Wednesday, June 10, 2026

ஒருவர் தன்கடமையைச் சரிவரச் செய்யவேண்டும் . அதற்கு அவர் பாராட்டை எதிர்பார்க்கக்கூடாது . கடமைகளுக்கு அப்பாற்பட்டு தவறுகளை ச் செய்ய அவர்க்கு அதிகாரமும் செல்வாக்கும் இருக்கும்போது அதைச் செய்யக்கூடாது . செய்யும் கடமைகளில் சாதனை படைக்கும் போது பாராட்டலாம் . அனால் இன்றைக்கு அரசியல்வாதிகள் கடமைகளை ச் சரிவரச் செய்வதில்லை. தவறுகள் பல செய்கின்றார்கள் . அதை மறைத்து விட்டு அடிமைத் தொண்டர்களின் அறியாமையைப் பயன்படுத்தி இவர்கள் புகழ் பாடவைத்து மக்களுக்கு எதோ நல்லது பண்ணியதைப்போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றார்கள் .விளம்பரத்திற்காகவே ஒரு தொலைக்காட்சி சானல் . பத்திரிக்கை யாளர்களுக்கு ஊக்கத் தொகை . உரிமையில்லாத அறிவுள்ளவர்களால் இந்த நாடு ஒரு சில தீயவர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு வருகின்றது. வரும் ஆபத்தை உணர்ந்து எல்லோரும் இணைத்து செயல்பட்டாலே சமுதாய முன்னேற்றம் சாத்தியம் . நாம் மேலும் மேலும் பிரிவதற்கான காரணங்களை த் தேடிக்கொண்டிருக்கும் போது இது காணாமற் போய்விடுகின்றது

No comments:

Post a Comment