Saturday, June 27, 2026

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு ஆயிரக்கணக்கான திட்டங்களை ச் சொல்கின்றார்கள் . அவை பெரும்பாலும் நடைமுறைக்கு வருவதில்லை. வந்தாலும் முழுமை பெறுவதில்லை. செலவுக்கணக்கை சமர்ப்பிக்க மட்டுமே அவை உதவுகின்றன. இது வரம்பின்றி வளரும்போது கூடுதல் வரிவிதிப்பு சட்டமாகின்றது .ஆட்சியை இழந்தபிறகு மௌனமாகி விடுகின்றார்கள். மக்களைவிட வெற்றிபெற்ற எதிர்க்கட்சியினரை எதிர்ப்பதே அவர்கள் முக்கிய வேலையாகிவிடுகின்றது. ஆளுங் கட்சியினரும் எதிர்கட்சியினரும் மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் என்ற சுய விருப்பத்துடன் அரசியலுக்கு வந்தவர்கள் . இதைத் தனித்தனி யாகச் செய்தாலென்ன சேர்ந்து செய்தாலென்ன . சுய லாபம் கருதும்போது இது விடுபட்டுப்போகின்றது . உயிரினும் மேலான மக்களாவது மண்ணாங்கட்டியாவது

No comments:

Post a Comment