Monday, September 16, 2024

 

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாக்கியங்கள்

நூறாண்டு காலம் தாண்டி வாழும் வழி

ஒரு மனிதனின் சராசரி வாழ்நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இன்றைக்கு 60-70 ஆண்டுகளாக உயர்ந்திருக்கிறது .இதற்கு முதன்மைக் காரணம் நாம் கொள்ளை நோய்களை மட்டுப்படுத்துவதில் பெருமளவு வெற்றிகண்டதுதான். பெருகிவரும் நவீன மருத்துவ வசதியும் , உடல் நலம் மற்றும் சத்துணவு பற்றி மக்கள்கொண்டுள்ள அக்கறையும் ஆர்வமும் அதன் பின்விளைவுகளே . தவறான உணவுப் பழக்க வழக்ககங்கள் ,தாராளமாக அனுமதிக்கப்படும் மது ,புகை போன்ற உடல்நலத்தைப் பாதிக்கும் போதைப்பொருட்கள், இயல் வாழ்கைக்குப் பெரிதும் ஒவ்வாத இயற்கைக்கு மீறிய செயல்கள் போன்றவற்றால் வாழ்நாள்  சுருங்கிக் கொண்டே வருகின்றது.  உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு .புற்றுநோய் போன்ற பாதிப்புக்களினால்  இந்த சுருக்கம் ஏற்படுகின்றது   

நூறாண்டு காலம் வாழ்வது எப்படி ?  -1

      உடல் நூறாண்டுகாலம் நலமோடு  வாழவேண்டுமென்றால் மனமும் நூறாண்டு காலம் நலமாக இருக்கவேண்டும் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள் . ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மனத்திற்குக் கொடுப்பதில்லை. மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது 100 ஆண்டு காலம் வாழ்வதற்கு  இயற்கை கூறும் எளிய இரகசியம் . போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சான்றோர்கள் கூறுவார்கள் . தகுதிக்கு மீறிய அளவில் ஆசைப்படுபவர்கள் மட்டுமே கிடைத்தது போதும் என்று முழுத் திருப்தியடையாமல் தவறுகள் செய்ய முனைவர்கள். அதிக அளவில் உணவு உண்டால் எப்படி மறுக்கடியால் உடல் அவதிப்படுமோ அப்படி தகுதிக்கு மீறிய ஆசைகளினால் மனம் நலங்கெட்டு வாழ்க்கையும்  பாதிக்கப்படும். குறிப்பிட்ட தகுதியைப் பெற்ற பின்பு முயன்று பொருள் தேடுவது வேறு ,தகுதியில்லாமலேயே     பொருளைச் சம்பாதிக்க ஆசைப்படுவது வேறு. முன்னது மற்றவர்களுக்கு நல் வழிகாட்டியாக இருக்கும்  பின்னது காலப்போக்கில் எல்லோரையும் தீயவர்களாக்கி விடும். நம்மடைய தகுதி எது என்று சரியாகத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை . எல்லோரும் வெவ்வேறு தகுதியுடைவர்களாக இருக்கின்றார்கள் . அவரவர் தகுதிக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் கிடைப்பது கிடைத்துக்கொண்டே யிருக்கின்றது. கிடைத்ததற்காக மகிழ்ச்சிகொள்ளமால் கிடைக்காததற்காக வருத்தம் கொள்வது மனதை நாமே துன்புறுத்துவதற்கு ஒப்பான செயலாகும்.  எது கிடைத்ததோ அதுவே அவருடைய  தகுதிக்குக் கிடைத்தது என்று திருப்தி கொள்ளவேண்டும் . அந்தத் திருப்தி வலுப்பெற்றால் வாழ்நாள் 90 சதவீதம் உயரும்.

 

No comments:

Post a Comment