Sunday, January 24, 2021

ஆட்சியாளர்கள் ஒருவர் ஊழல் செய்தால் அதைத் தலைவர்தான் தட்டிக்கேட்கவேண்டும். அவரைப் பொறுப்பிலிருந்து நீங்கிய பின் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் விசாரணையில் ஒளி மறைவு இல்லாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இது மட்டுமே ஊழல் தடுப்பை சமுதாயத்தில்  தீவிரமாகப்  பரப்பும். ஆனால் பெரும்பாலும் மக்கள் செய்யும் ஊழல்களையும் குற்றங்களையும் விரிவாகப் பேசும் அரசாங்கம் ஆட்சியிலிருப்போர் செய்யும் குற்றங்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. .ஏதும் தெரியாதவர்கள் போல நடந்துகொள்வார்கள்..தானே தலைவராக நீடித்திருக்கவேண்டும் என்ற விருப்பத்தால் ஊழல் வாதிகள் அளிக்கும் ஆதரவிற்கு இது தலைவர்கள் கொடுக்கும் இலஞ்சமாகும். .இலஞ்சம் பணமாகவோ ,பொருளாகவோ இருக்கவேண்டும் என்பதில்லை .ஊழல் செய்வதற்கு அனுமதி அளிப்பதும் , செய்த ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும்  கூட இலஞ்சமாகும் .உண்மையில் குற்றங்களை  விட குற்றஞ் செய்வோரை ,அதைத் தடுக்கும் உரிமையுள்ளவர்கள் தடுக்காமல் இருப்பது தான் பெரிய குற்றமாகும்.
ஒருவருக்கு ஒருவரால் காரியம் ஆகவேண்டுமென்றால் ,அவர் அந்தக் காரியத்தைச் செய்யக் கட்டாயப்படுத்தமுடியாது. சம்பளம் கொடுப்பதற்காக மக்களிடமிருந்து வரி வாங்கி  மக்களுக்குக் காரியங்கள் செய்வதற்காகவே அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்  ஆனால்  காரியத்தைச் செய்ய  சம்பளம் மட்டும் போதாது என்று  இலஞ்சம் கேட்கின்றார்கள் . மக்களின் காரியத்தைச் செய்யவேண்டும் அல்லது அதைச் செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை மக்களிடம் விளக்க வேண்டும். அலைக்கழிக்கப்படும் போது மக்கள் இலஞ்சம் கொடுக்கும் கட்டாயத்திற்கு த் தள்ளப்படுகின்றார்கள் .ஒருவர் பிறரை லஞ்சம் கொடுக்குமாறுக்  கட்டாயப்படுத்த முடியும். ஆனால் ஒருவர் ஒருவருக்கு இலஞ்சம் கொடுப்பதை மறுக்க முடியும். பெரும்பாலும் இலஞ்சம் வாங்கும் குற்றங்கள் . அதைக் கொடுக்க மறுப்பவர்களால் மட்டுமே வெளிஉலகிற்குத் தெரியவருகின்றது
ஏனெனில் முன்னது இருவர்க்கிடையேயான ஒரு பரிமாற்றுச் செயல்  பின்னது ஒருவரால் மட்டுமே தீர்மானம் செய்யக்கூடிய தன் விருப்பச் செயல் ..அதனால் மனக்கட்டுப்பாட்டால் தடுத்துக் கொள்ள அல்லது நிறைவேற்றிக் கொள்ள முடியும் .மக்களின் மனக்கட்டுப்பாட்டால் மட்டுமே இலஞ்சக் குற்றங்களை ஓரளவு மட்டுப்படுத்த முடியும்.
மனத்தடை என்பது தடைகளில் சிறந்த தடையாகும். ஏனெனில் இது அமைதி வழி யில் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்முறையாக இருப்பதால்  எதிர்மறையான பின் விளைவுகளை ஏற்படுத்துவதில்லை .இலஞ்சம் கொடுத்து காரியத்தை முடித்துக் கொள்ளும் விருப்பமில்லை என்று எல்லோரும் மனக்கட்டுப்பாட்டோடு இருந்துவிட்டால் இலஞ்சம் வாங்கி வாழ்வோர் மனம் திருந்துவதைத்தவிர வேறு வழியில்லாமல் போகும்.
ஒரு சிலர் இலஞ்சம் கொடுத்து மற்றவர்களுக்கு முன்னர் காரியத்தை முடித்துக் கொள்ள விரும்புவார்கள். இவர்களுக்கு மனத்தடை மிகவும் அவசியம் .வேறு சிலர் இலஞ்சம் கொடுத்து தவறான செயலுக்கு அனுமதி வாங்குவார்கள் .இவர்கள் அந்த அனுமதியால் தவறான வழியில் பொருள் சம்பாதிக்கும் வாய்ப்பு அல்லது பயன் பெறமுடிவதால்  இலஞ்சம் கொடுப்பதை மறுப்பதில்லை. பாதிப்பு வந்த பின்பே இவர்களை மக்களால் இனமறிந்து கொள்ள முடிகின்றது .இலஞ்சம் வாங்குவார் நினைத்தால் இவர்கள் செய்யப்போகும் தவறுகளை இலஞ்சம் வாங்காமல் மறுத்துத் தடுக்கமுடியும் 

No comments:

Post a Comment