பெர்சியஸ்
இந்த வட்டார விண்மீன் கூட்டத்தில் சுமார் 90 விண்மீன்கள்
காட்சி தருகின்றன. இதன் தோற்ற உருவத்தை கிரேக்க
புராணத்தில் வரும் பெர்சியஸ் என்ற வீரனைப் போல் உருவகப்படுத்தியுள்ளனர் . இவனுடைய வலக் கரத்தில்
ஒரு நீண்ட வாள் இருப்பது போலவும் இடக் கரத்தில்
அருவருப்பாகத் தோற்றம் தருகின்ற மதுசாவின் வெட்டப்பட்ட
தலையை ஏந்தி உள்ளது போலவும் சித்தரிக்கப்
பட்டுள்ளது. பெர்சியசின் தாய் டானே கருவுற்று
பெர்சியஸ்ஸைப் பிள்ளையாகப் பெற்றெடுத்தபோது ,
சீயஸ் பர்ர்க்க வருவது போல வந்து
தாயையும் ,பிள்ளையையும் சிறைப்பிடித்து ,
ஒரு மரத்தாலான பெட்டிக்குள் வைத்து கடலில்
வீசி எறிந்து விடுகின்றான் .பெர்சியஸ்
வளர்ந்து பெரியவனான பின், அவனுடைய தாத்தாவாகவும் ,
அர்கோஸ் நாட்டின் அரசனாகவும் இருக்கும் அக்ரீசியசைக்
கொன்று விடுவான் என்று அசரீறு வாக்குச் சொன்னதால் ,
இது அரசனுடைய உத்தரவால் நடந்தது. ஆனால் மரப்பெட்டி
கடலில் மிதந்து சென்று செரிபஸ் எனும் தீவை அடைய ,
அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த டிக்டைஸ் என்ற
மீனவன் இவர்களைக் காப்பற்றுகின்றான் .
இந்த டிக்டைஸ் அத் தீவிற்கு அரசனாக இருந்த
பாளிடெக்டெஸின் சகோதரனாவான் .இவனுடைய வளர்ப்பில்
பெர்சியஸ் பெரிய வீரனாக் வளர்கின்றான் .
சூன்யக்காரி மதுசா யாரையெல்லாம் பார்கின்றாளோ
அவர்களெல்லாம் வெறும் கல்லாகச் சமைந்து விடுகின்றார்கள் .
அதனால் அவளை வெட்டிக் கொன்று விட்டுத் திரும்பும்
வழியில் ஆண்ட்ரோமெடா என்ற இளவரசியை , சீட்ஸ்
என்ற திமிங்கிலத்தை கல்லாகச் சமைத்து விட்டு ,
அதன் பிடியிலிருந்து காப்பாற்றுகின்றான்.ஆண்ட்ரோமெடா
வட்டார விண்மீன் கூட்டத்திற்கு வடகிழக்கில் அமைந்துள்ள
இக்கூட்டத்தில் சில சிறப்பம்சம் கொண்ட விண்மீன்கள்
உள்ளன .பால்வெளி மண்டலத்தின் செறிவான பகுதி
பெர்சியஸ் வட்டார விண்மீன் கூட்டம் வழியாக ஊடுறுவிச்
செல்கிறது. அதனால் வானவியலாருக்கு இப்பகுதி கவர்ச்சி
மிகுந்ததாக இருக்கிறது. மேலும் பெர்சியசின்
கதையில் வரும் பல கதாபாத்திரங்கள் - பெரிச்யஸ்,
பிகாசஸ் ,இளவரசி ஆண்ட்ரோமெடா, சீட்ஸ் என்ற
திமிங்கிலம் , ஆண்ட்ரோமெடாவின் தாய் கசியோப்பியா ,
அவளுடைய கணவன் அரசன் சீபுஸ் எல்லாம் விண்வெளியில்
காணப்படும் வெவ்வேறு வட்டார விண்மீன் கூட்டங்களை
நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
மிர்பாக் என அழைக்கப்படும் ஆல்பா பெர்சி வெண்மையும்
மஞ்சளும் கலந்த மாபெரும் விண்மீனாகும். இதன் தோற்ற
மற்றும் சார்பிலா ஒளிபொலிவெண் முறையே 1 .79 , 4 .51
ஆகும். இது 592 ஒளி ஆண்டுகள் தொலைவில்
தளர்ச்சியாகவும் ,பெரிய அளவினதாகவும் உள்ள
மெலோட்(Melotte ) என்ற ஒரு விண்மீன் கூட்டத்தில்
காணப்படும் முதன்மை உறுப்பாகும் .
அல்கோல் எனப் பெயரிடப்பட்டுள்ள பீட்டா பெர்சி
இவ்வட்டார விண்மீன் கூட்டத்தில் காணப்படும் சிறப்புத்
தன்மை மிக்கதொரு விண்மீனாகும்.
அல்கோல் என்றால் அரேபிய மொழியில் பேயின் தலை
என்று பொருள். இது மதுசா என்ற தீய ஆவியின் தலையாகச்
சித்தரிக்கப்பட்டு அவளுடைய கொடூரமான கண்ணாக அல்கோல்
விளங்குகிறது. அல்கோலில் இன்னும் ஹைட்ரஜனே
முக்கிய எரிபொருளாக உள்ளது. இது ஒரு நூறு
மில்லியன் ஆண்டுகள் வயதானதாக இருக்கலாம் என
மதிப்பிட்டுள்ளனர்.
பீட்டா பெர்சி ஒரு மாறொளிர் விண்மீன் என்பதை 1667 ல்
இத்தாலி நாட்டு வானவியலார் கியோ வன்னி மோண்டனாரி
(Giovanni Montanari ) என்பார் கண்டுபிடித்தார் . இது
ஒன்றையொன்று மாறிமாறி மறைக்கின்ற நெருக்கமாக
அமைந்திருக்கும் இரட்டை விண்மீன் என்றும், சுற்றி வரும்
போது ஒன்றையொன்று இடைமறைபபதால் அது மாறொளிர்வது
போலத் தோன்றுகிறது என்றும் பின்னர் தெரிந்து கொண்டனர்.
முதன் முதலாக இனமறியப்பட்ட மறைவு மாறொளிர்
விண்மீன் இதுவாகும். பல நூற்றாண்டு காலம் பீட்டா
பெர்சி இடைமறைப்பு வகை மாறொளிர் விண்மீனுக்கு
எடுத்துக்காட்டாக விளங்கியது. அதற்குப் பிறகு பீட்டா பெர்சி
போல பல விண்மீன்களை விண்வெளியில் வானவியலார்
இனமறிந்தனர் என்றாலும் அவையாவும் அல்கோல் வகை என்றே அழைக்கப்பட்டன.
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Friday, September 30, 2011
Thursday, September 29, 2011
arika iyarppiyal
உள்ளீடற்ற முப்பட்டகம்
கண்ணாடியாலான முப்பட்டகத்தின் ஒரு பக்ககத்தில் வெள்ளொளி
விழும் போது நிறப்பிரிகை ஏற்பட்டு நிறங்களால் ஆன
நிறமாலை மறுபக்கத்தில் வெளிப்படுகிறது. ஊதா ஒளி
சிவப்பு ஒளியை விட அதிக அளவிலான விலக்கத்திற்கு
உட்படுகிறது.அதே ஒளியை உள்ளீடற்ற முப்பட்டகத்தின்
வழி செலுத்த நிறமாலை தோன்றுவதில்லை . ஏன் ?
முப்பட்டகத்தின் இரு பக்கப் பரப்புகளை தடிப்புள்ள கண்ணாடித்
தகடுகளாகக் கருதலாம். இதில் விழும் கதிர்கள் படுகதிருக்கு
இணையாக வெளியேறுவதால் நிறப்பிரிகை ஏற்படுவதில்லை .
எனவே நிறமாலை ஏற்படுவதில்லை .
ஒளி விலகல் எண்ணின் சிறுமம்
ஊடகம் எதுவானாலும் ஒளி விலகல் எண் எப்போதும்
ஒன்றைவிடக் கூடுதலான மதிப்பைப் பெற்றுள்ளது. ஏன்?
ஒளி விலகல் எண்ணின் சிறுமம் எது ?
ஓர் ஊடகத்தின் ஒளி விலகல் எண் என்பது வெற்றிடத்தில்
ஒளியின் திசை வேகம் மற்றும் அவ்வூடகத்தில்
ஒளியின் திசை வேகம் இவற்றின் தகவாகும். வெற்றிடத்தில்
ஒளியின் திசை வேகம் பெருமமாக உள்ளது.
வெற்றிடம் தவிர்த்த பிற ஊடகங்களில் ஊடகத்தைப்
பொறுத்து ஒளியின் திசை வேகம் பெருமத்தை விடக்
குறைவாக இருக்கும். எனவே ஊடகங்களின் ஒளி விலகல்
எண் எப்போதும் ஒன்றை விடக் கூடுதலாக
இருக்கும். வெற்றிடத்தின் ஒளி விலகல் எண் 1 ஆகும்.
இதுவே ஒளி விலகல் எண்ணின் சிறுமமாகும்.
Some representative refractive indices Material λ (nm) n .
Vacuum 1 (per definition)
Air at STP 1.000277
(Gases at 0 °C and 1 atm )
Air 589.29 1.000293
Carbon dioxide 589.29 1.00045
Helium 589.29 1.000036
Hydrogen 589.29 1.000132
(Liquids at 20 °C)
Arsenic trisulfide and sulfur in
methylene iodide 1.9
Benzene 589.29 1.501
Carbon disulfide 589.29 1.628
Carbon tetrachloride 589.29 1.461
Ethyl alcohol (ethanol) 589.29 1.361
Silicone oil 1.52045
Water 589.29 1.3330
Solids at room temperature
Titanium dioxide(also called Titania or Rutile)
589.29 2.496
Diamond 589.29 2.419
Strontium titanate 589.29 2.41
Amber 589.29 1.55
Fused silica (also called Fused Quartz) 589.29 1.458
Sodium chloride 589.29 1.544
Other materials
Liquid Helium 1.025
Water ice 1.31
Cornea (human) 1.373/1.380/1.401
Lens (human) 1.386 - 1.406
Acetone 1.36
Ethanol 1.36
Glycerol 1.4729
Bromine 1.661
Teflon 1.35 - 1.38
Teflon AF 1.315
Cytop 1.34
Sylgard 184 1.43
Acrylic glass 1.490 - 1.492
Polycarbonate 1.584 - 1.586
PMMA 1.4893 - 1.4899
PETg 1.57
PET 1.5750
Crown glass (pure) 1.50 - 1.54
Flint glass (pure) 1.60 - 1.62
Crown glass (impure) 1.485 - 1.755
Flint glass (impure) 1.523 - 1.925
Pyrex (a borosilicate glass) 1.470
Cryolite 1.338
Rock salt 1.516
Sapphire 1.762–1.778
Cubic zirconia 2.15 - 2.18
Potassium Niobate (KNbO3) 2.28
Moissanite 2.65 - 2.69
Cinnabar (Mercury sulfide) 3.02
Gallium(III) phosphide 3.5
Gallium(III) arsenide 3.927
Zinc Oxide 390 2.4
Silicon 590 3.96 [13]
கண்ணாடியாலான முப்பட்டகத்தின் ஒரு பக்ககத்தில் வெள்ளொளி
விழும் போது நிறப்பிரிகை ஏற்பட்டு நிறங்களால் ஆன
நிறமாலை மறுபக்கத்தில் வெளிப்படுகிறது. ஊதா ஒளி
சிவப்பு ஒளியை விட அதிக அளவிலான விலக்கத்திற்கு
உட்படுகிறது.அதே ஒளியை உள்ளீடற்ற முப்பட்டகத்தின்
வழி செலுத்த நிறமாலை தோன்றுவதில்லை . ஏன் ?
முப்பட்டகத்தின் இரு பக்கப் பரப்புகளை தடிப்புள்ள கண்ணாடித்
தகடுகளாகக் கருதலாம். இதில் விழும் கதிர்கள் படுகதிருக்கு
இணையாக வெளியேறுவதால் நிறப்பிரிகை ஏற்படுவதில்லை .
எனவே நிறமாலை ஏற்படுவதில்லை .
ஒளி விலகல் எண்ணின் சிறுமம்
ஊடகம் எதுவானாலும் ஒளி விலகல் எண் எப்போதும்
ஒன்றைவிடக் கூடுதலான மதிப்பைப் பெற்றுள்ளது. ஏன்?
ஒளி விலகல் எண்ணின் சிறுமம் எது ?
ஓர் ஊடகத்தின் ஒளி விலகல் எண் என்பது வெற்றிடத்தில்
ஒளியின் திசை வேகம் மற்றும் அவ்வூடகத்தில்
ஒளியின் திசை வேகம் இவற்றின் தகவாகும். வெற்றிடத்தில்
ஒளியின் திசை வேகம் பெருமமாக உள்ளது.
வெற்றிடம் தவிர்த்த பிற ஊடகங்களில் ஊடகத்தைப்
பொறுத்து ஒளியின் திசை வேகம் பெருமத்தை விடக்
குறைவாக இருக்கும். எனவே ஊடகங்களின் ஒளி விலகல்
எண் எப்போதும் ஒன்றை விடக் கூடுதலாக
இருக்கும். வெற்றிடத்தின் ஒளி விலகல் எண் 1 ஆகும்.
இதுவே ஒளி விலகல் எண்ணின் சிறுமமாகும்.
Some representative refractive indices Material λ (nm) n .
Vacuum 1 (per definition)
Air at STP 1.000277
(Gases at 0 °C and 1 atm )
Air 589.29 1.000293
Carbon dioxide 589.29 1.00045
Helium 589.29 1.000036
Hydrogen 589.29 1.000132
(Liquids at 20 °C)
Arsenic trisulfide and sulfur in
methylene iodide 1.9
Benzene 589.29 1.501
Carbon disulfide 589.29 1.628
Carbon tetrachloride 589.29 1.461
Ethyl alcohol (ethanol) 589.29 1.361
Silicone oil 1.52045
Water 589.29 1.3330
Solids at room temperature
Titanium dioxide(also called Titania or Rutile)
589.29 2.496
Diamond 589.29 2.419
Strontium titanate 589.29 2.41
Amber 589.29 1.55
Fused silica (also called Fused Quartz) 589.29 1.458
Sodium chloride 589.29 1.544
Other materials
Liquid Helium 1.025
Water ice 1.31
Cornea (human) 1.373/1.380/1.401
Lens (human) 1.386 - 1.406
Acetone 1.36
Ethanol 1.36
Glycerol 1.4729
Bromine 1.661
Teflon 1.35 - 1.38
Teflon AF 1.315
Cytop 1.34
Sylgard 184 1.43
Acrylic glass 1.490 - 1.492
Polycarbonate 1.584 - 1.586
PMMA 1.4893 - 1.4899
PETg 1.57
PET 1.5750
Crown glass (pure) 1.50 - 1.54
Flint glass (pure) 1.60 - 1.62
Crown glass (impure) 1.485 - 1.755
Flint glass (impure) 1.523 - 1.925
Pyrex (a borosilicate glass) 1.470
Cryolite 1.338
Rock salt 1.516
Sapphire 1.762–1.778
Cubic zirconia 2.15 - 2.18
Potassium Niobate (KNbO3) 2.28
Moissanite 2.65 - 2.69
Cinnabar (Mercury sulfide) 3.02
Gallium(III) phosphide 3.5
Gallium(III) arsenide 3.927
Zinc Oxide 390 2.4
Silicon 590 3.96 [13]
Wednesday, September 28, 2011
vinveliyil ulaa
மீராவும் அண்மைக் கால ஆய்வுகளும்
மீராவின் நிறமாலையை நுட்பமாக ஆராய்ந்த போது அது பற்றி
வேறு சில உண்மைகளும் தெரியவந்தன.1919 ல் மீராவின்
நிறமாலையில் வெப்ப மிக்க வெண்ணிற விண்மீன் ஒன்றின்
நிறமாலையும் மேற்பொருந்தி இருப்பதை அறிந்தனர் .
இது ஒரு B 8 வகை விண்மீன் போலத் தோன்றியது .
இவ்வகை விண்மீன்களின் புறப்பரப்பு வெப்பநிலை 18000
டிகிரி கெல்வின் ஆகவும், சாதாரண ஹீலிய அணுவின்
நிறமாலை வரிகளையும் கொண்டதாக இருக்கும். ஏறக்குறைய
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ,மீரா சிறுமப் பிரகாசத்தில்
இருக்கும் போது அதற்கு மிக அருகாமையில் தோற்ற
ஒளிப்பொலிவெண் 10 - 12 உடைய ஒரு சிறிய விண்மீன்
இருப்பதை அட்கின் என்ற வானவியலார் சுட்டிக்காட்டினார் .
இது 9 செகண்டு அளவே மீராவிடமிருந்து அப்போது விலகி
இருந்தது.இவ்விண்மீன் மீராவை சில 100 ஆண்டுகளுக்கு
ஒரு முறை சுற்றி வருகிறது என்று கண்டறிந்துள்ளனர். இவ்
விண்மீனும் ஒரு வகையான மாறொளிர் விண்மீன் என்றும்
இதுவும் உருமாற்றத்தால் பிரகாச மாற்றம் பெறுகிறது என்றும்
ஆராய்ந்து தெரிந்து கொண்டனர் .
மீராவின் துணை விண்மீன் மீராவின் நிறையைக் கணக்கிட
உதவியாய் இருக்கிறது .துணை விண்மீனின் நிறை 2.5
சூரிய நிறை என்றும் ,மீராவின் நிறை 1.5 -2 சூரிய நிறை
என்றும் மதிப்பிட்டுள்ளனர் .இது மீராவின் சராசரி
அடர்த்தி சூரிய அடர்த்தியில் 2 x 10^-7 மடங்கு எனத்
தெரிவித்துள்ளது. இது சற்றேறக் குறைய வெற்றிடத்தின்
அடர்த்திக்கு ஒப்பானது.
நீல நிறங் கொண்ட துணை விண்மீன் வெப்ப மிக்க ஓர்
இடைநிலைக் குள்ள விண்மீனாகும்.இது சாதாரண விண்மீனுக்கும்
சிறு வெள்ளை விண்மீனுக்கும் இடையில் அமைந்திருக்கிறது .
இதன் விட்டம் சூரிய விட்டத்தில் 10 ல் ஒரு பங்கே .
அடர்த்தியோ 3300 மடங்கு .இதன் சுற்றுக் காலம் 260
ஆண்டுகள் .இது மீராவிலிருந்து 8 பில்லியன் கிலோமீட்டர்
தொலைவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது .துணை
விண்மீன் தொடர்ந்து குளுர்ச்சியடையும் போது மீரா நீண்ட
காலத்திற்குப் பிரகாசமாக உள்ளது. மீரா விண்மீன் வீசும்
அடர்த்தியான காற்று ,துணை விண்மீனின் பரப்பில் மோதி
பேரளவு ஆற்றலை உமிழ்கிறது. இந்த ஆற்றல் துணை
விண்மீனால் கதிர் வீச்சாக வெளியே வீசப்படுகிறது என்று
இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
டௌ சீடி என்ற விண்மீனின் தோற்ற மற்றும் சார்பிலா
ஒளி பொலி வெண் முறையே 3.49,5.68 ஆகும். இது
சூரியனைப் போல 0.62 மடங்கு பிரகாசிக்கின்றது .இதன்
நிறை 0.85 சூரிய நிறையாகும். இது மிகவும் உயரளவு
தனித்த இயக்கமுடையதாகக் காணப்படுகின்றது .
விண்வெளியில் ஓராண்டுக்கு இது 2 செகண்டு தொலைவு
கடக்கிறது. இந்த இயக்கத்தை நாம் தெளிவாக உணரக்கூடியதாக
இருப்பதால் இது பூமிக்கு அருகாமையில் உள்ளது எனலாம் .
இது 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக
மதிப்பிட்டுள்ளனர். மிக அருகாமையில் இருக்கும் 20
விண்மீன்களுள் இதுவும் ஒன்று.
டௌ சீடி ஒரு மஞ்சள் நிற குறு விண்மீனாகும் .
சற்றேறக் குறைய நமது சூரியனை ஒத்திருக்கிறது .
என்றாலும் சூரியனை விட சற்று சிறியது ,குளிர்ச்சியானது .
இது இப்போது ஒரு A வகை விண்மீனாக உள்ளது. சூரியன்
ஓர் அச்சைப் பற்றி ஒரு மாத காலத்திற்கு ஒரு முறை
தனைத்தானே சுற்றி வருவதைப் போல ,இந்த விண்மீனும்
தற்சுழலுகிறது என்றாலும் சூரியனை விட விரைவாக
இயங்குகிறது .தூசி போன்று ஒரு படலம் இந்த விண்மீனைச்
சுற்றி காணப்படுகிறது. சூரியனுக்கு ஒரு குடும்பம்
இருப்பதைப்போல இதற்கு ஒரு குடும்பம் என்று அனுமானிக்க
இது இடம் தருகிறது. எனினும் என்று வரை எந்தக் கோளும்
இனமறியப்படவில்லை.
டௌ சீடி யின் நிறமாலை அதில் சிறிய அளவில்
உலோகங்கள் இருக்கலாம் என்பதை உணர்த்தியிருக்கிறது.
டௌ சீடி யின் உலோகத் தன்மையே ,அதற்கு கோள்
இருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. இந்த உலோகத்
தனிமங்கள் டௌ சீடி யால்உமிழப்பட்டு வெளியேறும் போது
கோளாக உறைந்து போக வாய்ப்பிருப்பதால்
வானாவியலார் அவ்வாறு உருவாகியிருக்கலாம் என நம்பினார் .
டௌ சீடி F வகை விண்மீனாகத் தொடங்கி அதன் தற்சுழற்சி
வீதம் திடீரென்று தாழ்ந்திருக்க வேண்டும் என்று
கொள்கையாளர்கள்கருத்துத் தெரிவித்துள்ளனர் .இதற்கு
அந்த குளிர்ந்த விண்மீனைச் சுற்றி வரும் கோள்களே காரணமாக
இருக்கலாம் .இக் கோள்கள் விண்மீனின் கோண உந்தத்தை
உள்வாங்கிக் கொள்வதால் விண்மீனின் சுழற்சி வேகம்
மட்டுப்படுத்தப்படுகிறது. நமது சூரியனைப் போல உயிரினம்
உள்ள கோள்களைப் பெற்றிருக்கலாம் என்று பொதுவாக
நம்பப்படுகிறது . அமெரிக்க விண்வெளி
ஆய்வாளர்கள் இந்த விண்மீனை நோக்கி சமிக்கை
அலைகளை அனுப்பி வைத்தார்கள்.ஆனால் அதற்கு பதில்
மொழியாக எந்த சமிக்கை அலைகளும் எதிரொளிக்கப்
படவில்லை. இது அங்கு உயிரினம் இல்லாததையோ
அல்லது உயிரினம் இருந்து செய்திப் பரிமாற்றம் பற்றிய நுட்பம் அறியாதவர்களாகவோ இருக்கலாம் என்பதைத் தெரிவிக்கிறது .
இவ் வட்டார விண்மீன் கூட்டத்தில் M 77 என்று பதிவு
செய்யப்பட்டுள்ள ஒரு சுருள் புய அண்டம் உள்ளது. இதன் பரந்த
முகப் பரப்பு தெரியுமாறு இது விண்ணில் விரவியுள்ளது .இது
மிகவும் பிரகாசமான மையத்தைப் பெற்றுள்ளது. இதை சைபெர்ட் அண்டம் (Seyfert galaxy ) என அழைக்கின்றார்கள் .
மீராவின் நிறமாலையை நுட்பமாக ஆராய்ந்த போது அது பற்றி
வேறு சில உண்மைகளும் தெரியவந்தன.1919 ல் மீராவின்
நிறமாலையில் வெப்ப மிக்க வெண்ணிற விண்மீன் ஒன்றின்
நிறமாலையும் மேற்பொருந்தி இருப்பதை அறிந்தனர் .
இது ஒரு B 8 வகை விண்மீன் போலத் தோன்றியது .
இவ்வகை விண்மீன்களின் புறப்பரப்பு வெப்பநிலை 18000
டிகிரி கெல்வின் ஆகவும், சாதாரண ஹீலிய அணுவின்
நிறமாலை வரிகளையும் கொண்டதாக இருக்கும். ஏறக்குறைய
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ,மீரா சிறுமப் பிரகாசத்தில்
இருக்கும் போது அதற்கு மிக அருகாமையில் தோற்ற
ஒளிப்பொலிவெண் 10 - 12 உடைய ஒரு சிறிய விண்மீன்
இருப்பதை அட்கின் என்ற வானவியலார் சுட்டிக்காட்டினார் .
இது 9 செகண்டு அளவே மீராவிடமிருந்து அப்போது விலகி
இருந்தது.இவ்விண்மீன் மீராவை சில 100 ஆண்டுகளுக்கு
ஒரு முறை சுற்றி வருகிறது என்று கண்டறிந்துள்ளனர். இவ்
விண்மீனும் ஒரு வகையான மாறொளிர் விண்மீன் என்றும்
இதுவும் உருமாற்றத்தால் பிரகாச மாற்றம் பெறுகிறது என்றும்
ஆராய்ந்து தெரிந்து கொண்டனர் .
மீராவின் துணை விண்மீன் மீராவின் நிறையைக் கணக்கிட
உதவியாய் இருக்கிறது .துணை விண்மீனின் நிறை 2.5
சூரிய நிறை என்றும் ,மீராவின் நிறை 1.5 -2 சூரிய நிறை
என்றும் மதிப்பிட்டுள்ளனர் .இது மீராவின் சராசரி
அடர்த்தி சூரிய அடர்த்தியில் 2 x 10^-7 மடங்கு எனத்
தெரிவித்துள்ளது. இது சற்றேறக் குறைய வெற்றிடத்தின்
அடர்த்திக்கு ஒப்பானது.
நீல நிறங் கொண்ட துணை விண்மீன் வெப்ப மிக்க ஓர்
இடைநிலைக் குள்ள விண்மீனாகும்.இது சாதாரண விண்மீனுக்கும்
சிறு வெள்ளை விண்மீனுக்கும் இடையில் அமைந்திருக்கிறது .
இதன் விட்டம் சூரிய விட்டத்தில் 10 ல் ஒரு பங்கே .
அடர்த்தியோ 3300 மடங்கு .இதன் சுற்றுக் காலம் 260
ஆண்டுகள் .இது மீராவிலிருந்து 8 பில்லியன் கிலோமீட்டர்
தொலைவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது .துணை
விண்மீன் தொடர்ந்து குளுர்ச்சியடையும் போது மீரா நீண்ட
காலத்திற்குப் பிரகாசமாக உள்ளது. மீரா விண்மீன் வீசும்
அடர்த்தியான காற்று ,துணை விண்மீனின் பரப்பில் மோதி
பேரளவு ஆற்றலை உமிழ்கிறது. இந்த ஆற்றல் துணை
விண்மீனால் கதிர் வீச்சாக வெளியே வீசப்படுகிறது என்று
இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
டௌ சீடி என்ற விண்மீனின் தோற்ற மற்றும் சார்பிலா
ஒளி பொலி வெண் முறையே 3.49,5.68 ஆகும். இது
சூரியனைப் போல 0.62 மடங்கு பிரகாசிக்கின்றது .இதன்
நிறை 0.85 சூரிய நிறையாகும். இது மிகவும் உயரளவு
தனித்த இயக்கமுடையதாகக் காணப்படுகின்றது .
விண்வெளியில் ஓராண்டுக்கு இது 2 செகண்டு தொலைவு
கடக்கிறது. இந்த இயக்கத்தை நாம் தெளிவாக உணரக்கூடியதாக
இருப்பதால் இது பூமிக்கு அருகாமையில் உள்ளது எனலாம் .
இது 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக
மதிப்பிட்டுள்ளனர். மிக அருகாமையில் இருக்கும் 20
விண்மீன்களுள் இதுவும் ஒன்று.
டௌ சீடி ஒரு மஞ்சள் நிற குறு விண்மீனாகும் .
சற்றேறக் குறைய நமது சூரியனை ஒத்திருக்கிறது .
என்றாலும் சூரியனை விட சற்று சிறியது ,குளிர்ச்சியானது .
இது இப்போது ஒரு A வகை விண்மீனாக உள்ளது. சூரியன்
ஓர் அச்சைப் பற்றி ஒரு மாத காலத்திற்கு ஒரு முறை
தனைத்தானே சுற்றி வருவதைப் போல ,இந்த விண்மீனும்
தற்சுழலுகிறது என்றாலும் சூரியனை விட விரைவாக
இயங்குகிறது .தூசி போன்று ஒரு படலம் இந்த விண்மீனைச்
சுற்றி காணப்படுகிறது. சூரியனுக்கு ஒரு குடும்பம்
இருப்பதைப்போல இதற்கு ஒரு குடும்பம் என்று அனுமானிக்க
இது இடம் தருகிறது. எனினும் என்று வரை எந்தக் கோளும்
இனமறியப்படவில்லை.
டௌ சீடி யின் நிறமாலை அதில் சிறிய அளவில்
உலோகங்கள் இருக்கலாம் என்பதை உணர்த்தியிருக்கிறது.
டௌ சீடி யின் உலோகத் தன்மையே ,அதற்கு கோள்
இருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. இந்த உலோகத்
தனிமங்கள் டௌ சீடி யால்உமிழப்பட்டு வெளியேறும் போது
கோளாக உறைந்து போக வாய்ப்பிருப்பதால்
வானாவியலார் அவ்வாறு உருவாகியிருக்கலாம் என நம்பினார் .
டௌ சீடி F வகை விண்மீனாகத் தொடங்கி அதன் தற்சுழற்சி
வீதம் திடீரென்று தாழ்ந்திருக்க வேண்டும் என்று
கொள்கையாளர்கள்கருத்துத் தெரிவித்துள்ளனர் .இதற்கு
அந்த குளிர்ந்த விண்மீனைச் சுற்றி வரும் கோள்களே காரணமாக
இருக்கலாம் .இக் கோள்கள் விண்மீனின் கோண உந்தத்தை
உள்வாங்கிக் கொள்வதால் விண்மீனின் சுழற்சி வேகம்
மட்டுப்படுத்தப்படுகிறது. நமது சூரியனைப் போல உயிரினம்
உள்ள கோள்களைப் பெற்றிருக்கலாம் என்று பொதுவாக
நம்பப்படுகிறது . அமெரிக்க விண்வெளி
ஆய்வாளர்கள் இந்த விண்மீனை நோக்கி சமிக்கை
அலைகளை அனுப்பி வைத்தார்கள்.ஆனால் அதற்கு பதில்
மொழியாக எந்த சமிக்கை அலைகளும் எதிரொளிக்கப்
படவில்லை. இது அங்கு உயிரினம் இல்லாததையோ
அல்லது உயிரினம் இருந்து செய்திப் பரிமாற்றம் பற்றிய நுட்பம் அறியாதவர்களாகவோ இருக்கலாம் என்பதைத் தெரிவிக்கிறது .
இவ் வட்டார விண்மீன் கூட்டத்தில் M 77 என்று பதிவு
செய்யப்பட்டுள்ள ஒரு சுருள் புய அண்டம் உள்ளது. இதன் பரந்த
முகப் பரப்பு தெரியுமாறு இது விண்ணில் விரவியுள்ளது .இது
மிகவும் பிரகாசமான மையத்தைப் பெற்றுள்ளது. இதை சைபெர்ட் அண்டம் (Seyfert galaxy ) என அழைக்கின்றார்கள் .
arika iyarppiyal
ஒளி வட்டம்
சில சமயங்களில் நிலவு மற்றும் சூரியனைச் சுற்றி மங்கலான
வெண்ணிற வட்டம் காணப்படுவதுண்டு.இதை
நாம் ஆலவட்டம் என்று அழைக்கின்றோம்.'halo' என்று
ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள் .இது ஏற்படுவதற்கு
என்ன காரணம் ?
வளி மண்டலத்தின் உயர் மட்டத்திலுள்ள சின்னச் சின்னப்
பனிக்கட்டிகளில் விழும் ஒளி ,ஒளி விலக்கத்திற்கு
உட்படுவதால் இந்த ஆலவட்டம் ஏற்படுகிறது. ஆறுமுகிப்
பனிக்கட்டிப் படிகங்கள் ஊசி வடிவிலும் ,தட்டையாகவும்
எல்லாத் திசைகளிலும் அமைந்திருப்பதால் அவற்றில் விழும்
ஒளி பன்னிலை அக ஒளி எதிரொளிப்பை
ஏற்படுத்துகிறது. இதுவே ஆல்வட்டமாகக் காட்சி தருகிறது .
இது ஏறக்குறைய வானவில் ஏற்படுவதை ஒத்தது .
ஆனால் வானவில் சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் தோன்றும்.
ஆலவட்டம் அதே திசையில் தோன்றுவதுடன் எப்போதும் ஒளி
மூலத்தைச் சுற்றியே அமைந்திருக்கும்.பெரிய ஆலவட்டத்தின்
ஆரம் 220 டிகிரி . இது உயர் மட்டத்திலுள்ள காய வைத்த
பஞ்சு போன்ற தோற்றமுள்ள மேகத்தில் உள்ள பனிக்கட்டியால்
சிறும விலக்க முற்று ஏற்படும் ஒளி விலக்கத்தால் ஏற்படுகின்றது.
கொரோனா எனப்படும் சிறிய ஆலவட்டம் சில கோணங்களினால்
ஆன ஆரமுடையது .இது வளி மண்டலத்தில் உள்ள
நீர்த்துளிகளினால் ஏற்படும் விளிம்பு விளைவு ஒளி விலக்கதால்
ஏற்படுகின்றது.
சில சமயங்களில் நிலவு மற்றும் சூரியனைச் சுற்றி மங்கலான
வெண்ணிற வட்டம் காணப்படுவதுண்டு.இதை
நாம் ஆலவட்டம் என்று அழைக்கின்றோம்.'halo' என்று
ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள் .இது ஏற்படுவதற்கு
என்ன காரணம் ?
வளி மண்டலத்தின் உயர் மட்டத்திலுள்ள சின்னச் சின்னப்
பனிக்கட்டிகளில் விழும் ஒளி ,ஒளி விலக்கத்திற்கு
உட்படுவதால் இந்த ஆலவட்டம் ஏற்படுகிறது. ஆறுமுகிப்
பனிக்கட்டிப் படிகங்கள் ஊசி வடிவிலும் ,தட்டையாகவும்
எல்லாத் திசைகளிலும் அமைந்திருப்பதால் அவற்றில் விழும்
ஒளி பன்னிலை அக ஒளி எதிரொளிப்பை
ஏற்படுத்துகிறது. இதுவே ஆல்வட்டமாகக் காட்சி தருகிறது .
இது ஏறக்குறைய வானவில் ஏற்படுவதை ஒத்தது .
ஆனால் வானவில் சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் தோன்றும்.
ஆலவட்டம் அதே திசையில் தோன்றுவதுடன் எப்போதும் ஒளி
மூலத்தைச் சுற்றியே அமைந்திருக்கும்.பெரிய ஆலவட்டத்தின்
ஆரம் 220 டிகிரி . இது உயர் மட்டத்திலுள்ள காய வைத்த
பஞ்சு போன்ற தோற்றமுள்ள மேகத்தில் உள்ள பனிக்கட்டியால்
சிறும விலக்க முற்று ஏற்படும் ஒளி விலக்கத்தால் ஏற்படுகின்றது.
கொரோனா எனப்படும் சிறிய ஆலவட்டம் சில கோணங்களினால்
ஆன ஆரமுடையது .இது வளி மண்டலத்தில் உள்ள
நீர்த்துளிகளினால் ஏற்படும் விளிம்பு விளைவு ஒளி விலக்கதால்
ஏற்படுகின்றது.
Tuesday, September 27, 2011
vinveliyil ulaa
மீரா விண்மீனின் நிலை
விண்மீனின் வெப்பநிலை அதிகரிக்கும் போது, அதிலுள்ள கனிம
வேதிப் பொருட்கள் சிதைவுறுகின்றன. அதனால் வளிமண்டலம்
ஒளி உட்புகு தன்மையைப் பெறுகிறது. குளிர்ச்சியுறும் போது இந்த
வழிமுறை பிற்போக்காக நடைபெறுகிறது. விண்மீன் பெருமப்
பிரகாசத்தில் இருக்கும் போது வெப்ப மிக்க ஹைட்ரஜன்
அதன் புற மண்டலத்தில் விண்மீனால் உமிழப்பட்டு, விண்மீனின்
பிரகாசத்தை அதிகரிக்கச் செய்கிறது.இவை நிறமாலையில்
பிரகாசமான உமிழ் வரிகளை ஏற்படுத்தக் காரணமா யிருகின்றன.
மீராவின் புறப் பரப்பின் துடிப்பு, அதன் புறப் பரப்பிலிருந்து
எல்லாத் திசைகளிலும் 20 கிமீ/வி என்ற வேகத்தில்
வீறிட்டெழும் புழுதிக் காற்றினால் விண்மீனின் மூலப்பொருள்
தடையின்றி வெளியே விரவிச் செல்ல துணை செய்கிறது.
இது விண்மீனை விட்டு நெடுந் தொலைவு கடந்து சென்ற பின்,
குளிர்ந்து திண்மமாக உறைகிறது. .விண்மீனின்
சேர்மானப் பொருளைப் பொறுத்து இது மக்னீசியம் அல்லது
இரும்பு சிலிகேட்டாக இருக்கலாம். புகையில் உள்ளது
போலத் தூள் வடிவக் கார்பனாகவும் இருக்கலாம். இவை
அங்கு ஒரு மறைப்பூடகமாக நிலைபடுவதால்
சில காலத்திற்குப் பிறகு ஒளிரும் எஞ்சிய விண்மீனின்
உள்ளகத்தை மறைத்து விடுகிறது. மீராவின் இந்நிலையை
பரிணாம வளர்ச்சிப் படிகளின் மூலம் விளக்கியுள்ளனர்.விண்மீனின்
ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்த பின் அதன் கட்டமைப்பில்
குறிப்பிடும்படியான மாற்றங்கள் அடுத்தடுத்து ஏற்படுகின்றன.
ஈர்ப்பால் சுருங்கி மையம் சூடாகின்றது . போதிய
சூடடைந்தவுடன் ஹீலியம் அணு எரிபொருளாகப் பயன்படத்
தொடங்குகிறது .
ஆனால் உள்ளகத்தைச் சுற்றியுள்ள புற அடுக்குகளில்
ஹைட்ரஜன் தொடர்ந்து ஹீலியமாக மாறுகிறது.
அப்போது புற அடுக்கு தீவிரமாக விரிவடைந்து குளிர்ச்சியடைகிறது . இந்நிலையில் இருக்கும் மீரா
பெருஞ்சிவப்பு விண்மீனாகக் காட்சிதருகிறது. இது நமது
சூரியனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்
காட்டுவதாக இருக்கிறது .
மீராவின் உள்ளகத்தில் ஹீலியம் பிணைவுற்று கார்பனாக மாறிக் கொண்டிருக்கிறது .ஒரு சில காலத்திற்குப் பின்
இது மஞ்சள் நிறப் பெரு விண்மீனாக உருமாறும். புறவோட்டுப்
பகுதியில் ஹைட்ரஜனே இன்னும்
எரிபொருளாகக் கொள்ளப் படுவதால் விண்மீனின் விரிவாக்கம்
அதனால் ஓரளவு கட்டுப்படுத்தப் படுகிறது.
அங்கு ஹைட்ரஜன் தீர்ந்தவுடன் விண்மீன் மேலும் விரிவுற்று
பெருஞ்சிவப்பு விண்மீனாகும். அப்போது
அதன் ஒளிர் திறன் இன்னும் அதிகமாக இருக்கும் .ஹீலியம்
மையத்தில் தீர்ந்த பின் ,ஹீலியம்
புறவோட்டுப் பகுதியில் தொடர்ந்து எரிந்து கார்பனாகும் .இந்த
நிலையில் மீரா இப்பொழுது உள்ளது என ஆராய்ச்சி
யாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்நிலைக்குத் தள்ளப்பட்ட மீரா இன்னும் நீண்ட காலம் வாழ வாய்ப்பில்லை .அழிவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும்
ஒரு விண்மீன் மீராவாகும். துடிப்பின் மூலம் பெருமளவு
மூலப்[பொருளை இவ் விண்மீன் வெளியில்
உமிழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 10000 ஆண்டுகள் இதன்
புற வோட்டுப்பகுதி முழுவதும் வெளியேறி
பரந்த புகைப்படலமாக அதைச் சுற்றி நெடுந் தொலைவு வரை
விரவி இருக்கும். அப்போது இது கோளவடிவ
நெபுலாவாகக் காட்சி தரும் . நம்முடைய சூரியன் இன்னும் 5000
மில்லியன் ஆண்டுகளில் ஏறக்குறைய
இதே வழிமுறையைப் பின்பற்றி கோளவடிவ நெபுலாவாக
உருமாறலாம் என்று கூறுகிறார்கள் .
விண்மீனின் வெப்பநிலை அதிகரிக்கும் போது, அதிலுள்ள கனிம
வேதிப் பொருட்கள் சிதைவுறுகின்றன. அதனால் வளிமண்டலம்
ஒளி உட்புகு தன்மையைப் பெறுகிறது. குளிர்ச்சியுறும் போது இந்த
வழிமுறை பிற்போக்காக நடைபெறுகிறது. விண்மீன் பெருமப்
பிரகாசத்தில் இருக்கும் போது வெப்ப மிக்க ஹைட்ரஜன்
அதன் புற மண்டலத்தில் விண்மீனால் உமிழப்பட்டு, விண்மீனின்
பிரகாசத்தை அதிகரிக்கச் செய்கிறது.இவை நிறமாலையில்
பிரகாசமான உமிழ் வரிகளை ஏற்படுத்தக் காரணமா யிருகின்றன.
மீராவின் புறப் பரப்பின் துடிப்பு, அதன் புறப் பரப்பிலிருந்து
எல்லாத் திசைகளிலும் 20 கிமீ/வி என்ற வேகத்தில்
வீறிட்டெழும் புழுதிக் காற்றினால் விண்மீனின் மூலப்பொருள்
தடையின்றி வெளியே விரவிச் செல்ல துணை செய்கிறது.
இது விண்மீனை விட்டு நெடுந் தொலைவு கடந்து சென்ற பின்,
குளிர்ந்து திண்மமாக உறைகிறது. .விண்மீனின்
சேர்மானப் பொருளைப் பொறுத்து இது மக்னீசியம் அல்லது
இரும்பு சிலிகேட்டாக இருக்கலாம். புகையில் உள்ளது
போலத் தூள் வடிவக் கார்பனாகவும் இருக்கலாம். இவை
அங்கு ஒரு மறைப்பூடகமாக நிலைபடுவதால்
சில காலத்திற்குப் பிறகு ஒளிரும் எஞ்சிய விண்மீனின்
உள்ளகத்தை மறைத்து விடுகிறது. மீராவின் இந்நிலையை
பரிணாம வளர்ச்சிப் படிகளின் மூலம் விளக்கியுள்ளனர்.விண்மீனின்
ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்த பின் அதன் கட்டமைப்பில்
குறிப்பிடும்படியான மாற்றங்கள் அடுத்தடுத்து ஏற்படுகின்றன.
ஈர்ப்பால் சுருங்கி மையம் சூடாகின்றது . போதிய
சூடடைந்தவுடன் ஹீலியம் அணு எரிபொருளாகப் பயன்படத்
தொடங்குகிறது .
ஆனால் உள்ளகத்தைச் சுற்றியுள்ள புற அடுக்குகளில்
ஹைட்ரஜன் தொடர்ந்து ஹீலியமாக மாறுகிறது.
அப்போது புற அடுக்கு தீவிரமாக விரிவடைந்து குளிர்ச்சியடைகிறது . இந்நிலையில் இருக்கும் மீரா
பெருஞ்சிவப்பு விண்மீனாகக் காட்சிதருகிறது. இது நமது
சூரியனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்
காட்டுவதாக இருக்கிறது .
மீராவின் உள்ளகத்தில் ஹீலியம் பிணைவுற்று கார்பனாக மாறிக் கொண்டிருக்கிறது .ஒரு சில காலத்திற்குப் பின்
இது மஞ்சள் நிறப் பெரு விண்மீனாக உருமாறும். புறவோட்டுப்
பகுதியில் ஹைட்ரஜனே இன்னும்
எரிபொருளாகக் கொள்ளப் படுவதால் விண்மீனின் விரிவாக்கம்
அதனால் ஓரளவு கட்டுப்படுத்தப் படுகிறது.
அங்கு ஹைட்ரஜன் தீர்ந்தவுடன் விண்மீன் மேலும் விரிவுற்று
பெருஞ்சிவப்பு விண்மீனாகும். அப்போது
அதன் ஒளிர் திறன் இன்னும் அதிகமாக இருக்கும் .ஹீலியம்
மையத்தில் தீர்ந்த பின் ,ஹீலியம்
புறவோட்டுப் பகுதியில் தொடர்ந்து எரிந்து கார்பனாகும் .இந்த
நிலையில் மீரா இப்பொழுது உள்ளது என ஆராய்ச்சி
யாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்நிலைக்குத் தள்ளப்பட்ட மீரா இன்னும் நீண்ட காலம் வாழ வாய்ப்பில்லை .அழிவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும்
ஒரு விண்மீன் மீராவாகும். துடிப்பின் மூலம் பெருமளவு
மூலப்[பொருளை இவ் விண்மீன் வெளியில்
உமிழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 10000 ஆண்டுகள் இதன்
புற வோட்டுப்பகுதி முழுவதும் வெளியேறி
பரந்த புகைப்படலமாக அதைச் சுற்றி நெடுந் தொலைவு வரை
விரவி இருக்கும். அப்போது இது கோளவடிவ
நெபுலாவாகக் காட்சி தரும் . நம்முடைய சூரியன் இன்னும் 5000
மில்லியன் ஆண்டுகளில் ஏறக்குறைய
இதே வழிமுறையைப் பின்பற்றி கோளவடிவ நெபுலாவாக
உருமாறலாம் என்று கூறுகிறார்கள் .
Monday, September 26, 2011
arika iyarppiyal
ஆழ் கடலில் சிவப்பு ரத்தம் பச்சை நிறமாகி விடுமா ?
ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட நிறங் கொண்டிருப்பதற்குக் காரணம், அது அந்நிற ஒளியைத் தவிர்த்து பிற
ஒளியை உட்கவந்துவிடுவதும் ,அந்நிற ஒளியை எதிரொளிப்பதும் ஆகும். இதற்கு அப்பொருளில் சிறப்புத் தன்மை கொண்ட
வேதிப்பொருள் ஒன்று இருக்க வேண்டும். இலை பச்சையாக இருப்பதற்கு காரணம் குளோரோபில் என்ற பச்சையமாகும் .
இது பச்சை தவிர்த்த பிற நிற ஒளியை உட்கவருகிறது. இரத்தம் சிவப்பாக இருப்பது அதிலுள்ள ஹிமோகுளோபின்
காரணமாகிறது .
ஆழ் கடலில் ஒருவர் இரத்தத்தை பச்சை நிறமுடையதாகக் கண்டார். ஆழ் கடலில் கறுப்பாகத் தோன்றிய மீன், கரைக்கு வரும் போது கருஞ்சிவப்பாகத் தோன்றியது. இந்த நிறமாற்றம் ஏன்
தோன்றுகிறது ?
பச்சை நிறப் பொருள் பச்சை தவிர்த்த பிற ஒளிகளை உட்கவருவதை போல கறுப்பு நிறப் பொருள் அனைத்து
ஒளிகளையும் உட்கவரும் என்றும் வெண்ணிறப் பொருள் ஒரு ஒளியையும் உட்கவராது என்றும் கூறலாம்.
நீர் சில குறிப்பிட்ட ஒளியை உட்கவருவதால் அது முழுமையான நிறமற்ற பொருள் அல்ல . நீரின் பரப்பில் விழும் வெண்ணிற ஒளி ஆழ் கடலில் (15 மீட்டர் ஆழத்திற்கும் கூடுதலான ஆழத்தில் ) வடிகட்டப்பட்டு கால் பங்கு ஒளியே சென்றடைகிறது .30
மீட்டர் ஆழத்தில் சிவப்பு நிறம் சிறிதும் இல்லை . நீர் மூலக்கூறுகள் சிவப்பு ஒளியை பிற நிற ஒளியை விட அதிகமாக உட்கவருகின்றன .சிவப்பு நீங்கிய வெள்ளொளி பச்சை கலந்த நீல நிறத்துடன் தோன்றுகிறது. 200
மீட்டர் ஆழத்திற்கு அப்பால் ஒளி சிறிதும் இல்லை.
ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட நிறங் கொண்டிருப்பதற்குக் காரணம், அது அந்நிற ஒளியைத் தவிர்த்து பிற
ஒளியை உட்கவந்துவிடுவதும் ,அந்நிற ஒளியை எதிரொளிப்பதும் ஆகும். இதற்கு அப்பொருளில் சிறப்புத் தன்மை கொண்ட
வேதிப்பொருள் ஒன்று இருக்க வேண்டும். இலை பச்சையாக இருப்பதற்கு காரணம் குளோரோபில் என்ற பச்சையமாகும் .
இது பச்சை தவிர்த்த பிற நிற ஒளியை உட்கவருகிறது. இரத்தம் சிவப்பாக இருப்பது அதிலுள்ள ஹிமோகுளோபின்
காரணமாகிறது .
ஆழ் கடலில் ஒருவர் இரத்தத்தை பச்சை நிறமுடையதாகக் கண்டார். ஆழ் கடலில் கறுப்பாகத் தோன்றிய மீன், கரைக்கு வரும் போது கருஞ்சிவப்பாகத் தோன்றியது. இந்த நிறமாற்றம் ஏன்
தோன்றுகிறது ?
பச்சை நிறப் பொருள் பச்சை தவிர்த்த பிற ஒளிகளை உட்கவருவதை போல கறுப்பு நிறப் பொருள் அனைத்து
ஒளிகளையும் உட்கவரும் என்றும் வெண்ணிறப் பொருள் ஒரு ஒளியையும் உட்கவராது என்றும் கூறலாம்.
நீர் சில குறிப்பிட்ட ஒளியை உட்கவருவதால் அது முழுமையான நிறமற்ற பொருள் அல்ல . நீரின் பரப்பில் விழும் வெண்ணிற ஒளி ஆழ் கடலில் (15 மீட்டர் ஆழத்திற்கும் கூடுதலான ஆழத்தில் ) வடிகட்டப்பட்டு கால் பங்கு ஒளியே சென்றடைகிறது .30
மீட்டர் ஆழத்தில் சிவப்பு நிறம் சிறிதும் இல்லை . நீர் மூலக்கூறுகள் சிவப்பு ஒளியை பிற நிற ஒளியை விட அதிகமாக உட்கவருகின்றன .சிவப்பு நீங்கிய வெள்ளொளி பச்சை கலந்த நீல நிறத்துடன் தோன்றுகிறது. 200
மீட்டர் ஆழத்திற்கு அப்பால் ஒளி சிறிதும் இல்லை.
arika iyarppiyal
இருளில் ஒளிரும் எருதின் கண்கள்
இரவில் நாம் பேருந்து அல்லது சிற்றுந்து மூலம் பயணம்
செய்யும் போது எதிர்ல் வரும் விலங்குகளின் கண்கள்
பிரகாசமாக ஒளிர்வதைப் பார்க்கிறோம் . இருளில் அவை
எப்படி பிரகாசிக்கின்றன ?
இரவில் உண்மையில் விலங்கினங்களின் கண்கள்
பிரகாசிப்பதில்லை .ஏனெனில் அவைகளுக்குத் தானாக
ஒளியை உமிழும் தன்மை இல்லை .அவற்றின் மீது
விழும் ஒளியை எதிரொளிப்பதால் இப்படிப் பிரகாசிக்கிறது .
சாலை ஓரம் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கைக் காட்டிகளைப்
போல இது செயல்படுகிறது எனலாம். சிவப்புக் கண்ணாடி போல
தெளிவான சிவப்பு நிறத்தை சிலந்தியும், பச்சை நிற
ஒளியை குள்ள நரியும் ,ஒளிரும் சிவப்பு நிறத்தை முயலும்
தருகின்றன. சிவப்பு நிறத்திற்கு கண்ணில் உள்ள நீர்மங்களில்
கரைந்துள்ள சிறப்பு வேதிப் பொருளே காரணமாகும் .
பெரும்பாலான விலங்கினங்கள் இரவில் நடமாடுகின்றன.
இரை தேடுவதையும் ,வேட்டையாடுவதையும்
இரவிலேயே செய்கின்றன. கண் விழியின் பின்புறத்தில்
இவை ஒளி எதிரொளிப்புத் தளத்தைப் பெற்றுள்ளது .
ஏனெனில் கிடைக்கும் நிலவொளி மற்றும் விண்மீன்களின்
ஒளியைக் கொண்டே அவை இரவில் புற உலகைக்
காண வேண்டியிருக்கின்றன. இந்த ஒளி கண்ணில் விழுந்து
பல மடங்கு பெருக்க மடைந்து வெளியேறுகிறது .
மனிதர்களின் கண்களுக்கு இத்தகைய தன்மை இல்லை.
மேலும் முழு இருட்டில் விலங்கினங்களால்
பார்க்கமுடியாது . ஆனால் பார்பதற்குத் தேவையான
குறைந்த அளவு வெளிச்சம் ,மனிதர்களுக்குத் தேவையான
அளவைவிடக் குறைவு
இரவில் நாம் பேருந்து அல்லது சிற்றுந்து மூலம் பயணம்
செய்யும் போது எதிர்ல் வரும் விலங்குகளின் கண்கள்
பிரகாசமாக ஒளிர்வதைப் பார்க்கிறோம் . இருளில் அவை
எப்படி பிரகாசிக்கின்றன ?
இரவில் உண்மையில் விலங்கினங்களின் கண்கள்
பிரகாசிப்பதில்லை .ஏனெனில் அவைகளுக்குத் தானாக
ஒளியை உமிழும் தன்மை இல்லை .அவற்றின் மீது
விழும் ஒளியை எதிரொளிப்பதால் இப்படிப் பிரகாசிக்கிறது .
சாலை ஓரம் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கைக் காட்டிகளைப்
போல இது செயல்படுகிறது எனலாம். சிவப்புக் கண்ணாடி போல
தெளிவான சிவப்பு நிறத்தை சிலந்தியும், பச்சை நிற
ஒளியை குள்ள நரியும் ,ஒளிரும் சிவப்பு நிறத்தை முயலும்
தருகின்றன. சிவப்பு நிறத்திற்கு கண்ணில் உள்ள நீர்மங்களில்
கரைந்துள்ள சிறப்பு வேதிப் பொருளே காரணமாகும் .
பெரும்பாலான விலங்கினங்கள் இரவில் நடமாடுகின்றன.
இரை தேடுவதையும் ,வேட்டையாடுவதையும்
இரவிலேயே செய்கின்றன. கண் விழியின் பின்புறத்தில்
இவை ஒளி எதிரொளிப்புத் தளத்தைப் பெற்றுள்ளது .
ஏனெனில் கிடைக்கும் நிலவொளி மற்றும் விண்மீன்களின்
ஒளியைக் கொண்டே அவை இரவில் புற உலகைக்
காண வேண்டியிருக்கின்றன. இந்த ஒளி கண்ணில் விழுந்து
பல மடங்கு பெருக்க மடைந்து வெளியேறுகிறது .
மனிதர்களின் கண்களுக்கு இத்தகைய தன்மை இல்லை.
மேலும் முழு இருட்டில் விலங்கினங்களால்
பார்க்கமுடியாது . ஆனால் பார்பதற்குத் தேவையான
குறைந்த அளவு வெளிச்சம் ,மனிதர்களுக்குத் தேவையான
அளவைவிடக் குறைவு
Subscribe to:
Posts (Atom)












