Tuesday, February 17, 2026

  வல்லவன் ஒருவன் நல்லவனாக இருந்தால் அவனால் சமுதாயமும் நாடும் வளம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பைப் பெறும். அவனே ஒரு தீயவனாக இருந்தால் மொத்த சமுதாயமும்  படிப்படியாக சீரழியும் . வல்லவனுக்கு வல்லவன் ஒருவன் வருவான் . அவனை வரவிடாமல் தடுப்பது இருக்கும் வல்லவனின் மறைமுக வேலை . இவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருந்தாலும் மக்களை ஒரேமாதிரியாகத்தான் பார்க்கின்றார்கள் 

Thursday, February 12, 2026

 ஒரு  அமைப்பு இன்றி , வல்லுநர் குழு இன்றி ,  உங்களுக்கு விருது வழங்குகின்றோம் என்றும், கௌரவ முனைவர் பட்டம் வழங்குகின்றோம் என்றும் ,உங்கள் கட்டுரைகள் ,நூல்கள் இவற்றை சரிபார்த்து வெளியிடுவதற்கு ஆலோசனை வழங்குகின்றோம் என்றும்  புதிது புதிதாக பணம் கறக்கும் தொழிலை உண்டாக்கியிருக்கின்றார்கள் . 

ஒருவருடைய சிறப்புத் தகுதியைப் பெருமைப்படுத்துவதற்காக வழங்கப்படும் விருதுகள்  இன்று விற்பனைப்  பொருளாகிவருகின்றன. இனிமேல் பணம் உள்ளவனுக்கு மட்டுமே விருதுகள் கிடைக்கும் நிலை உருவாகும்              

oolal

 அரசியல் தலைவர்களையும் ,முன்னணி அரசியல்வாதிகளையும் ஊழல் செய்யவிட்டுவிட்டு பின்னர் ஆதாரங்களை அரசு இயந்திரத்தின் உதவியுடன் திரட்டி அவர்களை பயமுறுத்தி அடிபணியவைக்கும் ஒரு போக்கு ஆட்சியாளர்களிடம் காணப்படுகின்றது. இதனால் அரசியல் தன் புனிதத்தை இழந்துவிடும் . .தவறான இந்த முன் உதாரண நடவடிக்கைகளினால் நேர்மையான அரசியல் வாதிகள் வருங்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கையை வேரறுத்துவிடுகின்றது. வாழ்வாதாரத்தை தேடித்தேடியே வாழ்க்கை முழுவதையும் தொலைத்து விடும் மக்களுக்கு இதைப்பற்றி ஏதும் சிந்திக்கத் தெரியவில்லை.  

Wednesday, February 11, 2026

 தமிழ்நாடு மாநிலம் தழுவிய முதியோர் இல்லமாகவும் ,அனாதை  இல்லமாகவும்  மாறிவருகின்றது- ஆதரவற்றோருக்கு ,பெண்களுக்கு உரிமைத் தொகை, இலவச பேருந்து  ,பள்ளிகளில் இலவச உணவு , இப்படி பல திட்டங்களினால் .மக்களின் தனித் திறமையை சேவைநோக்குடனும் , வசதிகளை மேம்படுத்தியும் ஊக்குவிக்காமல் தன்னிறைவு பெறவேமுடியாது.   


Tuesday, February 10, 2026

 விஞ்ஞானப் பூர்வமாக ஊழலைச் செய்து மக்களையும் நாட்டையும் தொடர்ந்து ஏமாற்றி வரும்போது , சட்டமும் நீதி மன்றமும்  விஞ்ஞானப் பூர்வமாகச் சிந்தித்து செயல்படவேண்டும். இல்லாவிட்டால் மக்கள் அரசின் மீது நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் . அரசாங்கத்தின் அனைத்து அமைப்புக்களும் மக்களின் நல வாழ்விற்கு உறுதியளிப்பதற்கு மக்களால் ஏற்படுத்தப்பட்டவை . அரசியல்வாதிகளை விட நீதிமன்றமே அதிக அதிகாரம் கொண்டதாக இருக்கவேண்டும். நேர்மையானவர்களே நீதிபதிகளாகவும் , அரசாலும் நீதிபதிகளாலும்  அங்கீகரிக்கப்பட்டவர்களே  வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்படவேண்டும் . அதிகாரம் தவறானவர்களின் கைகளில் அடைக்கலமாகக் கூடாது  என்பதில் நாம் எல்லோரும் விழ்ப்புணர்வுடன் செயல்படவேண்டும்.

Sunday, February 1, 2026

 ஜனநாயக நாட்டில் நாடு என்பது தலைவர் இல்லை. அரசு என்பது நாட்டு மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஓர்  அமைப்பு. தலைவர் சொல்லிவிட்டார் என்று செயல்களைக் கண்மூடித்தனமாக செய்யாமல் சமூக நீதி , நியாயம் மற்றும்  நேர்மை கருதி அரசுப் பணியாளர்கள் செயல்படவேண்டும் . எல்லோரும் எல்லாக் காலங்களிலும் சமமாகவும் சுகமாகவும் வாழ இதுவே வழிவகுக்கும்  

Friday, January 30, 2026

 தமிழக முதல்வர் உங்கள் கண்களுக்கு எதிரியாக இருக்கலாம் . நீங்கள் தமிழகத்தை ஆள விரும்புவதற்கு அவர் தடையாக இருப்பதாக நினைக்கலாம் .  அதற்காக தமிழக மக்கள் எல்லோரையும் எதிரியாகப் பார்ப்பது தவறு .ஆட்சியில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டி நேர்படுத்துவதே அரசியல் தர்மம் . மாநில அளவிலேயே பேச்சுவார்த்தை நடத்த முடியாத ஒரு நாட்டின் தலைவர் உலக அளவில் சுமுகமான பேச்சுவார்த்தையை எப்படித் தொடரமுடியும்  பெரும்பாலான சூழ்நிலைகளில் பேசாமடந்தையாக இருந்துவிடுகின்றார்கள் .