பொறுப்புத் துறப்பு தன் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று நினைத்தே பெரும்பாலான இந்தியத் தலைவர்களும் ஆட்சியாளர்களும் செயல்படுகிறார்கள் . இந்தியாவின் முன்னேற்றம் இந்தியமக்களால் திட்டமிடப்படுவதை விட பொறுப்புக்களைத் துறந்த ஆட்சியாளர்களின் தலைவரால் மட்டுமே முடிவு செய்யப்படுவதால் நாட்டின் முன்னேற்றம் மோசமான விமர்சனங்களோடு முடிவடைத்துவிடுகின்றது. மக்களுடைய வரிப்பணம் நாட்டின் கட்டமைப்பிற்கோ, மக்களின் நலனுக்கோ பயன்படுத்தப்படுவதை விட விமர்சனங்களைச் சரிக்கட்டும் வெட்டிச் செலவினங்களோடு காணாமற் போய்விடுகின்றது பொறுப்புத் துறந்த ஆட்சியாளர்களை தண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை ,பதவி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பும் சட்டத்தை நீதிமன்றம் இயற்றவேண்டும். இதை நீங்கள் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் ?
No comments:
Post a Comment