Thursday, April 21, 2022

vinveliyil Ulaa

                                                         

கொம்பு வடிவ அண்டம் (Antennae Galaxy)

 

          இதில் இரு அண்டங்கள் நேரடியாகக் குறுக்கிட்டு மோதிக் கொள்வதால் ஏற்படும் பின் விளைவால் ஏற்படுவதாகும் இதை மோதல் என்று சொல்வதை விட ஒருங்கிணைப்பு என்று கூறலாம். இதை 1785 ல் வில்லியம் ஹெர்ஷல் (william Herschel) என்பர் கண்டுபிடித்தார். NGC4038/NGC4039 என்ற இருஅண்டங்களில் உள்ள வளிமங்களும், தூசுகளும், காந்தப் புலமும்  ஒன்றுசேர்ந்து  இடையீட்டுச் செயல் புரிவதால் இப்படிக்   கொம்பு போன்ற அண்டம் உருவாகியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் உருவத் தோற்றம் ஒரு வண்ணத்துப் பூச்சியின் உணர்கொம்பு போல இருப்பதால் இது இப்பெயர் பெற்றது இது  corvus எனப்படும் காக்கை (Crow) வடிவ விண்மீன் வட்டாரத்தில் 45 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது .பூமியிலிருந்து இதை நோக்க இது இதயம் போன்றதொரு தோற்றம் தருகின்றது அமைந்துள்ளது சில சமயங்களில் இவை புதிய விண்மீன்களை விரைவாக உருவாக்குவது முண்டு. இந்த உணர்கொம்பு அண்டம் விண்வெளியில் ஒரு எக்ஸ் கதிர் உமிழ்வானாக இருக்கின்றது . கொம்பின் மங்கலான பகுதிகள் புதிதாக உருவாகும் இளம் விண்மீன்களாகும் புதிய விண்மீன்களின் உருவாக்கம்  அங்கு நீல நிறத்தை ஏற்படுத்தியிருக்கின்றது .. சிவப்பு நிறம் ஒளிரும் விண்மீன்களின் உருவாகும் பகுதியைச் சுற்றியுள்ள ஹைட்ரஜன் வளிமம் சிவப்பு நிறத்துடன் ஒளிர்கின்றது  . வலது மற்றும் இடது பக்கங்களில் தோன்றும் ஆரஞ்சு நிறப் பொட்டுக்கள் வயதான விண்மீன்களைக் கொண்ட  மோதும் இரு சுருள் புய அண்டங்களின் மையக்கருக்களாகும்.

 

                                                        

                                                               NGC 4038               NGC 4039   

                                                                      கொம்பு வடிவ அண்டம்

2.

         

                                                        

                                                                                                               

Thursday, November 4, 2021

 தீபாவளித் திருநாளன்று sun TV ல் ஒளிபரப்பப்பட்ட  பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிப்பது ஆண்களா இல்லை பெண்களா என்ற தலைப்பில் சாலமன் பாப்பைய்யா  தலைமையில் ஒரு பட்டிமன்றம் பார்த்தேன். தாயின் பங்களிப்பே என்று தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அது மரபு வழியாக  நம் சமூகம் பின்பற்றி ஒழுகும் உணர்ச்சியின் வெளிப்பாடே அந்த உணர்ச்சியை யாரும் தரக்குறைவாக மதிப்பிடமுடியாது இடது கண் சிறந்ததா வலது கண் சிறந்ததா என்று கேட்டாலோ , ஓடும் வண்டியில் வலது சக்கரம் பயனுள்ளதா இடது சக்கரம் பயனுள்ளதா என்று கேட்டாலோ இயற்கை என்ன பதில் சொல்லும் 

 

எது சரியானது என்று சிந்தித்து வாழ்வியல் ஒழுக்கங்களை வரையறுத்த நம் முன்னோர்கள் இல்லறத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள கடமைகளைப் பிரித்துக் கொடுத்திருக்கின்றார்கள். ஒருவருடைய கடமைகள் மட்டுமே இல்லறத்தை முழுமையாகிவிடாது. .பிள்ளை வேண்டுமென்றால் ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வேண்டும். ஒருவரின்றி ஒருவரால் மட்டுமே இது நிறைவேறிவிடுவதில்லை.

பிள்ளை பிறந்தவுடன் பால் கொடுத்து வளர்க்க வேண்டிய  பொறுப்பு தாய்க்கும் ,அந்தத் தாய்க்கும் சேய்க்கும் வேண்டிய சத்துணவுகள் ,உடை மற்றும் அடிப்படை வசதிகளைக் கொடுக்கச் சம்பாதிக்க வேண்டிய பொறுப்பு தகப்பனுக்கும் உள்ளது.ஆண் உயர்ந்தவனா இல்லை பெண் உயர்ந்தவளா என்று கேட்டால் அது அவர்கள் செய்யும் கடமைகளில் எது மேலானது என்று கேட்பது போல ஆகிவிடும் .  

 

விதி விலக்கான உதாரணங்கள் எப்பொழுதும் இயற்கைக்கு முரண்பாடாகவே இருக்கும். ஒரு பெண் ஆணுக்கு நிகரானவள் என்று நிருபிக்க முயலும் போது வாழ்வியல் கடமைகள் புறக்கணிக்கப்படுகின்றன ..அவள் செய்யவேண்டிய வீட்டு வேலைகளை ஆண் செய்ய வேண்டியது தவிர்க்கயியலாததாகி விடுகின்றது..

 

கவிஞர் கண்ணதாசன் பாசமலரில்  மலர்ந்தும் மலராத  என்று ஒரு தாலாட்டுப் பாடல் ஈடு இணையில்லாதது  இமாமுக்கு கொடுக்கப்பட்ட விருது இசைக்கும் இசைப்பிற்கும் . பாடலுக்கு இல்லை .பாடல் எழுதியதுஒரு பெண்ணாக இருக்கலாம் . ஆனால் அந்தப் பெண்ணின் மூல வித்து ஆணிலிருந்து வந்ததே..

 

ஒரு பெண்தான் ஆண் பிள்ளையையும் பெறுகின்றாள்வளர்க்கும்  போது அதிக பங்களிப்புச் செய்த அந்தப் பெண் எங்கே தவறு செய்தாள் . அவன் தகப்பனாக மாறியபோது அவன் பங்களிப்பு குறைந்து  போனது . அப்படியானால் அவளுடைய வளர்ச்சியில் எதோ குறைபாடு உள்ளது என்று சொல்ல முடியுமா ? சமுதாய அவலங்களை இயற்கையோடு இணைக்கும் போது சில முரண்பாடான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடுகின்றோம் . என்னுடைய தீர்ப்பு 50-50 %.    .    .    

Saturday, October 16, 2021

short story

 விரல்கள்

 

 

மெ .மெய்யப்பன் 

 

ஒரு குட்டித் தீவிற்கு  சுற்றுலா வந்த பயணிக்கு   ஒரே ஆச்சரியமாக இருந்தது. கார் டிரைவர் ,ஹோட்டல் பணியாளர் சுற்றுலா வழிகாட்டி  போன்ற அனைவருக்கும் இடது கையில் ஒரு விரல் வெட்டப்பட்டு இல்லமால் இருந்தது . மாய லோகம் எனப்படும் அரண்மனைக்கு   அழைத்துச் செல்லும்போது .,வழிகாட்டியிடம் இது பற்றி கேட்டும் விட்டார் 

 

வழிகாட்டி தயக்கத்துடன் கூறினான். இங்கு திருடினால் அவர்களுடைய சுண்டுவிரலை வெட்டி விடுவார்கள் .மீண்டும் திருடினால் இரண்டாவது விரலையும் வெட்டி விடுவார்கள்.

 

மாய லோகத்தில்  சுற்றுலாப்பயணிகளுக்கு   அந்நாட்டின் அரசன் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ளலாம். விருந்தில் கலந்துகொண்டு விட்டு வழிகாட்டியுடன் ஹோட்டலுக்குத் திரும்பும் போது மனத்தைக் குடைந்து கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டும் விட்டான்  " அரசன் கையுறையைக் கழட்டும் போது நான் கவனித்தேன் , அரசனின் இடது கையில் ஐந்து விரல்களும் இல்லையே.? அரசன் திருடினாரா  ? அப்படி என்ன திருடினார் ? " 

" ஷ் , சத்தமாகப் பேசாதீர்கள் . அரசர் அந்தப்புரத்தில் இருந்த அரசியாரின் தோழிகளைத் திருடிவிட்டாராம் . அதற்கான தண்டனையை நாட்டின் வழக்கப்படி அரசியார் கொடுத்துவிட்டாராம் "

  .