Saturday, June 27, 2026

நீதியைப் பாதுகாப்பது அனைவரின் கடமை என்றாலும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பங்களிப்பு மக்களுடையதைக் காட்டிலும் அதிகம் என்றே நான் சொல்வேன், நீதிபதிகளுக்கு அது கட்டளை.சமுதாயத்தின் நலன் காக்க தீயவைகளை அழிக்கவேண்டிய பொறுப்பு அவர்களுடையது . மக்கள் தீய செயல்களை ச் செய்யாமல் இருக்கவேண்டும் .இழப்பு ஏற்பட்டால் தீயவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். மக்கள் அப்படிச் செயல்படும் வாய்ப்பு குறைந்துவருகின்றது. அதற்குக் காரணம் அவர்கள் செல்வாக்கு மிக்க தீயவர்களால் அச்சுறுத்தப்படுகின்றார்கள்/ தீயவர்களின் கூட்டணி அவர்களுக்கு எதிரான எல்லாச் செயல்களையும் முறியடித்து விடுகின்றார்கள் . அங்கு நீதியின் விலை நேர்மியான ஒரு தனிநபரின் ஆயுட்கால சமபாதியத்தை விட அதிகமாக இருக்கின்றது.இழப்பை ஏற்கனவே ஏற்பட்ட இழப்போடு நிறுத்திக்கொள்வதேஇனிவரும் எல்லையில்லா இழப்பை தடுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மக்களை ஒரு குற்றத்திற்கு எதிராக புகார் அளிக்க முடியாதிருக்கிறது

No comments:

Post a Comment