Sunday, February 1, 2026

 ஜனநாயக நாட்டில் நாடு என்பது தலைவர் இல்லை. அரசு என்பது நாட்டு மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஓர்  அமைப்பு. தலைவர் சொல்லிவிட்டார் என்று செயல்களைக் கண்மூடித்தனமாக செய்யாமல் சமூக நீதி , நியாயம் மற்றும்  நேர்மை கருதி அரசுப் பணியாளர்கள் செயல்படவேண்டும் . எல்லோரும் எல்லாக் காலங்களிலும் சமமாகவும் சுகமாகவும் வாழ இதுவே வழிவகுக்கும்  

Friday, January 30, 2026

 தமிழக முதல்வர் உங்கள் கண்களுக்கு எதிரியாக இருக்கலாம் . நீங்கள் தமிழகத்தை ஆள விரும்புவதற்கு அவர் தடையாக இருப்பதாக நினைக்கலாம் .  அதற்காக தமிழக மக்கள் எல்லோரையும் எதிரியாகப் பார்ப்பது தவறு .ஆட்சியில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டி நேர்படுத்துவதே அரசியல் தர்மம் . மாநில அளவிலேயே பேச்சுவார்த்தை நடத்த முடியாத ஒரு நாட்டின் தலைவர் உலக அளவில் சுமுகமான பேச்சுவார்த்தையை எப்படித் தொடரமுடியும்  பெரும்பாலான சூழ்நிலைகளில் பேசாமடந்தையாக இருந்துவிடுகின்றார்கள் . 

Thursday, January 29, 2026

 ஆள்பவர்களுக்கான ஒரு கதை 

ஒரு ஊரில் ஒருவீதியில் அடுத்தடுத்த வீட்டில் இரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரே பிள்ளை . ஒருவர் தன்பிள்ளையை உயர் படிப்பு படிக்கவைத்து , பயிற்சி அளித்து உயர்ந்த வேளையில் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கினார். அவருடைய திட்டம் என்பது இதுதான் . திட்டத்தின் செலவு பிள்ளைகளுக்கு எதிர்கால வரவானது. மற்றொருவர் தன் பிள்ளையை செல்லமாக வளர்ப்பதாகக் கருதி ஒவ்வொரு நாளும் ஊர் சுற்றி வர  , மோட்டார் சைக்கிள், கார் , நாகரிக ஆடைகள்  என வாங்கிக் கொடுத்து வளர்த்தார் . படிப்பு சரிவர இல்லாததால் அவனுடைய எதிர்காலம் இருண்டகாலமானது . தன்னுடைய செலவுகள் அனைத்தையும்  வயதான காலத்திலும் தந்தையே கொடுக்கவேண்டும் என்று முரட்டுத்தனத்தை வளர்த்துக்கொண்டான். இவரும் திட்டமிட்டு செலவு செய்தார் . ஆனால் வரவில்லாத செலவுகள். .வரவில்லாத செலவுகள் குடும்பத்திற்கு சுமை . நாட்டிற்கும் சுமையே                                          

Monday, January 26, 2026

  நீண்ட காலம் எல்லோரும் முயன்றும்  ஊழல் இன்னும் ஏன் ஒழிக்கமுடியாமல் இருக்கின்றது? உண்மையில் ஒவ்வொருவருடைய சிந்தனையும் வெவ்வேறாக இருப்பதால் இணைந்து செயல்படும் போக்கு ஊழல் செழிப்பதற்கு  ஒரு காரணமாக இருக்கின்றது . வாய்ப்புக் கிடைத்தவர்கள்  கூட்டணி ,அதிகாரம் , அரசியல் செல்வாக்கு போன்றவற்றால் ஊழலைச் செய்துவருகிறார் . வாய்ப்புக் கிடைக்காதவர்கள்  வாய்ப்புக்களைத் தேடிக்கொண்டே பிறர் செய்யும் ஊழல்களை எதிர்க்கிறார்கள் . இது போலித்தனமான எதிர்ப்பு என்பதால் ஊழல் ஒழிவதற்கான வாய்ப்பின்றி வளர்ந்துவருகின்றது. 

Friday, January 23, 2026

 மக்களுக்கு  என்னென்ன இலவசம் எப்போது  கொடுக்கவேண்டும் என்று நானே முடிவுசெய்வேன்  என்பதை ஒத்துக்கொள்ளலாம் . ஆனால் அரசு சார்ந்த எல்லாப் பதவிகளுக்கும்  தேர்வு செய்யப்பட்ட  பணியாளர்களை  இறுதி முடிவு செய்யலாம் .ஆனால் பட்டியலையே நான்தான் செய்வேன் என்பது தவறு. பொதுத் தேர்தலுக்கு தொகுதிகளில் நிறுத்தவேண்டிய வேட்பாளர்களை குழுவின் உதவியின்றி நானே முடிவு செய்வேன் என்பது தவறு . பரிசும் விருதும் வழங்கும் விழா நீங்கள் ஒருவரே முடிவு செய்யலாம் ஆனால் பரிசுக்கு ம் விருதுக்கும் உரியவரைத் தேர்வுசெய்வது ஒரு தகுதியான குழுவேயன்றி தனியொருவர் இல்லை. அரசின் அணைத்து நிகழ்ச்சிகளும் செயல்பாடுகளிலும் ஒருவரின் முடிவால் மட்டுமே நிகழும் என்றால் அரசு ஊழியர்களை அடிமைகளாக மட்டுமே செயல்படமுடியும். உயர் அதிகாரிகரிகள் கண்காணிக்கலாம். பணிக்கு அவர்களைத் தேர்வு செய்துவிட்டு அவர்களுடைய அடிப்படை வேலையையே தானே செய்வது எதோ உள்நோக்கம் இருக்கும் என்றுதான் எண்ணத்  தோன்றுகின்றது  

Wednesday, January 21, 2026

 மக்களுக்காகத்தான் நாம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றோம் என்று எண்ணாமல் ,நமக்காகத்தான் அவர்கள் என்று எண்ணும் போக்கு நம் அரசியல்தலைவர்களிடம் மலிந்திருக்கின்றது . நாட்டின் வளத்தை அவர்களுடைய முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் . ஒளிமயமான எதிர்காலத்திற்கு திட்டமும் செயல்படும் இல்லை . கட்டமைப்பும் ,அனைவருக்குமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இல்லை.போதிய வசதிகள் வாய்ப்புக்கள்  இன்றி  மக்கள் தொகைப் பெருக்கம்   ,வாகனங்களின் அதிகரிப்பு போன்றவற்றில் கட்டுப்பாடின்மை, ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழல் , அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கு , நிர்வாகச் சீர்கேடுகள், தீயவர்களின் வளர்ச்சி ,போன்றவற்றால் இந்திய நாட்டின் எதிர்காலம் இருட்டாக இருக்கின்றது        

Friday, January 16, 2026

 சமுதாயத்தில் மக்கள் குற்றம் செய்யக்கூடாது . செய்தால் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும் என்பதற்காக ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தி அதை ஆள்வதற்கு அதிகாரத்துடன் ஆட்களை நியமித்தால் ,அவர்களே குற்றவாளிகளாக இருப்பதுடன்  தங்களுக்கு வேண்டாதவர்களை த் தண்டிப்பதற்கு அவர்களையே குற்றவாளியாக்கிவிடுகின்றார்கள்