அரசியல் தலைவர்களையும் ,முன்னணி அரசியல்வாதிகளையும் ஊழல் செய்யவிட்டுவிட்டு பின்னர் ஆதாரங்களை அரசு இயந்திரத்தின் உதவியுடன் திரட்டி அவர்களை பயமுறுத்தி அடிபணியவைக்கும் ஒரு போக்கு ஆட்சியாளர்களிடம் காணப்படுகின்றது. இதனால் அரசியல் தன் புனிதத்தை இழந்துவிடும் . .தவறான இந்த முன் உதாரண நடவடிக்கைகளினால் நேர்மையான அரசியல் வாதிகள் வருங்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கையை வேரறுத்துவிடுகின்றது. வாழ்வாதாரத்தை தேடித்தேடியே வாழ்க்கை முழுவதையும் தொலைத்து விடும் மக்களுக்கு இதைப்பற்றி ஏதும் சிந்திக்கத் தெரியவில்லை.
No comments:
Post a Comment