Thursday, August 27, 2020

God-16

God-16 

தமிழ் இலக்கியங்களில் கடவுள் 

தமிழ் இலக்கியங்கள் யாவும், நூலின் கருப்பொருள் எதுவாக இருந்தாலும்  கடவுள் வாழ்த்துடன் தான் தொடங்குகின்றன. தான் சொல்லப்போகும் கருத்துக்கள் யாவும் சமுதாய நலனுக்காக நடுநிலையோடு அமைய தன்னைத் தானே தகுதிப்படுத்திக் கொண்டதை மக்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு ஒழுக்கநெறியாக கடவுள்வாழ்த்தை மேற்கொண்டனர் . இந்த வழக்கம் சங்க காலம் முழுவதும் (கி.மு.10ஆம் நூற்றாண்டி லிருந்து கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை )  நிலைத்திருந்தது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உருவமற்ற கடவுள் ஒருவராக இருந்தாலும் , மக்களின் மனநிலைக்கு ஏற்ப  உருவமுள்ள தெய்வங்கள் பலவாயின மக்களின் வாழ்வாதார த்திற்கு எது அடிப்படையாக இருக்கின்றதோ அதன் வளத்தை பாதுகாப்பதற்காக இப்படி உருவமுள்ள கடவுள்களை படைத்துக்கொண்டார்கள்  மக்கள் வாழுகின்ற நிலத்தின் இயல்புகளுக்கு ஏற்பத் தெய்வங்கள் முதன்மை பெற்றன. மலைகளைக் கொண்டுள்ள குறிஞ்சிநிலத்தில் முருகனைத் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள் டத்தப்பெற்றன. வயல்களைக் கொண்ட மருத நிலத்தில்இந்திரனையும், பெருமணல் உலகம் எனப்படும் நெய்தல்நிலத்தில் வருணனையும் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள்நடத்தப் பெற்றன. காடுகளைக் கொண்ட முல்லை நிலத்திற்குத் திருமாலும், பாலை நிலத்திற்குக் கொற்றவையாகிய காளியும் தெய்வங்களாகக் கருதப்பட்டனர். இறைவணக்கம் என்பது நேர்மறையான சிந்தனை , நல்லொழுக்கம் ,சமுதாயக் கட்டுப் பாடு   இவற்றை மக்களிடையே அழிந்துபோய்விடாமல் நிலைப்படுத்துவதற்காகவே வலியுறுத்தப்பட்டது

 

செயற்கைக் கோள்கள் கண்டுபிடிக்கப்படாத அந்தக்காலத்திலேயே தமிழர்கள் 9 கோள்களுக்கும் சிலைவடித்து வணங்கினர் . மக்களின் வாழ்க்கையில் அவை நேரடியான தொடர்பு எதையும் பெற்றிருக்க வில்லை என்றாலும் , பூமித் தாயின் கூடப்பிறத்தவர்கள் என்ற முறையில்  மதிப்புக்கொடுத்தனர் . சூரியக் குடும்பம் என்பது இயற்கையின் ஒரு அம்சம் .இயற்கையின் எந்த  படைப்பையும்  வணக்கத்திற்குரிய ஒரு வடிவமாகக் கொள்வது மரபு . இறந்து இயற்கையோடு இரண்டற க் கலந்தவர்களையும் வணங்குவது இந்த மரபின் அடிப்படைதான் , இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் நடப்பட்ட கல்லை நடு கல் என்பார்கள்.  இறந்தவர்களை நினைவுகூர்வதற்காகவும் , அவர்களுடைய நல்ல எண்ணங்களைக் கொண்டு செலுத்துவதற்காகவும் இந்த நடு கல்லை வணங்குவதை வழக்கமாக கொண்டார்கள் . உண்மையில் இப்படிச் செய்யும் போது பிறப்பு இறப்புடன் தொடர்புடைய  இயற்கை உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும் என்று நம்பினார்கள்    “களிறு எறிந்து வீழ்ந்து எனக் கல்லே பரவினல்லது பரவும்
கடவுளும் இலவேஎன்ற புறநானூற்றுப் பாடல் (பா 335) இங்குச்
சுட்டிக் காட்டத் தக்கதாகும்


Wednesday, August 26, 2020

God-15

 ஆண்டுதோறும் கோயில் திருவிழாக்களில் கூட்டம் அலைமோதுகிறது.பணம் வசூலித்து கும்பாபிஷேகம் செய்கின்றார்கள். கடவுளுக்கு  நேர்த்திக்கடன் என்று கோயில் கோயிலாகச் செல்கின்றார்கள்.ஆன்மிகச் சுற்றுலா இன்றைக்கு அதிகரித்திருக்கிறது. கடிய நெடும் பயணத்தை மேற்கொள்ளக் கூடத்  தயங்குவதில்லை.நடைப் பயணமாக ஆன்மிகத் தளங்களுக்குச் செல்வது ,காவடி, பால்குடம் எடுப்பது தீ மிதிப்பது ,விரதம் இருப்பது ,எனக்  கடவுளை நண்பனாகிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மெய்ப்பொருளை அறியாமல் கடவுளை நாடுபவர்கள் இரண்டு விதம். ஒரு வகையினர்  செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் என்று கடவுளுக்கு பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுக்கின்றார்கள் மற்றொரு வகையினர் உழைப்பைத் துறந்து விட்டு தன்னுடைய பிரச்சனைகளை எல்லாம் தீர்ந்து வைப்பார், கேட்பதையெல்லாம் இலவசமாகத் தருவார் என்று ஒவ்வொரு  கடவுளாக வணங்கி கொண்டே இருக்கின்றார்கள்    இதனால் மக்களுக்கு ஆன்மிக உணர்வும் , உண்மையான கடவுள் நம்பிக்கையும் மேலோங்கி வருகின்றனவா என்று கேட்டால் அதற்கு இல்லை என்ற பதில் வார்த்தையாக வெளிப்படாவிட்டாலும் ஒவ்வொருவருடைய மனதிலும் ஓங்கி ஒலிக்கவே  செய்கின்றது.

கடவுளை நம் முன்னோர்களுக்கு முன்னோர்கள் கடவுளை உண்டாக்கிச்  சமுதாய நலனுக்காக அறிமுகப்படுத்தினார்கள் .சிலர் மெய்ப்பொருளைத் தெரிந்து கொண்டு கடவுளை ஒப்புக்கொண்டார்கள்  பலர் சான்றோர் சொல் தவறக்கூடாது என்று   கடவுளை ஏற்றுக்கொண்டார்கள் .கடவுளால் தனிமனிதனுக்கு நேரடியாகப் பயன் கிடைக்குமோ இல்லையோ ஆனால் சாகாத சமுதாயத்திற்கு பாதுகாப்பு என்று எல்லோரும் நம்பியதால் காலங்காலமாய் கடவுள் மக்களால் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடவுள் வெறும் கடவுளாக மட்டும் இருந்த போது  எல்லோருக்கும் பொதுவானவர் என்ற நிலை இருந்தது. அவர் செல்வந்தராக நிலை மாறியபோது சுயநலவாதிகள் கடவுளைச்  சொந்தம் கொண்டாட முயற்சித்தனர். அச் செல்வத்தை அபகரிக்கவே இப்படி இவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று பகைமை ஏற்பட ஆரம்பித்தது . அப்பொழுது தொடங்கி ,கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ,கடவுளை நம்பிக்கையற்றவர்கள் என்ற பிரிவினை தலையெடுத்தது. சிலர் பிரிந்து சென்று தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஒரு புதிய கடவுளை ஏற்படுத்திக் கொண்டார்கள் . உலகில் உள்ள எல்லோருக்கும் கடவுள் பொதுவானர் என்றால் பிரிவினைவாதிகள்  தங்களைக் கடவுளால்  முதன்மைப்படுத்திக் கொள்ள முடியாது போனது. அதனால் தனி மனிதர்களையே கடவுளாக்கிக் கொண்டு தனி மதத்தை தோற்றுவித்துக் கொடார்கள் . பிரிவினை அதிகரிக்க அதிகரிக்க கருத்து வேறுபாடு காரணமாக மக்களிடையே குழப்பம் மேலிட சண்டையும் சச்சரவும் இயல்பாகின. இரு வகையினருமே கடவுளின் மெய்ப்பொருளை அறியாமல் தொடர்ந்து கடுஞ் சொற்களால் சண்டைபோட்டுக் கொண்டு வருகின்றார்கள் .காலங்காலமாய்ப்  பின்பற்றி ஒழுகப்பட்ட ஒரு பழக்கம் திடிரென்று ஒருநாள் முட்டாள்தனமான பழக்கமாகிவிடாது. கடவுளின் மெய்ப்பொருளை அறியாமலேயே நீண்ட காலமாய் கடவுளை என்றுக்கொண்டதின் விளைவே இந்நிலை.

கடவுள் எப்பொழுது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது ? ஏன் அறிமுகப்படுத்தினார்கள் ?இதன் பின்னணியை நுட்பமாய் ஆராய்ந்தால் நாம் கடவுள் பெயரால் சண்டையிட்டுக் கொள்வது எவ்வளவு தவறானது என்பதைப்  புரிந்து கொள்ள முடிகின்றது .கடவுள் நிச்சியமாக மனிதனின் படைப்பே,சமுதாயத்திற்கு நலம்பயக்கும் என்று உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையின் தோற்றமே கடவுளானது .கடவுள்  கொள்கையை ஒருவர் பின்பற்றும்போது  அவர் தனக்குத் தானே கடவுளாகிவிடுகின்றார். வேற்று மதத்தினர் இப்படிப்பட்ட மனிதர்களையே கடவுளாக்கி வணங்குகின்றனர்.

கடவுள் பலவாக இருந்தாலும், சிலையாக இருந்தாலும் , மதம் சார்ந்து மதத் தலைவர்களாக இருந்தாலும் அடிப்படையான கடவுள் கொள்கையில்  மாற்றமில்லை . ஒவ்வொரு மனிதனும் தீய செயல்களைச் செய்யாமல். நல்வழியில் வாழ்ந்து, பிறருக்கு முடிந்த உதவிகளை செய்து  தானும் தான் வாழும் சமுதாயமும் வளமோடு நிலைத்திருக்க கடவுள் கொள்கை துணைபுரிகின்றது இது  உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தங்கள் தரத்தை, தகுதிப்பாட்டை உயர்த்திக் கொள்ளும் வழிமுறையாகும். இயற்கையோடு ஒன்றிணைந்து ஒத்ததிரத் தூண்டும் மனப்போக்கு.இயல்பாக வாழும் கலையை தன்வசப்படுத்திக் கொள்ள தனக்குத் தானே வழிகாட்டிக்கொள்ளும் எளிய அணுகுமுறை. ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களைத் தாங்களே தூய்மைப்படுத்திக்கொள்ள உதவும் உன்னதமான வழிமுறை .சாகாத சமுதாயத்தின் மூல மந்திரம் . 

புரிதலின்மையால் கடவுளை ஏற்றுக்கொண்டவர்களும் , கடவுளை மறுப்பவர்களை சண்டைபோட்டுக்கொள்கின்றார்கள் .இவர்கள்   கடவுள் கொள்கையின் மறைபொருளை தாங்களும் அறிந்துகொள்ளாமல் மற்றவர்களும் அறியமுடியாமற்  செய்துவிடுகிறார்கள்.

God-14

 

கடவுள் -14

கடவுள் நம்பிக்கையும், கடவுள் அவநம்பிக்கையும் இன்றைக்கு மிகவும் போலித்தனமாகி வருகின்றது.  இந்த விஷயத்தில் ஏறக்குறைய எல்லோருமே வேஷமிட்டு  நடிக்கிறார்கள் என்று தான்  சொல்லவேண்டும். கடவுள் நம்பிக்கை பெரும்பாலும் மரபு வழியாகவே பின்பற்றப்படுகின்றது. அதனால் கடவுள் கொள்கையை உணர்த்தும் மெய்ப்பொருள் மெல்ல மெல்ல மனதை விட்டு அகன்று இன்றைக்கு அது மொத்தமாகக் காணாமற் போய்விட்டது. கடவுளை மறுப்பவர்களை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் கடவுள் நமபிக்கையை வளர்த்துக் கொள்வது  கடவுள் நம்பிக்கையாகாது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை வெல்வதை மட்டுமே வாழ்க்கைக் குறிக்கோளாக கொண்டு கடவுளை மறுப்பது கடவுள் அவநம்பிக்கையாகாது .இரு வகையினருமே ஒருவர் மற்றவரை வெல்வதற்காகவே கடவுளை ஒரு கருப்பொருளாக்கிக் கொண்டார்களே ஒழிய நம்பிக்கைக்காகவோ அல்லது அவநம்பிக்கைக்காகவோ இல்லை.

கடவுள் நம்பிக்கை என்பது கடவுளைத் தெரிந்து கொள்வதை விட , அறிந்து கொள்வதை விடப்  புரிந்து கொள்வதாகும் . கடவுள் கொள்கையின் மெய்ப்பொருள் கடுமையானதுமில்லை, விரிவானதுமில்லை .எல்லோராலும் புரிந்து கொண்டு வாழ்க்கையில் பின்பற்றத்தக்கவாறு மிகவும் எளிமையானது . ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய வேலைகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும் என்று கடவுள் மனிதனையும் பிற உயிரினங்களையும் படைத்தான். மனிதனைத் தவிரப் பிற உயிரினங்களெல்லாம் இதை நன்கு புரிந்து கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் இன்னும் புரிந்து கொள்ளாததுபோல் நடிக்கிறான் .தான் விரும்பும் எதையும் தன்னால் பெறமுடியும் என்ற நம்பிக்கையைத் தரக்கூடிய தகுதியை வளர்த்துக் கொண்டு தன்னோடு தான் வாழும் சமுதாயத்தையும் வளப்படுத்தி அதன் மூலம் தன எதிர்காலச் சந்ததியினரும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துபவனே உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவன் .இந்த மனப்பான்மை ஆன்மிக நூல்களைக் கற்பதால் மட்டுமே வருவதில்லை.இயற்கையைப் புரிந்து கொண்டு எண்ணங்களை வளப்படுத்திக் கொள்வதால் ஓரளவு தெரிந்து கொள்ள முடிகின்றது .

கடவுள் நம்பிக்கை எவ்வளவு போலியானது என்பதை பெரும்பாலான மனிதர்கள் பின்பற்றும் ஒரு இயல்பான செயல்முறையைக் கொண்டே விளக்கமுடியும்

ஒருவர் இனம்புரியாத ஒரு வகை நோயால் அவதிப்பட்டார் .கைவைத்தியம், மந்திரித்தல். நேர்த்திக் கடன் முடித்தல் ,பூஜை செய்தல் போன்றவற்றோடு மருத்துவர்களையும் பார்த்தார் .குணமாவதில் முன்னேற்றம் இல்லாததால் அடுத்தடுத்து வெவ்வேறு மருத்துவர்களைப் பார்த்து அவர்கள் தந்த பல்வேறு மருந்துகளையும் எடுத்துக்கொண்டார் . சில நாட்களில் அவர் கொஞ்சம் குணமானார். அடுத்தநாள் அவருடைய மனைவிக்கு அதே நோய் தொற்றிக் கொண்டது . ஆனால் அவரால் அந்த நோய் குணமாவதற்கான சரியான வழியைக் கூறமுடியவில்லை. எதிலாவது ஒன்றில் குணமாகும் என்ற நம்பிக்கையில்  ஒன்றில் கூட நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளாததின் பின்விளைவே இது.  பொதுவாகப்  புரிதலின்மை பெரிய அளவில் இருக்கும் போது அவநம்பிக்கையும் அப்படியே இருக்கும் .

கடவுளே எனக்கு லாட்டரியில் முதல் பரிசு கிடைக்கவேண்டும் .கடவுளே எனக்குத் தங்கச் சுரங்கம் போல புதையல் கிடைக்க வேண்டும் . கடவுளே எனக்கு ஒரு தேவதை வந்து பொன்னும் பொருளும் அள்ளித்  தரவேண்டும்.கடவுளே எனக்கு எது கேட்டாலும் அதைத் தரக்கூடிய அட்சய பாத்திரம் வேண்டும் . இப்படி கடவுளிடம் போய் கேட்பவர்கள் நிறையப் பேர். உழைப்பின் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாதவர்களே தகுதியை வளர்த்தும் பயன்படுத்தாமல் வீணடிக்கின்றார்கள்.

Tuesday, August 25, 2020

God-13

கடவுள் -13

மீன்கள்   நீந்திச் செல்ல வேண்டும் என்று துடுப்புக்களைக் கொடுத்தான் . பறவைகள் பறந்து செல்ல வேண்டும் என்று இறக்கைகளைக்  கொடுத்தான். ஒவ்வொரு உயிரினமும் தங்களைத் தாங்களே எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் . எதிரிகளை வீழ்த்தவும் தேவையான உடல் வாகுவையும்  வலிமையையும் பெற்றிருக்கின்றன.  மனிதனோ ,மனிதனால் படைக்கப்பட்ட கடவுளோ இப் பணியைப் பேரளவிலான எண்ணிக்கையில்,தொடர்ந்து  செய்தால் நம்பமுடியாத அளவு  பிழைகளே  ஏற்படும் .ஒன்றுக்குரிய  தனிச் சிறப்பை மற்றொன்றுக்கு இடம் மாற்றி கொடுக்கும் தவற்றை இயற்கை ஒருபோதும்  , செய்வதில்லை..இயற்கையே கடவுள் எனக் கொண்டால் மட்டுமே உயிரினங்களின் தோற்றத்தை கடவுள் செய்தார் என்று நம்புவதற்குக் காரணமிருக்கும் . 

இறைவனும் இயற்கையும் வெவ்வேறா என்ன? இயற்கையை இறைவனாகப் பார்ப்பது ஆன்மிகம் ,இறைவனை இயற்கையாகப் புரிந்து கொள்வது  அறிவியல்.  இயற்கைக்கும் இறைவனுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன . அவை கடவுளே இயற்கை, ,இயற்கையே கடவுள் என்ற உயரிய கருத்தை விளம்பரப்படுத்துகின்றன.

இயற்கைக்கு தொடக்கமும்  இல்லை முடிவும்  இல்லை . அதுபோல கடவுளுக்கும் ஆதியும் அந்தமும் இல்லை .இயற்கையின் பரிமாணம் , ஆற்றல் ,செயல்திறன் எல்லாம் கற்பனைக்குக்  கூட எட்டாத அளவிற்கு அளப்பரியது..  மனிதனுக்கு மீறிய  இந்தகைய பண்புகள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட  கடவுளுக்கும்   கற்பிக்கப் பட்டிருக்கின்றன இயற்கையை ஒரு குறுகிய எல்லைக்குள் அடக்கிவிடமுடியாது என்பதால் அதை  ஒரு  குறிப்பிட்ட உருவத்தால் மட்டும்  அடையாளங் காட்ட  முடியாது.  சூரியோதயம் .சந்திரோதயம் .மலை ,ஆறுகளின் தொடக்கம்  .விளைந்த வயல் என இயற்கைக்குப் பல வடிவங்கள் இதே போல மனிதர்கள்  விருப்பம் போல கடவுளின் உருவத்தை வடித்துக்  கொண்டார்கள் .அவை கடவுளுக்கு மேலாடை போல இருந்ததே ஒழிய ,கடவுளின் அடிப்படைக் கொள்கையைப் புரிந்து கொள்ளும் படியான நிலையையோ அல்லது மெய்ப்பொருளை அறிந்து கொள்ளும் முறையில் ஒரு முன்னேற்றத்தையோ தரவில்லை. எல்லாக் கடவுள்களும்,எம்மதத்தை, எவ்வினத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் தீயவைகளை அழித்து நன்மைகளைத் தந்து வாழ்க்கையைப் பாதுகாக்கின்றன என்ற அடிப்படைக் கொள்கையை நோக்கமாகக் கொண்டிருந்தன  -கடவுளை மனிதனாக உருவகப்படுத்தித் தொழுவதும் ,மனிதனைக் கடவுளாக்கி மகிழ்வதும் மதங்களில் காணப்படும் வேற்றுமை என்றாலும் அதன் அடிப்படை மக்களைச் சாகாத சமுதாயத்திற்காக எப்போதும் நன்மக்ககளாகவே இருக்கச் செய்வதுதான்.

இயற்கை எங்கும் எதிலும்  நிறைந்திருக்கின்றது . அது  உடலுக்கு வெளியில் மட்டுமில்லை  உள்ளுக்குள்ளும்  இருக்கின்றது.இந்தப் பண்பை  கடவுளுக்கும் கற்பித்துள்ளார்கள் நுணுகிய அணுவிலிருந்து ,பெரிய பேரண்டம்  வரை           எதிலும் இயற்கை  .  கடவுளும் அப்படியே , இயற்கையின் படைப்புக்கள் எல்லாவற்றிலும் அடங்கியிருக்கின்றார்   உடலுக்கு வெளியில் மட்டுமில்லை , உள்ளுக்குள்ளும் கடவுள் நீக்கமற நிறைந்திருக்கின்றார் என்று ஆன்மிகவாதிகள் கூறுவார்கள் .வெளியில் கடவுளும் , உள்ளே கடவுள் இல்லாமையும் இருந்தால் , சமநிலைப் பாதிப்பால்  சமுதாயம் பாதிக்கப்படவே செய்யும். மனதில் கடவுள் நிறைந்திருக்கும் போது ஒவ்வொரு மனிதனும் கடவுளாகவே ஆகிவிடுகிறார்கள் .அது சமச்சீரான சமுதாயம் உருவாவதற்கு வழிவகுக்கின்றது. அங்கு ஒவ்வொருவருமே சமுதாயக் காவலர்களாக இருப்பதால் சமுதாயத்திற்கு உறுதியான பாதுகாப்பாக இறுதிவரை இருக்கின்றது.

இயற்கைக்கும், கடவுளுக்கும் மௌனமே பொது மொழி. தயக்கம் காட்டாமல்  செயல் புரிவதற்கு எப்போதும் தயாராக இருப்பவன் பேசிக்கொண்டே இருக்க மாட்டான். பேசுவதற்கு மொழி கூட அவனுக்குத் தேவைப்படாது .இயற்கையும் சரி, கடவுளும் சரி எதையும் செயலில் காட்டுவதையே இயல்பாகக்  கொண்டுள்ளன. இயற்கையைச்  சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்பவர்கள் நலம் பெறுகின்றார்கள். மாறாக மாசுபடுத்தி நாசப்படுத்துபவர்கள் துன்பப் படுகின்றார்கள் .பருவத்தே பயிர் செய்பவர்கள் நல்ல மகசூலைப் பெறுகின்றார்கள் . நீர் மண்டலத்தையும் , வளி  மண்டலத்தையும் நச்சூட்டுபவர்கள்  உடல் நலத்தை இழக்கிறார்கள். அதை போல கடவுளை ப் போற்றுபவர்கள் மன நலம் பெறுகின்றார்கள் தூற்றுபவர்கள் தானும் கெட்டு ,பிறரையும் கெடுக்கின்றார்கள்         

இயற்கை தானாக வலியவந்து உதவுவதில்லை. மனித முயற்சிகளினால் மட்டுமே இயற்கையின் பயனை நுகரமுடியும் .கடவுளுக்கும் இது பொருந்தும். கடவுளிடம் விண்ணப்பித்து விட்டு சும்மா இருப்பவர்களுக்கு எந்த பயனும் கிடைத்துவிடுவ தில்லை. மனித முயற்சிகளைக் கொண்டே கடவுள் மனிதர்களுக்கு உதவமுடியும் என்பதால் , ஒவ்வொரு மனிதரும் கடவுளின் ஏஜெண்டுகளே அல்லது கடவுளே. எனவே கடவுள் இயற்கை என்றால் உருவமில்லாத கடவுள்  உள்ளேயும் வெளியேயும், எங்கும் இருப்பதாகவும் , கடவுள் உருவமுள்ளவர் என்றால் உள்ளே இருப்பதாகவும், அப்போது கடவுள் ஒருவருடைய தோற்றத்தையே தன்  உருவமாகக் கொண்டுவிடுகின்றார் என்றும் கொள்ளலாம்.     

Monday, August 24, 2020

God-12

கடவுள் -12

இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் அவை உயிரற்றவையாக இருந்தாலும் உயிருள்ளவைகளாக இருந்தாலும் அடிப்படை மூலப்பொருட்கள் ஒன்றே, இயற்கையைப் பொறுத்தமட்டில் உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் என்ற பாகுபாடு கிடையவே கிடையாது.அவை யாவும் அணுக்களாலும், அவற்றின் கட்டமைப்பால் உருவாகும் மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்டவைகளாக இருக்கின்றன, மூலக்கூறுகளின் உணர்திறன் ,அணுக்களைவிடப்  பல மடங்கு அதிகமானது என்பதால் உயிரினங்களின் கட்டுமானத்தில் அவை முக்கியப் பங்கேற்கின்றன  ஆனால் இந்த அணுக்கள் அணுக்களாகவே உற்பத்திசெய்யப்படுவதில்லை. அணுக்கள் தொகுப்பாக்கம் மூலமும் ,  அணுக்களின் மூலப்பொருட்களான புரோட்டானும் ,எலெக்ட்ரானும் நேரடியாக ஆற்றலிலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகின்றன, . ஆற்றலிலிருந்து பருப்பொருளாக்கம் (materialization) மூலம் புரோட்டானும், எலெக்ட்ரானும் ஆற்றல்மாறாக் கோட்பாட்டிற்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்டாலும் , ஆற்றலிலிருந்து நேரடியாக அவை எப்படி உருவாகின்றன?. அப்படி உருவாகும் போது அவைகளுக்கு எப்படி மின்னேற்றம் (Charge) கிடைக்கின்றது?  என்பதெல்லாம் இன்றளவும் புரியாத புதிராகவே இருக்கின்றன .  .விஞ்ஞானத்தில் எவ்வளவு  விளக்கம் தேடியும் சரியான  விடை கிடைக்கவே இல்லை . அடைப்படைத் துகள்கள் யாவும் ஆற்றலிலிருந்து மின்னேற்றத்துடனும், குவாண்ட மதிப்புடன் கூடிய இயற் பியல்  பண்புகளுடனும்  இயற்கையால் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை மறுப்பின்றி ஏற்றுக்கொள்வது மட்டுமே இதற்குத் தீர்வாகின்றது.  . அணுவின் கட்டமைப்பை விவரிக்கும் போது நீல்ஸ் போர் (Niels Bhor) என்ற என்ற விஞஞானி  இந்த வழிமுறையைத் தான் கையாண்டார். அணுக்கருவைச் சுற்றி  வலம்  வரும் எலெக்ட்ரான் முடுக்கப்பட்ட இயக்கத்தின் காரணமாக ஆற்றலை உமிழாமால்  தொடர்ந்து  இயங்குகின்றது என்பது அறிவியல் விதிக்கு மீறியது என்பதை விட இயற்கையால் அனுமதிக்கப்படுகிறது என்றே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இவர் கூறுவார்

 இந்தப் பிரபஞ்சம் பெரு வெடிப்புக்குப் பிறகு தோன்றியது என்று கூறுகின்றார்கள். இந்த பெரு வெடிப்பு  உண்மையிலேயே நிகழ்ந்திருக்குமா  என்பதற்கு  பெருவெடிப்புக்கு முன்னர்  இந்த பிரபஞ்சம் எப்படி இருந்தது? காலத்தின் நிலை என்ன ? என்பதற்கான விளக்கம் கொடுக்க முடியாமல் போனதே ஒரு வலிமையான காரணமாக இருக்கின்றது . எல்லையற்ற வெளியையும் , ஆற்றலையும் இயற்கை பெரு வெடிப்பு நிகழ்ந்த அந்தக் கணத்திலேயே பெறுவது என்பது மந்திரத்தால் மட்டுமே முடியும். வெளியும் பொருளோடு சேர்ந்து விரிவடைகின்றதா இல்லை ஏற்கனவே இருக்கும் வெளியில் பொருட்கள்  மட்டும் விரிவடைகின்றனவா  என்பதற்கான விளக்கத்தை அறிவியல் பூர்வமாக அளிக்கமுடியாததால் பிரபஞ்சத்தின்   தொடக்கத்தைக்கூட அறிவியல் முரண்பாடு என்பதை விட இயற்கை அனுமதிக்கின்றது என்றே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. 

புரோட்டானும் எலெக்ட்ரானும் கூடும்போது மிகுந்த ஆற்றல் பெற்றிருக்கும் நிலையில் அவை ஒன்றிணைந்து நியூட்ரானாக மாறுகின்றன.நியூட்ரான் நடுநிலை மின்னூட்டம் கொண்ட துகள். அணுக்கருவிற்குள் நேர்மின்னூட்டம் கொண்ட புரோட்டான்கள் விலகிச் செல்லாமல் ஒட்டியிருக்குமாறு செய்வது இந்த நியூட்ரான்களே. தாழ்ந்த ஆற்றல் நிலையில் அவை ஹைட்ரஜன் அணுவாக மாற்றம் பெறுகின்றன.இதில் எலெக்ட்ரான் புரோட்டானைச் சுற்றி ஒரு சில குறிப்பிலிட்ட இடைவெளியுடன் சுற்றி வருகின்றது..எலெக்ட்ரானின் இச் சீரிசைஇயக்கம் தானாக ஏற்படுமாறு செய்வது இயற்கையின் கட்டளை  இயற்கையைத் தவிர இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த யாராலும் முடிவதில்லை.

ஒரு சிறிய விதையில் ஒரு  மரத்தின் முழு எதிர் காலமும் எழுதப்பட்டிருக்கின்றது.எந்த மரத்திலிருந்து வந்ததோ அதைப் போலவே பூத்து, காய்த்து, அதே சுவையுடன் கூடிய காய்களையும் பழங்களையும் தருகின்றது விந்தணுக்களின்  மரபியல் ஒவ்வொரு குடும்பத்திலும் பரம்பரை பரம்பரையாகத் தொடர்கின்றது. .மூலக்கூறுகளின் குறிமொழியை இயற்கையால் மட்டுமே இயற்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றியமைக்க முடியும் .மனிதர்களால் மாற்றியமைக்கவேமுடியாது. அப்படி மாற்றியமைத்தால் அது இயற்கைச் சமநிலையைப் பாதிப்படையச் செய்து எதிர்மறையான பின்விளைவுகளையும்   பரிணாம வளர்ச்சியையும் ஏற்படுத்தும்.       

அணுக்களில் எலெக்ட்ரான்கள் இயக்கத்தை பச்சைக் கொடி காட்டி துவக்கிவைத்தவர் யார் ? நுண்ணிய விதைகளில் அதன் எதிகாலத்தைத் திணித்து வைத்தவர் யார் ? விந்தணுக்களில் மூலக்கூறுகளின் குறிமொழி மாறாமல் தொடரும் படி செய்ததுயார் ? இதைச் சிலர் கடவுள் என்பர் வேறு சிலர் இயற்கை என்பர் .கடவுள் இயற்கையே என்பதை வலியுறுத்திக் கூறுவதற்கு இவை போதுமானதாக இருக்கின்றது


Sunday, August 23, 2020

God-11

 கடவுள் -11

இன்பங்கள் வந்தால் அது தன்னுடைய முயற்சியால் விளைந்தது என்று யாருக்கும் தெரிவிக்காமல் ,பங்களிக்காமல், முழுதாக அனுபவிக்கிறார்கள் ஆனால் துன்பம் வந்தால் உலகமே திரண்டு வந்து கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். இன்பம் கிடைத்ததிற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டு , துன்பம் வந்த போது கடவுளிடம் அடிக்கடி முறையிடுகிறார்கள் .கடவுளுக்கு நன்றி சொல்வது என்பது பலனில் ஒரு பகுதியை ஏழை எளியவர்களுக்கு கிடைக்கும்படி பங்கீடு  செய்வதாகும். அதை எளிமைப்படுத்த கோயில் நிர்வாகம் எடுத்த முயற்சியே உண்டியல்.. ஆனால்  இன்றைக்கு உண்டியல் வருமான தவறான வழிமுறைகளில் களவாடப்படுவதால் ஏழை எளிய மக்களுக்குப் போய்ச் சென்றடைவதில்லை..

கடவுளிடம் அடிக்கடி இது  வேண்டும் அது வேண்டும்   என்று கேட்கும் ஒரு மனிதன் முணுமுணுப்பதைக் கேளுங்கள். . "கடவுளே உனக்கு செவி இருக்கின்றதா ? நான் சொல்வது மட்டும் ஏன் உனக்கு கேட்கவில்லை? . அடுத்த வீட்டுக் காரனுக்கு மட்டும் கேட்டதெல்லாம் கொடுக்கின்றாயே, ஏன் இந்த ஓரவஞ்சனை ?"

கடவுள் கற் சிலைதான் . அதிலிருப்பது உயிரற்ற உடல் ,செயலாற்ற உறுப்புக்கள் . அதனால் கடவுளால் மனிதர்களை போல பார்க்க முடியாது , கேட்க முடியாது , பேச முடியாது. அவருக்குத் தெரிந்தெதெல்லாம் மௌன மொழிதான் . அதை மொழிபெயர்க்கத் தெரிந்தால் அவரிடம் நாம் பரிபூர்ணமாக உறவாடமுடியும் .

தன் சன்னதிக்கு வந்து முறையிடுவோர்க்கு கடவுள்  மௌன மொழியில் கூறிய வார்த்தைககள் எனக்குப் புரிகின்றது. உங்களுக்கும் புரியும் என்று நினைக்கின்றேன் .

" எதையெல்லாம் விருப்பிக் கேட்டாயோ அதையெல்லாம் முயன்று பெறுவதற்குத் தேவையான எல்லாவற்றையும்  நீ பிறக்கும்போதே அளித்துவிட்டேன். அவற்றைப் பயன்படுத்தாவிட்டால் காலப்போக்கில் அவற்றை நீ நிரந்தரமாகவே இழந்து விடுவாய். இந்த உறுப்புக்கள் எல்லாம் தேவையில்லை என்றால் அதை பயன்படுத்தக் கூடிய வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு அப்புறம்  என்னிடம் வந்து முறையிடு”.

“நான் உயிரற்ற கற் சிலை என்னால் மனிதர்களை போல செயல்களைச் செய்யமுடியாது. கற் சிலையான என்னால் காரியங்கள் செய்யமுடியும் என்று நீ எதிர்பார்க்கும் போது உயிருள்ள செயல்திறன் மிக்க உன்னால் எப்படி முடியாமற்  போனது ? 

கடவுளிடம் எதைக்கேட்டாலும் தருவான். எப்போது. அந்தக் கடவுள் நமக்குள் இருப்பதாக நாம் உணரும்போது.  உண்மைதான். நாம் எதை வென்றெடுக்க விரும்பினாலும் அதை நிச்சியமாக நம்முடைய ஈடுபாட்டினால் மட்டுமே பெறமுடியும். நம்முடைய தகுதிக்கு மீறிய எதையும் நம்மால் ஒருபோதும் பெறமுடியாது .அப்போதுதான் கடவுள் நம்முடைய குரலுக்கு செவிகொடுக்க  மறுப்பது போலத்   தோன்றும். அப்படி கடவுள் மறுப்பது கூட ஒருவரின் நலத்திற்குத்தான் . ஏனெனில் தகுதிக்கு மீறிய எதையும் ஒருவரால் நீண்ட நேரம் தாங்கிக்  கொள்ளவே முடியாது. அதனால் விரைவில் அதை இழக்க வேண்டிய நிலை வரலாம். இந்த உண்மையை ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதற்காக த்தான் உலகில் மனிதனைத் தவிர பிற உயிரினங்க ளையும் படைத்திருக்கிறார்ன் .ஒரு மரம் காய்களைத் தாங்கிக்கொள்ளும் வலிமையற்று இருந்தால் அது காய்ப்பதில்லை. தன்  தகுதியறிந்தே மரங்களெல்லாம் பூத்துக் காய்க்கின்றன. இயற்கையைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ளாத மனிதர்களே தன் தகுதியை முன்னறிந்து கொள்ளத்  தவறிவிடுகிறார்கள்.       

Saturday, August 22, 2020

god-10

கடவுள் -10

பிரச்சனையோ அல்லது விவாதமோ  எதுவானாலும் , மனிதன் மனிதனை வெல்வது என்பது முக்கியமில்லை. .மனிதன்  முதலில் தன்னைத் தானே வெல்ல வேண்டும் .அப்பொழுதுதான் அவன் பிறரை நேர்மையாக வெல்லும் பக்குவத்தைப் பெறமுடியும். அதுதான் ஒருவனுக்கு மட்டும் வெற்றியா இல்லை உலகத்துக்கே வெற்றியா என்பதைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றது. பேரண்டத்தின் வளர்ச்சிக்கும் இயக்கங்களுக்கும்  அறிவியல் விளக்கம் கொடுக்கும் என்றாலும் பேரண்டத்தின் பரந்த  கட்டமைப்பிற்குத் தேவையான வெளி மற்றும் ஆற்றலுக்கான மூலத்தை அறிவியல்பூர்வமாக கற்பிக்க முடியவில்லை.  கடவுள் இருக்கின்றார்,இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சம் தோன்றியிருக்கவே முடியாது. செய்து முடிக்கப்பட்ட ஒரு  செயல் மனிதர்களால் முடியாது முடியவே முடியாது என்று தெரியவரும்போது அது மக்கள் மனதில்  கடவுள் நம்பிக்கையை நிலைப்படுத்துகிறது. கடவுளின் பெயரால் மக்கள்  ஏமாற்றப்படுவது, கடவுளின் சொத்துக்களை களவாடுவது , மதச் சாயங்களை பூசுவது போன்ற இன்ன பிற காரணங்களுக்காக கடவுள் நம்பிக்கைமறுக்கப்படுகின்றது.   கொள்பவனும் வாழ்கின்றான் .கடவுள் இல்லை . இந்த உலகில் எம்மதத்தைச் சேர்ந்தவர்களாக  இருந்தாலும்,இந்த உலகில் கடவுள் நம்பிக்கை உள்ளவனும் வாழ்கின்றான் , கடவுள் நம்பிக்கை இல்லாதவனும் வாழ்கின்றான். . இது உலகில் வாழ்வதற்கு கடவுள் ஒன்றும் அவசியத் தேவையில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது

கடவுள் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகம் என்பது ஒருவிதத்தில் அறிவியலே. இயல்பாக வாழும் கலையை வாழ்க்கையின் போக்கிலேயே எளிமையாக யாவர்க்கும் கற்றுக்கொடுக்கின்றது. நலமான சமுதாயத்திற்கு வேண்டிய சுய ஒழுக்கங்களை தனிமனிதனுக்கு உணர்த்துகின்றது .இயற்கையைப் பார்த்துப் பார்த்து பாடம் கற்றுக்கொண்டு வாழ்க்கையை மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்ளும் அணுகுமுறை .இயற்கையின் வழிமுறைகளே ஆன்மிகத்தின் நெறிமுறைகளாக இருப்பதால் ஆன்மிகம் அறிவியல் போல யாராலும் மறுக்கமுடியாததாக இருக்கின்றது . சுய நலத்திற்காக ஆன்மிகத்தைச் சீர்குலைத்தவர்களும்,மெய்ப்பொருளைஅறியாமல் கடவுள்மறுப்புக்  கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களும் ஆன்மிகத்தில்  ஒளிந்திருக்கும் அறிவியலை காணாமற் செய்துவிட்டார்கள் பிறருக்கு உதவி செய்து , பிறரிடமிருந்து உதவி பெற்று தானும் வாழ்ந்து தன்னுடைய சமுதாயமும் வாழ மனப்பக்குவம் வேண்டும் . அத்தகைய உயரிய மனப்பான்மையைத் தருவது ஆன்மிகமே என்பதை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள் .     

god-9

கடவுள் -9

கடவுளை நாம் நிரூபிக்க வேண்டியதில்லை . ஏனென்றால் நிரூபித்தாலும், நிரூபிக்க முடியாவிட்டாலும் சமுதாய வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களுக்கு காரணங்களாக இருப்பதில்லை .ஆனால் அதை  விட  முக்கியமானதை நாம் பெரிதும் புறக்கணித்து விட்டோம். நாம் மனிதர்கள் என்பதை நம்மைப்  படைத்த கடவுளுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது நிரூபிக்க வேண்டும். கடவுளின் வேலை நாம் வேண்டியதை நாம்வேண்டிய போதெல்லாம் தருவதில்i  இல்லை .மனிதனாகப் படைக்கப்பட்டவன் மனிதனாகவே  வாழவேண்டும்.  பேராசையாலும், பொறாமையாலும், கோபத்தாலும்,ஆணவத்தாலும்,சுய நலத்தாலும்  தடுமாறி இயற்கை தந்த தன் பிறப்பின் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது. அன்பு ,கருணை , மனித நேயம் ,பொது நலம் போன்றவற்றால் மெருகூட்டிக் கொள்ளவேண்டும் . கௌதம புத்தர் இதைத்தான்  அன்பே கடவுள் , அன்புதான் உலக மகா சக்தி  என்று சாதாரணம் மக்களும் புரிந்து கொள்ளுமாறு கடவுளை வருணிப்பார். உண்மையில் கடவுளுக்கு  கடுமையான விளக்கவுரை ஏதும் தேவையில்லை. அவை புரிதலை மட்டுப்படுத்தி கடவுள் ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தக்காரன் என்பதைப்போல அறிவிக்கக்கூடியதாக இருக்கின்றது. இயற்கையின் பாகுபாடற்ற தன்மையை புரிந்துகொள்ள முடியாமற் செய்து விடுகின்றது.

உடல் உழைப்பைவிட அறிவுக்கு ஆற்றல் அதிகம் . அறிவை விட உழைப்புக்கு விளை பயன் அதிகம் .அறிவை விட அன்பிற்கு ஆற்றல் அதிகம் . அன்பை விட அறிவிற்கு  விலை அதிகம் . அன்பைவிட ஆற்றலுள்ள ஒன்றை இன்னும் யாரும் இனமறியவில்லை .அன்பிற்கு  நிகர் அன்பு மட்டுமே. அப்படிப்பட்ட அன்பை இயல்பாகப் பெறுவதற்கு துணைபுரிவதே கடவுளின் வேலை.  புத்தர் போன்ற மா மனிதர்கள் அறிவியல் கற்ற அறிஞர்களில்லை. ஆனால் இயற்கையைப் பார்த்து  இயற்கையைப் படித்து , இயற்கையைப் புரிந்து கொண்டு ,இயற்கையாய் வாழ்ந்த போது  இயற்கையின் பேராற்றலைப் பெற்றவராகத் திகழ்ந்தார் .இயற்கையை ஆராய்ந்த அறிவியல் அறிஞர்கள் இயற்கையின் செயல் முறைகளை அறிந்து அறிவிப்பார்கள். அது தனிமனித முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் .ஆனால் சமுதாய முன்னேற்றத்தின்  பாதுகாப்பிற்குக்  காரணமாக இருக்கும் அடிப்படைகளை அவை தெரிவிப்பதில்லை .   அந்த வெற்றிடத்தை புத்தர் போன்ற இயற்கையைப் புரிந்துகொண்ட பேரறிஞர்களால் மட்டுமே ஈடுசெய்யமுடிந்தது.

பேரண்டத்தில் எங்கும் நிறைந்திருக்கும் அன்பு எப்படி வாழ்வியல் உண்மையை விளக்கிக்  கூறுகின்றது என்பதை  அறிந்துகொள்வோம் . மின்னூட்டங்களில் நேர், எதிர் என இரு வகையுண்டு . இவற்றுள் ஒத்த மின்னூட்டங்கள் எதிரிகளை ப்  போல விலகிச் செல்கின்றன .அப்படி விலகிச் செல்வதால் ஆக்கப்பூர்வமான செயல்கள் ஏதும் விளைவதில்லை.அவை மேலும் மேலும் விலகிச் செல்வதைத்தவிர வேற்றொன்றும் செய்வகில்லை.. ஆனால் நேர் மற்றும் எதிர் வகை மின்னூட்டங்கள் ஒன்றையொன்று நேசிப்பதால் , நெருங்கி வருகின்றன. அவை ஒன்றிணைந்து ஓர் அணுவை உருவாக்கும் போது வேற்றுமைக்குக்  காரணமான மின்னூட்டம் நடுநிலையாகி விடுகின்றது .இந்த நுண்ணிய அணுக்களே கட்டுமானம்  எதுவானாலும் அதற்குரிய அடிப்படை மூலப்  பொருளாகி விடுகின்றது . பகை அன்பாக மாறும் போது கூடவே ஆக்கமும் இணைந்துவிடுவதை இயற்கை படம்பிடித்துக் காட்டும் முறையே வித்தியாசமானதுதான்

நடு நிலையிலிருக்கும் அணுக்களின் ஆக்கத்திறன் மிகவும் அதிகம்  அணுக்கள் ஒன்றையொன்று நேசிப்பதால் விதவிதமான மூலக் கூறுகளாகி விடுகின்றன. ஒவ்வொரு மூலக் கூறுவிற்கும் ஒவ்வொரு பயன் .மூலக் கூறுகள் ஒன்றையொன்று நேசிப்பதால் விண்மீன்கள்  அண்டங்கள் தோன்றி. உயிரியல் மூலக்கூறுகளால் பல்லுயிரிகளின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் தொடங்கின .அண்டங்கள் ஒன்றையொன்று நேசிப்பதால் பேரண்டம்  தோன்றியது. அந்த நேசிப்பு மட்டும் இல்லாதிருந்தால் இந்த அண்டங்கள் எல்லாம் தாறுமாறாக இயங்கி ,ஒன்றோடொன்று முட்டி மோதி எப்போதோ அழிந்து போயிருக்கும். உயிரினங்கள் மடிவதுண்டு , விண்மீன்கள் வெடித்துச் சிதறுவதுண்டு . அவை அழிவென்றாலும் ஆக்கத்திற்கான அழிவு அழிவில் ஆக்கமும், ஆக்கத்தில் அழிவும் இருப்பதால்தான் ஒன்றின்  வளர்ச்சி தடையின்றி ஒரு தொடர்கதையாக இருக்கின்றது..

அன்பின் ஆற்றல் மகத்தானது  நம் கற்பனைக்கும் எட்டாதது  என்று சொல்லும் ஆன்மிகவாதிகளின் வாக்கை மெய்ப்பிப்பது போல  இன்றைக்கு சில விண்ணியற்பியலார் தங்கள் ஆய்வுரைகளை எடுத்துரைக்கின்றார்கள். பேரண்டங்களின் நேசிப்பால் இணைப்பேரண்டங்கள் இருக்கலாம் என்றும் இவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர் , வெளிக்கும் ஆற்றலுக்கும் உச்ச வரம்புண்டு என்று சொல்வோர் இதை நம்புவதில்லை ஆனால் பேரண்டங்களின் நேசிப்பு  வெளிக்கு எல்லையில்லை என்பதை  இயல்பாகவே தெரிவிக்கின்றது. கற்பனைக்கும் எட்டாத வெளியையும் , அங்கே கற்பனைக்கும் எட்டாத எண்ணிக்கையில் விண்மீன்களையும் (ஆற்றலையும்) ஒரு மூலமின்றி படைக்க இயற்கையால் முடியுமானால் அதனால் எல்லையற்ற வெளியையும், ஆற்றலையும் உருவாக்கமுடியும் என்பதும் சாத்தியமே.. இத்தகைய செயல்திறன் இயற்கைக்கு மட்டுமே உண்டு. ஒரு செயலைச் செய்ய யாரவது ஒருவர் காரணமாக இருக்க வேண்டும் . அது போல இப்பரந்த பிரபஞ்சமெங்கும் நிகழும் செயல்கள்  யாவும் சிறிதும் பிழையின்றி திருத்தமாக முழுமையாகச் செய்ய அளவற்ற ஆற்றல் கொண்ட யாரோ ஒருவரின் பின்னணி இருக்க   வேண்டும்  என்றும்  மாயத் தோற்றங் கொண்ட  அவரையே கடவுள் என்று கற்பித்துக் கொண்டார்கள். இயற்கையே கடவுளானது என்பது நடுநிலையாளர் களின்  சித்தாந்தம்          

Friday, August 21, 2020

God-8

 

கடவுள் -8

கடவுளுக்கு அடிப்படை அறிவியல்

கடவுளைத் துதிப்பது ஆன்மிகம்

கடவுளை அறிந்துகொள்வது புறவியல்

கடவுளை புரிந்து கொள்வது அகவியல் 

ஆன்மிகத்தை நாம் நன்கு அறிவோம். ஆனால் ஆன்மிகத்திற்குள் இருக்கும் அறிவியலை நாம் முழுமையாக அறிந்திருக்கவில்லை. கடவுளை அறிந்து கொண்டால்தான் புரிந்து கொள்ள முடியும் பெரும்பாலானோர்  புறவியலோடு நின்று விடுவதால் கடவுளின் மெய்ப்பொருளை உணரத் தவறிவிடுகிறார்கள். சாதாரண மக்கள் மட்டுமின்றி ஆன்மிகவாதிகள் கூட இதில் பிழை செய்துவிடுகிறார்கள். அதனால் கடவுள் கொள்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாமல் , பல நூற்றாண்டு காலமாக விவாதப்பொருளாவே இருந்து வருகின்றது. வேற்றுமை நிலைத்திருக்க , கடவுள் கொள்கையோடு மதம் , இனம் எனப் புறச்சாயம் பூசிவிடுகின்றார்கள்

உடலால் கடவுளைத் துதிக்கலாம் ஆனால் புரிந்து கொள்ள முடியாது. அது மனத்தால் மட்டுமே இயலக்கூடியது .ஒரு ஜென் கதை இக்கருத்தை மிக அற்புதமாக விவரிக்கின்றது .

ஜப்பானியத் துறவிகளை ஜென் என்பார்கள் .ஜென் துறவியிடம் மாணவராகச் சேர்ந்து ஆன்மிகத்தை கற்றுக்கொள்ள ஒருவர் வந்தார்.அவர் தன் வருகையைத் தெரிவிப்பதற்காக வாசலில் கட்டப்பட்டிருந்த மணியை அடித்து ஓசையை எழுப்பி பின் அனுமதி பெற்று உள்ளே சென்றார்.

"மணி இருப்பதால்  அதை அடித்து ஓசையை எழுப்ப முடிகின்றது . அந்த மணி அங்கு இல்லையென்றால் நீ என்ன செய்வாய்"  என்று துறவி மாணவரைப் பார்த்துக் கேட்டார் .அதற்கு அந்த மாணவர் கைகளைத் தட்டி ஓசை  எழுப்புவேன் என்றர். ஒரு மாணவன் தன் வருகையை ஒரு ஆசிரியருக்குத் தெரிவிக்க கை தட்டுவதோ, விசிலடிப்பதோ  மரியாதையில்லை.

"இரன்டு கைகளால் தட்டி ஓசை எழுப்புவதைக் கேட்டிருப்பாய் . இப்பொழுது நீ  ஒரு கை  ஓசையைக் கேட்டு எனக்குக் காட்டு. ஆன்மிகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு கை ஓசையை ஒருவர் அறிந்திருக்க வேண்டும் " என்றார் துறவி   .  

இந்த மாணவன் ஒரு கையால் இசைக்கக்கூடிய இசைக்கருவியை இசைத்துக் கட்டினான். “இல்லை இல்லை இது ஒரு கை  ஓசையில்லை  நீ இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை” என்றார் துறவி.

கடிகார ஓசை ,  இலைகளின் சலசலப்பு .நீர்வீழ்ச்சியின்  ஓசை . பறவைகளின் குரல் .கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு  இப்படிப் பலவற்றைச் செய்து காட்டியும் எல்லாவற்றையும் ஜென் துறவி மறுத்துவிட்டார், பலமுறை தோற்றுப்போன அந்த மாணவன் இனி என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே தியானத்தில் ஆழ்ந்துவிட்டான் . அப்போது அவன் மனதில்  பல விதமான மௌன ஓசைகளைக் கேட்டான். யாரோ உள்ளுக்குள் இருந்து கொண்டு பேசுவது போல  இருந்தது .அது தான் ஒரு கை  ஓசையாக இருக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான் .புறத் தொடர்பு ஏதுமின்றி ஒருவர்

தன்னைப்பற்றித் தானே அறிந்து கொள்வது  ஒருகை ஓசை.ஒரு கை  ஓசை மட்டுமே கடவுளைப் பற்றிய புரிதலைத் தரும் 

Thursday, August 20, 2020

god--7

 

கடவுள் -7

யார் தன்னுடைய மனமே தனக்கு உதவிசெய்யக்கூடிய கடவுள் என்று நினைத்து தனக்குத் தானே வேண்டிகொள்கின்றார்களோ அவர்கள் பிறரிடம் அது கடவுளேயானாலும் கேட்டுப் பெறுவதற்கு ஏதுமில்லை. உண்மையில் மனதை மனிதன் ஆள்கின்றானா அல்லது மனிதனை மனம் ஆள்கின்றதா என்பதை பொறுத்தே இது தீர்மானிக்கப்படுகின்றது. ஏனெனில் மனிதனால் ஆளப்படும் போது மனம் அவனுக்கு நல்ல  நண்பனாக இருக்கின்றது  ஆனால் அவனே மனதால்  ஆளப்படும் போது அவனுக்கு அவனே எதிரியாகிவிடுகின்றான். ஒருவனுக்கு ஏற்படும் துன்பங்களில் நண்பர்கள் மட்டுமே எதிர்பார்ப்பின்றி பங்குகொள்கின்றார்கள்

மனமே சிந்திக்கின்றது. திட்டமிடுகின்றது .ஆலோசனை கூறி வழி நடத்திச் செல்கின்றது . உண்மையில் வாழ்க்கைப்  போராட்டத்தில் மனமே முக்கியப் பங்கேற்கின்றது . மனம் வாழ்க்கையின் அகநிலை , உடல்  புறத் தொடர்புகளுக்கான ஓர்  ஊடகம் மட்டும்  தான் ஒவ்வொருவருடைய மனமும் அவர்களுடைய விருப்பத்தையும் தகுதியும் எடைபோட்டு ,என்ன செய்யமுடியும் என்பதைத் தெரிவிக்கின்றது. நிறைவேற்ற முடியாத விருப்பமாக இருந்தால் , தகுதியை மேம்படுத்திக்கொள்ள அறிவுறுத்தும். அந்த அறிவுரையை மதிக்காதவர்களே மனதையும் கேளாமல் தவறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள். அதன் பிற்பயன்களை அனுபவிக்கின்றார்கள் துன்பப் பட்டு வேண்டிக்கொள்ளும் அந்த மௌன மொழியை மனம் மட்டுமே அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறது. அந்தத் துன்பம் ஏன் வந்தது , அதைப் போக்க என்ன செய்யலாம் ,என்று ஆராய்ந்து தக்க வழி சொல்கின்றது ..மனதின் இந்தத்  தனிச்சைச் செயல் ஒருவரின் தகுதியையும் ஆற்றலையும் பொறுத்தது என்பதால் இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றது .அறிவும் புரிதலும் இணைந்து பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கின்றன இழப்பால் வந்த துன்பம் அதை வென்று பெறுவதால் மகிழ்ச்சியாக மாறுகின்றது.     ஒருவர் என்னவெல்லாம் வேண்டும் என்று விரும்பி செயல்பட்டாரோ , அதை மனதின் வழிகாட்டலால் உடல் செய்த உழைப்பு கொடுக்கின்றது. இந்த நடைமுறையில் கடவுள் எங்கிருந்து வந்தார் ? எல்லாக் கடவுள்களும் அந்த மனதிற்குள் அடக்கமாகிப் போய்விடவில்லையா ?

  மனம் என்பது பிறக்கும் போதே ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுத்த ஒரு புதையல்.மண்ணுக்குள்  புதைந்திருப்பது மட்டுமல்ல மனதில் புதைந்திருப்பதும் புதையல்தான். மண்ணைத் தோண்டினால் தான் புதையல் கிடைக்கும் .மனதைத்  தூண்டினாலும்  புதையல் கிடைக்கும். மனம் கற்பனை சக்தியை அதிகரிக்கக் கூடியது .இந்த கற்பனை அறிவைவிட ஆக்கத் திறன் மிக்கது என்று சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞராகப் போற்றப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுவார்         

god-6

 

கடவுள் -6.

“உன்னுடைய முயற்சி எதுவானாலும்

                கடவுள் அதைக் கவனிக்கிறார்

உன்னுடைய போராட்டம் ஏதுவானாலும்

                கடவுள் அதை அறிகின்றார்

உன்னுடைய கூக்குரல் எதுவானாலும்

               கடவுள் அதைக் கேட்கின்றார்

உன்னுடைய   துன்பம் எதுவானாலும்

               கடவுள்  துணை புரிகின்றார்

உன்னுடைய  பிரச்சனை எதுவானாலும்

             கடவுள் புரிந்து கொள்கின்றார்

உன்னுடைய தேவை எதுவானாலும்

            கடவுள் அதற்கான தகுதியைத் தருகின்றார்”

ஆறுதலான இந்த கருணை மொழிகள் தீராத துன்பத்தால் துயருற்று கடவுளிடம் அழுது முறையிடும் பக்தர்களுக்கு சில ஆன்மிகவாதிகள் அடிக்கடி கூறும் வார்த்தைகள்தாம் . இந்த வர்ணனையை மேலோட்டமாகப் பார்த்தால் வழக்கமான கருத்தும் ,நுணுகிப் பார்த்தால் பிறிதொரு கருத்தும்  மெய்யறிவிற்குப் புலப்படும். ஒவ்வொருவருக்கும் அவரவர் மனமே கடவுள் என்பதை இவ்வரிகள் சுட்டிக்கட்டுகின்றன, இதிலுள்ள கடவுள்  என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு  (உன் )மனம் என்ற சொல்லைப்  பதிலீடு செய்தால் கடவுளை  இனமறியச் செய்கின்றது    கருத்துக்கள்  மாறாவிட்டாலும் கடவுளின் அர்த்தம் மனமென மாறுகின்றது. எந்த மனம் கடவுளை உண்டாக்கியதோ அந்த மனமே கடவுளாக இருக்க முடியும் என்பதை மறுப்பதற்கில்லை .

வெளிப்படையாகச் செய்தாலும் . மறைமுகமாகச் செய்தாலும். செய்யப்படும் எல்லாச் செயல்களையும் செயலைச்  செய்பவரும் , கடவுளும் மட்டுமே அறிவார்கள். இதைத்தான் மனச்சாட்சி என்று கூறுகின்றார்கள்.யாருக்கும் பயப்படாவிட்டாலும் ஒவ்வொருவரும் அவர்களுடைய மனச்சாட்சிக்குப் புயப்படவேண்டும் .அந்தரங்கமாகத் தவறுகளைச் செய்துவிட்டு , அதை யாரும் பார்க்கவில்லை என்று மகிழ்ச்சி கொள்ளவேண்டாம் .மனச்சாட்சி உறுத்தும் போது ஒரு நாள் தவறு செய்தவரே தன வாயால் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுக்கும் நிலை வரலாம் . பரிணாம வளர்ச்சியால் அவர்களுடைய வாரிசுகளை நேரடியாகவோ , மறைமுகமாகவோ பாதிக்கச் செய்யலாம். ஒருவர் மற்றவரைப்    

 பார்த்துத்தான் தீயவைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை..ஊகித்தும் ,உணர்ந்தும் பின்பற்றமுடியும் .பிறந்த கன்றுக்குட்டி எழுந்து நின்று ஓடுவதும்,, தாயை இனமறிந்து மடி தேடிப் பால் குடிப்பதும், ஆமைக் குட்டிகள் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் கடலைத் தேடி நகர்வதும் , மீன்கள் நீருக்குள் நீந்திச் செல்வதும் ,பிறந்த உயிரினங்கள் எல்லாம் பிறந்தவுடன் சுவாசிப்பதும் எல்லாம் உணர்வுகளின் தூண்டுதலே. பரிணாம வளர்ச்சியால் உள்ளுக்குள்  ஊறும் உணர்வுகளே அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்கின்றது . நல்ல எண்ணங்கள் பரிணாம வளர்ச்சியில் உயர் நிலைக்கும், தீய எண்ணங்கள் தாழ்ந்த நிலைக்குப்பின் காரணமாக அமைகின்றன,