Friday, November 22, 2019


நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்  ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்   - அப்துல் கலாம் 
பிறப்பை எவரும் முயன்று பெறுவதில்லை. அது பெற்றோர்களின் விளையாட்டால் நிகழ்ந்தது. எவரும் தங்கள் பிறப்பை வேண்டாம் என்று மறுக்க முடியாது . அது போல இறப்பையும் வேண்டாம் என்று தடுத்துக் கொள்ள முடியாது . ஒருவருடைய பிறப்பும் இறப்பும் அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை ..ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கை அப்படியில்லை . வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கிக் கொள்வதும் பயனில்லாமல் கழிப்பதும்   அவரவர் கையில் தான் இருக்கின்றது.   ஒருவருக்குக் கிடைக்கும் பேறும் புகழும் அவருடைய வாழ்க்கையால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது .என்பதால் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள முயலவேண்டும் என்பதே வாழ்க்கையின் அடிப்படை.
வாழ்க்கை என்பது பிறருக்குப் பயன்தருவதற்கும் அதையும் தொடர்ந்து  செய்வதற்கும் தன்னைத் தானே தகுதி படுத்திக் கொள்ள இறைவன் கொடுத்த வாய்ய்பு. என்பதை வெகு சிலரே புரிந்துகொண்டிருக்கின்றார்கள் .எப்படி வாழவேண்டும் என்று தெரிந்து கொள்ளும் காலம் வரும் போது பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்துவிடுகின்றனர் . இதில் வேடிக்கை என்னவென்றால் இன்னும் வாழக் காலம் கொடுத்தாலும்  சமுதாய வாழக்கையைப் புரிந்து கொள்வதேயில்லை. வாழ்க்கை வாழ்நாள் முழுக்க முழுத்திருப்தி இல்லாததாக இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் எப்படி வாழவேண்டுமோ அப்படி சிந்தித்து வாழ்வதைவிட எப்படி வாழக்கூடாதோ அப்படி சிந்திக்காமலே வாழ்வதுதான். பொதுவாக இப்படிச் சிந்திக்கின்ற போது சமுதாயத்தின் நலங் கெடுக்கும் எதிரிடையான எண்ணங்களே மனதில் இடம் பிடித்து விடுகின்றன.
பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கை   எண்ணங்களாலும் உணர்வுகளாலும் ஆளப்படுகிறது.வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கும்  இவை ஒவ்வொருவருக்கும் அகக் காரணிகளாக இருப்பதால் சமுதாய நலனுக்காக இவற்றை மேம்படுத்திக் கொள்வது அவசியம். ஏனெனில் சமுதாய நலனுக்குள் தனிமனித நலம் இலைமறைவு காய்மறைவு .
நேரத்தை யாரும் நிறுத்திவைக்க முடியாது . நேரம் பின்னோக்கிச் செல்வதுமில்லை . புதிய நொடியில் புதிய நிகழ்வைப் பெறலாமே ஒழிய பழைய நிகழ்வைப் பெறமுடியாது சும்மா இருந்தாலே நேரம் கழிந்துவிடும் .வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான் பிறப்பிலிருந்து இறப்புவரை அது நேரஞ் சார்ந்தது ,நேரத்தைக் கழிப்பதற்காக நாம் பிறக்கவில்லை . குறுகிய வாழ்நாளில் அரிய காரியங்களைச்  செய்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கவேண்டும் பலர் தனக்காக மட்டுமே  வாழ்வார்கள்.  சமுதாயத்தை வாழவைக்கும் போது அச்சமுதாயத்தோடு சேர்ந்து தானும் நலமாக வாழமுடியும் என்பதை உணர்ந்து   சிலர் சமுதாயத்திற்காக வாழ்வார்கள். இவர்கள் மட்டுமே வாழும்போது மட்டுமின்றி வாழ்ந்து மறைந்த பின்பும் மக்களால் நினைக்கப்படுகின்றார்கள்.  ஐந்திலும் சாவு நூறிலும் சாவு . வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி.ஆனால் சரித்திரத்தில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் சமுதாயத்திற்காகச் சாதனை படைத்த மக்களே ..

Wednesday, November 20, 2019

sonnathum sollaathathum


நண்பர்களை மாறிவிடமுடியும் ஆனால் அண்டைவீட்டாரை மாற்ற முடியாது
                                                                                                     -    அடல் பிஹாரி வாஜ்பாய்

நல்ல நண்பர்கள் நன்மைகளை மட்டுமே தருவார்கள் ஆனால் தீய நண்பர்கள் நம்மையும் தீயவர்களாக்கிவிடுவார்கள்  நட்பை வளர்த்துக்கொண்ட பின்னர்   நண்பர்களை மாற்றிக்கொள்ள முடியாது. மாற்றிக்கொண்டாலும் அதன் பாதிப்பு தொடர்ந்து வரும். என்பதால் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நண்பர்களைக் கூட ஒருவர் மாற்றிக்கொண்டுவிடமுடியும் ஏனெனில் அது தன்வினைச் செயல். ஆனால் அண்டைவீட்டாரை மாற்ற முடியாது . ஏனெனில் அது எதிர்வினைச் செயல்.
அண்டைவீட்டாரோடு நல்லுறவு இருக்கும்போதுதான் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்வதுடன் இணைந்து முன்னேற்றமும் காணமுடியும். .இது வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பொருந்தும். பிரச்சனையான அண்டைநாட்டாரை மாற்றிக் கொள்ள முடியாமையால் இந்தியா தன் சுய முன்னேற்றத்தில் முழு கவனம் மேற்கொள்ள முடியவில்லை  .
எங்கிருந்தோ வந்து நாட்டை அபகரித்து  சில நூற்றாண்டு காலம் ஆண்டு, உரிமைகொண்டாட வாரிசுகளை வளர்த்து விட்டுச் சென்றதால் நாட்டின் ஒரு  பகுதியை இழந்தோம்.. அவர்கள் எதோ தங்கள் நாட்டை இழந்தது போலச்  சண்டை போடுகின்றார்கள். வெற்றி பெறமுடியாமல் இந்த வன்மத்தை மக்கள் எல்லோரிடமும் திணிக்கிறார்கள் . நல்லவர்களே இல்லாத ஒரு அண்டைநாடு  இந்தியாவிற்கு ஒரு  நிரந்தரமான பிரச்சனை..  .      

Sunday, November 17, 2019

creative thoughts


அடிமரம் வளராமல் நுனி மரம் வளர்வதில்லை பூவுக்குப் பின்தான் காய் , காய்க்குப் பின்தான் கனி

கட் டடங்கள் மேலிருந்து கீழாகக் கட்டப்படுவதில்லை . எப்போதும் கீழிலிருந்து தான் மேலாகக் கட்டப்படும் .

இன்றைக்கு சமுதாய வீதியில் சமூக நீதிகள் காப்பாற்றப்படவில்லை எதிர்த்து ஏதும் செய்துவிடமுடியாது என்று எண்ணிக் கொண்டு .பலர் அநீதியை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்துவிடுகின்றார்கள் . நீதிக்காக குரல் எழுப்புவதில்லை .மற்றும் பலருக்கு அது அநீதி என்றே தெரிவதில்லை
.
நியாயங்களை செலவின்றி நிலைநாட்டமுடியும் என்ற சூழல் இருந்தால் மட்டுமே நியாயங்கள் காப்பாற்றப்படும்.இது நீடித்து நிலைத்திருக்க வேண்டுமென்றால் எங்கும் எதிலும் எப்பொழுதும் செயல்படுத்தப்படவேண்டும்  அப்போதுதான்  மக்களின்  வாழ்க்கை மேம்படும்.. நியாயங்களைக் காப்பாற்றுவதற்கு ஆகும் செலவு அதைக் காப்பாற்றாமல் விடுவதால் ஏற்படும் இழப்பிவிட அதிகமாக இருப்பதால் பலர் அதைக் கைவிட்டுவிடுகின்றார்கள் . அரசாங்கமும் இதில் அக்கறை கொள்வதில்லை. .இதனால் அறவழி மீறும் போக்கு அதிகரித்து வருகின்றது   .

எல்லோரும் நியாயத்திற்கு கட்டுப்படுவதில்லை. கட்டுப்படுத்த முடிவதுமில்லை . ஏனெனில் அவர்கள் வெவ்வேறு பொருளாதார நிலைகளில் இருக்கின்றார்கள் , வெவ்வேறு அதிகாரமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் பாதகமாக இருந்தால் நியாயத்தை எதிர்ப்பதும் ,சாதகமாக இருந்தால் ஏற்பதும் கட்டுப்பாடின்றி பரவலாக இருப்பதாலும் , காக்க வேண்டியவர்களே எல்லை மீறுவதாலும் நியாயங்கள் சமுதாயத்தில் எப்போதும் நிறம் மாறிக்கொண்டேயிருக்கின்றன

வெளிப்படைத்தன்மை யில்லை என்றால் விதிமுறைகள் மீறப்படுவதற்கான வாய்ப்புக்கள் அங்கே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்றும் அர்த்தப்படும்

அறவழிப் போராட்டங்கள் மட்டுமே போராட்டம் முடிந்த பின்பும் அறத்தை கட்டிக் காக்கும்.எல்லோரும் எப்போதும் ஏதாவது பிரச்சனைகளைத்  தந்து கொண்டேயிருக்கிறார்கள். பிரச்சனைகளாக இருக்கும் அவர்கள் ஒருமுறை கூட தீர்வாக இருப்பதில்லை பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கையில்லை. ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை எல்லோருக்கும் ஒரேமாதியாக அனுகுலமுள்ளதாக இருக்கும் என்று கூறிவிடமுடியாது .   எல்லாத் தீர்வுகளிலுமுள்ள அனுகூலங்கள் தனக்கே மிகுதியாக க் கிடைக்க வேண்டும் என்று கணக்கிட்டுக் கொள்ளும்போது தான் சிக்கலே உண்டாகின்றது