Thursday, September 2, 2021

வளரும் குழந்தைகளிடம் வளர்ந்துவரும் ஒழுக்கமின்மை  அவர்கள்  உண்மையான கல்வி பெறுவதில் போலித்தனத்தை ஏற்படுத்திவிடுகிறது. கல்வி   எப்படியோ அப்படியே வாழ்க்கை அமைவதால் , போலியான கல்வி் போலித்தனமான வாழ்க்கையை மட்டுமே அவர்களால் வாழ முடிகிறது  உண்மையில் .உணர்ந்து ஒதுக்காமல் விட்டுவிட்ட  ஒழுக்கமின்மை எது உண்மையான வாழ்க்கை என்பதை கற்றுக் கொடுப்பதில்லை.கல்வி கற்கும் போதே அதை உரிமையுள்ளதாக்கிக் கொள்ளும் எண்ணத்துடன் கற்கவேண்டும் உரிமையுள்ள கல்வி என்பது கற்றதைப்  பயனுறுதிறன் மிக்க வகையில் பயன் படுத்திக் கொள்ளும் பக்குவத்தையும் உடன் பெறுவதாகும் .ஆனால் இன்றைக்குப் பலரும் உயர் மதிப்பெண் பெறுதல் ,[பெற்றோரைத் திருப்திப்படுத்துதல் ,வகுப்பில் தேர்ச்சி பெற்று உயர் வகுப்பிற்குச் செல்லுதல் , கற்கும் காலத்தைக் கழித்தல்  போன்ற  குறுகிய குறிக்கோளுடனேயே படிக்கின்றார்கள் . 90 சதவீத மாணவர்களிடம் நிலைப்படுவது  வெறும் உரிமையில்லாத கல்வியே. பொதுவாக உரிமையில்லாத கல்வி பிற்காலத்தில் தோல்விகளை ஒப்புக்கொள்ள மனமின்றி குறுக்கு வழிகளைத் தேடும்  தேவையற்ற ஆசைகளை மனத்தில் வளர்த்துவிடுகின்றது சமுதாயத்தோடு இணைந்த வாழ்க்கையில் முன்னேறிச் செல்லத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளும்  விருப்பத்தை இது முடக்கிவிடுகின்றது ..இது  மனதில் ஏற்படுத்தும் மாற்றங்கள் சமுதாயச் சீரழிவிற்கு அடிப்படையாகின்றது .தேவையான தகுதிகள் இல்லாது ,  இல்லாத தகுதிகளால் செயல்களைத் தொடரவேண்டியிருக்கின்றது. தேவையில்லாமல் வளர்த்துக்கொண்ட தகுதிகள் வாய்ப்புகளைத்  தேடாமல் தருவதில்லை. முன்னேற முடியாமல் தத்தளிக்கும் போது , குறுக்குவழியை த் தூண்டும் மறைவொழுக்கத்தை மிக இயல்பாக உட்புகுத்திவிடுகின்றது 

 

கல்வி மூலமாகவும் , தொழில் சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்வதாலும் , தகுதிகளைப் பெறமுடியும். பொதுவாக கல்வியின் பெரும் பகுதி ஒருவர் வாழ்வதற்கான அடிப்படைத் தகுதிகளை மட்டுமே வழங்குகின்றது .எது நல்லது, எது கெட்டது , எது தேவை,  எது தேவையில்லை  அதைப் பெறுவது எப்படி , தவிர்ப்பது எப்படி எஎ்பதை அறிவுறுத்துவது கல்வியே. கல்வி என்பது முன்னேற்றத்திற்கான ஒரு பாதை. அதுவே சென்றடைய வேண்டிய இலக்கில்லை ..துறை சார்ந்த சிறப்புக் கல்வியும், தொழில் பயிற்சியும் ஆக்கப்பூர்வமான தகுதிகளை வழங்குகின்றது..எந்தக் கல்வியும் கல்விக்கானதாக மட்டுமே இருக்கவேண்டும்  என்பது ஒரு பொது நியதி. .அப்பொழுதுதான் அதன் பயன்பாடு சமுதாயம் தழுவியதாக இருக்கும். .சமுதாயம் என்பது கூட்டமாகக்  கூடியிருப்பதியில்லை .மக்கள் எல்லோரும் எதோ ஒரு வகையில் மற்றவர்களைச்  சார்ந்திருக்க   சமுதாயத்தால் வரையறுக்கப்பட்டுள்ள  நட்பு  ரீதியிலான இடைத் தொடர்பு பாதுக்காக்கப் படவேண்டும்                 .                

Wednesday, September 1, 2021

 தங்களைப் பற்றி முழுமையாகத் தாங்களே அறிந்து கொள்ளாதிருப்பது ஒரு வகை அகத் தடையாகும்.சிலர் குறைவாக எடைபோட்டுக்கொண்டு அமைதியாக இருப்பார்கள் .பிறர் இவர்களுடைய திறமைகளை அறிந்துகொண்டு .இவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் வரை காத்துக்கொண்டிருப்பார்கள் ..வேறு சிலர்  தங்களைப்   பற்றி மிகையாக மதிப்பிட்டுக் கொள்வார்கள் .தங்களால் என்ன செய்ய இயலும் ,என்ன செய்ய இயலாது  என்பதை இவர்கள் எப்போதும் தவறாகவே முடிவு செய்கின்றார்கள். தங்களைப் பற்றி தங்களே   மிகச் சரியாக அறியாதிருப்பதும் ஒரு வகை  அகத்தடையாகும்.   .  .

 

ஒழுக்கமின்மையின் போதையில் பலரும் நல்ல , தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளத் தவறிவிடுகின்றார்கள். மேலும் மறைவொழுக்க நடவடிக்கைகளில் ஈடுபட தீய ,தேவையற்ற தகுதிகளை வளர்த்துக்கொண்டு விடுகின்றார்கள்.தவற விட்டுவிட்டோம் என்பதைக் காலங் கடந்தே உணர்ந்து கொள்வதால் மாற்று நடவடிக்கைளை மேற்கொள்ள போதிய பயனுறு காலம் கிடைப்பதில்லை..அப்படியே மேற்கொண்டாலும் முழுமையாகப் பயனளிப்பதில்லை . ..

 

மிகச் சரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு தோராயமாக தங்களுடைய எதிர்காலத்தை முன்திட்டமிடத் தெரியாதவர்களே என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் , என்னென்ன தகுதிகளை த்  கொள்ளவேண்டும் என்று புரியாமல்  எல்லாவற்றையும் அரைகுறையாகக் கற்றுக்  கொள்கின்றார்கள் .இது ஒன்றில் நம்பிக்கையின்றி எல்லாவற்றையும் இழப்பதற்குச் சமமான செயலாகும் .உண்மையில் திடமான சிந்தனையும் , முழுமையான நம்பிக்கையும் இல்லாத மனநிலையில் கற்றுக் கொள்ள முயற்சிக்கும்  போது கற்பவை  மனதில் தங்குவதில்லை .இதனால் தேவையில்லாமல் கற்றுக்கொண்ட  நல்ல தகுதிகளும் எந்தக்காலத்திலும் சிறு பயன்கூட நல்குவதில்லை, தேவைப்படும் என்று கற்றுக்கொண்ட தீய தகுதிகளும் செம்மையாகச்  செய்யப்படுவதில்லை ..இது நல்ல மற்றும் தீய செயல்களுக்கு இயற்கை  கொடுக்கும் அங்கீகாரமாகும் . நல்ல செயல்களை  எப்பொழுது வேண்டுமானாலும் வெளிப்படைத் தன்மையுடன் செய்ய முடியும் . யாருக்காகவும்  அஞ்சி செய்வதை தாமதிக்க வேண்டிய நிலையில்லை..ஆனால் வெளிப்படைத்தன்மையில்லாத தீய செயல்கள்  அப்படி  இல்லை..   .               

 மறைவொழுக்க  நடவடிக்கைகளைப் பிறருக்குத் தெரியாமல் செய்யவேண்டியிருப்பதால் அவற்றை எப்போதும்  நினைத்த பொழுதில் செய்யமுடிவதில்லை. தகுந்த காலநேரம் ,சூழ்நிலை பார்த்து செய்யவேண்டியிருப்பதால் காலதாமதம் ஏற்படுவது  தவிர்க்கயியலாததாக இருக்கின்றது சமுதாய எதிர்ப்புக்களையும் , சட்டத்தையும்  மீறிச் செய்யவேண்டியிருப்பதால் எதையும் சிந்தித்து செயல்படவேண்டியிருக்கின்றது  .இதில் அவசரம் காட்டுபவர்கள்  குற்றச் செயல்கள் புரிந்ததற்கான ஆதாரங்களை தவறவிட்டு  மாட்டிக்கொள்கிறார்கள் .

 

தீய பழக்கங்கள் பெரும்பாலும் எல்லோருடைய உள்ளார்ந்த விருப்பமாக இருப்பதால் , மக்களிடம் ஒழுக்கமின்மை சமுதாயம், சட்டங்களுக்குத் தெரியாமல் பெருக்குத் தொடரில் பெருகி வருகிறது..தொடக்க நிலையில் அது மெதுவாகப் பெருகுவது போலத்  தோன்றினாலும், இடைவிடாத தொடர் பெருக்கத்தினால்  சட்டெனெக் கட்டுப்படுத்தமுடியாத ஆபத்தான நிலையை எட்டிவிடும் . மக்களிடையே கிளர்ச்சிநிலையை  ஏற்படுத்தி மீட்டுப்பெறமுடியாத , தீவிரமான  சமுதாயச்  சீர் குலைவை  நிலைப்படுத்தி விடுகின்றது முன்னோர்களும் , நன்னெறி நூல்களும் வற்புறுத்திக் கூறும் நல்ல பழக்க வழக்கங்கள் அப்படியில்லை .அது சமுதாயத்தில்  கூட்டுத் தொடரில் கூடப் பெருகுவதில்லை. மக்களிடம் ஓங்கி வளர்ந்துவிட்ட தீய எண்ணங்களுக்கு முன்னே அவை ஏறக்குறைய முற்றுமாக அழிந்துவிட்டன என்றே கூறவேண்டும். பெரும்பாலும் தீயவை மறைவொழுக்கமாகப்  பின்பற்றுவதற்கும் , நல்லவை மாற்றானுக்கு அறிவுரை கூறுவதற்கு மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகின்றன                 

 ஒழுக்கமின்மையின் வளர்ச்சி பரிணாமத்தோடு தொடர்புடையது. அதை ஒருவர் பிறருடைய வழிகாட்டலின்றித் தானாகவே அறிந்துகொண்டு பின்பற்றமுடியும் .ஒழுக்கமின்மையை எவ்வளவுதான் சமுதாயத்திற்குத் தெரியாமல் மூடி மறைத்தாலும் எவரொருவரும் தங்கள் குடும்பத்திற்குத் தெரியாமல் நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது . பொருளாதார வளர்ச்சியோடு பின்னிய  குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு முழுமுதல் காரணம் மறைவொழுக்கமாகப் பின்பற்றப்படும்  ,ஒழுக்கமின்மையே  என்பதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகிறார்கள் .அதனால் ஒழுக்கமின்மையை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதுடன் மறைவொழுக்கமாக செய்யவும்  துணிவு கொள்கின்றார்கள் .அப்போது அது பரிணாம வளர்ச்சி யுடன்  புதுவடிவம் பெறும் வாய்ப்பையும் கொண்டுள்ளது . 

பொதுவாக உல்லாசச் செலவு , போதைப்பொருள் பழக்கம், உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளில் விருப்பம் நவீன ஆடை அலங்காரங்களில்  நாட்டம்  , தேவையின்றி அளவுக்கு மீறி சொத்துச் சேர்த்தல், பெண் ,பொன் ,மண் மீது ஆசைகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் ..இதனால் இளைஞர்கள் எதிர்காலத்திற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளத்  தவறிவிடுகிறார்கள். ஒழுக்கமின்மை யில்  கொண்டுள்ள விருப்பமும், நம்பிக்கையும் தகுதியை வளர்த்துக்   கொள்ளும் மனப்போக்கை முழுமையாகச் சீரழித்து விடுகின்றது.. 

ஒழுக்கமற்ற செயல்களால் ஒருவர் தகுதிக்கு மீறி அளவற்ற பொருள்     சம்பாதிக்க முடிந்தாலும்,அது சமுதாயத்தில்   மறைமுகமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதால் , தொடர்ந்து பல எதிரிகளையும்  சம்பாதிக்க வேண்டியிருக்கின்றது .இது   அவரை மட்டுமின்றி  அவருக்குப் பின் அவர் குடும்பத்தினரையும் காலம் நெடுக அச்சுறுத்திக்கொண்டே இருக்கும். 

ஒழுக்கமின்மை முன்னேற்றத்திற்காக முனைந்து பெற்ற  தனித் திறமைகளை நொடிப்  பொழுதில்அழித்து விட்டு குறுக்கு வழிகளை அறிமுகப்படுத்திவிடுகின்றது . ஏற்கனவே உழைப்பால் முன்னேறியவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னே செல்ல இந்த குறுக்கு வழிகள் வழிகாட்டுவதால் ஒழுக்கமின்மையை கற்றுத் தேர்ந்தவர்கள் கூட எவ்விதத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள் ..குறுக்கு வழி  என்பது நேர் வழிக்கு ஒரு மாற்று வழி .