின்றி நிலைமாற்றம் செய்துகொள்ள முடிவதில்லை . உயிர் வாழ்க்கையிலும் மனிதர்களுக்கு மூன்று நிலைகள் உள்ளன . முதலாவது வாழ்க்கை என்பது செயல்படு நிலை . இயக்க நிலையில் ஆற்றல் செயல்வழி இழக்கப்படுவதால் பலவீனப்பட்டு இல்லாதிருக்கும் நிலை படிப்படியாக நிலைமாற்றம் தூண்டப்படுகின்றது இறுதியில் மரணம் ஏற்படுகின்றது. இதை நாம் பிறப்பு இறப்பு என்று குறிப்பிடுகின்றோம். இயற்கையைப் பொறுத்தமட்டில் உயிருள்ளவை ,உயிரற்றவை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது .நுண்ணிய அணுவோ அல்லது பெரிய அண்டமோ எல்லாம் இயற்கையின் கண்ணோட்டத்தில் வெறும் பொருட்கள்தான் உயிரற்ற பொருட்களுக்கு எப்படி மூன்று நிலைகள் இருக்கின்றனவோ அதுபோல உயிருள்ள பொருட்களுக்கும் இருக்கவேண்டும். மீட்டுருவாக்கம் செய்துகொள்ளக்கூடிய அமைதி நிலை ஒன்று வாழ்க்கையில் இருக்க வேண்டும். மரணம் என்பது நிரந்தர இயக்கமற்ற ஓய்வு நிலை .உறக்கம் என்பது தற்காலியக ஓய்வு நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு .உறக்கத்தின் போது ஆற்றல் இழக்கப்படும் வீதம் குறைவாக இருப்பதால் வாழ்நாள் அதிகரிக்கின்றது .உள்ளுறுப்புக்கள் பழுதுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. தியானம் செய்யும்போது ஆற்றல் வீண் விரயமாவதில்லை . உள்ளுறுப்புக்கள் இயக்குவதற்குத் தேவையான குறைந்த அளவு ஆற்றலே போதுமானது. நெல்லிக்கனி , சில வகையான மூலிகைகள் சுக்கு ,நாவற் பழம் ,நீர் போன்றவை பல நாட்கள் உணவின்றி உயிர்வாழ்வதற்கு உறுதுணை புரிகின்றன . இவை உள்ளுறுப்புக்களின் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. ஒவ்வொருநாளும் எவ்வளவு தியானிக்கின்றோமோ அவ்வளவு வாழ்நாள் கூடுகின்றது என்பது நம் சித்தர்கள் அறிந்து கொண்டு பயன்படுத்திய வாழ்வியல் முறை. . ,
Subscribe to:
Posts (Atom)