சட்டத் துறையும் நீதித்துறையும் எதற்காக நிறுவப்பட்டனவோ அதற்காக மட்டுமே செயல்புரிந்துவந்தால் அதிகாரிகளும் அரசியவாதி களும் நேர்மை தவறாது பணிபுரிவார்கள் . ஆட்சியாளர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அதற்காக பிழையின்றி கடமையாற்றினால் காவலரும் நீதிபதிகளும் மக்களுக்கு முழு நம்பிக்கை தரக்கூடிய வகையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நாட்டில் பாதுகாத்திடுவார்கள் . இவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் மக்களிடம் இருக்கவேண்டும் . ஏனெனில் மக்களுக்காகத்தான் இவர்கள் நியமிக்கப்பட்டு மக்கள் இவர்களுடைய சம்பளத்திற்காக வரி செலுத்திவருகின்றார்கள் .
No comments:
Post a Comment