Friday, August 27, 2021

ஒழுக்கமின்மை

 பொதுவாக ஒழுக்கமின்மை சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு மதிப்புக்கொடுப்பதில்லை. சமுதாயம்  நலமாக இருந்தால் சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் நலமாகவே இருப்பார்கள் என்ற கொள்கையில் நம்பிக்கையின்றி சமுதாய நலனைப்  புறக்கணிக்கும் போக்கை ஒழுக்கமின்மை தூண்டிவிடுகிறது. சுயநலத்தில் கொண்டுள்ள அளவில்லாத விருப்பம்  சுய கட்டுப்பாடுகளின்றி செயல்படும்  துணிவைத்  தந்து மறைவொழுக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் விருப்பத்தை பெருவிருப்பமாக்கி சமுதாயம் தழுவியவாறு வளர்த்து  விடுகின்றது. தீய செயல்கள் .மறைவொழுக்கமாக இருப்பதால் பொதுவாக எல்லோரும் தங்களுக்குத் தாங்களே நியாப்படுத்திக்கொண்டும் ,தங்களுக்கென்று ஒரு வரையறையையும் தனித்த  வரம்பையும் ஏற்படுத்திக் கொண்டும் மறைவொழுக்கச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். .மறைவொழுக்கச் செயல்களில் பிறர் அறியாமல் தொடர்ந்து செய்ய முடியும் என்பதாலும் , தப்பித் தவறி  கையும் களவுமாகப் பிடிபட்டாலும் தப்பித்துக் கொள்ள பல வழிமுறைகள் இருப்பதாலும் இப்போக்கு சமுதாயம் தழுவியவாறு வளர்ந்து வருகின்றது.  பொதுநலத்தைக்  குழி தோண்டிப் புதைத்து விட்டு   சுயநலத்தைப் பேணிக்காக்கும் ஒரு சமுதாயக் காரணியாக நிலைப்பட்டு வருகின்றது. புறத்தே எதிர்க்கப்பட்டாலும் . எல்லோராலும் அகத்தே ஏற்றுக்கொள்ளப்படுவதால்  பிற்காலத்தில் எந்த எதிர் நடவடிக்கைகளினாலும் தடுக்க முடியாத கடிய சமுதாயச் சூழலையே உருவாக்கி நிலைப்படுத்தும்.

 

சுயநல எண்ணத்தையும் , செயல்பாடுகளையும்  இந்த ஒழுக்கமின்மை வளர்த்துவிடுகின்றது . ஒழுக்கமின்மை தற்காலிகமான இலாபங்களை மட்டுமே தரும் .அது நிரந்தரமானதில்லை. ஒரு சமுதாயத்தில் ஒரு சிலர் மட்டுமே தீய செயல்களைச் செய்வார்களேயானால் அங்கு  ஒழுக்கத்தின் அழுத்தத்தால் அவர்கள்  தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு   அதிகமாக இருக்கும் . ஆனால் மறைவொழுக்கத்தால் பெரும்பாலானோர் தீயவர்களாக மாறினால் , சீரழியும் சமுதாயம் திருத்தப்படுவதற்கான வாய்ப்பே  இல்லாமல் போகும். இதன் பரிணாம வளர்ச்சி ஒட்டு மொத்த சமுதாயத்தின் அழிவிற்கு காரணமாக அமையும் .    

 ஒழுக்கமின்மை

 

அகத்தடைகளில்  முதன்மையானதும் முக்கியமானதும் சுய கட்டுப்பாடுகளை மீறி பின்பற்றி ஒழுக்கப்படும் ஒழுக்கமின்மையே.. ஒழுக்கமின்மையை மறைவொழுக்கமாகப்  பின்பற்றி ஒழுகும்   ஒருவர் ஒழுக்கத்தைப்பற்றி வாய் கிழியப்   பேசுவது சமுதாய     மதிப்பை உயர்த்திக்கொள்வதில் கொண்டுள்ள விருப்பமாகும்.  ஒழுக்கத்தைப் பேசுவதும் ,ஒழுக்கமின்மையை மறைவொழுக்கமாகச் செய்வதும்    சமுதாய மதிப்பில்  களங்கம்  ஏற்பட்டுவிடக்கூடாது   என்பதில் காட்டும்  அக்கறையாகும்.தன்னிடம் இல்லாத ஒழுக்கத்தை இருப்பதாகக் காட்டிக்கொள்ள பேசுவதும், இருக்கும் ஒழுக்கமின்மையை மறைக்க மறைவொழுக்கமாகச் செய்வதும் போலித்தனமான நடவடிக்கை களாகும் ..இதனால் பெரும் பாலான மனிதர்கள் சமுதாயத்தில் இரட்டை வேடம் போடுகின்றார் கள் .  பிறர் பார்க்க ஒன்றைச் செய்வது ,பேசுவது ,தனக்காக வேறொன்றைச்  செய்வது,பேசுவது  இவர்களுடைய பண்பாகும் .இந்த இரட்டை மனநிலை பிரச்சனைகளை எதிர்கொள்வதிலும்  பிரதிபளிப்பதால்   அதுவே  ஒரு அகத்தடையாக அமைந்துவிடுகின்றது .இரட்டை மன நிலை என்பது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கருத்துக்  களினால் ஏற்படும் குழப்பநிலையாகும் ..ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை யில் ,ஒரு குறிப்பிட்ட  எண்ணத்தையும் , செயலையும் பெறுவதில் இது தாமதத்தை ஏற்படுத்திவிடுகிறது 

இலக்கைத் தீர்மானித்துக்கொண்டு ஒரே பாதையில் செல்பவனுக்கு அகத்தடை ஒரு தடையாக இருப்பதில்லை .ஆனால்  குறுக்குப்பாதையிலும் ,மாறி மாறி மாற்றுப் பாதைகளிலும் செல்பவனுக்கு அகத்தடை அடங்காத் தடையாக இருக்கும்  .     .        ..    

Wednesday, July 28, 2021

 புறத்தடைகள் பெரும்பாலும் ஒருவருக்கு அறிமுகமானவர்களால் ஏற்படுத்தப்படுகிறது. சிலர் கெடுதல் செய்வார்கள் .வேறுசிலர் உதவி செய்ய மறுத்துவிடுவார்கள் . தவறான வழிகாட்டி கேடு செய்பவர்களும்  உண்டு ..தானே மற்றவர்களைவிட  யர்ந்தவனாக இருக்கவேண்டும்  என மனத்திற்குள் ஒவ்வொருவரும் நினைப்பதால் . மற்றவர்கள் தன்னைக்காட்டிலும் உயர்ந்த நிலையை அடைந்துவிடக்கூடாது என்று கெடுதல்  செய்கின்றார்கள். எல்லா நேரங்களிலும் எவர் தன்னுடைய வேலைகளைத்    தானே செய்துமுடிக்கவேண்டும் என்று விரும்பிச் செயல்படு கின்றார்களோ  அவர்களுக்கு புறத்தடைகளின் பாதிப்பு    குறைவாகவே இருக்கும் .

 

தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தானே தடை யாக இருக்கமுடியாது  என்பதால் யாரும் அகத்தடைகளைப்பற்றி   அதிகம் சிந்திப்பதில்லை. புறத்தடைகளை இனமறிந்து அகற்றிக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் .எதிரிகளை நண்பனாக்கிக் கொள்ளலாம் ஆனால்  நண்பனாகவே  உடனிருக்கும் உள்ளெதிரியை அவ்வளவு  எளிதில் மாற்றிவிடமுடியாது.அதனால் புறத்தடைகளை விட அகத்தடைகளே ஒருவருடைய சுய முன்னேற்றத்திற்குச்  சத்தமின்றி சலனமின்றி அதிக அளவில் பாதிப்[[பாதிப்பை ஏற்படுத்துகின்றன      ..    

Tuesday, July 27, 2021

சுயமுன்னேற்றத்தில் அகத்தடைகள்

 ஒவ்வொருவருடைய  முன்னேற்றத்திற்கும்  தடைகள் இருப்பதுதுண்டு.எந்த   சாதனைகளும்  தடைகளைத் தாண்டி   செல்லும் முயற்சிகளுக்கு அப்பால் தான் படைக்கப்படுகின்றன,பொதுவாகத்  தடைகள் இருவகைப்படும் அவற்றை புறக்தடை என்றும் அகத்தடை என்றும் கூறுவார்கள். புறத்தடைகள் மற்றவர்களாலும் புறக்காரணங்களினாலும் ஏற்படுத்தப்படுவது .ஒருவருடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்பட்டு மனம் பொறுக்காமல் அதைத் தடுக்க  பிறரால் ஏற்படுத்தப்படும் கெடுதல்கள் புறத்தடைகளுள் முதன்மையானதும் மோசமனாதுமாகும் .பொதுவாக இவற்றை நாம் சுய அறிவு மற்றும் அனுபவத்தின்  மூலம் யூகித்தறிந்து கொண்டு தவிர்த்துக் கொள்ள முடியும்  .உடல் நலக்   குறைவு, விபத்துக்கள் ,இயற்கைப் பேரிடர்கள் , குறித்த காலத்தில் கிடைக்காத உதவிகள்  புறக்காரணங்களினால் ஏற்படும் தடைகளாகும் .நுண்ணறிவினால் இவற்றை ஓரளவு முன்னறிந்து கொண்டு  தடுத்துக் கொள்ள முடியும் ஒருவர் தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தானே தடையாக இருப்பது அகத்தடையாகும். அகத்தடைகளை யாரும் அகத்தடைகளாகவே  நினைப்பதில்லை மாறாக இனமறியப்படாத யாரோ ஒருவராலும் அல்லது தனக்குப் பிடிக்காத  உறவினராலும் செய்யப்படும் ஒரு செயலாகவே நினைக்கின்றார்கள்.பொதுவாக எல்லோரும் தாங்கள்  மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி பெற்றுவிட்டால் அதைத் தனது சாதனை என்றும் தோற்றுவிட்டால் அது பிறரால் செய்யப்பட்ட  சதி என்றும் கூறுவார்கள்.  

 

Tuesday, July 6, 2021

சுய முன்னேற்றத்தைப் பாதிக்கும் அகத்தடைகள்

 சுய முன்னேற்றத்தைப் பாதிக்கும் அகத்தடைகள் 

 

எல்லோரும் என்ன நினைக்கின்றார்கள் என்றால் அவர்களுடைய முன்னேற்றத்தில் ஏற்படும் தடங்கல்களுக்கும் ,  தடைகளுக்கும் மற்றவர்களே காரணமாக இருக்கின்றார்கள் என்றும் அதில் தங்களுக்கு ஒரு சிறிதும் பங்களிப்பு இல்லை என்றே  நம்புகின்றார்கள் . உண்மையில் ஒருவருடைய முன்னேற்றத்தில் அவரால் ஏற்படும் தடை மற்றவர்களால் ஏற்படும் தடையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகம். இது அகத்தடையாக இருப்பதால் தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தானே தடையாக இருப்பதை யாரும் அறிந்திருப்பதும்  இல்லை. சுட்டிக்காட்டினால் ஒப்புக்கொள்வதுமில்லை தனி மனித ஒழுக்கமின்மை ,மறைவொழுக்கத்தால் சமுதாய ஒழுக்க மீறல்கள் ,தொழில் திறமையின்மை ,நேரந் தவறுதல் , ஆளுமைத் திறமையின்மை , பேராசை , முயற்சியின்மை ,நோக்கமின்மை , ஆர்வமின்மை , நம்பிக்கையின்மை ,போன்ற பல அகத்தடைகளால்  ஒவ்வொருநாளும் எல்லோரையும்  எதோ ஒரு வகையில் சறுக்கி  விழுந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த சறுக்களுக்குத் தனக்குப் பிடிக்காத ஒருவரே காரணம்  என்று   .தீர்மானமாய் இருப்பதால் அவர்கள் அவர்களுடைய பிரச்சனைக்கு சரியான தீர்வு காணமுடியாமல் நீண்ட காலம்  தடுமாறி கொண்டிருப்பார்கள்.   .