Friday, January 3, 2014

Arika ariviyal


சூரியக் குடும்பத்தில் பூமி

சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி,பூமி செவ்வாய்,வியாழன்,சனி, யுரெஸ்,நெப்டியூன் என்ற வரிசையில்
8 கோள்கள் உள்ளன.இவற்றுள் பூமியில் மட்டும் யிரினங்கள் உள்ளன.இதற்கு என்ன காரணம் ?



நீரானது னி ,நீர் .நீராவி என மூன்று நிலைகளிலும் இருக்கக் கூடியவாறு சூரியனிலிருந்து அளவான வெப்பத்தைப் பெற சரியான தொலைவிலும், சரியான நிறையுடன் சரியான சுற்றியக்கத்தையும் பூமி பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.
வியாழன்,சனி,யுரெஸ்,நெப்டியூன் போன்ற பெரிய கோள்களில் ஈர்ப்பு அதிகம் ,வெப்ப நிலை குறைவு இதனால் ஹைட்ரஜன் நீங்கலா வளிமங்கள் உறைந்து விடுகின்றன. மீத்தேன் அமோனியா போன்ற வளிமங்கள் தெவிட்ய (Saturated) நிலையில் உள்ளன. இவை நச்சுத் தன்மை கொண்டவை. இவ் வளிமண்டலத்தில் உயிரினம் தோன்றிப் பரிணாம வளர்ச்சியில் ஈடுபடவே முடியாது
புதனில் சிறிதளவு கூட காற்றோ ,வளி மண்டலமோ இல்லை. வெள்ளியில் உள்ள வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு மிக அதிகமாகச் செறிவுற்றுள்ளது. செவ்வாயில் வளி மண்டலம் மிகவும் மெல்லியது. பூமியை விடக் குளிர்ச்சியாக இருக்கின்றது நீர் உறைந்து பனிக்கட்டியாக இருக்கின்றது.

No comments:

Post a Comment