Wednesday, April 23, 2025

 எத்துணை முறை முயன்றாலும் ஒரே ஒரு நல்ல தலைவர் கூட நாட்டுக்கு க்கிடைப்பதில்லை .நல்ல தலைவர் உருவாவதும் உருவாகாமல் இருப்பதும் உண்மையில் பிறர் தர வாரா . அது உண்மையில் தலைவராக வரவேண்டும் என்பாரின் எண்ணங்களே.தூய்மையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நம்பிக்கையோடு செயல்படுபர்களே நல்ல தலைவராக உருவாகிறார்கள் . தீயஎண்ணங்களின் ஆதிக்கத்திற்கு அடிமையான   தலைவர்கள்  நாட்டின் முன்னேற்றத்திற்கு அகத்தடையாக இருக்கின்றார்கள்.எவரும் அகத்தடைகளை உணர்வதும் இல்லை ஒப்புக்கொள்வதுமில்லை ,இதற்கு மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களும் விதிவிலக்கில்லை. தங்களுடைய மறைவொழுக்கத்தை மறைப்பதற்காக அரசாங்கத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்தி போலி விளம்பரங்களை ஊடங்கள் மூலம் தினந்தோறும் அள்ளிவீசுகின்றார்கள் . இந்த போலி விளம்பரங்களுக்கு ஒப்புதல் கொடுத்து உலகெங்கும் பரப்புவதற்கென்றே பல போலி அரசியல்வாதிகள் தலைவரைச் சுற்றி மொய்த்து வருகின்றார்கள் .தலைவரின் கூட்டாளிகள் தீயவர்கள் என்றால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத  தலைவரும் தீயவர்தான் .  பெரும்பாலும் ஒரு தலைவர் தன்னுடன் இணைத்து செயல்படும் கூட்டாளிகளின் ஒரு நேர்மையாளரைக்கூட சேர்த்துக்கொள்வதில்லை. . அப்படிச் சேர்த்துக்கொண்டால் அவருடைய மறைவொழுக்கம் அவர் மூலமாக வெளிப்பட்டு அரசியல் வாழ்க்கையே மூழ்கடிக்கப்படலாம்  . தன்னுடைய கூட்டாளிகள் யாரெல்லாம் தீயவர்கள் என்பதை ஒரு தலைவர் தனக்குள்ள வலிமையான அதிகாரத்தினால் அறிந்திருப்பர் .இதை தலைவர் உணரவில்லை என்று கூறுவதை விட கூட்டாளிகளின் வலிமையான பாதுகாப்பு என்று கருதி தொடர்ந்து அனுமதிக்கிறார் என்று தான் நினைக்கவேண்டியிருக்கு .        


No comments:

Post a Comment