creative thoughts
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Wednesday, May 20, 2026
ஒன்றை நாம் எல்லோரும் சரியாகப் புரிந்து கொள்ளாமலேயே எல்லோருக்குமான மாற் றத்தை விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.ஒரு மனிதனின் பல விருப்பங்களில் எது அதிகம் விரும்பப்படுகின்றதோ அதுவே முதலில் நிறைவேறும் என்பது அறிவியல்.இது சமுதாயத்திற்கும் பொருந்தும். தீயவர்கள் பெருகி நல்லவர்கள் குறுகி வர நல்லவர்களும் தீயவர்களாக மாறும் நிலையே வளரும். தீயவர்கள் ஆட்சியை விரும்புவதில்லை.அதிகாரத்தையே விரும்புகின்றர்கள்.
Saturday, May 16, 2026
அரசியல்வாதிக்களுக்கென ஒரு தனித் தகுதி வகுக்கப் பட்டு சட்டமாக்கப் படவேண்டும். குறைந்த பட்சம் ஒரு டிகிரி. சட்டம் கற்றிருப்பது கட்டாயம்.அமைச்சகர்களுக்குதுறை சார்ந்த கல்வி பெற்றிருக்க வேண்டும். சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் ஆகியும் முன்னேற்றம் வளர்ச்சி என்பது நமது வாயில் மட்டுமே.பிற நாடுகளோடு ஒப்பிடும் போது அது தெளிவாகத் தெரிய வருகின்றது. உணர்ச்சிவசப்படும்போது நாம் பெரிய தவறுகளைச் செய்துவிடுகின்றோம். மக்களுக்கான சட்டங்களை விட ஆட்சியாளர்களுக்கான சட்டங்கள் இன்னும் தெளிவாகவும் வலிமையாகவும் இருக்கவேண்டும்.
Monday, May 11, 2026
பொய்யையும் போலியையும் கண்டு உண்மையும் நேர்மையும்எதிர்த்த காலம்காணாமற் போய்விட்டது. ஒருபொய்யைஒரு போலியை மற்றொருபொய்யும்போலியும் தான்எதிர்க்கின்றது. வெற்றியும்கொள்கின்றது. எது போலி எது பொய் என்பதை அறியாத மக்கள் நம்புவதோடு அதை ப் பரப்பவும் செய்கின்றர்கள் அறிந்தவர்கள் கூட்டுச் சேர்ந்து பயன் பெறுகின்றார்கள்.
Monday, May 4, 2026
Monday, March 30, 2026
The secret of long life
நூறாண்டுகள் இல்லை பல நூறாண்டுகள் கூட வாழ்வதற்கு இருக்கும் வாழ்க்கை இரகசியத்தை இயற்கை ஒவ்வொருநாளும் நமக்கு அறிவுறுத் தத் தவறுவதில்லை . இயற்கையின் மவுன மொழியை மொழிபெயர்க்கத் தெரிந்ததால் நீண்ட கால வாழ்க்கைக்கு இயற்கைபின்பற்றும் வழிமுறையை அறிந்துகொள்ளலாம் .இயற்கையில் எல்லாப்பொருட்களும் மூன்று நிலைகள் உண்டு. நாம் அவற்றை இரு வேறு நிலைகளுக்குள் அடக்கிவிடுவதால் மூன்றாவது நிலையின் தனித்துவத்தை அறிந்துகொள்ள முடியாதிருக்கிறது .இயக்க நிலை ஓய்வு நிலை என்று அவற்றை நாம் வகுத்துக்கொண்டாலும் ஓய்வு நிலையில் தாற்காலியக ஓய்வு நிலை என்றும் நிரந்தர ஓய்வு நிலை என்றும் மேலும் இரண்டாகப் பிரிகின்றன. தாற்காலியக ஓய்வு நிலை என்பது இயக்கமற்ற நிலை என்றாலும் பழுதின்றி இருப்பதால் செயல்பாடு நிலைக்கு மீட்ருருவாக்கம் செய்துகொள்ளமுடியும் . நிரந்தர ஓய்வு நிலை என்பது பழுதுற்ற நிலை என்பதால் அதை மீண்டும் செயல்பாடு நிலைக்கு புறஉதவியின்றி நிலைமாற்றம் செய்துகொள்ள முடிவதில்லை . உயிர் வாழ்க்கையிலும் மனிதர்களுக்கு மூன்று நிலைகள் உள்ளன . முதலாவது வாழ்க்கை என்பது செயல்படு நிலை . இயக்க நிலையில் ஆற்றல் செயல்வழி இழக்கப்படுவதால் பலவீனப்பட்டு இல்லாதிருக்கும் நிலை படிப்படியாக நிலைமாற்றம் தூண்டப்படுகின்றது இறுதியில் மரணம் ஏற்படுகின்றது. இதை நாம் பிறப்பு இறப்பு என்று குறிப்பிடுகின்றோம். இயற்கையைப் பொறுத்தமட்டில் உயிருள்ளவை ,உயிரற்றவை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது .நுண்ணிய அணுவோ அல்லது பெரிய அண்டமோ எல்லாம் இயற்கையின் கண்ணோட்டத்தில் வெறும் பொருட்கள்தான் உயிரற்ற பொருட்களுக்கு எப்படி மூன்று நிலைகள் இருக்கின்றனவோ அதுபோல உயிருள்ள பொருட்களுக்கும் இருக்கவேண்டும். மீட்டுருவாக்கம் செய்துகொள்ளக்கூடிய அமைதி நிலை ஒன்று வாழ்க்கையில் இருக்க வேண்டும். மரணம் என்பது நிரந்தர இயக்கமற்ற ஓய்வு நிலை .உறக்கம் என்பது தற்காலியக ஓய்வு நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு .உறக்கத்தின் போது ஆற்றல் இழக்கப்படும் வீதம் குறைவாக இருப்பதால் வாழ்நாள் அதிகரிக்கின்றது .உள்ளுறுப்புக்கள் பழுதுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. தியானம் செய்யும்போது ஆற்றல் வீண் விரயமாவதில்லை . உள்ளுறுப்புக்கள் இயக்குவதற்குத் தேவையான குறைந்த அளவு ஆற்றலே போதுமானது. நெல்லிக்கனி , சில வகையான மூலிகைகள் சுக்கு ,நாவற் பழம் ,நீர் போன்றவை பல நாட்கள் உணவின்றி உயிர்வாழ்வதற்கு உறுதுணை புரிகின்றன . இவை உள்ளுறுப்புக்களின் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. ஒவ்வொருநாளும் எவ்வளவு தியானிக்கின்றோமோ அவ்வளவு வாழ்நாள் கூடுகின்றது என்பது நம் சித்தர்கள் அறிந்து கொண்டு பயன்படுத்திய வாழ்வியல் முறை. . ,
Thursday, March 26, 2026
Saturday, March 21, 2026
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியம் என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றார்களோ அதைவிட முக்கியம் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்மையானவர்களாக , மக்கள் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக ,உறுதியான கொள்கைப் பிடிப்பும் அறநெறியை ப்பின் பற்றும் குணமும் கொண்டிருக்கவேண்டும். கட்சியின் தலைவருக்கு ஒரு கூலியாகச் செயல்படக்கூடாது. தேர்ந் தெடுக்கப்படுபவர் மக்களால் தேர்தெடுக்கப்படவேண்டுமானால் அவர் அதே மக்களாலும் முன்மொழியப்படவேண்டும் . கட்சித் தலைவர் மட்டுமே முடிவு செய்வாரேயானால் அது சர்வாதிகாரமா ன முடிவாகும் . தேர்தல் என்பது போட்டியில் பங்கேற்பதில்லை. போட்டியாளர்கள் எல்லோரும் ஒரே மேடையில் சந்தித்து ஒவ்வொருவரும் அவர்கள் தேர்தலில் நிற்பதற்கான நோக்கத்தை ,ஆதரப்பூர்வமாக வாதாடவேண்டும். அங்குதான் எது உண்மை எது பொய் என்பது மக்களுக்குத் தெரியவரும் . சட்டத்தை மாற்றுங்கள் .
Subscribe to:
Posts (Atom)