Monday, June 8, 2026

ஒரு ஊருக்கு ஒரு கோயில் போதும். கடவுள் கற் சிலையோடு உள்ள ஒரு சிறு பகுதி மட்டும் எப்போதும் எல்லோருக்கும் திறவலாக இருந்தால் போதும் . ஓராண்டில் சில விழாக்கள் நடத்தலாம் . அப்போது முழு கோயிலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் . கடவுளை த் தொழுவதற்கு வேண்டிக்கொள்வதற்கும் ஒரு இடைத்தரகர் தேவையில்லாதது . நம்முடைய ஒவ்வொரு செயலும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு ஏதாவது ஒரு வழியில் பயனுள்ளதாக இருக்கவேண்டும். இது ஆக்கப்பூர்வமான ஒத்த சிந்தனையுடைய வர்களால் மட்டுமே முடியும் அர்ச்சகர்கள் இறைப்பணியை முழு நேரப்பணியாகக் கொள்ளாமல் பிற சமுதாயப்பணிகளில் ஈடுபடலாம் . சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உழைப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே.அதனால் தான் நம்முடைய உண்மையான முன்னேற்றம் வெறும் வாயளவில் இருக்கின்றது

No comments:

Post a Comment