Monday, July 29, 2024

 நம் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் மக்கள் நலனுக்காக அல்லும் பகலும் உழைப்பதாகக் கூறுகின்றார்கள் .ஆனால் நியாயமான ஒரு பொது அல்லது சொந்தப் பிரச்சனையின் தீர்வுக்காக முறையிட்டால் அதைச் சரிசெய்து கொடுப்பதில்லை. வெறும் வார்த்தைகளினால் நம்பிக்கையூட்டி திருப்பி அனுப்பி வைத்துவிடுகிறார்கள் . அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய பதவி,மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பாதிப்பு வந்துவிடக்கூடாது   என்பதில் கவனமாக இருப்பார்கள் .இந்த நாடு அண்டை நாட்டினரின் சூழ்ச்சியால் அழியாது . மதவாதிகளின் ஊடுருவலால் அழியாது . குற்றவாளிகள் என இனமறியப்பட்டவர்களால் அழியாது . இந்த போலித்தனமான நாட்டுப் பற்றற்ற அரசியல்வாதிகளால்தான் அழியப்போகிறது . நான் உணர்ந்ததைப் போல நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் . இதற்கு என்ன தீர்வு என்று என்னைக்கேட்டால் சட்டத் திருத்தம் மட்டுமே .

1 comment: