Wednesday, June 10, 2026

ஒரு அரசியல்வாதி ஊழல் புரியாமல் நேர்மையாகத் தன் கடமைகளைச் செய்கின்றார் என்று அவரைப் பாராட்டக்கூடாது . ஒரு ஆசிரியர் தினம் தினம் பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்துகின்றார் என்பதற்காக , ஒரு ஓட்டுநர் பேருந்தை நேரந்தவறாமல் ஓட்டினார் என்பதற்காக . ஒரு தபால் காரர் ஒவ்வொருநாளும் தபாலை உரியவரிடம் சேர்க்கிறார் என்பதற்காக, ஒரு கடைக்காரர் எடை குறையாமல் நிறுத்துப்போடுகின்றார் என்பதற்காக, ஒரு ஊழியர் ஒப்புக்கொண்ட படி ஒரு வேலையைச் செய்து முடித்தார் என்பதற்காக யாரும் யாரையும் பாராட்டவேண்டியதில்லை. கடமைகளுக்கு அப்பாற்பட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதாபிமானத்துடன் செய்யப்படும் சில செயல்களுக்கு பாராட்டலாம் . அப்பொழுதுதான் அது போன்ற நல்ல செயல்களை செய்ய எல்லோரும் முன்வருவார்கள் சமுதாயத்திற்கு பயன்தராத ஒருவருக்கு மட்டும் பயன்தருகின்ற தவறான புகழ்ச்சி உரைகளை எல்லோரும் தவிர்க்கவேண்டும்

No comments:

Post a Comment