Showing posts with label moral. Show all posts
Showing posts with label moral. Show all posts

Sunday, February 22, 2026

 வல்லவர்கள்  நல்லவர்களாக இருப்பதில்லை நல்லவர்கள் வல்லவர்களாக இருப்பதில்லை . வல்லவர்கள் நல்லவர்களாக  இருந்து அல்லது நல்லவர்கள் வல்லவர்களாக இருந்து  அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு பயனுண்டு. நல்லவர்கள் பெரும்பாலும் வல்லவர்களாக இருப்பதில்லை. தீயோரைக் கண்டு ஒதுங்கி விடுவார்கள்   நல்லவர்கள் தங்கள் மனதை  நெறிப்படுத்துவத்தின் மூலம் வலிமைப்படுத்திக் கொள்வார்கள்அவர்கள் சமுதாயத்தை வளப்படுத்தி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்வார்கள் .  ஆனால் வல்லவர்கள் அவர்களை வளப்படுத்திக்கொண்டு மக்களை மறந்து விடுவார்கள் . ஒரு நல்லவனைத்  தேர்ந்தெடுக்க அரசியலே ஒரு தடையாக இருக்கின்றது என்றால் விடியும் காலம் எப்போது வரும் ? .      

Tuesday, February 17, 2026

  வல்லவன் ஒருவன் நல்லவனாக இருந்தால் அவனால் சமுதாயமும் நாடும் வளம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பைப் பெறும். அவனே ஒரு தீயவனாக இருந்தால் மொத்த சமுதாயமும்  படிப்படியாக சீரழியும் . வல்லவனுக்கு வல்லவன் ஒருவன் வருவான் . அவனை வரவிடாமல் தடுப்பது இருக்கும் வல்லவனின் மறைமுக வேலை . இவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருந்தாலும் மக்களை ஒரேமாதிரியாகத்தான் பார்க்கின்றார்கள்