creative thoughts
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Wednesday, July 8, 2026
100 ஆண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூல் வெளியீட்டுவிழா .50 வது வயதில் அவர் எளிதிய 100 வது நூல்.எல்லோரும் பாராட்டிப் பேசினார்கள் மகிழ்ச்சியால் இதயம் துள்ளாமல் துள்ளியது விழா முடிந்து கனத்த இதயத்துடன் வீடு திரும்பிய நூலின் ஆசிரியர் வீட்டின் கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தார் .அதிக மகிழ்ச்சியை அவரது சின்ன இதயம் தாங்கிக்கொள்ளவில்லை. கதவைத் திறந்த மனைவியின் மேல் கட்டையாகச் சாய்ந்தார். 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி நூலின் முதல் பிரதி கீழே விழுந்து கிடந்தது. கையில் வைத்திருந்த மாலை அதன் மேல் விழுந்து இறுதி மரியாதை செய்தது .
Tuesday, July 7, 2026
கோயிலுக்குப் போய் கையெடுத்துக் கும்பிட்டவர்களுக்கெல்லாம் கடவுள் கொடுத்துவிட்டால் நாட்டில் ஏழைகளும் வறுமையும் இல்லாதிருக்கும். ஆனால் ஏழ்மையும் வறுமையும் கோயில்கள் ,கடவுள்கள் இருந்தும் மக்களிடையே நிலைத்து வருகின்றன என்றால் கடவுளுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுதான் நினைக்கவேண்டியிருக்கின்றது . முயன்று உழைக்க விருப்பமின்றி எல்லாம் தனாகக் கிடைக்கவேண்டும் என்று விரும்பி உழைப்பில்லா வருமானத்திலேயே எல்லோரும் அக்கறை காட்டும் போது ஏமாற்றி ப் பிழைக்கும் எண்ணமே தலைதூக்குகின்றது.
Sunday, July 5, 2026
இந்திய அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் பயனுறுதிறன் அற்றவர்க ளாகவே இருக்கின்றார்கள். ஆள்பவர்கள் மக்கள் பணத்தை வீண் விரயமாகச் செலவழித்தும், இலவசம் என்று வளர்ச்சியற்ற செலவினங்களை ச் செய்தும், ஊழல் செய்வதும் , லஞ்சம் பெற்றும் அரசின் நிதியை தெடர்ந்து வீணடிக்கின்றார்கள். எதிர்க்கட்சியினர் இந்த வாய்ப்புக்களை அவர்களிடமிருந்து தட்டிப்பறிக்க முயன்று வாழ்நாள்முழுவதையும் வீணடித்துவிடுகின்றார்கள். துருவிப் துருவிப் பார்த்தாலும் இந்த இரு வகையினரும் மக்களுக்கு பயனுள்ளவாறு செய்த நன்மைகள் ஏதுமில்லை
Friday, July 3, 2026
டிஜிட்டல் அர்ரெஸ்ட் என்பது ஏமாற்றுக்காரர்கள் செய்யும் தில்லுமுல்லு.அப்படி என்று எதுவுமில்லை அதனால் அதைக்கண்டு மக்கள் பயப்படத்தேவையில்லை என்று அரசு சார்பாக மக்களுக்கு அறிவுரை கூறுகின்றார்கள். ஆனால்உண்மையில் பெரும்பாலான சமுதாய மக்கள் ஏற்கனவே தங்களை டிஜிட்டல் அரஸ்ட்டை தாங்களாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.அதனால்தான் போலியான மனிதர்களை ,போலியான வாக்குறுதிகளை , போலியான செயல்பாடுகளை , போலியான விளம்பரங்ளை ,போலியான கணக்கு மற்றும் புள்ளி விவரங்களை எந்தவிதமான எதிர்ப்பின்றி நம்பும் அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள்.சினிமா , சுவரொட்டி ,விளம்பரம் போன்றவற்றால் ஒரேநேரத்தில் எல்லோரையும் அரெஸ்ட் செய்தது தெரியாமல் டிஜிட்டல் அர்ரெஸ்ட் செய்துவிடுகிறார்கள் . இதனால் ஹீரோயிசம் - காரணமின்றி ஒருவரைப் புகழ்தல் , பெஸிமிஸ்டிக் - காரணமின்றி ஒருவரை க் குற்றம் காணுதல் போன்ற பண்புகள் நம்மிடம் மிகுந்து வருகின்றன.
Thursday, July 2, 2026
ஒரு எரிமலை வெடித்து அனல் குழம்பை கக்கத் தொடங்கியது. இந்த முறை அது விடமால் மாதக்கணக்கில் குழம்பை உமிழ , அது வழிந்தோடி மலையடிவார கிராமங்களுக்கு ச் சென்று படிந்தது. மக்களுக்கு அது தங்கம் என்று வெகுநாட்கள் கழித்தே தெரியவந்தது . தங்கமலை ரகசியம் மலையடிவார கிராமங்களில் உள்ள மக்களுக்குத் தெரியவர பாறைப் படி வுகளை வெட்டி வெட்டி எடுத்துச் சென்றனர். போட்டி பொறாமையில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு மாண்டும் போயினர் . வெட்டி எடுத்து ஒவ்வொருவரும் வீட்டில் சேர்ந்து வைத்திருக்கும் தங்கமே மலைபோல குவிய அங்கிருக்கும் மக்களுக்கு தங்கத்தின் மேல் உள்ள ஆசை குறையத் தொடங்கியது . பயனற்ற பொருளும் .பயன்படுத்தப்படாத பொருளும் ஒன்றுதான் பயன்படுத்தப்படாதபோது பயனுள்ள பொருளும் பயனற்ற பொருளாகிவிடுகின்றது .தேவையின்றி ஆசை காரணமாக சேர்க்கப்படும் எந்தப்பொருளும் பயனற்ற பொருளாகி விடும்
Saturday, June 27, 2026
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு ஆயிரக்கணக்கான திட்டங்களை ச் சொல்கின்றார்கள் . அவை பெரும்பாலும் நடைமுறைக்கு வருவதில்லை. வந்தாலும் முழுமை பெறுவதில்லை. செலவுக்கணக்கை சமர்ப்பிக்க மட்டுமே அவை உதவுகின்றன. இது வரம்பின்றி வளரும்போது கூடுதல் வரிவிதிப்பு சட்டமாகின்றது .ஆட்சியை இழந்தபிறகு மௌனமாகி விடுகின்றார்கள். மக்களைவிட வெற்றிபெற்ற எதிர்க்கட்சியினரை எதிர்ப்பதே அவர்கள் முக்கிய வேலையாகிவிடுகின்றது. ஆளுங் கட்சியினரும் எதிர்கட்சியினரும் மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் என்ற சுய விருப்பத்துடன் அரசியலுக்கு வந்தவர்கள் . இதைத் தனித்தனி யாகச் செய்தாலென்ன சேர்ந்து செய்தாலென்ன . சுய லாபம் கருதும்போது இது விடுபட்டுப்போகின்றது . உயிரினும் மேலான மக்களாவது மண்ணாங்கட்டியாவது
நீதியைப் பாதுகாப்பது அனைவரின் கடமை என்றாலும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பங்களிப்பு மக்களுடையதைக் காட்டிலும் அதிகம் என்றே நான் சொல்வேன், நீதிபதிகளுக்கு அது கட்டளை.சமுதாயத்தின் நலன் காக்க தீயவைகளை அழிக்கவேண்டிய பொறுப்பு அவர்களுடையது . மக்கள் தீய செயல்களை ச் செய்யாமல் இருக்கவேண்டும் .இழப்பு ஏற்பட்டால் தீயவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். மக்கள் அப்படிச் செயல்படும் வாய்ப்பு குறைந்துவருகின்றது. அதற்குக் காரணம் அவர்கள் செல்வாக்கு மிக்க தீயவர்களால் அச்சுறுத்தப்படுகின்றார்கள்/ தீயவர்களின் கூட்டணி அவர்களுக்கு எதிரான எல்லாச் செயல்களையும் முறியடித்து விடுகின்றார்கள் . அங்கு நீதியின் விலை நேர்மியான ஒரு தனிநபரின் ஆயுட்கால சமபாதியத்தை விட அதிகமாக இருக்கின்றது.இழப்பை ஏற்கனவே ஏற்பட்ட இழப்போடு நிறுத்திக்கொள்வதேஇனிவரும் எல்லையில்லா இழப்பை தடுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மக்களை ஒரு குற்றத்திற்கு எதிராக புகார் அளிக்க முடியாதிருக்கிறது
Subscribe to:
Posts (Atom)