Monday, May 6, 2024

தமிழ் மொழியில் மருவுச் சொற்கள்

தமிழ் மொழியில் மருவுச் சொற்கள்

றகரம் தகரமாகி மொழி  மறுவுதல் றகரமும் தகரமும் வல்லினங்கள் என்றாலும் தகரத்தின் உச்சரிப்பிற்கு குறைவான முயற்சியே தேவைப்படுகின்றது . இந்த சிறிய அனுகூலமே மொழியின் மறுவுதலுக்கு அடிப்படையாக இருக்கின்றது .

ஒரு சொல்லில் அடுத்தடுத்த இரு எழுத்துக்கள் ஒன்று றகர மெய்யாகவும் மற்றொன்று றகர உயிர்மெய்யாகவும் இருக்கும் போது அவை உச்சரிப்பின் எளிய முயற்சியில் தகர மெய்யாகவும், தகர உயிர் மெய்யாகவும் மற்றம் பெற்று வழக்காற்றில் மருவி நிலைபெற்றுவருகின்றன .இதற்கு எண்ணிறந்த எடுத்துக்காட்டுகளை காட்டலாம்

காற்று - காத்து     வற்றிய   - வத்திய        பத்தரை மாற்று - பத்தரை மாத்து

விற்று - வித்து       முற்றிய - முத்திய        சோற்றுக் கற்றாழை - சோத்துக் கத்தாழை

நாற்று - நாத்து    ஊற்றிய - ஊத்திய        ஆற்றோரம் - ஆத்தோரம்

நேற்று - நேத்து     ஏற்றிய - ஏத்திய           முதல் சுற்று - முதல் சுத்து

குற்றம் - குத்தம்                                                இளையாற்றங்குடிஇளையாத்தங்குடி

ஏற்றம் - ஏத்தம் 

  கிணற்றடி - கிணத்தடி 

கீற்று   கீத்து 

கயிற்றில்  கயித்தில்      கற்றுக்கொண்டான் - கத்துக்கொண்டான் 

நூற்றில் ஒரு பங்கு - நூத்தில் ஒரு பங்கு 

நெற்றி நெத்தி 

வற்றாத   வத்தாத 

வற்றுமா  வத்துமா 

விற்றான் வித்தான் 

தோற்றான் தோத்தான்  ஒற்றிக்கொள் ஒத்திக்கொள் 

பெற்றவள் பெத்தவள் 

 

இதில் ஒரு ஆராய்ச்சியே செய்யலாம் .விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்க         

No comments:

Post a Comment