Saturday, March 25, 2023

 அரசியல் தலைவர்களும் அவர்களுடைய கட்சியினரும் நாட்டு மக்களின் நலனுக்காக  ஊதியம் வாங்கிக் கொண்டு சேவை செய்வதாகக் கூறுகின்றார்கள் . ஆனால் எதிர்கட்சியினரும் தன் நாட்டு மக்களே என்பதை மறந்து விடுகின்றார்கள் . ஏறக்குறைய சம  பங்கு கொண்டிருக்கும் எதிர்க்கட்சியினரை அழிக்க நினைக்கும் ஒரு கட்சியினர் உண்மையிலேயே நாட்டு மக்களின் நலத்தில் உண்மையான அக்கறை கொண்டிருக்க முடியாது.

ஆட்சி மாற்றத்திற்காக அரசியல் தலைவர்களை விமரிசிப்பது தவறு. மக்களுக்காக அவர்கள் தீட்டிய திட்டங்களில் உள்ள குறைபாடுகளை விமர்சியுங்கள் .ஆதாரம் இருக்குமானாள் அவர்களுடைய ஊழல் புகார்களை வெளிச்சத்திற்கு கொண்டுவாருங்கள் .பாராட்ட வேண்டியிருந்தால் பாராட்டுங்கள். அதுதான் உண்மையான தலைவருக்கு அழகு. ஊழல் குற்றங்கள் தண்டிக்கப் பட்டால்தான் மக்களிடம் தவறான அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைத் தெரிந்து கொள்வார்கள் .ஊழல் புகார்கள் மறைக்கப்படும் போது மீண்டும் மீண்டும் தவறான அரசியல்வாதிகளே  விவரம் தெரியாத மக்களால் தவறாகாது தேந்தெடுக்கப்பட்டு விடுகின்றார்கள்