Friday, November 8, 2013

Eluthatha Kaditham

எழுதாத கடிதம்
அரட்டை அரங்கத்தில் குறட்டை  விடாமல் எல்லோரும் உரக்கவே பேசிக்கொண்டிருந்தார்கள் 
திண்ணைப் பேச்சில் ஒரு ட்டி மன்றம் போல அது இருந்தது.வித்தியாசமான தலைப்பு என்றாலும் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் அதில் டுபாடு இருந்ததால் விவாதம் விறுவிறுப்பாகவும் இருந்தது.

யார் அதிகம் குற்றம் செய்கின்றார்கள் -லஞ்சம் வாங்குபவர்களா? லஞ்சம் கொடுப்பவர்களா
லஞ்சம் கொடுப்போர் இருப்பதினால் தானே லஞ்சம் வாங்குவோர் இருக்கின்றார்கள். லஞ்சம் வாங்குவது தப்பென்றால் லஞ்சம் கொடுப்பதும் தப்புத் தானே என்று வாதிடுவோர் பலர் இருக்கின்றார்கள்.

இரண்டு பேருமே குற்றம் செய்கின்றார்கள் .சமுதாயத்தை சீர் குலைக்கின்றார்கள் என்றாலும் லஞ்சம் வாங்குவோர் லஞ்சம் கொடுப்போரை விடக் கூடுதலாகவே குற்றம் புரிகின்றார்கள் என்று சொல்வதற்கு பல ஆதாரங்களைக் குறிப்பிடமுடியும்.
லஞ்சம் வாங்குவோர் தண்டிப்பட வேண்டியவர்கள்,கொடுப்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். லஞ்சம் கொடுப்போர் வேறு பல குற்றங்கள் புரிந்திருப்பின் அது வேறு வியம்
லஞ்சம் யார் வாங்குகின்றார்கள் ? பதவி,செல்வாக்கு இவற்றை அடிப்படையாகக் கொண்டு  தன் கடமையைச் சரிவரச் செய்யாமல் தைச் செய்து கொடுக்க வேண்டியவரை இழுத்தடித்து லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் ஆகும் என்ற நிலைக்குத் தள்ளி இறுதியில் லஞ்சத்தை வாங்கிய பின்பே காரியத்தை முடித்துக் கொடுக்கின்றார்கள். லஞ்சம் கொடுக்க கூடாது என்ற கொள்கையுடையவர்கள் அரசு அலுவலகங்களில் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல்
லைக்கழிக்கப் படுகின்றார்கள்..இதனால் மக்களிடையே லஞ்சம் கொடுத்தாவது நேர்மையான காரியத்தை முடித்துக் கொள்ள முயல்கின்றார்கள். வேறு சிலர் எதிர் மறையான அல்லது தீய காரியங்களுக்காக லஞ்சம் கொடுத்து நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். லஞ்சம் வாங்குவோர்  லஞ்சம் கொடுக்க அஞ்சுவதில்லை. அவர்களுக்கு தங்களின் காரியம் முடிந்தால் சரி. இதனால் லஞ்சம் வாங்குவோர் எல்லோரிடமும் லஞ்சத்தை எதிர்பார்க்கத் தொடங்குகின்றார்.லஞ்சம் கொடுப்பவர்கள் இழந்ததை மீட்டுப் பெற அதை வேறு தவறான வழிகளில் முயல்வதால் லஞ்சம் ஒரு பெருக்குத் தொடரில் சமுதாயத்தில் வளர்ச்சி பெறுகின்றது.

லஞ்சம் வாங்குவோர் சில பொய்யான நடைமுறைகளைக் கூறி காரியத்தில் ஒரு தடையை ஏற்படுத்தி லஞ்சத்தை கட்டாயமாக்கி விடுகின்றார்.இந்தப் பழக்கத்தினால் அவர் காலப் போக்கில் தம் பணியைச் சரிவரச் செய்வதில்லை. மேலும் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டத்திற்குப் புறம்பான வேலைகளைக் கூடச் செய்கின்றார்.இது பிற்பாடு தெரிய வரும் போது அரசு எதுவும் செய்ய முடியாமல் தடுமாறுகின்றது. சில ஊர்களில் காலி னையிடங்களைத் தவறா பத்திரப் பதிவு செய்து கொடுத்து விடுகின்றனர்.இதற்குக் காரணம் அவர்களுக்கு சரியான விவரம் தெரியாமல் இருப்பதால் லஞ்ச மயக்கத்தில் தவறைச் செய்து விடுகின்றனர்.

Thursday, November 7, 2013

Eluthatha Kaditham

எழுதாத கடிதம்
செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழக் கூடிய அனுகூலமான  சூழ்நிலை இருக்கிறதா? அங்கே மனிதர்களைக் குடியேற்ற முடியுமா? என்பதை ஆராய்வதற்கு 450 கோடி செலவில் ராக்கெட் ஒன்றை இந்தியா
வியிருக்கிறது. இத்தகை உயர் தொழில் நுட்பத்தைத் தெரிந்து வைத்திருக்கின்ற ஒரு சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாக இருப்பது பெருமை தரக்கூடியதாக இருந்தாலும் பல அடிப்படை விஷயங்களில் நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கின்றோம் என்பது கவலை தரக்கூடிய தாக இருக்கின்றது
படிப்பறிவின்மை 50 சதவீதம் .பள்ளிக்கூடங்களில் போதிய அடிப்படை வசதி இன்மை. போதிய ஆசிரியர்கள் இன்மை ,
சத்துணவு இன்மை,குடிமக்களுக்கு உணவுப் பொருட்கள் முழுமையாக இல்லாமை,சாலை வசதிகள் ,பாலங்கள் சிறப்பாக இல்லாமை,ஸ் மற்றும் ரயில் வண்டிகளில் சுத்தமின்மை.குடிநீர் இன்மை,குடிகாரர்களால் ஏற்படும் ஒழுக்கமின்மை குப்பை மற்றும் கழிவுகளை முறையாக அகற்ற முடியாமை,ஊழலை ஒழிக்க முடியாமை, கொலை, கொள்ளை
கற்பழிப்பு போன் குற்றங்களை ஒடுக்க முடியாமை, செங்கோலாட்சி இல்லாமை,  இப்படி நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். எதைச் சொல்லுவது எதை விடுவது. வாழ்வது தான் வாழ்க்கை, வாழும் வரை வாழ்க்கை என்ற நிலையே நீடித்து தொடர்ந்து வரும்போது செவ்வாய்க் கோள் பயணம் இந்திய மக்களுக்கு கானல் நீர்தான் பழைய சிறுமைகளை ஒரு புதிய  பெருமையைக் கொண்டு மறைத்துவிடும் முயற்சியாக இருப்பதால் இதனால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை.


காட்டு மாடுகளும், வரிக் குதிரைகளும் நைல் நதியின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல ஆபத்துகள் நிறைந்த ஆற்றைக் கடந்து செல்லதான் வேண்டும் என்பது இயற்கை என்றோ எழுதிவைத்த கட்டளை. இது கோள் விட்டு கோள் செல்ல நினைக்கும் மனிதர்களுக்கும் பொருந்தும். ன்று நினைத்து மாதானம் கொள்ள வேண்டியதுதான்.

Wednesday, November 6, 2013

Micro aspects of developing inherent potentials

Micro aspects of developing inherent potentials
ந்தத் துறையில் இயல்பான விருப்பம் இருக்கின்றதோ அத் துறையில் ஆர்வம் காட்டி டுபட்டால் அதிக எதிர்ப்புக்களைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை வராது. இது ஒருவருடைய விருப்பத் துறை தரும் அனுகூலமாகும்.விருப்பத் துறையைத் தீர்மானித்து அதில் போதிய திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டுவிட்டால் வெற்றிக் கோட்டையின் நுழைவு வாசல் வரை வீறு நடை போடலாம்.

திறமையில் மற்றவர்களைப் பிரதிபலிப்பதின் மூலம் புதிய சாதனைகளைச் செய்ய முடிவதில்லை. அதற்குத் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் . அதற்கு வெறும் கல்வி மட்டும் போதாது

அனுபவங்களும், அனுபவங்கள் பெற்ற அறிர்களின் தொடர்பும் தேவை.இது ஒரே நாளில் கை கூடி வரக்கூடிய விஷயமில்லை. அனுபவங்கள் மூலம் எது அனுகூலமானது எது அனுகூலமில்லாதது என்பதைத் தெரிந்து கொள்ள முடிவதால் வளர்ச்சிக்குத் தேவையான அவசியத் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடிகின்றது

போதுமென்ற பொன்மனத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தனித் திறமை தேவையில்லை பிறருக்கு வி செய்வதற்கும்,தர்மம் செய்வதற்கும் தனித் திறமை தேவையில்லை. உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதற்கு தனித் திறமை தேவையில்லை.மரபு வழியிலான பழக்க வழக்கங்களை  மேற்கொள்வதற்கு தனித் திறமை தேவையில்லை .இவையாவும் அசலைப் பார்த்து நகலெடுக்கும் வேலைகள் 

கற்ற கல்வியோடும் கண்டு ளித்த இயற்கையோடும் ஒட்டிய சிந்தனைகளை மீண்டும் மீண்டும் அசைபோடும் போது புதிய கருத்துககள் ண்ணத்தில் உதயமாகின்றன.அவற்றை ஓவியமாகத் தீட்டி பிறர் பார்க்க  காட்சிக்கு வைக்க விரும்பும் போது ,கருத்துக்களையெல்லாம் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஒரு புதிய உணவுப் பொருளை மைத்து பிறர் சுவைக்கப் பரிமாறும் போது உன்னுடைய முயற்சிகள் தனித் திறமைகளை மேம்படுத்தி விடுகின்றன.