Monday, June 15, 2026

நேர்மையானவன் தான் குற்றவாளியைத் தண்டிக்கும் தகுதியைக் கொண்டிருக்கின்றான் . குற்றவாளிகளே குற்றவாளிகளைத் தண்டிக்கவும் , மன்னித்துவிட்டு குற்றம் புரிய கூட்டாளியாக்கிக்கொள்வதும் இங்கு வெகு இயல்பாக அனுமதிக்கப்படுவதால் குற்றங்கள் மறைவொழுக்கமாக வளர்ந்து வருகின்றன .நீதிமன்றத்தின் நோக்கம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை . குற்றம் இல்லாத சமுதாயம் என்றால் அங்கு நீதிமன்றத்திற்கு வேலையில்லை . வருமானம் வேண்டுமென்றால் குற்றவாளிகள் தொடர்ந்து வந்துகொண்டேஇருக்கவேண்டும். இதில் வழக்கறிஞர்கள் எதை விரும்புவார்கள் . குற்றவாளிகள் நிறைந்த சமுதாயாமே அவர்களுக்கு வாழ்வாதாரம் .

No comments:

Post a Comment