Thursday, March 5, 2026

Tamil poem

 இந்த உலகம் தாங்காதைய்யா தாங்காது

இன்னொரு போரைத் தாங்காது 

முதலிரு போர்கள் விட்டுச் சென்ற சுவடுகள்

இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை  

இன்றும் தொடரும்  விதிமீறிய  இன்னல்கள் 

இறைவனே இன்னும் அழுது ஓயவில்லை

பெற்ற பிள்ளைகளை மீண்டும் இழக்கலாமா-இறுதிவரை  

உற்ற துணைகள் உதவிக்கு இல்லாமற்போகலாமா 

கட்டிய வீடு கண்முன்னே இடிந்து போகலாமா

ஒட்டிய பொருட்கள் எரிந்து சாம்பலாகலாமா

பசியோடு பலநாட்கள் பருகத் தண்ணீரில்லை 

நாடுஇருந்தும் நாடோடியாய் நடைப்பயணம் 

அங்கே அறிவுக்கும்   பொருளுக்கும் மதிப்பில்லை 

மக்களை ஆளவந்த அறிவிலிகளே, 

புத்தியை அடகு வைத்துவிட்டா நாடாளாவந்தீர்கள்

இந்த உலகம் தாங்காதைய்யா தாங்காது

இன்னொரு போரைத் தாங்காது 


No comments:

Post a Comment