Thursday, February 6, 2025

 முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்  என்றும் வைரத்தை வைரத்தாலதான் வெட்டமுடியும் என்றும் தமிழ் ச் சான்றோர்கள் கூறுவார்கள் .ஆனால்  சமுதாயத்தில் தீயவனை தீயவனாக இருந்துகொண்டு முழுமையாகத் திருத்தவோ அல்லது தடுக்கவோ முடியாது .நேர்மையான சமுதாயத்தில் ஒரு நேர்மையானவன் துளிர்க்கும் தீயவர்களை திருத்திவிடுவான் ள்ளது தண்டித்துவிடுவான் போலித்தனமான நேர்மையுடன் வளரும் சமுதாயத்தில் உண்மையான நேர்மையுள்ளவர்கள் யாருமில்லை .தவறிப்போய் ஒரு நேர்மையானவன் இருந்தாலும் அவனுக்கு சமுதாயம் துணைநிற்பதில்லை ..அவனால் தவறான வழியில் முன்னேறும் சமுதாயத்தை தடுத்து நிறுத்தமுடிவதில்லை மக்களுக்காக நேர்மையானவர்கள் போல வேஷம் போடும் அரசியல் தலைவர்களால் தீயவர்களுடன் நட்பு கொள்ளமட்டுமே முடியும் ,அவர்களை க் கட்டுப்படுத்த முடியாது .. இது இயற்கை யின் நியதி அதை மூடி மறுக்கமுடியாது .

Wednesday, February 5, 2025

 மக்களின்  நடவடிக்கைகளே கடவுளை மெய்ப்பிக்கின்றன என்று சொல்லும் போது மக்களின் நடவடிக்கைகளே  கடவுளை பொய்ப்பிக்கவும் செய்கின்றன. எடுத்துக்கட்டாக  கடவுள் தூணிலும் இருப்பார்  துரும்பிலும் இருப்பர் என்றும்  கடவுள் ஒருவரே என்றும் அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்றும் கூறுவார்கள் . ஆனால் அதை நிம்பினாலும் நம்பாமல்  ஒரே கடவுளைத் தேடி  பல இடங்களுக்குச் செல்வார்கள் .  எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு  தொழுதுவிட்டு உழைக்கும் எண்ணத்தை செயல்படுத்தவேண்டும் . நாம் வாழ்வதற்குத்தான் படைக்கப்பட்டோம் . அது உழைப்பதால் மட்டுமே முழுமைபெறும் . நேர்மையாகவும் ,ஒற்றுமையாகவும் வாழ்வதற்குத்தான் கடவுள் தேவை . அது வே ஒருவருடைய அடிப்படைக் கொள்கையாக  இருக்குமானால்  அவரே கடவுளாகிவிடுகின்றார் .

Monday, February 3, 2025

 தாங்களே எப்போதும் ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதற்காக இப்பொழுது அணைத்து ஆட்சியாளர்களும் மக்களிடம் கூடுதல்  வரி வாங்கி இலவசம் கொடுப்பதாக அறிக்கை கொடுப்பதை வழக்கமாகக்கொண்டுள்ளார்கள் . இந்த இலவசம் ஒரு சிலருக்கு மட்டுமே எளிதில் கிடைக்கின்றது. மற்றவர்கள்  அவர்களுடைய இயல்பான வேலைகளை விட்டுவிட்டு  இந்த அற்ப இலவசத்திற்காக  அலைகின்றார்கள். இலவசம் மக்கள் உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை சீரழித்து விடுகின்றது.  இதனால் மக்கள் பெரும்பாலானோர் பிச்சைக் காரர்களாக மாற்றப்பட்டு விடுகின்றார்கள் . உண்மையில் சமுதாயத்தில் உழைக்காமல் கிடைக்கும் பொருளுக்காக யாசிக்கும் பிச்சைக்காரர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றார்கள் .  தீயசெயல்களில் ஈடுபடும் தீயவர்கள் மிகுந்து வருகின்றார் கள் .இவர்கள் அதிகாரிகளும் , மற்றும் நற்குடிமக்களும்    வேஷம் போடு வதால் அதன் பரிணாம வளர்ச்சியைத் தடுத்துக் கொள்ள முடியவில்லை. இதைத் தடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருந்தாலும் அவர்களின் மறைவொழுக்கம் அவர்களை அப்படி வெளிப்படையாகச்  செய்யத் தூண்டுவ தில்லை. அதையும் இலவசம் வாங்கி  தாங்களாகவே ஏமாந்து போகும்  மக்களே செய்ய வேண்டியிருக்கு.அவர்களிடம் உரிமையுள்ள அறிவினால் தூண்டப்படும் விழிப்புணர்வு இல்லை   பொறியில் சிக்கிய எலி போல வலையில் மாட்டிக்கொண்ட மீன்கள் போல இவர்களால் என்ன சாதித்துவிடமுடியும். ஒரு நேர்மையான , நாட்டுப்பற்றுள்ள , மக்கள் நலத்தில் அக்கறையுள்ள , கொள்கையில் உறுதியுள்ள ,ஆளுமைத் திறனுள்ள ஒரு நல்ல தலைவன் இல்லாத பொது ஒரு கோடி மக்கள் ஒன்று சேர்ந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதையையே இது உணர்த்துகின்றது   


Friday, January 31, 2025

 எதிர்கட்சியினர் யாராக இருந்தாலும் , புதிதாக க் கட்சி ஆரம்பித்து அரசியல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் எல்லோரும் ஆளுங்கட்சியினரை விமர்ச்சிப்பதையே அவர்களுடைய முழுநேர வேலையாகக் கொண்டுள்ளனர் .அவர்களை மக்களின் வளமான எதிர்காலத்திற்கான உருப்படியான திட்டங்கள் ஏதும் அறியாதவர்களாவே இருக்கின்றார்கள். . பிறரை விமர்சிப்பதற்கு முன்னர் முதலில் தன்னை நேர்படுத்திக்கொள்ளவேண்டும் . மேலும் அரசியலை அரசியலுக்காகச் செய்யாத போது ஒட்டுமொத்த சமுதாயமும் சீரழிந்து போகும் . மக்கள் வறுமையில் மடிந்த பிறகு நாட்டில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை ? அரசியல்வாதிகள் அரசில்வாதிகளை ஆளும் நிலை வந்தால் அப்போது இப்போது இருக்கும் நிலையைவிட பலமடங்கு துயரங்களைத்தான் சந்திக்க நேரிடும் .

All reactions:
Meyyappa Meyyappan

Tuesday, January 28, 2025

 மக்களாகிய  நாம் அறியாமையால்  மக்களாட்சியில் செய்யும் மிகப் பெரிய தவறு  சமுதாயத்தின்  பாதுகாப்பிற்காகவும்  நலனுக்காகவும்  மக்களால் கண்காணிப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  ஆட்சிப்பொறுப்பும் , அதற்காக மக்களால் கொடுக்கப்பட்டதும் அவர்களாக எடுத்துக்கொண்ட  அளவில்லாத அதிகாரமும், போலியான வார்த்தைகளை நம்பி மக்கள் அளவின்றி கொடுக்கும் செல்வாக்கும் ஒன்றிணைந்து அவர்களை மறைவொழுக்க நாயகர்களாக மாற்றி இருக்கின்றது . பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரத்தைக் கண்டு அச்சப்பட்டு மவுனிகளாக இருக்கின்றார்கள் . பயன் துய்த்தவர்கள் அல்லது பயனை எதிர்பார்ப்பவர்கள் ஆட்சியார்களுக்கு தவறான விளம்பரமாக இருக்கின்றார்கள் 

ஆட்சியாளர்கள் சமுதாயத்தின் நலனுக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலைமை என்றாலும் துறை சார்ந்த  புலமையால்  செயலாளர்கள்  இல்லை என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறார்கள் . ஒவ்வொரு துறைக்கும்  அனுபவமிக்க அறிஞர்களால் ஆனகுழுவை நியமித்து  பணிநியமனம் , துறைசார்ந்த வளர்ச்சி , பிரச்சனைகளின் தீர்வு போன்றவற்றை முடிவு செய்யவேண்டும் .இந்தக்குழு ஆட்சியார்களின் கைப்பாவையாகச் செயல்படாதிருக்க  குழு உறுப்பினர்கள் கட்சி சார்பில்லாதவர்காளாக இருக்கவேண்டும் .மேலும் தேர்வு விதிமுறைகள்  வெளிப்படையாக  இருக்கவேண்டும் . 

காவல் துறையும் ,நீதித்துறையும் மட்டுமே சமுதாயத்திற்கு சட்ட றீதியான பாதுகாப்பைத் தரமுடியும்  . இவர்கள் ஆட்சியாளர்களின் தவறான எண்ணங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது  எப்போதும் ஆட்சியர்களின் எண்ணங்களையே எதிரொலிப்பதால் அரசியல் குற்றங்களின் உண்மைத்தன்மையை அரிதிந்த்துக்கொள்ளமுடியாமல் போகின்றது திருத்தப்படாத குற்றங்களால் குற்றங்கள் குறைவதற்கு வழியில்லை . மாறாக அவை அடுத்த கட்டத்தை நோக்கி  பரிணாம வளர்ச்சி பெறும். அதன் பின்விளைவுகளை நினைத்துப் பார்க்கவே மனம் அச்சம் கொள்கின்றது                

Thursday, January 16, 2025

 சிறுவன் பைக் ஓட்டி வீதியில் விபத்து ஏற்பட்டால் அப்பாவிற்குத் தண்டனை

மாணவன் தவறு செய்து பள்ளியில் விபத்து ஏற்பட்டால் தலைமை ஆசிரியருக்குத் தண்டனை . போலீஸ் காரர் தவறு செய்தால் இன்ஸ்பெக்டருக்குத் தண்டனை . அமைச்சர் ஊழல் புரிந்தால் தலைவருக்குத் தண்டனை . காலம் மாறிவிட்டது . சட்டங்களும் மாற்றப்பட்டுவிட்ட ன. எல்லாம் பொறுப்புத் துறப்பு. சரியான நிர்வகிக்க நேர்மையான ஆளுமைமிக்க தலைமை இல்லை.

Tuesday, January 14, 2025

 இந்தியாவிலுள்ள பொருளாதார நிபுணர்கள் கற்ற கல்வியை அரசியல் வாதிகளிடம் விற்றுவிடுகின்றார்கள் . மக்களிடம் பணப் புழக்கம் அதிகமாகும் போது உற்பத்தியும் நாட்டுப் பொருளாதாரமும் தானாகவே வளம் பெறும். அரசாங்கத்தில் சேர்ந்தால் அது திட்டத்தில் கால் பங்கு காணாமல் போவது முக்கால் பங்காக இருக்கின்றது . காணாமல் போவ்தற்காகவே இங்கே திட்டங்கள் போடப்படுகின்றன. அரசாங்கம் எவ்வழி மக்கள் அவ்வழி . ஒரு சமுதாயத்தை பால்படுத்திவிட்டு அதை நேர் செய்வதென்பது எளிதில் இயலாதது. அந்தவகையில் நாம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றோம். .அரசியல்வாதி ஆட்சியைப் கைப்பற்ற ஆட்சியாளர்களை குறைகூறுகின்றான் . ஆட்சியார்களோ ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இல்லாத தையெல்லாம் சொல்கின்றான் .இருவருமே மக்களை மறந்துவிட்டார்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் . மக்கள் சேவை செய்ய யாராவது சண்டை போடுவார்களா ? எல்லாம் பணம் படுத்தும் பாடு .

Like
Comment
Share