Wednesday, April 9, 2025

 எல்லோரும் இன்றைக்கு இந்து மதம் பற்றி பேசுகின்றார்கள் . எனக்குத் தெரிந்த வரை யாரும் இந்து மதம் இல்லை வேறு எந்த மதம் பற்றியும் பேசுவதற்கு அறுகதையில்லாதவர்கள். உலகில் எல்லோரும் ஏதாவதொரு மதம் சார்ந்து இருந்தாலும் அவர்கள் முழுமையாக அவர்களுடைய மதத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்களாக இருப்பதில்லை. அப்படியிருக்க ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தை விமர்சிப்பது தவறாகும் உண்மையில் யாருக்கும் அவர்களுடைய  மதத்தைப்பற்றிய தெளிவு இல்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய மதமே உயர்ந்தது  என்று நினைத்துக்கொண்டு பிற மதங்களில் குறை காண்கிறார்கள் .  

       மதம் என்பது இனிய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையான ஒவ்வொருவரும் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய வாழ்வியல் ஒழுக்கங்களாகும்.  மதம் எம்மதமாக இருந்தாலும் அதன் அடிப்படையான கொள்கை இது மட்டுமே.  இனிய வாழ்க்கை வாழ இயற்கையைப் பின்பற்றினாலே போதும். அந்தவகையில் இயற்கை எல்லோருக்குமான ஒரு பொதுவான மதம். கடவுள் ஒருவரே என்பதைப்போல மதமும் ஒன்றே .

      வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனித்து வாழ்ந்து விடமுடியாது. பிறரைச் சார்ந்து வாழவேண்டியிருப்பதால் வாழ்க்கை , சமுதாய வாழ்க்கையாகின்றது .சமுதாய வாழ்க்கை கொஞ்சம் வேறுபட்டது . அதில் தனிமனித வொழுக்கத்தோடு சமுதாய நலனுக்காக பொதுவொழுக்கமும் சேர்ந்திருக்கிறது .  சுய முன்னேற்றம் என்பது  ஒவ்வொரு மனதர்களுக்குள்ளும் இருக்கும் மிகவும் வலிமையான உந்து சக்தி . பொருளாதார ஏற்றத்தைத் தரும் சுய முன்னேற்றத்தில்  எல்லோருக்கும் சம வாய்ப்பு உள்ளது என்றாலும் அதில்  முன்னிலை பெற திறமையை விட்டுவிட்டு மதம் என்ற பெயரால் புதிய நிபந்தனைகளை வரையறுத்துக் கொள்ளும் பழக்கம் உட்புந்தது.பின்னால் வந்தவர்கள் பொருளாதாரம் ,அரசியல் , தொழில் மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் கூடுதல் ஆதாயம் பெற   மதத்தில்  புதிய விதிகளையும் புகுத்தினார்கள். இந்த கூடுதல்விதிகள்  பெரும்பாலும் இயற்கைக்கு  முரண்பட்டதாகவே இருக்கும் . சமுதாயத்திற்கு பாதுகாப்பு என்று ஒரு சமுதாயத்தையே மாற்றுவதற்கு சிலபல புதிய கோட்பாடுகளை உட்புகுத்தி புதிய மதங்களை ஏற்படுத்தினார்கள்   அப்போது இயற்கை என்ற மதம் சுய நலம் மிக்க மனிதர்களால்  பல மதங்களாகப் பிரிந்து செயற்கையானது . நம் பிரிவினைக்கு பல காரணங்கள் புனைந்து கூறப்படுகின்றன ஆனால் ஒற்றுமைக்குத் தான் ஒரு காரணமும் இல்லை. ஒருநாள் இந்த உலகம் அழிய நேரிடலாம். அப்போது எல்லா மதமும் பாகுபாடின்றி இயற்கையோடு ஒன்றினையும். 

                           

             புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது

            வளரும் ஆசைக்கு அளவேது

            முடிவேது முடிவேது

            முடிந்தபின் உலகம் நமக்கேது- Kannadasan 

.

Tuesday, March 18, 2025

 


சின்னச் சின்ன தவறுகளைச் செய்யும் சாதாரண மக்களைக் கண்டால் தவிப்பாயும் சட்டம் பெருங் குற்றம் செய்யும் அரசியல்வாதிகளைக் கண்டு புன்னகை பூக்கின்றது .அமெரிக்காவில் டொனல்டு டிரம்ப் அதிபரே ஆனாலும் குற்றவாளியே  என்றார்கள் பல நாடுகளில் குற்றம் புரிந்த அதிபர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது நாட்டை விட்டு ஓடிவிடுகின்றார்கள் .இந்தியா மட்டும் விதிவிலக்கு . இங்கு அரசியலவாதிக ளை இனம்பிரிக்காமல்  எல்லோரையும் போற்றிப்புகழ்வார்கள். அதற்குக் காரணம் மக்களிடம்  கல்வி, கேள்வி அறிவை விட வறுமையே மிகுந்திருக்கின்றது. வாழ்வாதாரம் கிடைக்காமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிலையே நீடித்திருக்கிறது  அரசியல் எதிரிகளே ஒருவருக்கொருவர் இகழ்ந்துகொள்கின்றார்கள். மக்களிடம் வரி வாங்கி அதைக்கொண்டே சட்டத்தை விலை பேசி வாங்கி  விடுகின்றார்கள் . அதனால் சட்டம் கூட அவர்களுக்கு முன்னால் கைகூப்பி நிற்கின்றது .மக்களின் வரிப்பணத்தில் கொஞ்சம் இலவசம் கொடுத்து வள்ளல் என்று நல்ல பெயர் வாங்கி செய்த தவறுகள் அனைத்தையும் மூடி மறைந்து விடுகின்றார்கள் .


Monday, March 17, 2025

 


பழங்காலத்தில்  தமிழ்  தூய மொழியாக ,பிற மொழிகளின் தாக்கமின்றி அணைத்து மக்களின் பயன்பாட்டு வழக்கில் இருந்துவந்திருக்கிறது . கிராமப்புறத்து பெண்கள் கூட எதுகை மோனையுடன் கவிதை மூலம் செய்தி சொன்னார்கள் . எதிர்ப்பாட்டின் மூலம் கருத்தைத் தெரிவித்தார்கள் . தாலாட்டு ,ஒப்பாரி  எல்லாம் தனி இலக்கியம் . உலகில் எம்மொழியிலும் இல்லாத ஒன்று . 

சமஸ்கிருதம் மொழி  புகுந்தபோது அது தமிழ்மொழியைப் பார்த்து பொறாமைப்பட்டு  அதை சீரழிக்க நினைத்து செயல்பாட்டிருக்கவேண்டும் . வேதம் ,கீதை போன்றவற்றிலுள்ள நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ள  தமிழர்கள் ஆர்வம் காட்டியபோது   சமஸ்கிருத எழுத்துக்கள் மொழியில் திணிக்கப்பட்டன .மொழியின் மரபு சிதைந்தது . அப்போது ஸ்டாலின் வந்தாரு , பஸ் ஸ்டாப் தோன்றியது ,ஜாதகம் கணித்தார்கள், சஷ்டி விரதம் இருந்தார்கள் . தூய தமிழ்ப்பற்றாளர்கள் மொழியின் தனித்துவத்தை ப்பாதுகாக்கப் போராடினார்கள் .எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கண் விழித்துப் பார்த்தது . ஸ்டாலின் தூய தமிழுக்குள் வர மறுக்கின்றது . பஸ் பேருந்தானது, சம்ஸ்கிருத எழுத்துக்களை நீக்கிவிட்டு புழக்கத்திலுள்ள சொற்களுக்கு மறுவடிவம் கொடுத்தார்கள் . ஆங்கிலம் ஆண்ட போது மக்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை நிலைப்படுத்திக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் தமிழோடு ஆங்கிலத்தையும் சேர்த்துப் பேசுவதை ப்பெருமையாகக் கருதினார்கள் . டயம் என்ன ஆச்சு ? ரெம்ப டயடாக இருக்கேன் , இந்த அட்ரஸ் தெரியுமா ? பேங்க் போகணும் , டிரைவர் சார் பஸ்ஸை நிறுத்துங்க . மொழியால் பெருமை கொள்ளும் நாம் இதை எப்படி அனுமதிக்கின்றோம் ? இ ப்ப கைபேசி வந்தவுடன் எழுத்துப் பிழைகளும் சேர்ந்துகொண்டன. திணிக்கப்படாமல் புகுந்த மொழிகளால் ஏற்பட்ட சேதாரத்தையே புதுப்பித்துக்கொள்ள முடியவில்லை . இன்னுமொரு மொழி படையெடுத்தல் நாம் என்ன செய்வோம் ? 


Sunday, March 16, 2025

 சட்டத் துறையும் நீதித்துறையும் எதற்காக நிறுவப்பட்டனவோ அதற்காக மட்டுமே செயல்புரிந்துவந்தால் அதிகாரிகளும் அரசியவாதி களும்  நேர்மை தவறாது பணிபுரிவார்கள் . ஆட்சியாளர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அதற்காக பிழையின்றி கடமையாற்றினால் காவலரும் நீதிபதிகளும் மக்களுக்கு முழு நம்பிக்கை தரக்கூடிய வகையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நாட்டில் பாதுகாத்திடுவார்கள் . இவர்களைக்  கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம்  மக்களிடம் இருக்கவேண்டும் .  ஏனெனில் மக்களுக்காகத்தான் இவர்கள் நியமிக்கப்பட்டு மக்கள் இவர்களுடைய சம்பளத்திற்காக வரி செலுத்திவருகின்றார்கள் .         

Saturday, March 15, 2025

 பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டு தவறானவர்களைத் தேர்ந்தெடுத்து நாட்டுக் குத்  தவறு செய்கின்றார்கள் .என்று சொல்கின்றார்கள். இதை யார் சொல்கின்றார்கள் என்றால் ஆட்சியில் இடம்பிடிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் , வாய்ப்பில்லாத அரசியல்வாதிகள், இருக்கும் ஆட்சியை க் குறைகூறி பகைமையை வளர்த்துகொள்ளாமால் மக்களை மட்டுமே குறை கூறுகின்றார்கள். சிந்தித்துப் பார்த்தல் இது சரியான, அரசியல் ரீதியிலான தீர்வில்லை என்பது தெரியவரும். மக்கள் அவர்கள் குறிப்பிடும் தவறானவர்களைத் தேர்தெடுக்காவிட்டால்  சமுதாயத்தில் ஊழல் ,மற்றும் பிற தவறுகள் தடுக்கப்பட்டுவிடுமா ? இல்லை புதிதாக வரப்போகும் ஒருவர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாரா ?  சந்தேகம் தான் .மக்கள் தவறானவர்களைத் தேர்ந்தெடுக்காவிட்டால் அவர்கள் செய்யும் தவறுகள் தடுக்கப்பட்டுவிடுவதில்லை.ஒருவரை பதவி  பெறமுடியாமல் தடுப்பது அவர் ஏற்கனவே செய்த தவறுகளுக்கான தண்டனையாகாது . அதனால் பதவியில்லாத போதும் செய்த தவறுகளை  வேறு வழிமுறைகள்மூலம்  செய்வதை பழகிக் கொள்கின்றார்கள் .நேர்மையானவர்கள் அரசியலில் வரவேண்டும் என்றால்  சமுதாயத்தில் நேர்மையானவர்கள் பெரும்பான்மையினராக இருக்கவேண்டும். அதற்கு தவறு செய்பவர்கள் யாராக  இருந்தாலும் அவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறவேண்டும் . அப்போதுதான் தீயவர்கள் இனப்பெருக்கம் ஒரு கட்டுக்குள் வரும் 


Tuesday, March 11, 2025

  மக்களின் திறமை மட்டுமே நாட்டிற்கு வளர்ச்சியைத் தரும் .இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள உரிமையுள்ள கல்வியறிவு தேவை . அதைத் தாய்மொழிக் கல்வி மூலம் எளிதாகப் பெறமுடியும். பள்ளியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே தாய்மொழியை பெற்றோர்கள் மூலம் கற்றுக்கொண்டு விடுவதால் இது இயலுவதாகின்றது . ஒரு வேலை செய்ய அதற்கான திறமை அவசியம். போட்டியான உலகில் இந்தத் திறமை மேலும் மேலும் புதுமைப்படுத்தப்படவேண்டியது தவிர்க்கயிலாததாக இருக்கின்றது .   திறமையின் வளர்ச்சியை  ஒரு மொழியறிவால் மட்டும் பெறமுடிவதில்லை. பிற மொழிகளில் சொல்லப்பட்ட பயன்மிகு கருத்துக்களையும் தெரிந்துகொண்டால் அது திறமையை மேம்படுத்த உதவுகின்றது . ஆங்கிலம் உலகப் பொதுவான மொழி . அது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கின்றது . அதைப் புறக்கணித்து விட்டு எந்த மொழியும்  தனிமனிதர்களின் திறமையை வளர்த்து தானாக வேலைவாய்ப்பை தரக்கூடிய வாய்ப்பைப் பெற்றுவிடமுடியாது . அது அம் மொழி கற்ற அறிஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் செய்த  சாதனைகளால்  மொழியில் ஏற்படுத்திய  வளர்ச்சி .  மொழியின் வளர்ச்சி என்பது அதன் சொல்லுந் திறத்தை  அதிகமாக்குவதுதான். 


தமிழ் மொழியின் சொல்லுந்திறத்தை மேம்படுத்த  புதிய கலைச்சொல்லாக்கம் , மற்றும் பரவலாக்கம் மூலம் மேற்கொள்ளவேண்டும் . அயல் மொழிகளில் உள்ள அறிவியல் மற்றும் தொழிநுட்பா நூல்களை மொழிபெயர்த்து தமிழ்க்கு அறிமுகம் செய்யவேண்டும் . இரு மொழி வல்லுநர்கள் மூலமே இது இயலும் . தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்கள் தமிழகத்தில் மட்டுமே வேலை செய்யமுடியும். திறமையை வளப்படுத்திக் கொள்ள சுய வாய்ப்புக்கு கிடைப்பதில்லை . வேலைவாய்ப்பு கிடைக்காத போது இடப்பெயர்த்து செல்லவேண்டிய அவசியம் ஏற்படும் .  அப்போது புதிய இடத்தின் மொழியைத் தெரிந்திருக்கவேண்டும் , பொதுவாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் வேலை தேடிப் பெறலாம் (ஆங்கிலம் தெரியாத வட மாநிலங்களைத் தவிர்த்து).  


தமிழும் ஆங்கிலமும் தெரிந்திருந்தால் திறமையைத் தன் சுயமுயற்சியால்  வளர்த்துக்கொள்ளவும் , உலகில் எங்கும் வேலைவாய்ப்பைத் தேடவும் முடியும். தமிழும் ஆங்கிலமும் படிப்பின் பூரணத்துவத்தை அளித்துவிடுகின்றது.முன்றாவது மொழி தேவையற்றது . முன்றாவது தாய்நாட்டு மொழியால் ஆங்கில மொழிபோல சுய திறமையை வளர்த்துக்கொள்ள முடிவதில்லை . ஹிந்தி பிற மாநிலங்களில் வேலை நிமித்தமாகச் செல்வோருக்கு மட்டுமே தேவை . மேலும் இரு மொழிக்கொள்கை அணைத்து மாநில ங்களிலும் சமமாகப் பின்பற்றப்படுமானால்  ஆங்கிலத்தின் மூலமே இந்தியவெங்கும்     மொழிச் சிக்கல் இன்றி பணியாற்ற முடியும்  


 


தமிழ் மொழிக் கல்வி என்பது மொழி அறிவு  மட்டுமின்று பிற பாடங்களையும் தமிழில் கற்பதாகும். தமிழ்மொழியை நாங்கள் தான் வளர்க்கின்றோம் என்ற தோற்றத்தை உருவாக்க தமிழ்வழி கல்வி கற்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் வேறு சில சலுகைகளும் வழங்குகின்றார்கள். இது வேலைதேடும் போது கைகொடுப்பதில்லை.சரியான வேலையில் தேர்வு செய்யப்படுவதற்கு  திறமையும்  அந்தத் திறமையை வளர்த்ததிற்கும்  வளர்ப்பதற்கும் அடிப்படியாக இருக்கும் மொழியறிவும் தேவை. மொழியறிவில்லாதவர்கள் இருக்கும் திறமையை மேம்படுத்திக்கொள்ள முடிவதில்லை என்பதால் சேர்ந்த வேலையில் உயர்நிலையை அடையமுடிவதில்லை. மொழி ஓர்  இடைஊடகம் . அதன் மூலமே அம்மொழி தெரிந்த இருவர் செய்திகளைப் பரிமாறிக்கொண்டு தெரியாதனவற்றைத் தெரிந்துகொள்ளமுடியும் . தொழிநுட்பக் கருத்துக்களைப் படித்து அறிந்து கொள்ளமுடியும்.முதலில் ஒருவருடைய அறிவிற்கும் தகுதிக்கும் ஏற்ற வேலையைக் கொடுங்கள். அதில் முன்னேறுவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் சமமாக இருக்கும் போது ,முன்னேறுவதற்கு எது தேவையோ அதை அவர்களாகவே தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். தகுதியில்லாதவர்கள் முன்னுரிமை பெறும் போக்கு நிலவும் போது  ஒரு வேலையைப் பெறுவதற்கு குறைந்தபட்ச கல்வி கூடத்தேவையில்லை என்ற மன நிலையே மாணவர்களிடம்  மேலோங்கிநிற்கின்றது. ஒரு மொழியைக்கொண்டு தன் திறமையை வளர்த்துக்கொள்ளாதவன்  எத்துணை மொழிகள் படித்தாலும் திறமைகளை வளர்த்துகொள்ளத் தெரியாதவனாகவே இருப்பான் . 

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மொழியறிவு இல்லை  மொழியைக்கொண்டு மக்கள் ஈட்டிய திறமைகள் தான் அதைத் தீர்மானிக்கின்றது . இந்தக் கருத்தின் அடிப்படையில்  தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது  தமிழ் மொழி மூலம் அறிவியலையும் ,தொழிநுட்பங்களையும் கற்றுக்கொள்ள தடைகள் இல்லாத வழிக ளை ஏற்படுத்து வதோடு ,  திறமையைச் சுயவிருப்பத்தோடு வளர்த்துக்கொண்ட இளைஞர்களுக்கு அவர்களுக்கான வேலையை அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டிருக்கமால் , வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கவும் வேண்டும் .தமிழில் அறிவியல் , தொழில்நுட்பம், ஆளுமை , சட்டம் போன்ற துறைகளை மேம்படுத்த சங்கம் உருவாக்கப்படவேண்டும் . இது செலவுக்கணக்கு காட்டுவதற்காக இல்லாமல்  மொழி மற்றும் நாட்டின் வளர்ச்சியில் கொண்டுள்ள உண்மையான நோக்கமாகவும் இருக்கவேண்டும்.

Monday, March 10, 2025

 மைய அரசும் மாநில  அரசும் போட்டிபோட்டுக்கொண்டு  50 -80 % குறைந்த விலையி,ல் மருந்துகளை அளிக்கும் கடைகளை த் திறந்துள்ளன. கல்வி பயிலும் மாணவர்களுக்காக ஏன் குறைந்த கல்விக் கட்டணத்தில் பள்ளிகளையும் கல்லூரிகளையும் போட்டிபோட்டுக்கொண்டு நிறுவக்கூடாது.?  குறைந்த விலையில் அரசு உணவகங்களை எங்கும் நிறுவலாமே. மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் அரசு இருக்கும் சாலைகளை   சுங்க வரியில்லா சாலைகளாக மாற்றலாமே .  இருப்புக்கு குறைந்த வட்டி வழங்கும்  வங்கிகள் சேமிப்புக்கணக்கில் குறைந்த இருப்பு இருந்தாலும் பணம் பிடித்தம் செய்யாமல் இருக்கலாமே. அரசின் நோக்கம் மக்கள் நலமே என்றிருக்க  வேண்டும். 

Saturday, March 8, 2025

 பதவி கிடைக்காமல் பரிதவிக்கும் பல மூத்த ஆரசியல்வாதிகள் , சினிமாவில் பெரும் பொருள் சம்பாதித்துவிட்டு வாய்ப்பின்றி கட்டாய ஓய்வு பெரும்நாளில் அரசியலுக்குத் தாவும் நடிகர்கள் , அரசியலில் எப்படியாவது நேர்மைத்தனத்தை புகுத்திவிட மாட்டோமா என்று நிறைவேறாத கனவுகளோடு எந்தப்பின்புலமும் இன்றி  ஆழந்தெரியாமல் அரசியலில் காலைவிடும் விமர்சகர்கள்  எல்லோரும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரே செயல் முறையைத்தான் பின்பற்றி வருகின்றார்கள் .இதைக்கலாங்காலமாய்  கண்டு மீண்டும் மீண்டும் ஏமாந்து போகும் மக்கள் பெரும்பாலும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர்களுடைய பேச்சையும்  செய்முறைகளை கேலிபேசுகின்றார்கள் அல்லது எதிர்வாதம் செய்கின்றார்கள் .

உடைந்த மண்பானையை ஓட்டுவது எளிதில்லை. கெட்டுப்போன சமுதாயத்தை சீர்படுத்தி நேர்மைத்தனத்தை நிலைநாட்டுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. அது உண்மையில் மற்றொரு சுதந்திரப்போராட்டமாகத்தான் இருக்கும் . சமுதாயத்தில் நேர்மைத்தனம் தேவை என்பதற்கான புரிதல் மக்களிடம் சிறிதளவும் இல்லை. சாதி ,மதம், மொழி  எனப் பல்வேறு காரணங்களினால் மக்கள் காலங் காலமாய் பிரித்தாளப்பட்டு வந்திருக்கின்றார்கள் . வாழ்வாதாரம் நலிவந்தடைந்து வருவதால் நேர்மைத்தனம்  அவர்களுடைய எண்ணங்களில் எள்ளளவும்  இல்லை 

ஊழலை ஒழிப்பதுநிச்சியமாக  தனி மனிதர்களால் முடியாது. ஏனெனில் இது ஆட்சியாளர்களின் வருமானமாக இருக்கின்றது .எனவே இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் ஆட்சியில் பங்கேற்கவேண்டும் . அரசியலில் ,சமுதாயத்தில் ஊழலை ஒழிப்பதையும் , நேர்மைத்தனத்தை வளப்படுத்துவதையும்  ஒரே நாளில் நிகழ்த்திவிடமுடியாது என்பதை இவர்கள் உணரவேண்டும் . புதிதாய் அரசியலுக்கு வருபவர்கள் ஏற்கனவே அரசியலில் இருப்பவர்களை விமர்சிப்பதை  மட்டுமே வெற்றிக்கான யுக்தியாக க் கொண்டுள்ளார்கள். அவர்கள் செய்த ஊழல்களை பட்டியலிடுவதால் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதில்லை. அதைத் தடுப்பதற்கான சட்டரீதியிலான வழிமுறைகள் எல்லோரும் அறியுமாறு செய்யவேண்டும் . ஊழலை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும் .

புதிதாக அரசியலில் வருபவர்கள்  அரசியலில் என்ன மாற்றங்களைச் செய்யப்போகின்றோம் , எப்படி செய்யப்போகின்றோம் , ஏன் செய்யப்போகின்றோம்   என்ற முழுமையான விவரங்களை மக்கள் அறியச்சொல்லவேண்டும் . அதற்கான திட்டங்கள், செயல்முறைகள், நீதி போன்றவற்றைத் தெரிவிக்கும் போதுமக்களிடம் நம்பிக்கை மலர்வதை பார்ப்பீர்கள் .இதைப்பற்றி அடிக்கடி மக்களிடம் பேசுங்கள் , கடடுரைகள் எழுதி வெளியிடுங்கள். போலித்தனமான விளம்பரம் செய்யாதீர்கள் . உங்களுடைய சொற்கள் உண்மையானவை  என்ற நம்பிக்கை மக்களிடம் வரும்வரை இதை மட்டுமே செய்யுங்கள் . இதற்கு எதிர்ப்பிருந்தால்  அதற்கு தகுந்த விளக்கம் அளியுங்கள் . அதன் பிறகு நீங்கள் செய்ய விரும்பிய அரசியல் மாற்றங்களை நீங்கள் செய்யவேண்டியதில்லை . அதை மக்களே பார்த்துக்கொள்வார்கள். அத்தகைய மக்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் எதிர்த்தரப்பினரால்  எதுவும் செய்யமுடியாது போகும் .இந்த மாற்றங்கள் மெதுவாக நடைபெறும் என்பதால் அவசரப்பட்டு செய்யும் முயற்சிகள் செயலைப் பாழ் படுத்திவிடும் .  


Sunday, March 2, 2025

 அரசியல் பாதையில்  கொள்ளையடிப்பதை மறைக்கவே  மக்களுக்கு இலவசம் வழங்குவதாக அறிவித்து  ஒரு சிலருக்கு  மட்டும் கொடுத்துவிட்டு  மக்களை அலையவிட்டு , தங்களுக்கு அதிருஷ்டம் இல்லை அதனால் கிடைக்கவில்லை என்று அவர்களாகவே நொந்துகொள்ளுமாறு செய்கின்றார்கள். இந்த இலவசமும் சரி , ரேஷன் கடை விநியோகமும் சரி எதுவும் முழுமையாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை .தவறு செய்து மக்களால் பிடிபட்ட அரசு ஊழியர் உண்மைகளை உளறிக் கொட்டிவிடக்கூடாது  என்று ஊதியத் தோடு விடுப்பு அளித்து விட்டு மக்களைத் திருப்திப்படுத்த பணியிடை நீக்கம் என்று மக்களை ஏமாற்றுகிறார் கள். மக்கள் ஏமாற்றினால் அரசாங்கம் அவர்களை இனமறிந்து தண்டிக்கும் . ஆட்சியாளர்கள் தவறுசெய்தால்  தண்டிப்பதற்கு நம்முடைய அரசியல் அமைப்பில் வழியில்லாதிருக்கின்றது.ஆட்சி என்பது ஒரு சேவையாக இல்லாமல் ஒரு  தொழிலாக இருக்கும் வரை இந்த அமைப்பினால் மக்களுக்கு மேலும் மேலும்  ஏமாற்றங்களே பரிசாக அளிக்கப்படும்.

.மக்களுக்காக நேர்மையாகப் பணியாற்றும் ஆட்சியாளர்களும்  அரசு ஊழியர்களும்  இருப்பதற்கான  ஆட்சியியல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.  ஆட்சியில் அதிகாரத்துடன் கூடிய மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். மையத்தில் மக்கள் சபை போல மாநிலத்திலும் ஒரு மக்கள் சபை அமைக்கலாமே . இதில் கட்சி சார்பில்லாத பலதுறை சார்ந்த அறிஞர்கள்  , நன்மக்கள்  உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் . பல்கலைக்கழக பேராசிரியர்கள், பரிசு பெற்ற எழுத்தாளர்கள் , ஆன்மிக வாதிகள் , எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காகத்  தொண்டாற்றும்  மருத்துவர்கள் , பிரதமரின் விருது பெற்ற காவலர்கள் , விளையாட்டு வீரர்கள் , என ஒரு நூறுபேர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி அரசின் எந்த நலத்திட்டமும் இந்தக் குழுவின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் .என்று வரைமுறைப்படுத்தலாம்.  For that we can reduce the number of ministers in the ministry .


Tuesday, February 25, 2025

 ஒரு நாட்டின்  வளர்ச்சிஎன்பது நாட்டு மக்களின் ஒருமித்த வளர்ச்சியே. கருத்து வேறுபாடுகளை ஒருபாற்கோடாமை இன்றி பேசித் தீர்த்துக்கொள்ளலாம் . அப்போது ஒருவருக்கு ஏற்படும் இன்னல்களையும் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துப் பேசினால் தீர்வு ஏற்படும். சுயநலம் ஒருவரைத் தீயவனாக வளர்த்துவிடுகின்றது. தீயவர்கள் பெரும்பான்மையினராக வளரும் போது தீயவர்களேஆட்சிப்பொறுப்பிற்கு வருகின்றார்கள் . தீயவர்கள் ஆள்பவர்களாக இருக்கும் போது சமுதாயத்தில் தீயவர்களே பெரும்பான்மையாகி விடுகின்றார்கள். தீயவர்களாக இருந்துகொண்டு தீயவர்களை வளர்த்து விடுவதால் காலப்போக்கில் தீயவர்கள் பெரும்பான்மையாகி ,அந்தப் பெரும்பான்மையினைத் தக்கவைத்துக்கொள்ள ஒன்று சேர்ந்து செயல்படு கிறார்கள் . அவர்களுடைய ஒற்றுமையில் நன்மக்கள் அச்சப்பட்டு முடக்கப் பட்டுவிடுகின்றார்கள் .இன்றைக்கு நேர்மையானவர்கள் எவரும் அரசியலில் ஈடுபட விரும்புவதில்லை தப்பித் தவறி வந்தவர்கள் தீயவர்களாக மாற்றப்பட்டு விடுகின்றார்கள் .மாறாதவர் பிழைத்திருக்கவேண்டுமானால் அரசியலை விட்டு விலகவேண்டும்.  இல்லாவிட்டால் மரணத்தை தழுவ நேரிடும்.

நேர்மைத்தனம் விளம்பரம் தேடுவதில்லை . விளம்பரம் தேடும் நேர்மை உண்மையான நேர்மையாக இருப்பதில்லை . விளம்பரமில்லாத நேர்மை மக்களைச் சென்றடைவதில்லை  என்பதால் அதை எதிர்ப்பது விளம்பரத்தால் வாழும் தீயவர்களுக்கு எளிதாக இருக்கின்றது . தீயவர்கள் இந்த அளவிற்கு முன்னேறி வந்ததிற்குக் காரணம் அவர்களுக்குள் இருக்கும் புரிதலுடன் கூடிய உள்ளார்ந்த ஒற்றுமைதான் . உழைப்பின்றி கிடைக்கும் வருமானத்தில் நஷ்டம் என்பதே இல்லை . இலாபத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு விடுவதால்  இந்த ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுவதில்லை . வருமானம்  சீனியர் ,ஜூனியர் அடிப்படையில் பங்கிடப்படுகின்றது . இதில் மாற்றம் ஏற்படும்போது அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்கின்றார்கள். கட்சி மாறுவதும் , புதிய கட்சி தொடங்குவதும் இந்த நிலையின் பின்விளைவுகளே. 

நேர்மையான அரசியல் இந்திய நாட்டிற்குத் தேவை. அதை நேர்மையான  ஒருவரால் மட்டும் தரமுடியாது . நேர்மையானவர்கள் கூட்டு முயற்சியால்       மட்டுமே தரமுடியும் .நேர்மையானவர்கள் ஒன்று சேராவிட்டால் இது ஒருநாளும் கைகூடாது.     


Monday, February 24, 2025

 இன்றைக்கு எல்லோருக்கும் தீர்வு காணமுடியாமல் இருக்கும் பல பிரச்சனைகளுள் ஒன்று விலைவாசி உயர்வைச்சமாளிப்பது .விலைவாசி ஏற்றத் தாழ்வு என்பது உற்பத்தி  மற்றும் தேவை இவை களுக்கிடையே உள்ள இடைவெளியின் அளவைப்பொறுத்தது என்றுதான் முன்பு பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள்.  உண்மையில் அவை மட்டும்தான் விலைவாசியைத் தீர்மானிக்கின்றாதா  என்றால் அது தவறு என்றுதான் தோன்றுகின்றது . ஏனெனில் அவற்றோடு மட்டும் தொடர்புடையதாக இருந்தால் விலைவாசி ஒவ்வொருநாளும் எல்லைமீறி உயராது. சிலசமயம் உற்பத்தி குறையும் போது உயரும் . கூடும்போது குறையும். விலைவாசி உயர்வுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதையே இவை சுட்டிக்காட்டுகின்றன .தேவை அதிகம் என்றால் தொழித்துறையில் உற்பத்தி பெருகி தொழில் வளர்ச்சிப்பாதையில் முன்னேறி விலைவாசியை மட்டுப்படுத்தியிருக்கும் அந்தமுன்னேற்றம் அரசியல் காரணங்களினால் தடைப்படும் போது விலைவாசி கூடுகின்றது . தொழில் தொடங்க இருக்கும் நிபந்தனைகளை இலஞ்சம் வாங்காமல்  மேலும் எளிமைப்படுத்தினால்  தேவைக்கேற்ற உற்பத்தியை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளமுடியும் . தேவை இயல்பானதாக இருக்கும் போது பொருளின் விலையை உயர்த்தி அதிகம் பொருள் சம்பாதிக்க விரும்பும் வர்த்தகர்கள் கூடுதலாக கையிருப்பில் இருக்கும் பொருளை ப்பதுக்கி வைத்து  உற்பத்தி குறைவு  தேவை அதிகம்  என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி  விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் . விலை உயர்விற்கு கூடுதல் செலவோ அல்லது உழைப்போ காரணமாக இருப்பதில்லை. முன்பு நேர்மையான அரசாங்கம் பொருட்களை பதுக்கிவைப்பபவர்களை கண்டுபிடித்து தண்டித்தார்கள் . இன்றைக்கு அதன் மூலம் ஆதாயம் தேடிக்கொள்கின்றார்கள். மேலும்  விற்பனை விலை உயர  கூடுதல் முயற்சியின்றி GST  உயர வருவாய் அதிகரிப்பதாலும் ,இலஞ்சம் பெற வாய்ப்பு அதிகரிப்பதாலும் மக்களிடம் கிளர்ச்சியைத் தூண்டிய, இலஞ்சம் பெறமுடியாத  ஒரு சில முறைகேடுகளைமட்டுமே தடை செய்கின்றார்கள் .

  மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்காத ஆட்சியாளர்களின் சுய நலத்திற்க்காக உருவாக்கிய  அரசாங்கத் திட்டங்களுக்காக வரியை அவ்வப்போது அதிகரிக்கின்றார்கள் . இது விலைவாசியை நேரிடையாகவும் மறைமுக மாகவும்  பாதிக்கின்றது .கல்விக் கட்டணம், போக்குவரத்துக்கட்டணம் , மருத்துவச் செலவு , வீட்டு வரி ,மின்சாரக் கட்டணம் போன்றவை அதிகரிக்கும் போது வர்த்தகர்கள் முன்பு பெற்றஅதே இலாபத்தை த் தக்கவைத்துக்கொள்ள உற்பத்திப் பொருளின் விலையை உயர்த்திவிடுகின்றார்கள் . இதனால் வரி உயர்வின் பாதிப்பு மக்கள் மீது கூடுதலாகிறது . அதாவது வர்த்தகர்களின் இழப்பை  மக்களே ஈடுசெய்ய வேண்டியிருக்கின்றது .,விலைவாசி உயர்வு தாறுமாறாக இருக்கும்போது அதன் தாக்கம் மக்களிடையே எதிர்மறையாக இருக்கின்றது. விலைவாசி ஏற்றத்தை நேர்மையான  ,இயல்பான சம்பாத்தியத்தால் ஈடுசெய்ய முடியாததால் மக்கள் பெரும்பாலானோர் தவறான வழிகளில் பொருள் ஈட்டும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள் .உண்மையான காரணமின்றி விதிக்கப்படும்  கூடுதல் வரிவிதிப்பு அரசியல்வாதிகளுக்கு  நலம் பயக்கலாம் . நாட்டின் நலத்தை மேம்படுத்துவதில்லை .

Saturday, February 22, 2025

 மொழி என்பது ஒருவர் தன்தனித்திறமைகளை   மொழி என்பது ஒருவர் தன் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கருவி . எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொது ஊடகம் . கருத்துப்பரிமாற்றங்களுக்கு ஒரு மொழி போதும். ஆனால் மக்களில் ஒரு பிரிவினர் தங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்கொள்ள விளைந்த போதுபல மொழிகள் உண்டாக்கப்பட்டன . மொழிகள் மூலம் தொழில்  இரகசியங்களை பாதுகாத்துக்கொண்டார்கள் . ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட கருவி போதும். பல கருவிகள் தேவையில்லை . பல கருவிகள் இருந்தால் பணிகளில் சுயசுய சிந்தனை ,  ஏற்படுவதில்லை  .  (A bad workman always quarrels with his tools, too many tools make a labour to become a bad workman) விலையுயர்ந்த ஒரு கருவியை விலைக்கு வாங்குவதால் மட்டும் அந்தக்கருவியை எல்லா நேரங்களிலும் பயனுறுதிறனுடன் பயன்டுத்தும் திறமை வந்துவிடுவதில்லை . அதற்குப் பயிற்சிவேண்டும் .பல மொழிகளை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தேவைஇல்லாத வளர்ச்சி .அதனால் ஒருவர்க்கு கூடுதல் திறமையை பெறுவதற்கான வாய்ப்பு மிகச் சொற்ப அளவு கூடலாம் அனால் தனித்திறமை மொழியால் மட்டுமே கிடைத்துவிடுவதில்லை. திறமைகளும்  , மனித வளமும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத நாட்டில் கூடுதல் மொழியைக் கற்றுக்கொள்ள கட்டாய ப் படுத்துவது மாணவர்களுக்கு கூடுதல் சுமை . மொழியைக் கற்றுக்கொள்ளும் கட்டாயத்தில்  திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புக்களை த் தவறவிட்டுவிடுவதற்கு வாய்ப்பு கள் அதிகம் .  தாய்மொழி மற்றும் ஆங்கிலம்            கட்டாயம் என்றும் மற்றொரு மொழி கற்க விரும்புகின்றவர்கள் தனி நிறுவனங்கள் மூலம் பெறலாம் என்றும் மொழிக்கொள்கையை வகுத்துக்கொள்ள வேண்டும் .


Thursday, February 13, 2025

 கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சில அழிவுப்பூர்வமான மாற்றங்கள் ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளன .மக்கள் எல்லோரும் உள்ளூர சுயநலமிக்கவர்களாக வளர்ந்து வருகின்றார்கள் . சமுதாய அக்கறையை யாரிடமும் காணமுடியவில்லை . அதை மூடிமறைக்க நல்லவர்கள் போல வேஷம் போடுகின்றார்கள் . ஆதாரமின்றி மற்றவர்களைக் குறைகூறுகின்றார்கள் . பெரிய குற்றவாளிகளை விட்டுவிட்டு பலன் கேட்டுப்பெறுகின்றார்கள் . சின்னச் சின்னச் தவறு செய்பவர்களை த் தேடித்கண்டுபிடித்து குன்றவளிகள் என்று தண்டிக்கின்றார்கள் . இந்த பரிணாம வளர்ச்சி எங்கே கொண்டுபோய் விடுமோ ?

Wednesday, February 12, 2025

 மக்கள் தவறான வழிகளில் குறுகிய காலத்தில் உழைப்பின்றி அதிகப் பொருள் சம்பாதிக்க விரும்புகின்றார்கள் . இதற்கு இந்திய அரசியல்வாதிகள் கற்றுக்கொடுத்த பாடம் அரசியலை ஒரு தொழிலாக ஏற்றுக்கொள்வதுதான் .ஆட்சியாளர்கள் மட்டுமே தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் ,பாதுக்காவலர்களாகவும் இருக்க முடியும் என்பதால் ஆளும் கட்சியில் தொண்டர்களாக இருந்துகொண்டு பலனடைகின்றார்கள் . பலனடைபவர்கள் பங்கு கொடுக்கவேண்டும் என்பது உள்ளார்ந்த ஒப்பந்தம் .பலனும் பங்கீடும் ஒருவருடைய அரசியல் சீனியாரிட்டியை க்காட்டும் அளவுகோலாகும். ஒருவருடைய சீனியாரிட்டியை முந்திக்கொண்டு வேறொருவர் முந்திச் செல்ல கட்சித் தொடர்கள் அனுமதிப்பதில்லை  என்றாலும் பலன் மற்றும் பங்கீடுகளில் ஏற்படும் பிழைகளால் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கட்சி தாவலையும் புதிய கட்சிகளின் உதயத்தையும் அவ்வப்போது செய்கின்றார்கள் . நேர்மையான அரசியலை மேற்கொள்ளாத ஆட்சியாளர்களும் , மக்களின் ஆதரவு தனக்கே இருக்கின்றது என்பதை வெளிக்காட்ட இவர்களைப்போன்ற கட்சித் தொடர்களை விளம்பரமாக்கிக் கொள்வதும் , அவர்களால் சமுதாய வீதியில் ஏற்படும் வேண்டாத மாற்றங்களைக் கண்டுகொலாமல் இருப்பதும் இந்திய மக்களால் இன்னமும் இனமறிந்து கொள்ளாத கொரோனா  வைரஸ்ஸாகும் .  மக்களின் நலம் காக்க இரண்டு காட்சிகள் போதும்- ஒரு கட்சி ,ஒரு எதிர்க்கட்சி.  தன்னலம் மிகும் போதுதான் கட்சிகள் பலவாகின்றன  


Thursday, February 6, 2025

 முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்  என்றும் வைரத்தை வைரத்தாலதான் வெட்டமுடியும் என்றும் தமிழ் ச் சான்றோர்கள் கூறுவார்கள் .ஆனால்  சமுதாயத்தில் தீயவனை தீயவனாக இருந்துகொண்டு முழுமையாகத் திருத்தவோ அல்லது தடுக்கவோ முடியாது .நேர்மையான சமுதாயத்தில் ஒரு நேர்மையானவன் துளிர்க்கும் தீயவர்களை திருத்திவிடுவான் ள்ளது தண்டித்துவிடுவான் போலித்தனமான நேர்மையுடன் வளரும் சமுதாயத்தில் உண்மையான நேர்மையுள்ளவர்கள் யாருமில்லை .தவறிப்போய் ஒரு நேர்மையானவன் இருந்தாலும் அவனுக்கு சமுதாயம் துணைநிற்பதில்லை ..அவனால் தவறான வழியில் முன்னேறும் சமுதாயத்தை தடுத்து நிறுத்தமுடிவதில்லை மக்களுக்காக நேர்மையானவர்கள் போல வேஷம் போடும் அரசியல் தலைவர்களால் தீயவர்களுடன் நட்பு கொள்ளமட்டுமே முடியும் ,அவர்களை க் கட்டுப்படுத்த முடியாது .. இது இயற்கை யின் நியதி அதை மூடி மறுக்கமுடியாது .

Wednesday, February 5, 2025

 மக்களின்  நடவடிக்கைகளே கடவுளை மெய்ப்பிக்கின்றன என்று சொல்லும் போது மக்களின் நடவடிக்கைகளே  கடவுளை பொய்ப்பிக்கவும் செய்கின்றன. எடுத்துக்கட்டாக  கடவுள் தூணிலும் இருப்பார்  துரும்பிலும் இருப்பர் என்றும்  கடவுள் ஒருவரே என்றும் அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்றும் கூறுவார்கள் . ஆனால் அதை நிம்பினாலும் நம்பாமல்  ஒரே கடவுளைத் தேடி  பல இடங்களுக்குச் செல்வார்கள் .  எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு  தொழுதுவிட்டு உழைக்கும் எண்ணத்தை செயல்படுத்தவேண்டும் . நாம் வாழ்வதற்குத்தான் படைக்கப்பட்டோம் . அது உழைப்பதால் மட்டுமே முழுமைபெறும் . நேர்மையாகவும் ,ஒற்றுமையாகவும் வாழ்வதற்குத்தான் கடவுள் தேவை . அது வே ஒருவருடைய அடிப்படைக் கொள்கையாக  இருக்குமானால்  அவரே கடவுளாகிவிடுகின்றார் .

Monday, February 3, 2025

 தாங்களே எப்போதும் ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதற்காக இப்பொழுது அணைத்து ஆட்சியாளர்களும் மக்களிடம் கூடுதல்  வரி வாங்கி இலவசம் கொடுப்பதாக அறிக்கை கொடுப்பதை வழக்கமாகக்கொண்டுள்ளார்கள் . இந்த இலவசம் ஒரு சிலருக்கு மட்டுமே எளிதில் கிடைக்கின்றது. மற்றவர்கள்  அவர்களுடைய இயல்பான வேலைகளை விட்டுவிட்டு  இந்த அற்ப இலவசத்திற்காக  அலைகின்றார்கள். இலவசம் மக்கள் உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை சீரழித்து விடுகின்றது.  இதனால் மக்கள் பெரும்பாலானோர் பிச்சைக் காரர்களாக மாற்றப்பட்டு விடுகின்றார்கள் . உண்மையில் சமுதாயத்தில் உழைக்காமல் கிடைக்கும் பொருளுக்காக யாசிக்கும் பிச்சைக்காரர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றார்கள் .  தீயசெயல்களில் ஈடுபடும் தீயவர்கள் மிகுந்து வருகின்றார் கள் .இவர்கள் அதிகாரிகளும் , மற்றும் நற்குடிமக்களும்    வேஷம் போடு வதால் அதன் பரிணாம வளர்ச்சியைத் தடுத்துக் கொள்ள முடியவில்லை. இதைத் தடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருந்தாலும் அவர்களின் மறைவொழுக்கம் அவர்களை அப்படி வெளிப்படையாகச்  செய்யத் தூண்டுவ தில்லை. அதையும் இலவசம் வாங்கி  தாங்களாகவே ஏமாந்து போகும்  மக்களே செய்ய வேண்டியிருக்கு.அவர்களிடம் உரிமையுள்ள அறிவினால் தூண்டப்படும் விழிப்புணர்வு இல்லை   பொறியில் சிக்கிய எலி போல வலையில் மாட்டிக்கொண்ட மீன்கள் போல இவர்களால் என்ன சாதித்துவிடமுடியும். ஒரு நேர்மையான , நாட்டுப்பற்றுள்ள , மக்கள் நலத்தில் அக்கறையுள்ள , கொள்கையில் உறுதியுள்ள ,ஆளுமைத் திறனுள்ள ஒரு நல்ல தலைவன் இல்லாத பொது ஒரு கோடி மக்கள் ஒன்று சேர்ந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதையையே இது உணர்த்துகின்றது   


Friday, January 31, 2025

 எதிர்கட்சியினர் யாராக இருந்தாலும் , புதிதாக க் கட்சி ஆரம்பித்து அரசியல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் எல்லோரும் ஆளுங்கட்சியினரை விமர்ச்சிப்பதையே அவர்களுடைய முழுநேர வேலையாகக் கொண்டுள்ளனர் .அவர்களை மக்களின் வளமான எதிர்காலத்திற்கான உருப்படியான திட்டங்கள் ஏதும் அறியாதவர்களாவே இருக்கின்றார்கள். . பிறரை விமர்சிப்பதற்கு முன்னர் முதலில் தன்னை நேர்படுத்திக்கொள்ளவேண்டும் . மேலும் அரசியலை அரசியலுக்காகச் செய்யாத போது ஒட்டுமொத்த சமுதாயமும் சீரழிந்து போகும் . மக்கள் வறுமையில் மடிந்த பிறகு நாட்டில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை ? அரசியல்வாதிகள் அரசில்வாதிகளை ஆளும் நிலை வந்தால் அப்போது இப்போது இருக்கும் நிலையைவிட பலமடங்கு துயரங்களைத்தான் சந்திக்க நேரிடும் .

All reactions:
Meyyappa Meyyappan

Tuesday, January 28, 2025

 மக்களாகிய  நாம் அறியாமையால்  மக்களாட்சியில் செய்யும் மிகப் பெரிய தவறு  சமுதாயத்தின்  பாதுகாப்பிற்காகவும்  நலனுக்காகவும்  மக்களால் கண்காணிப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  ஆட்சிப்பொறுப்பும் , அதற்காக மக்களால் கொடுக்கப்பட்டதும் அவர்களாக எடுத்துக்கொண்ட  அளவில்லாத அதிகாரமும், போலியான வார்த்தைகளை நம்பி மக்கள் அளவின்றி கொடுக்கும் செல்வாக்கும் ஒன்றிணைந்து அவர்களை மறைவொழுக்க நாயகர்களாக மாற்றி இருக்கின்றது . பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரத்தைக் கண்டு அச்சப்பட்டு மவுனிகளாக இருக்கின்றார்கள் . பயன் துய்த்தவர்கள் அல்லது பயனை எதிர்பார்ப்பவர்கள் ஆட்சியார்களுக்கு தவறான விளம்பரமாக இருக்கின்றார்கள் 

ஆட்சியாளர்கள் சமுதாயத்தின் நலனுக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலைமை என்றாலும் துறை சார்ந்த  புலமையால்  செயலாளர்கள்  இல்லை என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறார்கள் . ஒவ்வொரு துறைக்கும்  அனுபவமிக்க அறிஞர்களால் ஆனகுழுவை நியமித்து  பணிநியமனம் , துறைசார்ந்த வளர்ச்சி , பிரச்சனைகளின் தீர்வு போன்றவற்றை முடிவு செய்யவேண்டும் .இந்தக்குழு ஆட்சியார்களின் கைப்பாவையாகச் செயல்படாதிருக்க  குழு உறுப்பினர்கள் கட்சி சார்பில்லாதவர்காளாக இருக்கவேண்டும் .மேலும் தேர்வு விதிமுறைகள்  வெளிப்படையாக  இருக்கவேண்டும் . 

காவல் துறையும் ,நீதித்துறையும் மட்டுமே சமுதாயத்திற்கு சட்ட றீதியான பாதுகாப்பைத் தரமுடியும்  . இவர்கள் ஆட்சியாளர்களின் தவறான எண்ணங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது  எப்போதும் ஆட்சியர்களின் எண்ணங்களையே எதிரொலிப்பதால் அரசியல் குற்றங்களின் உண்மைத்தன்மையை அரிதிந்த்துக்கொள்ளமுடியாமல் போகின்றது திருத்தப்படாத குற்றங்களால் குற்றங்கள் குறைவதற்கு வழியில்லை . மாறாக அவை அடுத்த கட்டத்தை நோக்கி  பரிணாம வளர்ச்சி பெறும். அதன் பின்விளைவுகளை நினைத்துப் பார்க்கவே மனம் அச்சம் கொள்கின்றது                

Thursday, January 16, 2025

 சிறுவன் பைக் ஓட்டி வீதியில் விபத்து ஏற்பட்டால் அப்பாவிற்குத் தண்டனை

மாணவன் தவறு செய்து பள்ளியில் விபத்து ஏற்பட்டால் தலைமை ஆசிரியருக்குத் தண்டனை . போலீஸ் காரர் தவறு செய்தால் இன்ஸ்பெக்டருக்குத் தண்டனை . அமைச்சர் ஊழல் புரிந்தால் தலைவருக்குத் தண்டனை . காலம் மாறிவிட்டது . சட்டங்களும் மாற்றப்பட்டுவிட்ட ன. எல்லாம் பொறுப்புத் துறப்பு. சரியான நிர்வகிக்க நேர்மையான ஆளுமைமிக்க தலைமை இல்லை.

Tuesday, January 14, 2025

 இந்தியாவிலுள்ள பொருளாதார நிபுணர்கள் கற்ற கல்வியை அரசியல் வாதிகளிடம் விற்றுவிடுகின்றார்கள் . மக்களிடம் பணப் புழக்கம் அதிகமாகும் போது உற்பத்தியும் நாட்டுப் பொருளாதாரமும் தானாகவே வளம் பெறும். அரசாங்கத்தில் சேர்ந்தால் அது திட்டத்தில் கால் பங்கு காணாமல் போவது முக்கால் பங்காக இருக்கின்றது . காணாமல் போவ்தற்காகவே இங்கே திட்டங்கள் போடப்படுகின்றன. அரசாங்கம் எவ்வழி மக்கள் அவ்வழி . ஒரு சமுதாயத்தை பால்படுத்திவிட்டு அதை நேர் செய்வதென்பது எளிதில் இயலாதது. அந்தவகையில் நாம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றோம். .அரசியல்வாதி ஆட்சியைப் கைப்பற்ற ஆட்சியாளர்களை குறைகூறுகின்றான் . ஆட்சியார்களோ ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இல்லாத தையெல்லாம் சொல்கின்றான் .இருவருமே மக்களை மறந்துவிட்டார்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் . மக்கள் சேவை செய்ய யாராவது சண்டை போடுவார்களா ? எல்லாம் பணம் படுத்தும் பாடு .

Like
Comment
Share

Friday, January 3, 2025

 நாட்டில் நீதியை நிலைநாட்ட விரும்பினால் அது நீதித்துறை மற்றும் காவல் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் மட்டுமே முடியும். இவ்விரு துறைகளும் நேர்மையான அரசாங்கத்திற்கு உட்பட்டு செயல்படுவது நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் நல்லது . ஆனால் ஆட்சியாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்களாக இருக்கும் போது இந்த துறைகள் நேர்மையாகச் செயல்படும் வாய்ப்பு ஊக்குவிக்கப்படுகின்றது .அதிகாரிகள் விலைக்கு வாங்கப்பட்டுவிடுகின்றார்கள் .இல்லை இடமாற்றம் , பணி உயர்வுகுத் தடை ,உயிருக்கு ஆபத்து ,போன்ற இடையூறுகள் .  ஆட்சியார்களின் பிரதிநிதிகளுடன்  நேர்மையான மேன்மக்களும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு இவ்விரு துறைகளையும் சேவை மனப்பான்மையுடன் நிர்வகிக்கவேண்டும் . அப்பொழுதுதான்  குற்றப்பின்னணி உடைய அரசியல்வாதிகளும் அனைவருக்கும்  பொது வான நீதியின் வளையத்திற்குள் வருவார்கள் . பொதுமக்கள் சமுதாயத்திற்கு வேண்டிய சட்டங்களை கேட்டுத்தான் பெறவேண்டியிருக்கின்றது .