creative thoughts
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Saturday, June 27, 2026
நீதியைப் பாதுகாப்பது அனைவரின் கடமை என்றாலும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பங்களிப்பு மக்களுடையதைக் காட்டிலும் அதிகம் என்றே நான் சொல்வேன், நீதிபதிகளுக்கு அது கட்டளை.சமுதாயத்தின் நலன் காக்க தீயவைகளை அழிக்கவேண்டிய பொறுப்பு அவர்களுடையது . மக்கள் தீய செயல்களை ச் செய்யாமல் இருக்கவேண்டும் .இழப்பு ஏற்பட்டால் தீயவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். மக்கள் அப்படிச் செயல்படும் வாய்ப்பு குறைந்துவருகின்றது. அதற்குக் காரணம் அவர்கள் செல்வாக்கு மிக்க தீயவர்களால் அச்சுறுத்தப்படுகின்றார்கள்/ தீயவர்களின் கூட்டணி அவர்களுக்கு எதிரான எல்லாச் செயல்களையும் முறியடித்து விடுகின்றார்கள் . அங்கு நீதியின் விலை நேர்மியான ஒரு தனிநபரின் ஆயுட்கால சமபாதியத்தை விட அதிகமாக இருக்கின்றது.இழப்பை ஏற்கனவே ஏற்பட்ட இழப்போடு நிறுத்திக்கொள்வதேஇனிவரும் எல்லையில்லா இழப்பை தடுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மக்களை ஒரு குற்றத்திற்கு எதிராக புகார் அளிக்க முடியாதிருக்கிறது
Monday, June 15, 2026
நேர்மையானவன் தான் குற்றவாளியைத் தண்டிக்கும் தகுதியைக் கொண்டிருக்கின்றான் . குற்றவாளிகளே குற்றவாளிகளைத் தண்டிக்கவும் , மன்னித்துவிட்டு குற்றம் புரிய கூட்டாளியாக்கிக்கொள்வதும் இங்கு வெகு இயல்பாக அனுமதிக்கப்படுவதால் குற்றங்கள் மறைவொழுக்கமாக வளர்ந்து வருகின்றன .நீதிமன்றத்தின் நோக்கம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை . குற்றம் இல்லாத சமுதாயம் என்றால் அங்கு நீதிமன்றத்திற்கு வேலையில்லை . வருமானம் வேண்டுமென்றால் குற்றவாளிகள் தொடர்ந்து வந்துகொண்டேஇருக்கவேண்டும். இதில் வழக்கறிஞர்கள் எதை விரும்புவார்கள் . குற்றவாளிகள் நிறைந்த சமுதாயாமே அவர்களுக்கு வாழ்வாதாரம் .
Wednesday, June 10, 2026
ஒரு அரசியல்வாதி ஊழல் புரியாமல் நேர்மையாகத் தன் கடமைகளைச் செய்கின்றார் என்று அவரைப் பாராட்டக்கூடாது . ஒரு ஆசிரியர் தினம் தினம் பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்துகின்றார் என்பதற்காக , ஒரு ஓட்டுநர் பேருந்தை நேரந்தவறாமல் ஓட்டினார் என்பதற்காக . ஒரு தபால் காரர் ஒவ்வொருநாளும் தபாலை உரியவரிடம் சேர்க்கிறார் என்பதற்காக, ஒரு கடைக்காரர் எடை குறையாமல் நிறுத்துப்போடுகின்றார் என்பதற்காக, ஒரு ஊழியர் ஒப்புக்கொண்ட படி ஒரு வேலையைச் செய்து முடித்தார் என்பதற்காக யாரும் யாரையும் பாராட்டவேண்டியதில்லை. கடமைகளுக்கு அப்பாற்பட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதாபிமானத்துடன் செய்யப்படும் சில செயல்களுக்கு பாராட்டலாம் . அப்பொழுதுதான் அது போன்ற நல்ல செயல்களை செய்ய எல்லோரும் முன்வருவார்கள் சமுதாயத்திற்கு பயன்தராத ஒருவருக்கு மட்டும் பயன்தருகின்ற தவறான புகழ்ச்சி உரைகளை எல்லோரும் தவிர்க்கவேண்டும்
ஒருவர் தன்கடமையைச் சரிவரச் செய்யவேண்டும் . அதற்கு அவர் பாராட்டை எதிர்பார்க்கக்கூடாது . கடமைகளுக்கு அப்பாற்பட்டு தவறுகளை ச் செய்ய அவர்க்கு அதிகாரமும் செல்வாக்கும் இருக்கும்போது அதைச் செய்யக்கூடாது . செய்யும் கடமைகளில் சாதனை படைக்கும் போது பாராட்டலாம் . அனால் இன்றைக்கு அரசியல்வாதிகள் கடமைகளை ச் சரிவரச் செய்வதில்லை. தவறுகள் பல செய்கின்றார்கள் . அதை மறைத்து விட்டு அடிமைத் தொண்டர்களின் அறியாமையைப் பயன்படுத்தி இவர்கள் புகழ் பாடவைத்து மக்களுக்கு எதோ நல்லது பண்ணியதைப்போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றார்கள் .விளம்பரத்திற்காகவே ஒரு தொலைக்காட்சி சானல் . பத்திரிக்கை யாளர்களுக்கு ஊக்கத் தொகை . உரிமையில்லாத அறிவுள்ளவர்களால் இந்த நாடு ஒரு சில தீயவர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு வருகின்றது. வரும் ஆபத்தை உணர்ந்து எல்லோரும் இணைத்து செயல்பட்டாலே சமுதாய முன்னேற்றம் சாத்தியம் . நாம் மேலும் மேலும் பிரிவதற்கான காரணங்களை த் தேடிக்கொண்டிருக்கும் போது இது காணாமற் போய்விடுகின்றது
Monday, June 8, 2026
ஒரு ஊருக்கு ஒரு கோயில் போதும். கடவுள் கற் சிலையோடு உள்ள ஒரு சிறு பகுதி மட்டும் எப்போதும் எல்லோருக்கும் திறவலாக இருந்தால் போதும் . ஓராண்டில் சில விழாக்கள் நடத்தலாம் . அப்போது முழு கோயிலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் . கடவுளை த் தொழுவதற்கு வேண்டிக்கொள்வதற்கும் ஒரு இடைத்தரகர் தேவையில்லாதது . நம்முடைய ஒவ்வொரு செயலும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு வழியில் பயனுள்ளதாக இருக்கவேண்டும். இது ஆக்கப்பூர்வமான ஒத்த சிந்தனையுடைய வர்களால் மட்டுமே முடியும் அர்ச்சகர்கள் இறைப்பணியை முழு நேரப்பணியாகக் கொள்ளாமல் பிற சமுதாயப்பணிகளில் ஈடுபடலாம் . சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உழைப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே.அதனால் தான் நம்முடைய உண்மையான முன்னேற்றம் வெறும் வாயளவில் இருக்கின்றது
Saturday, May 30, 2026
இந்திய அரசியல்வாதிகள் இந்தியர்களுக்காக பணிபுரிவதில்லை. இந்திய அரசியல்வாதிகள் இந்தியர்களின் நலனில் அக்கறை கொள்வதில்லை. இந்திய அரசியல்வாதிகள் பதவி கிடைத்தவுடன் இந்தியர்களைப் போல வாழ்வதில்லை . பதவி ஏற்பதற்கு முன்பு எப்படி வாழ்ந்தார்களோ அது போல பதவி கிடைத்தபின்பு தொடர்வதில்லை. ஆடம்பரச் செலவுகளைச் செய்து மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றிவிடுகின்றர்கள்.தொலைக் காட்சியுடன் கூடிய நேரடித் தொலை பேசி மூலம் பேசி முடிக்கவேண்டிய விஷயங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்கின்றார்கள். அவர்களைப் பாதுக்காக்க சில ஆயிரம் பேர்கள். சொகுசுக் கார்கள் ,பின் தொடர்ந்து வர நூற்றுக்கணக்கான கார்கள் . தட்டுப்பாடில்லாத எரிபொருள் . அன்றைக்கு நாட்டின் ஒரு பேரரசன் கூட இப்படி வாழ்ந்ததில்லை . மக்களை வாழவைக்க வேண்டிய அரசாங்கம் ஆள்பவர்களை மட்டும் வாழவைக்கின்றது . எல்லோருக்குமான வாய்ப்புக் களை ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்கும் சூழலை நிலைப்படுத்திக் கொண்டதால் மாற்றம் எப்போதும் ஏமாற்றமாகவே இருக்கின்றது. நிலையான,நிறைவானமாற்றங்களைஅரசியல்வாதிகளால் ஏற்படுத்தவே முடியாது. அதைச் செய்துமுடிக்கும் வல்லமையும் , பொறுப்பும் சட்ட வல்லுனர்களிடம் மட்டுமே இருக்கின்றது. உச்ச நீதிமற்ற நீதிபதிகள் நாட்டுமக்களின் நலனில் அக்கறை கொண்டு இதில் தலையிட வேண்டுகின்றேன்.
Tuesday, May 26, 2026
பன்மொழிப் புலவர்கள் செயல் வீரர்களாகவோ திறமையானவர்களாகவோ இல்லை. செயல் வீரர்கள் , திறமையானவர்கள் பன்மொழி அறிந்தவர்களாக இல்லை. மொழி பெயர்ப்பாளர்கள் , பிற மொழிகளில் உள்ள ஆய்வறிக்கைகளை புரிந்து கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள், பிற மொழி பேசும் நாட்டில் பணியாற்றப் போகின்றவர்கள் தான் மூன்றாவது மொழி படிக்கவேண்டும் . எல்லோரும் மூன்று மொழி படிக்கவேண்டும் என்று சொல்வது மாணவர்களுக்கு கூடுதல் சுமை. திறமையை வளர்க்கப் பாருங்கள் . அது கூடுதல் மொழி அறிவால் வருவதில்லை. மாணவர்களிடம் திறமையை வளர்க்க முயற்சி மேற்கொள்ளாவிட்டால் மக்களை அவர்கள் முட்டாளாவும் அடிமைகளாகவும் வைத்திருக்கவே விரும்புகின்றார்கள் என்று அர்த்தம் . சட்டம் தான் புரியோடிப்போன இந்த குறையை சரிசெய்யவேண்டும்
Subscribe to:
Posts (Atom)