Monday, May 27, 2024

 ஒரு தனியார் நிறுவனமும் அரசாங்கமும் சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன . தனியார் நிறுவனம் தனி யொருவரால் நிறுவப்பட்டது .அங்கு அவரே முதலாளி . அவர் விருப்பப்படி நிர்வாகம் செய்யலாம் .முதலாளி ஒருவர் தொழிலாளி பலர் . அரசாங்கம் என்பது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு. அங்கு மக்களே முதலாளி .ஆனால் வர்த்தக முதலாளிகளைப்போல அதிகாரமில்லாதவர்கள் . இங்கு முதலாளி போல ச் செயல்பாடும் ஆள்பவர்கள் சிலர் , தொழிலாளிகள் போல உழைப்பைக்கொட்டும் மக்கள் பலர். நிறுவனத்தில் முதலாளி முதலீடு செய்து இலாபம் ஈட்டுவார் .நிறுவனத்தின் வளர்ச்சி அவரது உள்ளார்ந்த குறிக்கோளாக இருக்கும். அரசாங்கத்தில் ஆள்பவர்கள் முதலீடு இன்றி , உழைப்பின்றி அரசின் சொத்தை தனதாக்கிக் கொள்வார்கள் . நாட்டின் வளர்ச்சி வெறும் வாய்ப்பேச்சாக மட்டுமே இருக்கும் .நாட்டின் வளர்ச்சிக்காக சொந்தமாக முதலீடு செய்யாமால்  இலாபத்தை மட்டுமே அனுபவிக்க நினைக்கும் இவர்களால் நாடு வளம் பெறுவதில்லை 

No comments:

Post a Comment