Thursday, November 4, 2021

 தீபாவளித் திருநாளன்று sun TV ல் ஒளிபரப்பப்பட்ட  பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிப்பது ஆண்களா இல்லை பெண்களா என்ற தலைப்பில் சாலமன் பாப்பைய்யா  தலைமையில் ஒரு பட்டிமன்றம் பார்த்தேன். தாயின் பங்களிப்பே என்று தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அது மரபு வழியாக  நம் சமூகம் பின்பற்றி ஒழுகும் உணர்ச்சியின் வெளிப்பாடே அந்த உணர்ச்சியை யாரும் தரக்குறைவாக மதிப்பிடமுடியாது இடது கண் சிறந்ததா வலது கண் சிறந்ததா என்று கேட்டாலோ , ஓடும் வண்டியில் வலது சக்கரம் பயனுள்ளதா இடது சக்கரம் பயனுள்ளதா என்று கேட்டாலோ இயற்கை என்ன பதில் சொல்லும் 

 

எது சரியானது என்று சிந்தித்து வாழ்வியல் ஒழுக்கங்களை வரையறுத்த நம் முன்னோர்கள் இல்லறத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள கடமைகளைப் பிரித்துக் கொடுத்திருக்கின்றார்கள். ஒருவருடைய கடமைகள் மட்டுமே இல்லறத்தை முழுமையாகிவிடாது. .பிள்ளை வேண்டுமென்றால் ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வேண்டும். ஒருவரின்றி ஒருவரால் மட்டுமே இது நிறைவேறிவிடுவதில்லை.

பிள்ளை பிறந்தவுடன் பால் கொடுத்து வளர்க்க வேண்டிய  பொறுப்பு தாய்க்கும் ,அந்தத் தாய்க்கும் சேய்க்கும் வேண்டிய சத்துணவுகள் ,உடை மற்றும் அடிப்படை வசதிகளைக் கொடுக்கச் சம்பாதிக்க வேண்டிய பொறுப்பு தகப்பனுக்கும் உள்ளது.ஆண் உயர்ந்தவனா இல்லை பெண் உயர்ந்தவளா என்று கேட்டால் அது அவர்கள் செய்யும் கடமைகளில் எது மேலானது என்று கேட்பது போல ஆகிவிடும் .  

 

விதி விலக்கான உதாரணங்கள் எப்பொழுதும் இயற்கைக்கு முரண்பாடாகவே இருக்கும். ஒரு பெண் ஆணுக்கு நிகரானவள் என்று நிருபிக்க முயலும் போது வாழ்வியல் கடமைகள் புறக்கணிக்கப்படுகின்றன ..அவள் செய்யவேண்டிய வீட்டு வேலைகளை ஆண் செய்ய வேண்டியது தவிர்க்கயியலாததாகி விடுகின்றது..

 

கவிஞர் கண்ணதாசன் பாசமலரில்  மலர்ந்தும் மலராத  என்று ஒரு தாலாட்டுப் பாடல் ஈடு இணையில்லாதது  இமாமுக்கு கொடுக்கப்பட்ட விருது இசைக்கும் இசைப்பிற்கும் . பாடலுக்கு இல்லை .பாடல் எழுதியதுஒரு பெண்ணாக இருக்கலாம் . ஆனால் அந்தப் பெண்ணின் மூல வித்து ஆணிலிருந்து வந்ததே..

 

ஒரு பெண்தான் ஆண் பிள்ளையையும் பெறுகின்றாள்வளர்க்கும்  போது அதிக பங்களிப்புச் செய்த அந்தப் பெண் எங்கே தவறு செய்தாள் . அவன் தகப்பனாக மாறியபோது அவன் பங்களிப்பு குறைந்து  போனது . அப்படியானால் அவளுடைய வளர்ச்சியில் எதோ குறைபாடு உள்ளது என்று சொல்ல முடியுமா ? சமுதாய அவலங்களை இயற்கையோடு இணைக்கும் போது சில முரண்பாடான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடுகின்றோம் . என்னுடைய தீர்ப்பு 50-50 %.    .    .    

Saturday, October 16, 2021

short story

 விரல்கள்

 

 

மெ .மெய்யப்பன் 

 

ஒரு குட்டித் தீவிற்கு  சுற்றுலா வந்த பயணிக்கு   ஒரே ஆச்சரியமாக இருந்தது. கார் டிரைவர் ,ஹோட்டல் பணியாளர் சுற்றுலா வழிகாட்டி  போன்ற அனைவருக்கும் இடது கையில் ஒரு விரல் வெட்டப்பட்டு இல்லமால் இருந்தது . மாய லோகம் எனப்படும் அரண்மனைக்கு   அழைத்துச் செல்லும்போது .,வழிகாட்டியிடம் இது பற்றி கேட்டும் விட்டார் 

 

வழிகாட்டி தயக்கத்துடன் கூறினான். இங்கு திருடினால் அவர்களுடைய சுண்டுவிரலை வெட்டி விடுவார்கள் .மீண்டும் திருடினால் இரண்டாவது விரலையும் வெட்டி விடுவார்கள்.

 

மாய லோகத்தில்  சுற்றுலாப்பயணிகளுக்கு   அந்நாட்டின் அரசன் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ளலாம். விருந்தில் கலந்துகொண்டு விட்டு வழிகாட்டியுடன் ஹோட்டலுக்குத் திரும்பும் போது மனத்தைக் குடைந்து கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டும் விட்டான்  " அரசன் கையுறையைக் கழட்டும் போது நான் கவனித்தேன் , அரசனின் இடது கையில் ஐந்து விரல்களும் இல்லையே.? அரசன் திருடினாரா  ? அப்படி என்ன திருடினார் ? " 

" ஷ் , சத்தமாகப் பேசாதீர்கள் . அரசர் அந்தப்புரத்தில் இருந்த அரசியாரின் தோழிகளைத் திருடிவிட்டாராம் . அதற்கான தண்டனையை நாட்டின் வழக்கப்படி அரசியார் கொடுத்துவிட்டாராம் "

  .     

Tuesday, September 7, 2021

 தன்னிடம் என்ன திறமைகள் இருக்கின்றன என்ன திறமைகள் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.சிலர் குறைவாகவும்  வேறு சிலர்   மிகையாகவும் தங்களைத் தாங்களே மதிப்பிட்டுக் கொள்கின்றார்கள். அதனால்  மக்களில் எவரும்  அவர்களைப்பற்றி முழுமையாக அல்லது மிகச் சரியாக  அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்று கூறமுடியாது. தங்களிடம் இருக்கும் திறமைகளை அறியாதவர்களாக இருப்பதற்குக் காரணம் பயன்படுத்திக் கொள்ளமுடியாத உரிமையற்ற திறமைகளாக இருப்பதும் ,முயற்சியின்மையால் அந்தத் திறமைகளில் நம்பிக்கையிழப்பதும் ,பிறருடைய தனித்திறமைகளைக் கண்டு தன்னிடம்  இருக்கும் திறமைகளை விட்டுவிட்டு இல்லாத திறமைகளுக்காக  காலமெல்லாம் ஏங்குவதும் ஆகும் .இதனால் அவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளைத் தெரிந்து கொள்வதற்குக்  கூட நேரம் கிடைப்பதில்லை. காலப்போக்கில்  வளர்த்துக்கொண்ட திறமைகளையும் பயன்படுத்தாமலேயே  இழந்துவிடுவார்கள் .

 

பலருக்கு எதிரில் இருப்பதைவிடக்  கண்ணுக்கு எதிரில் இல்லாததுதான் அதிகம் தெரிகின்றது.நல்லனவற்றை விட தீயனவே அதிகம் மனதைத் தீண்டுகின்றது.நன்மை செய்வதை விட அதிகம் தீமை செய்வதையே விரும்புகின்றார்கள். இனிய சொற்கள் இருக்க வன் சொற்களையே அதிகம்  பேசுகின்றார்கள்.இருப்பதை விட இல்லாததற்காகவும் , கிடைத்தைவிட கிடைக்காததற்காகவும் அதிக ஏங்குகிறார்கள் இனிய  வாழ்க்கைக்குத் தேவையான மகிழ்ச்சியை இழந்து ஏக்கத்தினால் மிஞ்சும் வருத்தமும் கவலையும் தொடரும்படி வாழ்க்கையை வீணடித்துவிடுகின்றார்கள் . 

                      .