Tuesday, October 25, 2016

kavithai

நானும் நல்லது செய்யப்போறேன்
முனைவர் .மெ. மெய்யப்பன்

அயின்ஸ்டின் என்றோருவர் பிறந்தாரு
ஆற்றலையும் பொருளையும் ஒன்றிணைத்து 
அணுவின் ஆற்றலை அளந்தாரு.

இராமன் என்றோருவர் பிறந்தாரு 
நீல வானம் நீலக் கடலின் 
நிறத்திற்கு விளக்கம் சொன்னாரு.

எடிசன் என்றோருவர் பிறந்தாரு 
எல்லா நாளும் உழைத்து 
எண்ணற்ற கருவிகளைத் தந்தாரு.

பெளமிங் என்றோருவர் பிறந்தாரு 
நோயால் மடியும் மக்களுக்காக 
பென்சிலின் மருந்தைக் கண்டாரு.

நானும் இன்றொருவராய்ப் பிறந்திருக்கின்றேன் 
நன்றைப் படித்து அவர்போல 
நல்லநல்ல செயல்களைச் செய்திடுவேன.

Tuesday, September 6, 2016

creative thoughts

வெற்றி 
தோல்விகள் எல்லாம் தோல்விகளே இல்லை. வெற்றியை நோக்கிய பயணம் முடிவுக்கு வராத வரை 
தோல்விகள் செங்கற்கல்லாகும் போது வெற்றி ஓர் அழகான கட்டடமாக உருப்பெறுகின்றது 
வெற்றிக்கு நிச்சியமான பரிசு இருப்பதை போல தோல்விகளுக்குமுண்டு. அது அறிவை வளர்க்கும் அரிதான அனுபவமாகும். இந்த அறிவு வெற்றியால் கிடைப்பதில்லை.
வெற்றியில் இரணடு் விதம்  ஒன்று உடனடி வெற்றி மற்றொன்று படிப்படியான வெற்றி. உடனடி வெற்றி லாட்டரியில் பரிசு விழுந்ததைப் போல படிப்படியான வெற்றி உழைப்பிற்குக் கிடைத்த ஊதியம்.
 தோல்விகளை சந்தித்து விட்டால் வெற்றிக்கான வாய்ப்புகள் மேலும் மேலும்  அதிகமாகும்.
வெற்றியின் ஆணவம் தலையிலும் தோல்வியின் வருத்தம் இதயத்திலும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் 
வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நம்முடைய எண்ணங்களின் வெளிப்பாடுதான்.னெனில் வெற்றியும் தோல்வியும் அதோடு முடிவடைவதில்லை.

Monday, September 5, 2016

creative thoughts

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 
ஒரு திருடன்  முதலில் அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் களவாடினான். அது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதனால் அதில் ஆர்வம் கொண்டான். பின்னர் சின்னத் சின்னத் திருட்டுக்கள்.. அப்புறம் அதையும் விட்டுவிட்டு வீடு புகுந்து கொள்ளை அடிக்கத் தொடங்கினான். அதை நியாயப்படுத்திக் கொள்ள கொள்ளை அடித்த பொருளில் ஒரு பங்கை படிப்பறிவில்லா ஏழைகளுக்கும் பிழைக்க வழிி தெரியாமல் தடுமாறுபவர்களுக்கும் கொடுத்தான்.கோயில் உண்டியலில் கொஞ்சம் சேர்த்தான்..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த உதவியால் அந்தத் திருடன் அவர்களுக்கெல்லாம் தெய்வம் ஆனான். அப்புறமென்ன அவர்களே அந்தத் திருடனுக்கு விளம்பரமானார்கள். ஊரே துதி பாட ஆரம்பித்துவிட்டது. நதி மூலம் ரிஷி மூலம்  அறியாத அல்லது அறிய விரும்பாத  சமுதாயம் இருக்கும் வரை வளர்ச்சியில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை மாறாக வீழ்ச்சியே ஏற்படும். ஊருக்கு எவ்வளவு இழப்பு வந்தாலும் பரவாயில்லை. தனக்கு கொஞ்சமாவது ஆதாயமிருந்தால் சரி என்ற எண்ணமிருக்கும் வரை சமுதாயத்தில் சீரழிவு தொடரவே செய்யும்.
.ஊழலுக்கு எதிரான கருத்துக்களை  வாய் பேசினாலும் உள் மனம் என்னவோ அந்த ஊழலைச் செய்து பலன் பெறவே தூண்டப்படுகிறது. கைகள் ஊழலுக்கு அதரவாகச் செயல் படுவதைத் தடுத்துக் கொள்ள முடிவதில்லை. சட்டத்தை எழுதியவர்கள் ,பாதுகாவலர்கள்  அதை மீறிச் செயல் படும் போது படிப்பவர்களும் பார்த்தவர்களும் என்ன புத்தனாகி விடவா முடியும்..?
இந்திய அரசியலின் போக்கு இதுதான். இதேதான்.

Saturday, September 3, 2016

creative thoughts

வெற்றி
வெற்றி ன்றும் வெறியால் வந்துவடுதில்லை.அதன் பின்னணியில் ஒரு நெடிய ஒழுங்கு முறை இருக்கின்றது 
உன்னை நீ வெற்றி கொள்ளாமல் பிறரையும் பிறவற்றையும் வெற்றி கொள்ள முடியாது வெற்றி பெற்றிருந்தால் அது தற்காலியமானதாகவே இருக்கும் 
நீ உள் மனத்தால் ஆளப்படுகின்றாயா அல்லது நீ உள் மனதை ஆள்கின்றாயா என்பதை பொருத்தே  உன் வெற்றி வாய்ப்பும் எதிர்காலமும்  இருக்கும்.
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் வெற்றி பெறக்கூடிய தகுதி அனைவருக்கும் சமமாக இருக்கின்றது.
வெற்றியைத் தீர்மானிப்பது பணமல்ல..பிள்ளையார் சுழி போடுவது எண்ணங்கள் தொடங்குவது ஆர்வமும் உழைப்பும் முடிப்பது விடா முயற்சி. முன்னது  மனம் (அகம்) பின்னது உடல் (புறம்) இரண்டும் ஒருங்கிணைந்து உறவாடினால் தான் வெற்றி பிறக்கும்/ 
வெற்றி தவறிப் போவதற்கு செய்ய வேண்டியதைக்  கவனமாகச் செய்யாமல் விட்டதைவிட செய்யக் கூடாததை ஆர்வமாய்ச் செய்ததே அதிகம் காரணமாக இருக்கின்றது.
உங்களை யாராராலும் தோற்கடிக்க முடியாது உங்கள் நம்பிக்கையில் நீங்கள் தோற்கும் வரை 
வெற்றி உன்னை நோக்கி வருவதில்லை. ஓவ்வொரு முறையும் நாம் தான் வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும். நாம் பயணிக்க எட்டாத வெற்றியும் இடம் பெயர்ந்து செல்லலலாம் அப்போது நாம் பயணிக்க வேண்டிய தூரம் எதிர்பார்த்தை விட அதிகரிக்கும். அதனால் உழைப்போடு கூடுதல் உழைப்பும் தேவைப்படும். இ்தவேு விடாமுயற்சி.எனப்படும்.

Wednesday, March 16, 2016

creative thoughts

பாரதியின் மனதை வாசியுங்கள்

ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது .ஆனால் அதற்கு முன்னால் மிகச் சாதரணமாகத் தினம் தினம் சமுதாய வீதியில் நிகழும் கொலைகள், கொள்ளைகள், போன்ற இன்ன பிற குற்றங்கள் தடுக்கப்படவேண்டும். . கொலை களுக்கு  சாதி  மட்டுமே காரணம் இல்லை. .சாதியின் அடிப்படையில் சமுதாயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வேறுபாடுகளே காரணம். இந்த வேறுபாடுகளே சாதி உணர்வை மேலும் மேலும் தூண்டி விடுகின்றது.

சாதி ஒழிப்பு ஆணவக் கொலைகளை ஒழித்து விடும் என்றாலும் அந்த உணர்வு குன்றிப் போய் விடாமல் பாதுகாப்பது யார் ?

பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் போது ஒழிக்கப்பட்ட சாதியைப் பற்றி ஏன் கேட்கப்பட வேண்டும் ?படிக்கும் போது உதவித் தொகை வழங்கும் போது ஏன் சாதியைப் பற்றிக் கேட்க வேண்டும்
வேலை தேடும் போது சாதி சார்ந்த முகவரியை ஏன் கேட்க வேண்டும் ? தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்கும் பதவிகள் பகிர்வுக்கும் சாதி முக்கியப் பங்கு வகிக்கும் போது ஒரு குறிப்பிட்ட சாதி சேர்ந்த மக்கள் அந்த உணர்வை எப்படி விட்டொழிப்பார்கள். சாதி ஒழிப்பு கலப்புத் திருமணத்தால் பாதிக்கப்படும் இளசுகளுக்கு மட்டும் தானா ?
நீங்கள்  மனது  வைத்தால், ஒதுங்கி வழிவிட்டால்  கீழ் சாதியில் பிறந்த ஒருவனை முதலமைச்சர் பதவியில் நீங்களே  அமர்த்தலாமே.

சாதியை விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் யார்? நிச்சியமாக் இன்றைய இளைய தலைமுறையினர் இல்ல. அப்படியென்றால் அது ஏன் இன்னும் தடுக்கப்படாமல் இருக்கின்றது ?
சாதி உணர்வு ,பதவி, வேலைவாய்ப்பு உதவித் தொகை ,போன்ற வற்றால் மக்களிடையே தக்கவைக்கப்    படுகின்றது. சாதி உணர்வு தங்கள் சமுகத்தின் உயர்வுக்கு ஒரு பாது காப்பு என்று மூத்த மக்கள் நினைக்கின்றார்கள். அதனால் அது இரத்த பாசத்தின் மூலம் இளைய தலை முறையினரிடம் ஊட்டப்பட்டு விடுகின்றது.  இந்த உணர்வு இன்னும் அழியாமல் இருப்பதற்கு அது அகத்தே  புதுப்பிக்கப்பட்டு வருவதுதான். காதல் மட்டும் விதி விலக்காக  இருப்பதால் அதனால் பாதிக்கப் படும் போது இளசுகளுக்கு ஆதரவாக சாதி ஓழிப்பு அரசியல் வாதிகளால்  சமுதாயத்தில் பேசப்படுகின்றது.

சாதி இரண்டொழிய வேறில்லை பாப்பா

வேஷம்  போடும்  அரசியல் வாதிகளே  பாரதியின் மனதை வாசியுங்கள்.


creative thoughts

இன்னும் விடியவில்லை

நான் முதலமைச்சரானால் ......
முதல் கையெழுத்தாக மது  ஒழிப்புச் சட்டம்தான்
ஆணவக் கொலைகள் நடைபெறாது தடுப்பேன் .
விவசாயிகளின் துயர் துடைப்பேன்
மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதுடன் மேம்படுத்துவேன்
மாநிலத்தில் மின் வெட்டே இருக்காது
விலை வாசி உயர்வைக் கட்டுக்குள் வைத்திருப்பேன்
குடிநீர் பிரச்னையை ஒழிப்பேன் 

இப்படி முறையான செயல் திட்டமுமின்றி , ஆக்கப் பூர்வமான வழி  முறையுமின்றி  ,மனம் போன போக்கில் ,நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று வாக்குறுதிகளை அள்ளி அள்ளி விடுவார்கள் இந்திய  அரசியல்வாதிகள். இதைத்தான் இந்திய மக்கள் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். ஒரு நம்பிக்கையுடன்.
.
ஒரு நாள் நான் செவ்வாய் கிரகத்தில் குதிப்பேன். அங்கு எல்லோருக்கும் முன்பாகக் குடியேறி விவசாயம் பண்ணுவேன். விலை பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து விலை வாசியை கட்டுப் படுத்துவேன்.

துருவப் பகுதிகளில் உறைந்துள்ள பனிப் பாறைகளை உருக்கி குடி நீர்ப் பிரச்சனையை விரைந்து தீர்ப்பேன். .இது கேட்பதற்கு  தான் நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறையில் ஒரு பயனுமில்லை. ஒரு துறை சார்ந்த வல்லுனர் ஆராய்ச்சியின் அடிப்படையில் இல்லாது தன் கருத்தைச் சொல்வாரேயானால் அது வெறும்  கம்தான். .இதைத்போலத்தான் இன்றைக்கு இந்திய அரசியல் வாதிகள் தங்கள் பரப்புரையில் அர்த்தமில்லாமல் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கின்றர்ர்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிவது விவசாயமும்  தொழில் உற்பதியும்தான் . அவற்றைத் தொடர்ந்து செய்வதுடன் மேலும் மேலும் புதுமைப் படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
இதற்கு நாட்டின் கனிம மற்றும் ஆற்றல் வளங்களை  மேம்படுத்தி பயன் படுத்திக் கொள்ள
வேண்டும் .இதை ஒரு சேர இயக்கிச் செல்வது கல்வியும் ஆராய்ச்சியும்தான் . இவற்றை மேம்படுத்திக் கொண்டாலே  பிற யாவும் தானாகவே வளம் பெறும். குறைபாடில்லாத அணுகுமுறை உறுதியாக இருக்கும் பொழுது இது 100 % பயனளிக்கக் கூடியது.
எதிர் கால வளமான இந்தியாவிற்கு இன்றைய இளைஞர்களைத் தயார்படுத்திக் கொள்வது ஒன்றே
மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றது சமுதாயத்தில் இந்த நம்பிக்கை துளிர்த்து ஆல விருட்சமாக விரிவடைய வேண்டுமானால் ,கண்ணியம் ,கடமை, கட்டுப்பாடு (உண்மையான ) எண்ணத்தில் தூய்மை ,பேச்சில் வாய்மை ,செயலில் நேர்மை இவற்றோடு செயல்பட வேண்டியது அவசியமாகும். நம்முடைய பொறுப்புமாகும். இந்தப் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு இன்னும் கூடுதலாக இருக்கவேண்டும் .இனியும் ஒரு அரசியல்வாதி பொறுப்பற்று செயல் படுவதும் பேசுவதும் நாட்டின் வளர்ச்சிக்கு அழகல்ல. பொது நலம்  கருதி அதை இனியும் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

நான் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றைக்கும் என் பொறுப்புக்களை உணர்ந்து செயல்படுவேன். நான் மக்களின் சேவகனே ஒழிய முதலாளி இல்லை .
என்று யாரவது ஒரு அரசியல்வாதி தன் பரப்புரையில் முழக்கமிடுவார் என்று எதிர்பார்த்தேன். எப்போதும் போல ஏமாற்றம் தான். இன்னும் விடியவில்லை போலும்.


Monday, March 14, 2016

creative thoughts

மாற்றம் என்றால்……..

ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டுமென்றால் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சட்டசபைத் தேர்தல் வரும் போது ஆட்சியாளர்களைத் தவிர்த்த பிற க ட்சியினர்  மேடைதோறும் முழக்கமிடுகின்றார்கள்
 இவர்கள் என்ன மாற்றத்தை  எதிர்பார்க்கின்றார்கள்?  மாற்றம் என்றால் அதன் உட்பொருள் என்ன ? என்ன மாற்றத்தை மனதில் நினைத்துக்கொண்டு இப்படிச் சொல்லுகின்றார்கள்?
பொருளாதார நிலையில் மாற்றமா?  அப்படியென்றால் யாருடைய பொருளாதார நிலையில் மாற்றம்? பொருளாதார நிலையில் மாற்றம் என்பது சட்டென வந்து விடுவதில்லை. அதற்கு முறையான திட்ட ங் களும்  செயல்பாடுகளும் வேண்டும். வெறும் மாயா  ஜாலத்தால் வருவதில்லை. இந்தப் பொருளாதார ஏற்றம். மாற்றம் வேண்டும் என்று சொல்பவர்கள்  அந்த மாற்றம் நிகழ்வதற்கான செயல் திட்டங்களை தீட்டி வைத்திருக்க வேண்டும். வழிமுறைகள் இல்லாத எதுவும் வெற்றுப் பேச்சாகத்தான்  அமையும் . கற்பனைத் திட்டங்கள் மக்கள் மனதில் கவர்ச்சி யூட்டலாம்    ஆனால்l ஒரு காலத்திலும் மக்களுக்குப் பயன் தருவதில்லை 
தொழில் துறையில் மாற்றமா ? அல்லது இவைகளுக்கெல்லாம் ஆதாரமான கல்வித்துறையில் மாற்றமா?. அரசு நிர்வாகத் துறையில் மாற்றமா?. ஊழலை ஒழிப்பதில் மாற்றமா? . மதுவை ஒழிப்பதில் மாற்றமா? எதில் , என்ன மாற்றம்?  மாற்றம் என்று மொட்டையாகச் சொன்னால் என்ன புரியும் ?

 ஊழலில் யாரும் டுபடக் கூடாது என்று சொல்வதாலோ அல்லதுசட்டம் இயற்றுவதாலோ அது ஒழிந்து  விடுவதில்லை..அதற்கு எல்லோரும் ஏக மனதாக கட்டுப்படவேண்டும். அரசியல் வாதிகளுக்கு ஒரு நியாயம் மக்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கும் வரை இந்த ஒருமித்த மன நிலை எட்டப்படுவதில்லை. என்பதை அரசியல் வாதிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் . ஊழல்
 இந்நாட்டில்   இன்னும் நிலைத்து  மேலோங்கி இருக்கின்றது. அதற்கு உண்மையான காரணம் இந்தப் போலியான புரியாமையே. மது ஒழிப்பும் இது போலத்தான். அசுக்கு  வருமானம் என்று சொல்லி சுய இலாபம்  பெறுபவர்களே அதன் வளர்ச்சியை ஊக்குவித்துக்  கொண்டிருக்கின்றார்கள். ஒரு காலத்தில் வளர்த்த  கிடா  மார்பில் பாயும் போது உணர்வார்கள்.. காலங் கடந்த  உணர்தலால்  எல்லோருக்கும் தீமையே. ஊழலும்  மதுபோதையும் நீண்ட காலமாகவே மறைமுக ஆதரவடனும் ,தன்னலச்  சிந்தனையுடனும் வெகுவாக  வளர்க்கப்பட்டுவிட்டன ஊழலுக்கு எதிராகச் சட்டமிருந்தும் அது இன்னும் எங்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதனால் ஊழல் தடுப்பு என்ற பெயரில் செலவினம் வேறு.   தப்பான  வருமானம்  தப்பான செலவினம்
ஆட்சிi மாற்றம் வேண்டும் என்று  விரும்புகின்றார்கள் மாற்றம் என்று  என்ன  சொல்ல நினைக்கின்றார்கள்  என்பதை மக்களுக்குத்  தெளிவாக  விக்க வேண்டும் . அப்படியில்லாத போது
அது மக்கள் நலனில் உண்மையான அக்கறையின்மையையே காட்டும். முறையான மக்கள் நலத்   திட்டங்களால்  பயன்  பெறும் வழிமுறைகளைச் சொல்லி மக்களின் நன் திப்பைப் பெற்று  அவற்றைச் செயல் படுத்த வாய்ப்புத் தேடுபவர்களாக இருக்க  வேண்டும் . இன்றைய இந்தியாவில்
அப்படிப்பட்ட தலைவர்களோ அரசியல்வாதிகளோ யாருமிலர். இதுகூடப் பரவாயில்லை. அப்படிப்பட்ட தலைவர்களோ அரசியல்வாதிகளோ  இனித் தோன்றுவார்கள் என்பதற்கான சாத்தியக்கூ றுகள் இல்லாதிருப்பதே மிகவும் மோசமானது. இது இந்தியாவின்  நிரந்தரமாகிவிட்ட ஒரு தூரதிருஷ்ட்டம்.. இதனால் எதிர் காலத்தில்l மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ முடியாத சூழலே உருவாகும்.எங்கும் குழப்பம் ,சண்டை .போட்டி , பொறாமை  இவைகளே  மேலோங்கி இருக்கும். இதனால் நாட்டின் வளர்ச்சி சூன்ய மாவதுடன் இவற்றைக் களைவதே ஒரு முக்கியமான செயலாக அமைந்து விடும்.மக்கள் மனதில் ஆக்கப்பூர்வமான ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் அப்படி ஒரு மாற்றம் தலைவர்கள் மனதிலும் ஏற்படவேண்டும். .அந்த நலமான  மாற்றம் ,நலமான  மாற்றம் விரும்பிகளின் மனதில் இல்லாமல் மற்றவர்கள் மனதில் ஏற்படுவ தில்லை  . உண்மையில் உருப்படியான செயல் திட்டங்கள் தீட்டியவர்கள் அவற்றைi செயல்படுத்தி பொதுநலன்  ட்டவே  வாய்ப்பு கேட்பார்களே ஒழிய மற்றவர்களின் பலவீனங்களையும் குற்றங்களையும் முன்வைத்து வாய்ப்புக் கேட்க மாட்டார்கள்.. தேர்தல்பரப்புரையில்l அவரவர்க்குரிய செயல் திட்டங்களைச் சொல்லி வாய்ப்புக் கேட்க வேண்டுமே ஒழிய மற்றவர்களை இழுக்கக்கூடாது..

எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் இருக்கின்றார்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது.




Monday, February 15, 2016

creative thoughts

இந்தியாவின்  நிலையான , சீரான முன்னேற்றத்திற்குப்  பெரிதும் தடையாக இருப்பவர்கள்……….

அரசியல்வாதிகளே
நிர்வாக அதிகாரிகளே
பொதுமக்களே

என்று ஒரு பட்டிமன்றம் நட த்தினால் நடுநிலையான ஒரு நடுவரின் தீர்ப்பு எப்படி
இருக்கும் ?

அரசியல்வாதிகளைக்  கேட்டால் அவர்கள் பொதுமக்களின்  பூரண ஆதரவின்மை நிர்வாக அதிகாரிகளின் ஒத்துழையாமை பற்றி குறிப்பிட்டுப் பிறரைக் குறை கூறுவார்கள். பொதுவாக பொதுமக்களின் ஆதரவும் நிர்வாக அதிகாரிகளின் ஒத்துழைப்பும்  தன்னலங் கருதாமல்
தொண்டாற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைக்கு அப்படிப்பட்ட அரசியல்வாதிகளே இல்லாத நிலை ஏற்பட்டுப் போனதால் ஆதரவும் ஒத்துழைப்பும் அருகிக் கொண்டே வருவதுடன் எதிர்மறையான மாற்றங்களும் தூண்டப்பட்டு மக்களிடையே நிலைப்பட்டு வருகின்றன. வாழ்க்கையில் தடையில்லாத முன்னேற்றத்திற்கு எதிர்மறையான  அணுகு முறைகளே
மேலானது என்ற கொள்கையில் மக்கள் மயக்கம் கொண்டு மாற்றமுடியாத மனநிலையைப்
பெற்று வருகின்றார்கள். எதிர்மறைக் கொள்கையில் மாற்றமுடியாத மனநிலையைப் பெற்ற
மக்கள் ஒரு நாட்டிற்கு எதிர்த்து வெற்றி கொள்ளமுடியாத  உள்ளெதிரியாகி விடுகின்றார்கள்.
நேர்மையான அரசியல் வாதிகள் உருவாக  சமுதாயம் முயல வேண்டும். அதற்கு அரசியல்வாதிகளுக்கு குறைந்த பட்ச கல்வித் தகுதி, வயது வரம்பு  இருக்க வேண்டும் .. கொள்கை, நோக்கம், இலக்கு, லட்சியம் போன்றவற்றில் கருத்துக் கொண்டிருக்க வேண்டும்.. பொது நலங்கருதி ஒட்டுமொத்த
சமுதாயமும்  போராடினால் நேர் மறையான  மாற்றங்களுக்கு மூலமான ஒரு மாற்றத்தை
ஏற்படுத்த முடியும்.

அதிகாரிகளைக் கேட்டால் அவர்கள் அவர்களைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். அரசியல்வாதிகளிடம் மக்களைப் பற்றியும் மக்களிடம் அரசியல்வாதிகளைப் பற்றியும் குறை சொல்லுவார்கள் .பொதுவாக அதிகாரிகள் அதிகார வர்க்கத்தில்  இருப்போரின் தயவோடு சுய லாபம் பெற நினைகின்றார்கள். செய்யக் கூடாத செயல்களுக்காக வாங்கக் கூடாத வருமானங்களால் வாழ நினைக்கும் அதிகாரிகள் எப்போதும் அப்படி நினைப்பவர்களாகவே மாறி  ருகின்றார்கள். நாட்டின் உண்மை நிலையை அரசியல்வாதிகள் அறிவதில்லை. அறிய  முயற்சிப்பதும் இல்லை..அவர்களை அதிகாரிகள் அறிவுறுத்துவதுமில்லை. எல்லால் சித்தம் போக்கு சிவம் போக்கு தான். அதிகாரிகளைக் கண்கானிக்க வேண்டிது அரசியல்வாதிகளே  ஒழிய மக்க ளில்லை.

மக்களைக் கேட்டால் அவர்கள் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் குறை கூறுவார்கள்.ஆனால் தங்களுடைய சொந்தக் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள  தவறான அணுகு முறைகளைப் பின்பற்றத் தயக்கம் காட்டத் தவறுகின்றார்கள் இந்தப் பழக்கம் இன்றைக்கு நிலைப்பட்டுப் போய் விட்டது. காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் மக்களும் சுய லாபம் பெறும்  ஆர்வத்தில்  அதிகாரிகளும் இந்தப் பழக்கத்தைக் கைவிட றுக்கின்றார்கள்.. அரசியல்வாதிகளை அண்டிப் பிழைக்கும் கும்பல் பெருகி வரும் இன்றைக்கு  இந்தச் சூழலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாதிருகின்றது. பொது மக்களிடம் கொள்கை ரீதியிலான உண்மையான மன மாற்றத்தை ஏற்படுத்தாத  செய்முறைளெதுவும்  நேர்மையான மாற்றங்ளுக்கு ழிகாட்டுவதில்லை. இந்தியாவின்  நிலையான , சீரான முன்னேற்றத்திற்குப்  பெரிதும் தடையாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள் தான் என்று நான் கூறுவேன். ஏனெனில் நாட்டின் நலனுக்காக உண்மையான மாற்றத்தை முடுக்கி வி அவர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்பு உள்ளது . அரசியல்வாதிகள் மக்களுக்கு வழிகாட்டிகள் என்பதை மறந்து விடக்கூடாது. ஒருபோதும் முரண்பாடாக நடந்து கொள்ளவே கூடாது இயலாமைக்கு புறக் காரணங்களை மட்டுமே கூறுவதை விட்டுவிட்டு அதை களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். திட்டகளைத் தீட்டலாம்  அதை சொல்லலாம். அனால் அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி அதன் பயனுறு திறனை மேம்படுத்த வேண்டும். அதில் தான் உண்மையான அரசியல்வாதிகளின் உண்மையான செயல்பாடு வெளிப்படுகின்றது.