Wednesday, December 28, 2011

vinveliyil ulaa

அல்டிபாரனின் அதிசயங்கள்





அல்டிபாரன், ஆர்க்டூரஸ்,போலக்ஸ் போன்ற விண்மீன்களின் சுற்றுப் பாதை வேகத்தின்
அளவீடுகள்,1993 ல் விரிவாக மேற்கொள்ளப்பட்டன.அப்போது அல்டிபாரன் பற்றிய
சில புதிய உண்மைகள் தெரியவந்தன.அல்டிபாரன் சுற்றுப் பாதை வேகத்தில் ஏற்றத்
தாழ்வுகள் மிகவும் அதிகமாக உள்ளன.இது அதற்கு ஒரு துணை விண்மீன் இருக்கலாம்
என்பதற்கு ஒரு வலுவான காரணமாக இருந்தது. கணக்கீடுகளைக் கொண்டு அதன்
துணை விண்மீனின் குறைந்த அளவு நிறை 11.4 மடங்கு,நமது சூரியக் குடும்பத்திலுள்ள
வியாழனின் நிறையைப் போல உள்ளது என்றும், அதன் சுற்றுக் காலம் 643 நாட்கள்
என்றும் அதற்கும் அல்டிபாரனுக்கும் உள்ள இடைவெளி 2 AU(300Gm )என்றும்
தெரிவித்துள்ளன .
அல்டிபாரன் காட்சி தரும் விண் வெளியில் அதற்கு மிக நெருக்கமாக ஐந்து மங்கலான விண்மீன்களை இன்றைக்கு இனமறிந்துள்ளனர்.இது அல்டிபாரன்
ஒரு இரட்டை விண்மீனாக இருக்கலாம் என்பதற்கு ஒரு வலிமையான
காரணமாக விளங்குகிறது .அல்டிபாரனோடு காட்சி தரும் விண்மீன்களை ஆல்பாடாரி A ,B ,C ,D மற்றும் E எனக் குறிப்பிட்டுள்ளனர் .இதில் ஆல்பாடாரி A மட்டும் பிரகாசமானதாக உள்ளது. இதன் சார்பிலா
ஒளிப்பொலிவெண் - ௦௦௦0 .63 ஆகும் .
விண் இயற்பியலாரின் சில கணிப்புகள் ,ஆல்பாடாரி B யின் தன்னியக்கப் பெயர்ச்சி இயக்கமும்(Proper motion )
தோற்ற இடப் பெயர்ச்சியும் (parallax ) அல்டிபாரனை மிகவும் ஒத்திருக்கிறது எனத்
தெரிவித்துள்ளன .இது அல்டிபாரன் உண்மையில் ஒரு இணை இரட்டையாக
இருக்கலாம் என்று சுட்டிக் காட்டியுள்ளது. .எனினும் ஆல்பா டாரி B மிகவும் மங்கலாக இருப்பதாலும், அல்டிபாரன் மிகவும் பிரகாசமாக இருப்பதாலும்
இதை உறுதி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
ஆல்பா டாரி C யும் D யும் ஒரு இரட்டை அமைப்பாக உள்ளது. இவை இரண்டும் ஈர்ப்பால் ஒன்றிணைந்து
ஒன்றை ஒன்று சுற்றி வருவதால் அப்படி முடிவு செய்யப்பட்டது .
இவை காட்சி வெளியில் அல்டிபாரனுக்கு அருகில் தெரிந்தாலும் உண்மையில் வெகு தொலைவில் உள்ளன .இவை இரண்டும் ஹையாடெஸ்
கூட்டத்தின் உறுப்புகளாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

Tuesday, December 27, 2011

vinveliyil ulaa

அல்டிபாரன் (Aldebaran )




இக் கூட்டத்தில் மிகவும் பிரகாசமான விண்மீன் அல்டிபாரன் என்றழைக்கப்படும்
ஆல்பா டாரி என்ற விண்மீன்.இதைத் தமிழர்கள் ரோகினி எனக் குறிப்பிடுகின்றனர்
இது ஹையாடெஸ் (Hyades )எனப்படும் தனிக் கொத்து விண்மீன் கூட்டத்திற்கு
அருகாமையில் உள்ளது .எனினும் அல்டிபாரனும் ஹையாடெஸ்ஸும் வெவ்வேறு தொலைவுகளில் உள்ளன .
அல்டிபாரன் மஞ்சளும் .சிவப்பும் கலந்த ஒரு விண்மீன் .இதன் தோற்ற ஒளிப்
பொலிவெண் ௦0௦.75 முதல் ௦0.95 வரையுள்ள நெடுக்கையில் தொடர்ந்து சீரற்ற
முறையில்
மாறிக்கொண்டே இருப்பதால் இது மாறொளிர் வகை விண்மீனாகும்.இதன் தொலைவு சுமார் 65 -70 ஒளி ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர் ..
இது நமக்கு அருகாமையில் இருக்கும் பெரு விண்மீன்களுள் ஒன்றாகும் .
இதன் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல 30 மடங்கு என
அறிந்துள்ளனர் .பிரகாசமிக்க 20 விண்மீன்களின் பட்டியலில் இது 14 வது
இடத்தில் உள்ளது.


எல்நாத் (Elnath ) எனப்படும் பீட்டா டாரியின்தோற்ற ஒளிப்பொலிவெண்
1 .65 ,சார்பிலா ஒளிப்பொலிவெண் - 1 .37 .இது டாரஸ் வட்டார விண்மீன்
கூட்டத்திற்கு அருகாமையில் உள்ள ஔரிகா (Auriga ) எனும் விட்டாரா விண்மீன்
கூட்டத்திலுள்ள பிரகாசமிக்க விண்மீன்களின் கட்டமைப்பாலான ஐங்கோண
கட்டத்தின் அடியில் அமைந்துள்ளது. இது சுமார் 131 ஒளி ஆண்டுகள்
தொலைவில் இருப்பதாக அறிந்துள்ளனர்.
இக் கூட்டத்திலுள்ள விண்மீன்கள் தோராயமாக ஆங்கில எழுத்து 'V ' வடிவில்
அமைந்துள்ளன. இதில் ஆல்பா,பீட்டா டாரிகள் வெவ்வேறு புயங்களில்
இருக்குமாறும் ,அவற்றின் சந்திப்பில் ஹையாடெசும் அதன் அருகாமையில்
ஆல்பா டாரி இருக்குமாறும் உள்ளன .அருகாமையில் இருப்பதால்
அல்டிபாரன் என்ற ஆல்பா டாரி ,ஹையாடெஸ் கொத்து விண்மீன்
கூட்டத்தில் உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில்
அவையிரெண்டும் சுமார் 70 ஒளியாண்டுகள் தொலைவு தள்ளி உள்ளன.

arika ariviyal

அறிக அறிவியல்

வாயிலிருந்து வெப்பக் காற்றும் குளிர்ந்த காற்றும்

அகன்ற வாயுடன் மூச்சுக் காற்றை வெளிவிடும் போது
வெப்பக் காற்றாக உள்ளது. ஆனால் அதே மூச்சுக் காற்றை
குவிந்த வாயுடன் வெளியேற்றும் போது குளிர்ந்து
இருக்கிறது. இந்த வேறுபாடு ஏன் ?

அகன்ற வாயுடன் மூச்சுக் காற்றை வெளிவிடும் போது
நுரையீரலில் உள்ள காற்று மிகக் குறைவாக இறுக்கப்பட்டு
எவ்வித விரிவாக்கமும் இல்லாமல் வளிமண்டலக்
காற்றோடு கலக்கிறது.நுரையீரலில் உள்ள மூச்சுக் காற்று
நுண்ணறைகளில் ஊடுருவி அப்பகுதியின் வெப்பநிலையை
அடைந்திருப்பதால்(உடலின் சராசரி வெப்பநிலை
வளிமண்டலத்தின் இயல்பான வெப்பநிலையைக் காட்டிலும்
ஒருசில சென்டிகிரேடு கூடுதலாகும்). வெளியேறும் காற்று
வெப்பமாக இருக்கிறது.

குவிந்த வாயுடன் காற்றை வெளிவிடும் போது ,
நுரையீரலில் உள்ள காற்று மிகக் குறைவாக
இறுக்கப்பட்டாலும் குறுகிய இடைவெளி
வழியாக விரிவாக்கம் பெறுகிறது .இப்படித்
திடீரென்று காற்று விரிவாக்கம் பெற்றால் வெப்பநிலை
தாழ்வுறும் என்பது ஜூல்- தாம்சன் விளைவாகும்

வெப்பமான் காற்றை சுவாசிப்பதை விட குளிர்ந்த காற்றை
சுவாசிப்பது எளிதானது .காற்றில் உள்ள ஈரப்பதமே
இதற்குக் காரணமாக இருக்கிறது.

Friday, December 23, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

மக்கள் வசதியாக இல்லாவிட்டாலும்,மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு .தலைவர்களின் நேர்மையான செயல்களே அன்றி,அவர்களிடமிருந்து இயந்திரத் தனமாக வெளிப்படும்
யோசனைகள் பயன் தருவதில்லை.மக்கள் இதை இன்னும்
சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.இது இன்றையத்
தலைவர்களுக்கு வசதியாக இருப்பதால் இதில் ஒரு
மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் விரும்புவதில்லை.
இருக்கும் நிலைமையை தங்களின் சுய முன்னேற்றத்திற்கு
மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் .இது இனி
வரப்போகும் தலைவர்களுக்கு தவறான வழிகாட்டலாக
விளங்குகிறது.தீதில் பெரும் தீது இதுவேயாகும்.தலைவர்களின் செயல்பாடின்மையால் எதிர்காலத்தில் பெரிய மாற்றம்
ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதை
இப்போதே உறுதியாகச் சொல்லலாம்.

நான் என் வீட்டுச் செலவை என் வருமானத்திற்குள்
இருக்குமாறு வைத்துக்கொள்கிறேன்.வருமானத்திற்கு மீறிய
திட்டங்களை தீட்டி வைத்துக் கொண்டு அதற்கான
வருமானத்தைத் தேடுவதில்லை. ஏனெனில் தேடிக்
கிடைக்காவிட்டால் மனம் தவறான வழிகளில் பொருள்
புரட்டப் புறப்பட்டுவிடும்.வருமானம் அதிகரிக்க நேர்மையாக் முயற்சிப்போம்.அப்படி வரும் போது வளர்ச்சிப்
பாதையில் முன்னேறுவோம்.

பொதுவாக படித்த பண்புள்ள,கட்டுப்பாடான இந்தியக்
குடிமகன்கள் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர்.வரம்பு
மீறிய செலவு செய்து விட்டு சூடு போட்டுக் கொண்டவர்கள்,
இன்றைக்கு வாழ்க்கையைத் தொலைத்து விட்டு திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.மக்களின் வாழ்க்கை முறை இப்படி
இருக்கும்போது அரசு மட்டும் வேறுபாடாய்
திட்டமிடுவதேன்.

Saturday, December 10, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

நேற்று கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் ஏற்பட்ட
தீ விபத்து காரணமாக 82 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் .
அதற்கு அரசு மருத்துவ மனை நிர்வாகிகள் 6 பேரைக் கைது செய்துள்ளது .
தவறு மருத்துவமனை நிர்வாகிகளிடம் மட்டும் இல்லை.பல ஆண்டுகளாக
இப்படி வசதி இல்லாத மருத்துவ மனை எப்படி இயங்கிவந்தது?
இதற்கு யார் அனுமதி வழங்கினார்கள் ? பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கி
இருந்தால் அந்த அதிகாரிகளும் தண்டனைக்குரியவர்களே .
இப்பொழுதாவது விழித்துக் கொள்ளுங்கள் .இது போல நம் நாடெங்கும்
பல மருத்துவ மனைகள்,திரை அரங்குகள் ,கலைக் கூடங்கள் ,கண்காட்சி
யகங்கள்,பேருந்துகள் உள்ளன.முறையான அனுமதியும்,தரச்சான்றிதழும் இல்லாமல்
இவை தொடர்ந்து இயங்கிக் கொண்டே வருகின்றன. இதுபோல விபத்துகள்
நிகழும் போது மட்டும் விஷயங்கள் ஊடங்கள் மூலமாக வெளியில் தெரிய வருகின்றன. .
prevention is better than cure என்பதை எப்போதுதான் நம் அரசாங்கம்
தெரிந்து கொள்ளப் போகிறதோ ?

Thursday, November 24, 2011

vinveliyil ulaa

ரிஷப ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும்






ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டம் டாரஸ் (taurus ) ஆகும் .இது மேஷ ராசிக் குரிய
எரிஸ்சுக்கும்,மிதுன ராசிக்குரிய ஜெமினிக்கும் இடையில் உள்ளதுய். .நம் சூரியன்
இக் கூட்டத்தை மே 14 முதல் ஜூன் 21 வரையில் கடந்து செல்கிறது.
கிரேக்க புராணத்தில் ஜீயஸ் என்ற கடவுள் பொனிசியாவின் இளவரசி ஈரோப்பாவை
பாதுகாப்பாகக் கடத்திச் செல்ல காளை மாடாக உருமாறி அவளைத் தன் முதுகில் சுமந்து
கொண்டு ஆற்றை நீந்திக் கடக்கிறார் .ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தில்
நீர் மட்டத்திக்கு மேலாகக் காளை மாட்டின் மேற்பகுதி மட்டுமே தெரிகிறது. புராணத்தின்
இந்தக் கட்டத்தைக் குறிப்பிடுவதாக இந்த வட்டார விண்மீன் கூடம் கற்பனை செய்யப்பட்டுள்ளது.




இக் கூட்டத்தில் 125 விண்மீன்களுடன். பிளியாடெஸ் (pleiades ),ஹையாடெஸ் (Hyades ) என்ற

இரு தனிக் கொத்து விண்மீன் கூட்டங்களையும் இனமறிந்துள்ளனர். இதை ஒட்டியே
சைக்னேஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது .

vinveliyil ulaa

ஹோரோலோஜியம்( horologium )



தென் பகுதியில் காணப்படும் இது ஒரு சிறிய ,மங்கலான விண்மீன் கூட்டமாகும் .லத்தீன் மொழியில்
கடிகார ஊசல் என்று இதற்குப் பொருள் .18 ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் வானவியலாரான அபே நிக்கோலஸ் லூயிஸ் டி பொகாலே என்பார் ,ஊசல் கடிகாரத்தைக் கண்டுபிடித்த
கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் என்பாரைக் கௌரவிக்கும் விதமாக இதற்கு ஹோரோலோஜியம்
ஆசிலிடோரியம் என்று பெயரிட்டார் .இது காலப் போக்கில் சுருக்கி ஹோரோலோஜியம் ஆனது.

இது எரிடானஸ் வட்டாரத்திலுள்ள பிரகாசமான் ஆர்செர்னர் விண்மீனுக்கும் ,கரினா வட்டாரத்திலுள்ள பிரகாசமான கனோபஸ் விண்மீனுக்கும் இடையில் அமைந்துள்ளது.
இது ஒரு ஊசலாடும் குண்டுபோலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது .இதில் பிரகாசமிக்க
ஆல்பா கோரோலோஜி ஊசலின் அலைவு தானத்தில் உள்ள நிறைமிக்க குண்டு போல
அமைந்துள்ளது. மொத்தம் 20 விண்மீன்கள் இவ்வட்டாரத்தில் அமைந்திருக்கலாம் என
அறிந்துள்ளனர் .இதிலுள்ள R ஹோரோலோஜி சீடெஸ் வட்டாரத்திலுள்ள செம்பூதபோன்ற
மீரா விண்மீன் போல ஒரு பெருஞ் சிவப்பு மாறொளிர் விண்மீனாக உள்ளது .இதன் ஒளி பொலி வெண் பெரும நிலையில் 5
லிருந்து, சிறும நிலையில் 14 வரை ,சுமார் 13 மாத கால நெடுக்கையில் மாற்றத்திற்கு
உள்ளாகிறது .
ஒளிப்பொலிவெண்ணில் மிக அதிக வேறுபாட்டுடன் கூடிய மாறொளிர் விண்மீன் இதுவே ஆகும் .
AM 1 என்று குறிப்பிடப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் இப்பகுதியில் உள்ளது. .இக் கூட்டமே ,பால் வெளி அண்டத்திலிருந்து வெகு தொலைவு தள்ளி இருக்கும் கூட்டமாகும்.இது
398000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக அறிந்துள்ளனர்.

Wednesday, November 23, 2011

vinveliyil ulaa

உமிகிரான் எரிடானி / 40 எரிடானி

16 .5 ஒளி ஆண்டுகள் தொலைவில் உமிகிரான் எரிடானி என்றும் 40 எரிடானி என்றும் அழைக்கப்படுகின்ற ஒரு விண்மீன் உள்ளது .இது ஒரு மும் மீன்களின் தொகுப்பாகும் .
இதில் உள்ள முதன்மை விண்மீன் 4 .6 தோற்ற ஒளிப்பொலி வெண்ணுடன் நமது
சூரியனைப் போல உள்ளது. 1 வினாடி கோண விளக்கத்துடன் காணப்படும் இதன்துனை விண்மீன் ஓர் இரட்டை விண்மீனாக உள்ளது .9 .7 மற்றும் 11 .2 தோற்ற ஒளிப் பொலி வெண் கொண்ட
அவை குறுஞ் சிவப்பு, குறு வெள்ளை விண்மீன்களாக உள்ளன. ,குறுஞ் சிவப்பு விண்மீன்
மிகவும் குளிர்ச்சியாகவும் ,சூரியனின் பருமனில் 5 ல் 1 பங்கு உள்ளதாகவும் இருக்கிறது.
குறு வெள்ளை விண்மீன் சூரியனி விட 50 மடங்கு சிறியது. ஆனால் அடர்த்தி 64000
மடங்கு சூரியனின் அடர்த்தியை விடக் கூடுதலானது .இவை இரண்டும் தற் சுழற்சியுடன்
ஒன்றையொன்று 250 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றன .இந்த இரட்டை
விண்மீன் ,முதன்மை விண்மீனை மிக நீண்ட கால சுற்றுக் காலத்துடன் சுற்றி வருகிறது.

பொதுவாக குறு வெள்ளை விண்மீன்கள் சிறிய அளவினதாகவும் ,ஓரளவு குளிர்ச்சியாகவும் ,
குறைந்த ஒளிர்திறனுடனும் காணப்படும். நிறைமிக்கதாக இருப்பதால் இதன் அடர்த்தி
அதிகமாக இருக்கும்.அணுக் கருவிற்கும் அதைச் சுற்றி வரும் எலெக்ட்ரான்களுக்கும்
இடையே ஓரளவு இடைவெளி இருக்கிறது. ஈர்ப்பால் இறுக்கப்படும் போது இந்த
எலெக்ட்ரான் களின் எதிர்ப்பு வலுவாக இல்லாத போது முறிந்து தூசித் துகள் போல
நெருக்கப் படுகின்றன .அப்போது அணுக் கருவிற்கும் எலெக்ட்ரான்களுக்கும் இடையே
சிறிதும் இடைவெளி இருப்பதில்லை .அப்போது அதன் அடர்த்தி மிகவும் அதிகரித்துவிடுகிறது .
இதுவே குறு வெள்ளை விண்மீனின் நிலை என ஆராய்ந்து கூறியுள்ளனர்.

arika ariviyal

ஆலிவ் எண்ணையும் டின் பாத்திரமும்




டின் பூசப் பட்ட செம்பாலான பாத்திரங்களைச் சிலர் சமையல் பாத்திரங்களாகப்
பயன்படுத்துவர். இதயத்தின் இயக்கத்திற்கு உகந்தது என்று சமையலில் ஆலிவ்
எண்ணெயையும் பயன்படுத்துவர்.ஆலிவ் எண்ணையின் கொதி நிலை 573.2 K'
டின்னின் உருகு நிலை 505 K. ஆலிவ் எண்ணையின் கொதி நிலையை விடக்
குறைவு. அப்படி இருக்க டின்னால் ஆனா ஒரு சமையல் பாத்திரத்தில் ஆலிவ்
எண்ணையில் ஒரு உணவுப் பண்டத்தை வறுப்பது எங்ஙனம் சாத்தியப் படுகிறது ?

ஓர் உணவுப் பொருள் வறுக்கப்படும் போது ஆலிவ் எண்ணெய் கொதிப்பதில்லை .
மாறாக உணவுப் பொருளில் உள்ள நீர் கொதிக்கிறது .அந்த நீர் முழுவதும்
வெளியேறிய பின்னரே ஆலிவ் எண்ணையின் வெப்ப நிலை அதிகரிக்கும் .
எனவே உணவுப் பொருளின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியசுக்கு மேல்
அதிகரிப்பதில்லை. இதனால் வெறும் காகிதத்தால் ஆனா பையில் நீரை
இட்டு அதைச் சூடு படுத்தி கொதிக்க வைக்க முடியும்

Saturday, November 19, 2011

vinveliyil ulaa



ஆசெர்னர் (Achernar ) (இது ஆல்பா எரி அல்லது ஆல்பா எரிடானி என்றழைக்கப்படும் )


ஆசெர்னர் மிக விரைவாகத் தற்சுழலும் ஒரு விண்மீன். இதன் தற்சுழற்சி வேகம் குறைந்தது
225 கி.மீ/வி என மதிப்பிட்டுள்ளனர். 2003 ல் இந்த விண்மீனை ,கட்டமைக்கப் பட்ட மிகப் பெரிய
வானத் தொலை நோக்கியால் பார்த்த போது இந்த விண்மீன் அளவுக்கு அதிகமாகத் தட்டையாக இருப்பது அறியப்பட்டது. நடுவரைக் கோட்டில் ஆரம், துருவ ஆரத்தை விட 50 சதவீதம்
அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது .
ஆல்பா எரிடானி இரவில் வானத்தில் காணப்படும் விண்மீன்களுள் 9 வது பிரகாசமான
வின்மீனாகும்






இந்த வட்டார விண்மீன் கூட்டத்தில் எப்சிலான் எரிடானி என்றொரு விண்மீன் உள்ளது .
வெறும் கண்களுக்குப் புலப்படக் கூடிய இந்த விண்மீன் ,மிக அருகாமையில் இருப்பவற்றுள்
மூன்றாவதாக உள்ளது. இது சூரியனை விடச் சிறிய அளவினதாகவும் ,குளிர்ச்சியானதாகவும்
குறைந்த பிரகாசமுள்ளதாகவும் இருந்தாலும் சற்றேறக் குறைய சூரியனைப் போன்றது எனலாம் .
10 .5 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் ஆரம் சூரியனின் ஆரத்தைப் போல 0 .88 மடங்கும்
நிறை 0 .85 மடங்கும் ஒளிர் திறன் 0 .34 மடங்கும் உள்ளது. தோற்ற ஒளிப்பொலிவெண்
3 .72 ஆக உள்ளது .சூரியனைப் போல மெதுவாகச் தற்சுழல்கிறது.
1998 ல் குளிர்ந்த வெப்பநிலையில் ஒரு தூசிப் படலம் தட்டு வடிவில் எப்சிலான் எரிடானியைச்
சுற்றி இருப்பதைக் கண்டறிந்தார்கள். சூரியக் குடும்பத்தில் காணப்படும் கெய்பர் பெல்ட் (Kuiper belt போல, ஏறக்குறைய சூரியனிலிருந்து புளூட்டோவின் சராசரித் தொலைவைப் போல இருமடங்கு
தொலைவு வரை விரவியுள்ளது .தூசியின் செறிவு 35 முதல் 75 வானியல் அலகுத் தொலைவு வரை
உள்ள வளையத்தில் காணப்படுகின்றது . 60 வானியல் அலகுத் தொலைவில் செறிவின் பெருமம்
அமைந்துள்ளது .இத் தூசிப் படலத்தின் பெரும நிறையை ௦.4 சூரிய நிறையாக மதிப்பிட்டுள்ளனர் .


2000 ல் வானவியலார் இந்த விண்மீனுக்கு நமது வியாழன் கோள் போன்று ஒரு கோள் ,
1 .2 மடங்கு வியாழனின் நிறையுடன் ,மிகவும் நீட்சியுற்ற ஒரு நீள் வட்டப் பாதையில்
3 .3 வானியல் அலகுத் தொலைவு சராசரி ஆரத்துடன் 6 .8 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன்
இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர் .

பூமிக்கு வெளியே உயர் உயிரினம் இருக்கக் கூடிய வாய்ப்பு பற்றி இன்றைக்கு பன்னாட்டு
வானவியலார் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியில் இது முக்கியமாகக் கருதப்படுகிறது .
எப்சிலான் எரிடானசின் இளநிலை ,உயிரினம் இன்னும் தோன்றி இருக்க வாய்ப்பில்லை
என்று கூறினாலும் எதிர்காலத்தில் உயிரினம் தோன்றுவதற்கான வாய்ப்பில்லை என்று
மறுக்க முடியாது. இந்த ஆய்வில் டௌ சீடிக்கு அடுத்ததாக இந்த விண்மீன் அனைவரின்
கவனத்தில் இருந்து வருகிறது. இது டௌ சீடியை விடவும் சற்று குறுகிய தொலைவில்
உள்ளது என்பதும் அதற்கு ஒரு காரணம்

Friday, November 18, 2011

arika ariviyal

ஓட்டிக் கொள்ளும் பனிக்கட்டித் துண்டுகள்

குளிர் சாதனப் பெட்டியின் உறைவறையில் உறைய வைத்த கனச் சதுர
பனிக் கட்டித் துண்டுகளை ஒரு வாளியில் குவிக்க, அவை ஒன்றோடொன்று
ஒட்டிக் கொள்வதேன்?

கனச் சதுரப் பனிக் கட்டித் துண்டுகளைக் குவிக்கும் போது, ஒரு சில ஒன்றோடொன்று
தொட்டுக் கொண்டிருக்கும். எனவே அப்பரப்பு திறவலாக இல்லாது போகும் .
மேலும் தொடக்கத்தில் ஒவ்வொரு பனிக்கட்டித் துண்டின் பரப்பிலும் ஒரு
மெல்லிய நீர் படலம் இருக்கும். தொடுபரப்பில் ,காற்றுவெளித் தொடர்பு
இல்லாததால் ,நீரிலிருந்து சிறிதளவு வெப்ப ஆற்றல் வெளியேற்றப் படுகிறது.
உறைதல் தூண்டப்பட்டு கனச் சதுர பனிக் கட்டித் துண்டுகள் ஒட்டிக்
கொள்கின்றன .

Thursday, November 17, 2011

arika ariviyal

ஆற்றல் மறைந்த மாயம் ?
ஒரே மாதிரியான இரு கொள்கலன்கள் ,கட்டுப்பாட்டு வால்வுடன்
கூடிய ஒரு மில்லிய குழாய் மூலம் இணைக்கப்படுகின்றன .
தொடக்கத்தில் ஒரு கலனில் h உயரம் இருக்குமாறு நீரிட்டு
நிரப்பப்படுகிறது .வால்வைத் திறக்க ,நீர் ஒரு கலனிலிருந்து
மற்றொரு கலனுக்குப் பாய்ந்து செல்கின்றது .இந்தப் பாய்வு
இரு கலனிலும் நீர் மட்டம் h /2 உயரம் எட்டும் வரை நிகழ்கிறது .

தொடக்கத்தில் நீரின் ஈர்ப்பு நிலையாற்றல் (gravitational potential
energy ) W (h/2), நீரின் எடை மற்றும் ஈர்ப்பு மையத்தின் உயரம் இவற்றின்
பெருக்கல் பலனாகும் . இறுதி நிலையில் நீரின் ஈர்ப்பு நிலை யாற்றல்
2 (W /2)(h/4) = W(h/4). இது தொடக்க ஈர்ப்பு நிலையாற்றலில்
பாதியளவேயாகும். மீதிப் பாதியளவு ஈர்ப்பு நிலையாற்றல்
எப்படி மாயமாய்ப் போனது ?

நுண் புழைக் குழாய் வழிப் பாயும் நீர் ,பல அடுக்குகளாக வகுக்கப்பட்டு பாய்கிறது .
இதில் மையத்தில் செல்லும் நீர் விரைவாகவும் ,குழாயின் சுவரை ஓட்டிச்
செல்லும் நீர் குறைந்த வேகத்துடனும் பாயும்.இந்த வேக வேறுபாடு
இயங்கும் இரு அடுக்குகளுக் கிடையே உராய்வை ஏற்படுத்துகிறது.
இந்த உராய்வை எதிர்த்துச் செல்வதால்,தொடக்க ஈர்ப்பு நிலையாற்றலில்
பாதியளவு வெப்ப ஆற்றலாக மாற்றம் பெறுகிறது. இந்த அக உராய்வும்
குழாயின் சுவரோடு ஏற்படுத்தும் உராய்வும் இல்லாதிருந்தால் ,நீரானது
இரு கொள்கலன்களுக்குமிடையே தொடர்ந்து மாறிமாறிப் பாய்ந்து
அலைவியக்கதைக் கொண்டிருக்கும் .

vinveliyil ulaa



(எரிடானஸ் இத்தாலி நாட்டில் ஓடும் ஒரு ஆறு . இதை அங்கு போ (PO ) என அழைக்கின்றார்கள் .
இதற்கு ஆறுகளின் அரசன் என்று பொருள் .)

எரிட்டாநெஸ்(Eridanus) என்ற ஆறு ,பாத்தோன் (Phaethon ) என்பவனின் கதையில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது .
இவன் சூரியக் கடவுளான ஹிலியோவின் மகனாவான் .ஒருசமயம் தன்னுடைய பிறந்த நாளன்று ,தன் தந்தையை அணுகி தான் சூரியனின் மகன்
என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன நிரூபணம் இருக்கிறது என்று கேட்டான் .அதற்கு
அவன் தந்தை நீ விரும்பியதைக் கேள் நான் தருகிறேன் என்று கூற , பாத்தோனும்
தன் தந்தையின் தேரை ஓட்டிப் பார்க்க விரும்பிக் கேட்டான் .அப்போது அவன் தந்தை
இந்தத் தேரை ஓட்டிச் செலுத்துவது கடினம் ,அனுபவம் இல்லாத இளைங்கர்களுக்கு
இது மரணத்தைத் தரக் கூடியது என்று சொல்ல, பார்தோனும் வற்புறுத்திக் கேட்க
மறுக்கமுடியாமல் அப்பல்லோவும் அனுமதித்துவிட்டார் .
தேரைச் செலுத்தும்போது குதிரைகளை கட்டுப்படுத்த முடியாது போகவே
ஆற்றுக்குள் விழுந்துவிடுகிறான் .



தன் தந்தையின் தேரை ஓட்டிச் செல்லும் ஒரு சோகமான
முயற்சியில் அவன் ஆற்றுக்குள் விழுந்து விடுகிறான் .அதனால் அந்த ஆறு புராணக் கதையில் சிறப்புற்றது .அந்த
ஆற்றின் பெயரிலேயே இந்த வட்டார விண்மீன் கூட்டம் அழைக்கப்படுகிறது .இதிலுள்ள அடுத்தடுத்த விண்மீன்களை
இணைத்தால் ,அது வளைந்து வளைந்து ஓடும் ஒரு ஆறு போலத் தோன்றும். விண்ணில் 60 டிகிரி வடக்கிலிருந்து
தெற்கு வரை நெடிய தொலைவு விரிந்து இருக்குமாறு ஒரு சரிவைப் பெற்றிருக்கிறது .இது போல வேறு எந்த வட்டார
விண்மீன் கூட்டங்களும் சரிவைப் பெற்றிருக்கவில்லை .

இதிலுள்ள மிகப் பிரகாசமான விண்மீன் ஆசெர்னர் (Achernar ) என அழைக்கப்படும் ஆல்பா எரிடானி ஆகும். இது இளம்
நீல நிறமான ,தோற்றப் பொலிவெண் 0 .5 உடைய மிகப் பிரகாசமான விண்வெளியில் 9 வது பிரகாசமிக்க 144
ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள விண்மீனாகும்.ஆசெர்நர் என்றால் அரேபிய மொழியில் ஆற்றின் கழிமுகம் .
இதன் பிரகாசம் சூரியனைப் போல 3000 மடங்கு என மதிப்பிட்டுள்ளனர் .இது நிறமாலை வகையில் B3e ஆக
உள்ளது. அதாவது நிறமாலையில் ஹைட்ரஜன் உமிழ்வு வரிகளைக் காணமுடிகிறது.

arika ariviyal

வண்ணக் கலனும் சுடு நீரும்
எல்லா வகையிலும் ஒத்த இரு கொள்கலன்களில் சம அளவு சுடுநீர் எடுத்துக்
கொள்ளப்படுகிறது .ஆனால் ஒரு கலனின் புறப்பகுதி கறுப்பு நிறம் பூசப்பட்டும்
மற்றொரு கலனின் புறப்பகுதி வெள்ளை நிறம் பூசப்பட்டும் உள்ளது .தொடக்கத்தில்
சுடுநீரின் வெப்பநிலை இரு கலன்களிலும் சமமாக உள்ளது. நேரம் செல்லச் செல்ல
இக் கலன்களில் உள்ள சுடுநீரின் வெப்பநிலை எங்ஙனம் மாறும் ? அல்லது எக்கலனில்
உள்ள சுடுநீர் விரைவாகக் குளிரும் ?
ஒரு பொருள் கதிர்வீச்சினால் குளிர்வடையும் வீதம் என்பது அப்பொருளின் வெப்பநிலை
மற்றும் அதன் அகச் சிவப்புப் பண்பினைப் பொறுத்தது .கட் புலனறி ஒளியும் அகச் சிவப்புக்
கதிர்களைப் போல மின்காந்த அலைகளாக இருப்பினும் ,கதிர்வீச்சினால் குளிர்வடையும்
வீதம் இதனால் தீர்மானிக்கப் படுவதில்லை. நிறம் தவிர்த்த பிற கூறுகள் அனைத்தும் இரு
கலன்களுக்கும் சமமாக இருப்பதால் ,இரு கலன்களும் சமமாய் குளிர்வடைகின்றன.

.
அதே பண்பென்றாலும் நீர் மட்டும் தனித்தது

நீர் பனியாக உறையும் போது பருமப் பெருக்கமடைகிறது .இது போன்ற பண்பை சிலிகான் ,
ஜெர்மானியம் ,ஸ்டெர்லிங் சில்வர் கலப்பு உலோகம் ,ஈயம்-டின் -ஆண்டிமணி கலப்பு உலோகம்
போன்றவை பெற்றிருக்கின்றன .ஆனால் இவற்றிலிருந்து நீர் சற்று வேறுபட்ட பண்பைக் கொண்டிருக்கிறது . அது என்ன ?


நீரின் வெப்பஞ் சார்ந்த விரிவாக்கம் என்பது அதன் உறைநிலைக்கு வெகு அருகாமையில்
4 டிகிரி லிருந்து ௦ டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்கும் போது ஏற்படுகிறது. இந்த
விரிவாக்கததினால் நீர் 11 % பெருக்கமடைகிறது. நீரால் அடைக்கப்பட்ட கலன்
உறையும் போது ,அதை வெடிக்கச் செய்ய இது போதுமானதாக இருக்கிறது

Tuesday, November 15, 2011

arika ariviyal

சுற்றுப் புறம் அதே வெப்ப நிலையில் இருக்க நீர் ஏன் ஆவியாகவேண்டும் ?

இரு பொருட்களுக்கிடையே வெப்ப நிலை வேறுபாடு இருக்கும்போது மட்டும் தான் வெப்பமானது
தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருளுக்கு பரிமாற்றப் படுகிறது.அப்படியென்றால் சுற்றுப்
புறத்தின் அதே வெப்ப நிலையில் ஒரு கண்ணாடித் தட்டில் எடுத்துக் கொண்ட நீர் எப்படி
ஆவியாகிறது?அது ஆவியாவதற்குத் தேவையான ஆற்றலை நீர் சுற்றுப் புறத்திலிருந்து
பெறவே முடியாது. ஏனெனில் சுற்றுப் புறமும் அதே வெப்ப நிலையில் உள்ளது.அப்படியென்றால்
நீர் எப்படி ஆவியாகிறது ?

எந்த ஒரு வெப்ப நிலையிலும் ஓர் நீர்மத்திலுள்ள அனைத்து மூலக்கூறுகளும் ஒரே வேகத்தில்
இயங்குவதில்லை.அவ வெப்பநிலையில் அவற்றின் சராசரி வேகம் மட்டுமே மாறாதிருக்கிறது .
எனவே அதில் சராசரி வேகத்தைவிட வேகம் மிகுந்த மூலக்கூறுகளும் ,வேகம் குறைந்த
மூலக்கூறுகளும் உள்ளன.ஆவியாக்கத்தின் போது முதலில் வேகம் மிகுந்த மூலக்கூறுகள்
நீர்மத்தை விட்டு வெளியேறுகின்றன.ஏனெனில் அவை நீர்மத்தின் ஒட்டு விசை (cohesion
force)க்கு எதிராகச் செயல்பட்டு விடுபடும் தன்மையைப் பெற்றுள்ளன.அவை வெளியேறிய பின்
எஞ்சிய மூலக்கூறுகளின் சராசரி வேகம் குறைகிறது.அதாவது அதன் வெப்ப நிலை
குறைகிறது. அந்த வெப்ப நிலையில் மிகு வேக மூலக்கூறுகள் வெளியேற மீண்டும் வெப்ப நிலை
குறைகிறது .அதனால் ஆவியாக்கம் தொடர்ந்து நிகழ்கிறது .

Thursday, November 10, 2011

arika ariviyal

சுடும் பனிக்கட்டி
பனிக் கட்டி என்றாலே குளிர்ச்சியான பொருள் என்று நினைக்கிறோம் .
ஆனால் ஒருவர் பனிக்கட்டியால் தீக்காயம் ஏற்பட்டது என்று சொன்னால்
நம்ப முடிகிறதா ? நம்ப மறுத்த போது அதே பனிக்கட்டியால் என்னையும்
சுட்டுக் காட்டினார் . இது எப்படி சாத்தியமாகும் ?

செயல் படும் அழுத்தம் அதிகரிக்க கொதி நிலையும் உறை நிலையும் அதிகரிக்கின்றன .
நீரில் 20 ,௦௦௦ வழி அழுத்தத்தைச் செயல் படுத்த அது௮ 76 டிகிரி செல்சியஸ்
வெப்ப நிலையில் உறைகிறது .அப்படி உறைந்த பனிக்கட்டி தோலில்
தீக்காயத்தை ஏற்படுத்தக் கூடியது .

குளிர்காலத்தில் தொப்பி அணி

கோடை காலத்தை விட குளிர் காலத்தில் தொப்பி யணிபவர்கள் அதிகம் .ஏன் ?

பொதுவாக தலையிலிருந்து 30 % உடல் வெப்பம் வெளியேறுகிறது .இதற்குக்
காரணம் தலை முடி மட்டுமின்றி ,தலைப் பகுதியின் வெப்ப நிலை பிற
பகுதிகளைக் காட்டிலும் சற்று அதிகமானது. எனவே வெப்பப் பரிமாற்றம்
அப் பகுதியில் அதிகமாக நடை பெறுகிறது. தொப்பி அணிவதால் இந்த
வேப்ப இழப்பு பெரிதும் தடுக்கப் பட்டு உடல் வெப்பம் காக்கப் படுகிறது.

Tuesday, November 8, 2011

arika ariviyal

சமைக்க கூடுதல் நேரம் வேண்டுமா ?

ஒரே அளவு சமிக்க மலைப் பிரதேசங்களில் கூடுதல் நேரமாகின்றது ? இது ஏன் ?

மலைப் பிரதேசங்கள் கடல் மட்டத்திலிருந்து வெகு உயரங்களில் இருப்பதால்
அங்கே வளி அழுத்தம் சற்று குறைவாக இருக்கும். அதனால் நீர் குறைந்த
வெப்ப நிலையிலேயேகொதிக்கும் . 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில்
ஒரு பொருளைச் சமைக்க ஆகும் நேரத்தை விட 80 டிகிரி செல்சியஸ் வெப்ப்
நிலையில் அதே அளவு பொருளைச் சமைக்க ஆகும் நேரம் அதிகமாக இருக்கும்.
இதனால் மலைப் பிரதேசங்களில் சமைப்பதற்கு கூடுதல் நேரமாகிறது. .

அண்டார்டிகாவும் அர்க்டிக்கும்

அண்டார்டிகாவும் ஆர்க்டிக்கும் பூமியின் தெற்கு ,வடக்கு முனைகளில் உள்ளன .இதில்
அண்டார்டிகாவில் உள்ள பனி படர்ந்த பகுதி ஆர்க்டிக்கில் பனி படர்ந்த பகுதியை விட
8 மடங்கு அதிகமாய் உள்ளது. வட, தென் முனைகளில் காணப்படும் இந்த வேறுபாட்டிற்கு
யாது காரணம் ?

அண்டார்டிக்கா ஒரு கண்டமாகும் . அது ஒரு நிலப்பகுதி . அது வெப்பத்தைத் தக்க வைத்துக்
கொள்வதில் மந்தமானது .பெற்ற வெப்ப ஆற்றலை உடனே கதிர் வீச்சாக வெளியே
உமிழ்ந்து விடுகிறது . இதனால் கடுங் குளிர்ச்சியான பகுதி பனி படர்ந்த பகுதியில் உட்புறம்
தள்ளி இருக்கிறது. ஆனால் ஆர்க்டிக் பனி கடலில் மிதக்கும் பனி மலை யாகும் .நீரின்
வெப்ப ஏற்புத் திறன் மிகவும் அதிகம் .பெற்ற வெப்பத்தை மெதுவாகவே இழக்கிறது.. கோடையில்
சேமித்த வெப்பம் குளிர் காலத்திலும் பாதிப்பதால் ஆர்க்டிக் பனி சிறிய எல்லைக்குள்
அடங்கி விடுகிறது .

Friday, November 4, 2011

arika ariviyal

பனிச் சறுக்கு விளையாட்டிற்கு இன்று தடை

பனிப் பிரதேசங்களில் பனிப் பரப்பில் கீழே விழுந்து விடாமல் சறுக்கி விளையாடுவார்கள் .
இதற்காக கால்களில் தகடுகளை அணிந்து கொள்வார்கள் .இதனால் இயக்கச் சமநிலையைப்
பெறமுடிகிறது .பனிப் பரப்பு மிகவும் குளிர்ச்சியாக உள்ள நாட்களில் பனியில் சறுக்குவது
கடினமாக இருக்கும். அனுபவம் உள்ளவர்கள் கூட விபத்தில் சிக்கிக் கொள்வர் .இதனால்
குளிர் மிகுந்த நாட்களில் பனியில் சறுக்கு வதற்கு அனுமதிப்பதில்லை. குளிர் மிகுந்த
நாட்களில் பனியில் சறுக்குவது ஏன் கடுமையாக இருக்கிறது ?

ஒரு பரப்பின் நிலைம உராய்வுக் குணகம்(static friction coefficient).பரப்பு மிகவும் .
குளிர்ச்சியாக
இருக்கும் போது அதிகம் .நிலைம உராய்வின் பெருமமும் அதிகரிக்கிறது. அந் நிலையில்
பனியில் சறுக்குவது மிகவும் கடினமாகி விடுகிறது .

0 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் பனிக்கட்டியின் புறப்பரப்பில் ஒரு மெல்லிய நீர் படலம்
படர்ந்திருக்கும் .இது சறுக்கி விளையாடும் போது இரு பரப்புகளுக் கிடையே மசகாகச் செயல்பட்டு
உராய்வைப் பெரிதும் குறைக்கிறது .மேலும் அழுத்தத்தின் காரணமாக பனியின் உறைநிலை
அதிகரிக்கிறது . அதனால் குறைந்த அழுத்தத்தில் உறைந்த பனிக்கட்டி உருகுகிறது ,இதற்குக்
காரணம் பனிக் கட்டியில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகளே .ஹைட்ரஜன் பிணைப்புகளை
வெப்பம் மட்டுமின்றி அழுத்தம் கொடுத்ததும் துண்டிக்கலாம் .

ஒரு பனிக்கட்டித் துண்டின் மீது இரு முனைகளிலும் எடை கட்டிய நூலை இட ,அது பனிக்கட்டியை அறுத்துக்
கொண்டே செல்கிறது. இதற்குக் காரணம் அழுத்தம் காரணமாக பனி உருகுவதாகும் .பனி கட்டியின்
மீது நூல் எங்கு அழுத்தம் கொடுக்கின்றதோ அப்பகுதி உருகிப் போவதால் ,நூல் கீழே நழுவிச்
செல்கிறது. எனினும் செயல்பட்ட அழுத்தம் நீக்கம் பெற்றவுடன் நூலுக்கு மேலாக உருகிய நீர் மீண்டும்
பணியாக உறைந்து விடுகிறது

arika ariviyal

சுடு நீரும் குளிர் நீரும் உறைதல்

நீர் உறையும் கடுங் குளிர் காலத்தில் மூடியற்ற ,ஒரே மாதிரியான இரு மர
வாளிகளில் நீருற்றி,புற வெளியில் உறையுமாறு வைக்கப்படுகின்றன .ஒரு
வாளியில் சுடு நீரும் ,மற்றொரு வாளியில் குளிர் நீரும் இருப்பதாகக்
கொள்வோம்.இவற்றுள் எது முதலில் உறையும்? அல்லது இரண்டுமே ஒரே
சமயத்தில் உரையுமா ?

சில குறிப்பிட்ட சூழ் நிலைகளில் ,சுடு நீர் குளிர் நீரை விட விரைவாகக்
குளிர்வுற்று உறைகிறது. இது மர வாளிக்கு மட்டும் பொருந்தும்.
கடத்தும் திறன் மிக்க உலோகங்களாலான வாளிகளுக்கு பொருந்துவதில்லை .

மூடியற்ற மர வாளியில் உள்ள சுடு நீரின் மேற்பரப்பில் நிகழும் ஆவியாக்கமும்
அதைத் தொடர்ந்து நிகழும் குளிர்ந்த மேல் நிலை நீரும் ,சூடாக உள்ள
அடிநிலை நீரும் ஏற்படுத்தும் கலவையும் இங்கு முக்கியமாக குளிர்
வூட்டுதலுக்குக் காரணமாய் இருக்கின்றன.ஆவியாக்கமும் ,நீர்மச் சலனமும்
வெப்ப ஆற்றலை புற வெளிக்கு
விரைவாக எடுத்துச் செல்லும் வீதத்தில் முக்கியப் பங்கேற்றுள்ளன .
ஆனால் மரவாளிகளின் சுவர் பரப்பு வழியாகக்
கடத்திச் செல்லப்படும் வெப்பம் மிகவும் குறைவு. ஆவியாக்கம் மட்டுமே
குளிர்வூட்டுதலைப் பெற வேண்டி இருக்கிறது.
மேலும் சூடான நீரின் ஆவியாக்கத்தினால் அதிக அளவு நீர் மூலக்கூறு
வெளியேறிவிடுகின்றன. அதனால் குறைந்த
அளவு நீரையே உறைய வைக்க வேண்டியிருக்கிறது.

குளிர்வூட்டலில் ஆவியாக்கம் மூலம் ஏற்படும் நிறை இழப்பு
குறிப்பிடும்படியானது. எடுத்துக்காட்டாக நீரை 100 டிகிரி
செல்சியஸ் லிருந்து 0 டிகிரி வரை தானாகக் குளிரும் போது 16 %
நிறையை இழக்கிறது. இதை உறைய வைக்கும் போது
மேலும் 12 % நிறையை இழக்கிறது. எனவே மொத்த நிறை இழப்பு
{16 + 12 x (100 -16 )}/100 = 26 %

இது நம் அன்றாட வாழ்க்கைக் குரிய பயனை நல்கியிருக்கிறது .எ.கா.
காரை வெந்நீரால் கழுவக்கூடாது .ஏனெனில்
வெந்நீரால் கழுவ, அது குளிர் நீரை விட விரைவாக உறைந்து காரில் படிக்கிறது

Wednesday, November 2, 2011

arika ariviyal

காற்றும் நீரும்

காற்றும் நீரும் ஒரே வெப்பநிலையில் (28 டிகிரி சென்டிகிரேடு) இருந்தாலும்,
பெரும்பாலும் அப்படி உணரப்படுவதில்லை.நீச்சல் குளத்தில் குதிக்கும் போது,
நீரைத் தொட்ட நிலையில் அது சற்று குளிர்ச்சியாக இருப்பதை உணர்வார்கள்.
ஏன் இந்த வேறுபாடு ?

காற்றும் நீரும் பொதுவாக அரிதில் கடத்திகளாகும்.வெப்பத்தை விரைவாகக்
கடத்திச் செல்வதில்லை. இவையிரண்டினுள் காற்றை விட நீர் ஓரளவு
கூடுதலாக வெப்பங் கடத்துகிறது.உடலின் வெப்பநிலை சுற்றுப் புறத்தின்
வெப்ப நிலையை விட அதிகம் .எனவே கடத்தியைத் தொட்டவுடன் உடல்
வெப்பம் அதன் கடத்து திறனுக்கு ஏற்ப கடத்திச் செல்லப் படுகிறது.
இதனால் நீர் குளிர்ச்சியாக இருப்பதாக உணருகிறோம் .

இப் பண்பு ஒரு வைரம் உண்மையானதா இல்லை போலியானதா என்பதைக்
கண்டு பிடிக்கப் பயன் தருகிறது. .உண்மையான
வைரம் கடத்து திறன் மிக்கது. போலி வைரம் அப்படி இல்லை .
எனவே வைரத்தை நாவில் வைத்துப் பார்க்கும் போது அது
குளிர்ச்சியாகத் தெரியும். .

Friday, October 28, 2011

vinveliyil ulaa

1953-ல் டச்சு நாட்டு வானவியலாரான பிளாவ்(Blauw) பெர்சியஸ்-II
(Perseus-II)தொகுப்பில் உள்ள விண்மீன்கள் ஒவ்வொன்றும்
மையத்தை விட்டு வெவ்வேறு திசைகளில் விலகிச் செல்கின்றன
எனக் கண்டறிந்துள்ளார்.

படத்தில் காட்டப்பட்டுள்ள புள்ளிகள் விண்மீன்களையும் ,அம்புக்குறி
விலகிச் செல்லும் திசையையும்
அதன் நீளம் 500 ,000 ஆண்டுகளுக்குப் பிறகு அவை நிலை
கொள்ளுமிடத்தையும் குறிப்பிடுகின்றன. .பிளாவ்
இந்த இணைத் தொகுப்பிலுள்ள விண்மீன்கள் யாவும் 12 கிமீ/வி
என்ற சராசரி வீதத்தில் விரிவடைந்து கொண்டிருக்கின்றன
என மதிப்பிட்டுள்ளார்.இக் கணக்கீடு சுமார்
1,300,000 ஆண்டுகளுக்கு முன்னர்,இத் தொகுப்பிலுள்ள
விண்மீன்கள் யாவும் அதன் மையத்தில் ஒருங்கிணைந்து
செறிவான ஒரு சிறிய ஒளிப் புள்ளியாக தோன்றி இருந்திருக்கும்
எனத் தெரிவிந்த்துள்ளது .அதாவது இத் தொகுப்பு சுமார் 1,300,000
ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி பரிணாம
வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சாதாரணமாக ஒரு
விண்மீனைப் பொறுத்த வரையில் இது மிகவும் குறுகிய
காலமே .பொதுவாக ஒரு விண்மீனின் சராசரி வாழ்வுக்
காலம் சில பத்தாயிரம் மில்லியன் ஆண்டுகள் என்பதால் ,
பெர்சியஸ் - II ல் உள்ள விண்மீன்கள் யாவும் புதிதாய்
பிறந்தவை என்றே கருத வேண்டியுள்ளது .

பெர்சியசின் வாள்நுனியை பை (φ) பெர்சி என்ற விண்மீன் அலங்கரிக்கிறது.
இதன் தோற்ற ஒளிப்பொலிவெண்
(magnitude)4 ஆகும். இதற்கு வெகு அருகாமையில் M 76 என்று
குறிப்பிடப்படுகின்ற கோள் வடிவ நெபுலா ஒன்றுள்ளது .
இதில் மையமாக ஒரு துடிப்பு விண்மீனும் (Pulsar) அதைச்
சுற்றி ஒரு வட்ட வளையக்கூடு வடிவில் வளிமத்தாலான
நெபுலாவும் இருக்கும்.இந்த நெபுலா ,மைய விண்மீன் உமிழும்
ஒளியால் பிரகாசிக்கின்றது .வாளை அலங்கரிக்கும்
மற்றொரு விண்மீன் மிராம்(Miram) என அழைக்கப்படும் ஈட்டா( η )
பெர்சியாகும்.இது 3.77 என்ற தோற்ற
ஒளிப்பொலிவெண்ணுடன் 1330 ஒளி ஆண்டுகள் தொலைவில்
உள்ளது .

மதுசாவின் தலைப் பகுதியில் ரோ( ρ ) பெர்சி என்றொரு
விண்மீன் உள்ளது .இது பிரகாசம் மாறிமாறி ஒளிரும்
பெருஞ் சிவப்பு விண்மீனாகும்.இதன் உருவ அளவு வட்டச்
சுற்று முறையில் தொடர்ந்து மாறிக்கொண்டே
இருப்பதால் இதன் தொடர ஒளிப் பொலி வெண் 3.3லிருந்து
4 வரை ஏழு வாரங்களுக்கு ஒரு முறை ஏற்றத்
தாழ்வுடன் மாறுகிறது.கோர்கொனியா டெர்டி(Gorgonea Terti)
எனப் பெயரிடப் பட்ட இந்த விண்மீன் 325 ஒளி ஆண்டுகள்
தொலைவில் உள்ளது .

இவ் வட்டாரத்திலுள்ள மிசாம் என்ற கெப்பா (κ) பெர்சி 112
ஒளி ஆண்டுகள் தொலைவிலும் அட்டிக் என்ற உமிகிறான்( ο )
பெர்சி 1480 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் மென்கிப் என்ற
இக்ஸி (ξ) பெர்சி 1770 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
டெல்டா (δ) பெர்சி 528 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
எப்சிலான் (ε) பெர்சி 538 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
உள்ளன .

M 34 என்று பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தனிக் கொத்து
விண்மீன் கூட்டம் 1400 ஒளி ஆண்டுகள் தொலைவில்
விண்வெளியில் ஒரு முழு நிலவின் பரப்பில் அல்கோலுக்கும்,
காமா ஆண்ட்ரோமெடே விண்மீனுக்கும் இடையில் உள்ளது .
இதிலுள்ள பிரகாசமான விண்மீன்களின் தோற்ற
ஒளிபொலிவெண் 7 ஆக உள்ளது. இதில் பல இரட்டை
விண்மீன்களாக உள்ளன.

Monday, October 24, 2011

arika ariviyal

ஓடும் வண்டியில் ஏற்றப்பட்ட சிலிண்டர்

வெப்ப நிலை என்பது ஒரு வளிமத்திலுள்ள துகள்களின் சராசரி இயக்கத்தோடு
தொடர்புடையது.வெப்ப நிலை அதிகரிக்க இந்தச் சராசரி இயக்கமும் அதிகரிக்கிறது.
ஒரு கலனில் அடைக்கப்பட்ட வளிமத்தை ஓடும் வண்டியில் ஏற்றினால் அது
வண்டியின் இயக்கத் திசையில் இயக்கத்தைப் பெறுகிறது. இதனால் அதன்
வெப்பநிலை உயருமா ?

அதன் வெப்பநிலை உயராது. ஏனெனில் வளிமத்தின் இயக்கவாற்றல்
கொள்கைப்படி,வளிமத்தின் வெப்பநிலை என்பது நிறைமையத்தைப் பொறுத்து
அதன் இடப்பெயர்வு இயக்க ஆற்றலால் தீர்மானிக்கப் படுகிறது.நிறை மையத்தின்
இயக்கத்தால் ,வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுவதில்லை.இதனால் வளிமத்தின்
வெப்பநிலையில் ஏற்றமோ அல்லது இறக்கமோ காணப்படுவதில்லை .

ஒரு லிட்டர் பெட்ரோலும் கடக்கும் தொலைவும்

முதலில் ஒரு லிட்டர் குளிர்ந்த பெட்ரோலில் ஒரு கார் ஓடுகிறது.எரிபொருள்
தீர்ந்தவுடன் ஒரு லிட்டர் சூடான பெட்ரோல் போடப்படுகிறது. எந்த
எரிபொருளுக்கு காரின் ஓட்டத் தொலைவு அதிகமாக இருக்கும் ?அல்லது
அப்போதும் சம ஓட்டத் தொலைவைத் தருமா ?

குளிர்ந்த பெட்ரோல் அதிக அளவு ஓட்டத் தொலைவைத் தரும். ஏனெனில்
ஒரு லிட்டரில் அதிக அளவு பெட்ரோல் மூலக் கூறுகள் அடங்கி இருக்கின்றன.
பெரும்பாலான பொருட்களைப் போல பெட்ரோல் வெப்ப நிலை அதிகரிப்பிற்கு
விரிவடைகிறது. பரும அளவியும் இதை ஈடுகட்டும் விதமாக விரிவடைவதில்லை.
எனவே சூடான பெட்ரோலுக்கு கார் கடக்கும் தொலைவு சற்று
குறைவாக இருக்கும் எனலாம் .

Saturday, October 22, 2011

eluthatha kaditham

எழுதாத கடிதம்

குறை கூறுவதைத் தவிர்த்து விட்டு நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுங்கள் என்று
இந்தியப் பிரதமர் அவர்கள் கூறியுள்ளார்கள்.அவரைப்பற்றி பல அரசியல்
தலைவர்களும் குறை கூறும் கால கட்டத்தின் உச்சக்கட்டத்தில் அவருடைய
இக் கருத்து வெளிப்பட்டிருக்கிறது. இக் கூற்றில் மறைந்திருக்கும் இரண்டு
செய்திகள் என்னை இதை எழுதத் தூண்டியிருக்கிறது .

அரசியல் தலைவர்கள் தங்கள் சொல்வதையெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்காக
என்றே கூறுவார்கள்.வெறும் சொற்கள் மட்டுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில்
எடுத்துச் செல்லாது. அதில் அவர்களுக்கே உண்மையான நம்பிக்கை
இருக்கவேண்டும். தன்னுடைய கருத்தைச் சொல்லிவிட்ட பிறகு அது
செயல்முறைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறதா என்பதையும்
முறையாகக் கண்காணிக்க வேண்டும்.நான் சொல்லிவிட்டேன் அதைச் செயல்
படுத்துவது மற்றவர் கடமை என்று தன்னை ஒதுக்கிக் கொண்டுவிடக்கூடாது .

முதலாவது குறை குறை கூறுவதை விட்டு விடுங்கள் என்பதாகும்.
இல்லாத குறைகளைச் சொல்வதை வேண்டுமானால் விட்டுவிடலாம்.
உண்மையில் இருக்கும் குறைகளை கூறாது விட்டுவிட்டால் அக்குறை
மென்மேலும் தன்னூக்கப்பட்டு வளர்ச்சி பெறாதா. அப்படித்தான் இன்றைக்கு
நாட்டில் ஊழலும் தனி மனிதன் தாங்க முடியாத சுமுதாயக் குற்றங்களும்
பெருகியுள்ளன.சிறிய அளவிலான ஊழலை இப்படி யாரும்
கண்டுகொள்ளாததால் அது பெரிய அளவில் வளர்ந்து போனது. பெரிய
அளவில் நடைபெற்ற எந்த ஊழலையும் அரசே கண்டு வெளிப்படுத்தியதாக
சான்றே இல்லை. அதையெல்லாம் மக்களே கண்டு வெளிப்படுத்தி
இருக்கிறார்கள் .மக்களால் இன்னும் கண்டு கொள்ளப்படாத ஊழல்கள் எல்லாம்
இன்னும் இலை மறைவாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இவை எல்லாம் என்றைக்கு நாட்டையே விழுங்கப்போகிறதோ .

அங்குமிங்குமாக நடைபெற்ற ஊழல்களும்,குற்றங்களும் இன்றைக்கு அன்றாடம்
எங்கும் நிகழ்வது வாடிக்கையாகி விட்டது.இல்லாத குறைகளை கூறாது விட்டு
விடலாம். ஆனால் உண்மையிலேயே இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டது
விட்டு விட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் அக்கறை காட்டாமல்
இருப்பதற்கு இவை தனி மனிதரின் விஷயங்கள் இல்லை.

மற்றொன்று நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுங்கள் என்று முதல்வர்களுக்கு
அழைப்பு விடுத்திருப்பது .இது நாடு உண்மையிலேயே வளர்ச்சியடையவில்லை
என்றெண்ணும் மனதி வெளிப்பாடாகும் .வளர்ச்சியை வரையறை
செய்யாமல் விவரிக்கும் போது அதன் உண்மைநிலை படித்தவர்களுக்குக்
கூடப் புரிவதில்லை .

நம்மை விட மக்கட்தொகை மிக்க சீனாவின் வளர்ச்சியை ஒப்பிட,
இந்தியாவின் வளர்ச்சி ஒன்றும் பெரியதாக இல்லை.எத் துறையை எடுத்துக்
கொண்டாலும் அதில் சீனா மேலோங்கியே இருக்கிறது. மக்கட் தொகை
வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கிறது என்று அவர்கள் எதிர்மறையாக
எடுத்துக் கொள்ளாமல் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு வளர்ச்சிப் பாதையில்
முன்னேறி வருகிறார்கள்.கட்டுமானப் பணிகள் ,தொழிற் சாலைகள் ,உற்பத்தி ,
பாதுகாப்பு,வர்த்தகம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதில் அவர்கள்
தங்களை முதன்மைப் படுத்திக் கொண்டு வருகிறார்கள் .அவர்கள் வளர்ச்சியைக்
கண்டு பல மேலை நாடுகள் அச்சம் கொண்டுள்ளன .

முறையான திட்டங்களும் உண்மையான ஈடுபாடும் இல்லாமல் அத்தகைய
உறுதியான வளர்ச்சியை இந்தியா பெறவே முடியாது.
ஊழல்களை மறைத்து விடுவதால் .ஊழல் நடைபெறவே இல்லை என்ற
எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட முடியும் .ஆனால் ஊழல்
மக்களிடையே மகத்தான வளர்ச்சி பெரும் .அதற்க்கு ஊழலைக்
கண்டுகொள்ளாத அரசே காரணமாக இருக்கமுடியும் .
சுய ஒழுக்கமும் ,சட்டமும் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாத போது
அதை ஓரளவாவது கட்டுப்படுத்தக் கூடும் என்ற நம்பிக்கையைத் தருவது இந்த
உண்மையான மக்கள் மன்றக் குற்றச் சாட்டுகளே .

Friday, October 21, 2011

arika ariviyal

கொதிக்கும் நீரால் நீரைக் கொதிக்க வைக்க முடியுமா ?

ஒரு சிறிய கலனில் குளிர் நீரை எடுத்துக் கொண்டு, அதை ஒரு பெரிய கலனில் கொதித்துக்
கொண்டிருக்கும் நீரில் ,நீரோடு நீர் கலவா வண்ணம் வைக்கப்படுகிறது. குளிர் நீரின்
வெப்ப நிலை அதிகரிக்கும். அது 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தொட்டு
கொதிக்குமா ?

கொதி நீரால் குளிர் நீரைக் கொதிக்க வைக்க முடியாது. தூய நீர் இயல்பான சூழலில்
100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் கொதிக்கிறது. தொடக்கத்தில் வெப்பக்கடத்தல்
மூலம் கொதி நீரிலிருந்து குளிர் நீருக்கு வெப்பம் கடத்தப்படுவதால் அதன் வெப்ப நிலை
100 டிகிரி செல்சியஸ் வரை உயரும். நீரை ,நீராவியாக்க 100 டிகிரி வெப்ப நிலையில்
அதற்குக் கூடுதல் ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றலைக் கொதி நீர் வெப்ப
மூலத்திலிருந்து எடுத்துக் கொள்வதைப் போல ,குளிர் நீர் ,கொதி நீரிலிருந்து \
எடுத்துக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில் வெப்ப மானது சம வெப்ப நிலையில்
உள்ள இரு பொருட்களுக் கிடையேயும் , தாழ்ந்த வெப்ப நிலையிலிருந்து உயர்ந்த
வெப்ப நிலை யுடைய இரு பொருட்களுக்கிடையேயும் பாய்வதில்லை

Saturday, October 15, 2011

arika ariviyal

வேலையின்றி விரிவாக்கம்

ஒரு வளிமம் விரிவாக்கம் பெரும் போது,அதிலுள்ள
மூலக்கூறுகளுக்கு இடையேயான ,சராசரி இடைவெளி
அதிகரிக்கிறது .இந்த விரிவாக்கம் சுற்றுப் புறத்திலுள்ள
மூலக்கூறுகளை நெறுக்குகிறது என்பதால் புற அழுத்தத்திற்கு
எதிராக வேலை செய்ய வேண்டியிருக்கிறது .விரிவாக்கத்தின்
போது வளிமம் வேலை ஏதும் செய்யாமல்
ஒரு விரிவாக்கத்தைப் பெற முடியுமா ? பொதுவாக
பேரண்டத்தில் வளிமம் இப்படி விரிவடைவதும் ,சுருக்குவதும்
உண்டு.அப்போது அது வேலை செய்வதற்கான ஆற்றலை
எங்கிருந்து பெறுகிறது ?

வெற்றிட வெளியில் ஒரு வளிமம் விரிவாக்கம் பெரும்
போது அது புற வேலை ஏதும் செய்வதில்லை.

வளிமமா அல்லது ஆவியா ?

காற்றை வளிமம் (gas ) என்றும் அதில் அடங்கியுள்ள நீராவியை
ஆவி (Vapour ) என்றும் கூறுகின்றோம் .வளிமமும் ,நீராவியும்
வளிம நிலையில் இருக்கின்ற பொருளைக் குறிக்கின்றன .
இவை இரண்டிற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கின்றதா ?
இல்லையென்றால் வேறுபாடின்றி இச் சொற்களைப்
பயன்படுத்தலாமா ?

வளிமம் ,ஆவி இரண்டிற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது.
வளிம நிலையில் இருக்கும் எப்பொருளுக்கும் ஒரு மாறு
நிலை வெப்பநிலை (Critical temperature) உண்டு .இந்த
வெப்ப நிலைக்கு மேற்பட்ட வெப்ப நிலைகளில் ,அந்த
வளிமத்திற்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும்
நீர்மமாக(Liquid) மாற்ற முடியாது. எனவே ஆவி என்பது
மாறு நிலை வெப்ப நிலைக்குக் கீழ் உள்ள வளிம நிலைப்
பொருளாகும்.நீரின் மாறு நிலை வெப்ப நிலை 647.2 K.அதனால்
நீராவி என்கிறோம் .காற்றின் மாறு நிலை
வெப்ப நிலை 132.5 K,ஹைட்ரஜனுக்கு இது 33.2 K,
ஹீலியத்திற்கு இது 5.3 K.எனவே அறை வெப்ப நிலையில்
இவற்றை வளிமம் என்று மட்டுமே கூறலாம் .

Friday, October 14, 2011

vinveliyil ulaa

அல்கோலின் உண்மை நிலை

இரட்டை விண்மீனாகத் தோன்றும் அல்கோலும் ,அதன் துணை
விண்மீனும் மாறுபட்ட பண்புகளை உடையனவாக இருப்பினும் ,
அவை இரண்டும் சம காலத்தில் தோன்றி உருவானவைகளே என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.அல்கோலின் துணை விண்மீன்
ஒரு காலத்தில் அல்கோலைவிட நிறைமிக்க, வெப்பமிக்க
விண்மீனாக இருந்திருக்க வேண்டும். அது
தன்னுடைய ஹைட்ரஜன் இருப்பை எரித்து தீர்த்தவுடன் எலக்ட்ரான்
Electron) பெர்மி(Fermi)அழுத்தத்தால் ஈர்ப்புச் சுருக்கத்திற்கு
(Gravitational contraction) எதிராக விரிந்து பெருஞ் சிவப்பு
விண்மீனாக மாறியது. அப்போது அதன் மூலப்பொருட்களால் அதன்
உருவம் சீர்குலைவிற்கு ஆளாகத் தட்டையான கோளமாக
உருமாறியது. இதன் விளைவாக அதிலிருந்து மூலப்பொருட்களில்
ஒரு பங்கு வெளியேற அதை அருகிலுள்ள அல்கோல் உட்கவர ,
மூலப்பொருள் பரிமாற்றம் நிகழ்ந்தது .அதாவது முதன்மை
விண்மீன் துணை விண்மீனாகவும் துணை விண்மீன் முதன்மை
விண்மீனாகவும் நீண்ட காலத்திற்குப் பிறகு மாற்றம் பெற்றன .

1955 க்குப் பிறகு விண்ணில் செயற்கைக் கோள்களைச்
செலுத்தி எக்ஸ் கதிர் வானவியல் (X-ray astronomy)
மூலம் விண்வெளியை ஆராயும் நுட்பம் வளர்ச்சி பெற்றது.
எக்ஸ் கதிர்களை உமிழும் விண்மீன்கள் பலவற்றை இன்றைக்கு இனமறிந்துள்ளனர்.பெரும்பாலான எக்ஸ் கதிர் உமிழும்
விண்மீன்கள் இரட்டை விண்மீன்களாக உள்ளன. அதிலொன்று
மிகச் சிறியதாக 10 -20 சூரிய நிறையுடன்(solar mass) கூடிய
இருண்ட நியூட்ரான் (Neutron ) விண்மீனாகவும் மற்றொன்று
20 -30 சூரிய நிறையுடன் இயல்பான ஹைட்ரஜன் எரிதல்
தொடரும் விண்மீனாகவும் இருப்பது அறியப்பட்டது .
இக் கண்டுபிடிப்பு அல்கோலுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கத்தை
உறுதி செய்தது .

பெர்சியஸ் வட்டாரத்தில் கசியோப்பியா









பெர்சியஸ் வட்டார விண்மீன் கூட்டத்திற்குச் சற்று விலகி
இருக்கும் மற்றொரு வட்டார விண்மீன் கூட்டம்
கசியோப்பியாவாகும் .ஆல்பா பெர்சி என்ற விண்மீனுக்கும் ,
டெல்டா கசியோப்பியாவிற்க்கும் நடுவில் தனிக் கொத்து
விண்மீன் கூட்டம் ஒன்று உள்ளது . இதை அண்ட வெளிக்
கொத்து விண்மீன் கூட்டம் (Galactic cluster ) என்றும் கூறுவர்.
இது தெளிவான விளிம்பு இல்லாத நீள் வட்ட வடிவில்
ஒளிரும் ஒரு சிறிய மேகக் கூட்டம் போலக் காட்சி தருகின்றது.
உணர்வு நுட்பம் மிக்க தொலை நோக்கியால் பார்த்த போது
அது பல நூற்றுக் கணக்கான ஒளிப் புள்ளிகளாகப்
பகுக்கப்பட்டுத் தெரிந்தது. உண்மையில் இது இரு வேறு
மையத்தைப் பற்றிச் சுருங்கும் இரு தனிக் கொத்து விண்மீன்
கூட்டங்கள் என்பதி அப்போது தெரிந்து கொண்டனர் .
இதை NGC 869 ,NGC 884 என்று அட்டவணைப் படுத்தியுள்ளனர் .
ஒன்றுக்கொன்று மிக அருகாமையிலுள்ள இவ்விரு
தனிக் கொத்து விண்மீன் கூட்டங்களை கை(X)மற்றும் எச்(h)
பெர்சி என அழைக்கின்றார்கள். இவ்விரு விண்மீன் கூட்டங்களும்
சம தொலைவில் இருப்பது போலத் தோன்றினாலும்
57 ஒளி ஆண்டுகள் விட்டமுள்ள ஓரளவு கோளவடிவமுள்ள
எச் பெர்சி 6365 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
47 ஒளி ஆண்டுகள் விட்டமுள்ள ஓரளவு கோளவடிவமுள்ள
கை பெர்சி 6700 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
உள்ளன

இக் கொத்து விண்மீன் கூட்டங்களின் மையங்களில் விண்மீன்கள்
செறிவுற்றும் மையத்திலிருந்து விலகிச் செல்ல
விட்டு விட்டும் உள்ளன. பிரகாசமிக்க தனிக் கொத்து விண்மீன்
கூட்டங்களுள் இவையிரண்டும் பிரகாசமான
விண்மீன்களால் நிறைந்தவைகளாகும். எச் பெர்சியில் 300 விண்மீன்களும் ,கை பெர்சியில் 200 விண்மீன்களும் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர் .


இவ்விரு கொத்து விண்மீன் கூட்டங்களின் மையப் பகுதியில் வெப்ப மிக்க மாபெரும் விண்மீன்கள்
அதிகமுள்ளன .குறைந்தது 75 இருக்கலாம் எனக் கணக்கிட்டுள்ளனர். மாபெரும் விண்மீன்கள்
விண்வெளியில் மிகவும் அரிதாகக் காணப்படுபவை .இவை இக்கொத்து விண்மீன் கூட்டங்களில்
திரண்டு காணப்படுவது விண்ணியலாரை பெரும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. வெப்ப மிக்க
வின்மீகள் பெரும்பாலும் O -வகை விண்மீன் களாகும் .அதனால் இக்கொத்து விண்மீன் கூட்டங்களை
o -இணைத் தொகுப்புகள் (o -association ) என்று அழைக்கின்றார்கள் .



பெர்சியஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில் மற்றுமொரு O - இணைத் தொகுப்பு கொத்து விண்மீன் கூட்டம் உள்ளது.
இது சீட்டா பெர்சியசுக்கு அருகாமையில் ,வெப்ப மிக்க மாபெரும் விண்மீனான சீட்டா பெர்சியை உள்ளடக்கிய
O -இணைத் தொகுப்பு கொத்து விண்மீன் கூட்டமாக உள்ளது .இது பெர்சியசின் காலாக வர்ணிக்கப்பட்ட பகுதியில்
நுனிக்காலுக்கு அருகில் உள்ளது .இந்த இணைத் தொகுப்பை பெர்சியஸ் -II என்று குறிப்பிடுகின்றனர். .இத் தொகுதியில்
முன்னர் குறிப்பிட்ட பெர்சியஸ்- I O-இணைத் தொகுப்பை விடக் குறைந்த அளவு விண்மீன்களே உள்ளன. இதில் 12
விண்மீன்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதில் 982 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள சீட்டா பெர்சியும் அடங்கியுள்ளது.
இதன்புரப்பரப்பு வெப்ப நிலை 30,000 டிகிரி கெல்வினாகும்.நமக்கு மிக அருகில் காணப்படும் O -இணைத் தொகுப்பு இதுவே
என்று கூறுகின்றார்கள் .இது 100 ஒளி ஆண்டுகள் x 150 ஒளி ஆண்டுகள் பரப்புள்ள வெளியில் விரிந்துள்ளதாக அறிந்துள்ளனர் .

Tuesday, October 11, 2011

arika iyarppiyal

வண்ண எழுத்துக்கள்



வெவ்வேறு வண்ணங் களாலான எழுத்துக்கள் மீது ஒரு
கண்ணாடிப் பாளத்தைவைக்க,எல்லா எழுத்துக்களும் ஒரே
மாதிரியாக விலக்கமுற்று மேலெழுந்தது போலத்
தோன்றுவதில்லை. சிவப்பு வண்ண எழுத்துக்கள் பிறவற்றைக்
காட்டிலும் மேலெழுந்தது போலத் தெரிகிறது.
இதற்கு யாது காரணம் ?

ஒளி அலையின் நீளம் அதிகரிக்க ஒளி விலகல் எண்
குறைகின்றது. அதாவது வைலட் நிற ஒளிக்கு
அலைநீளம் 4x10^-7 மீ) ஒளி விலகல் எண் அதிகமாகவும்
செந்நிற ஒளிக்கு (அலைநீளம்8x10^-7 மீ) குறைவாகவும்
இருக்கிறது. தோற்ற இடப்பெயர்வு t (1 - l /u ) என்பதால்
(இதில் t என்பது கண்ணாடிப் பாளத்தின் தடிப்பு, u என்பது
ஒளி விலகல் எண் ), சிவப்பு நிறப் பொருளுக்கு
அதிகமாகவும், வைலட் நிறப் பொருளுக்குக் குறைவாகவும்
இருக்கிறது.

அலைநீளமும் திசைவேகமும்



ஒளி அலைகள் என்பன மின்காந்த அலைகளாகும். இது நீண்ட
அலைநீள நெடுக்கைக்குட்பட்டது.எனினும் மிகச் சொற்ப
நெடுக்கைக்குட்பட்ட அலைநீளங்களை மட்டுமே கண்களால்
உணரமுடியும் .இது வைலட் முதல் (4x10^-7 மீ )சிவப்பு வரை
(8x10^-7 மீ ) உள்ளது. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்
2.997925x10^8 மீ/வி ,அல்லது 186281 மையில்/வி .அலை
மூலம் ஒரு வினாடியில் ஏற்படுத்தும் அதிர்வுகள்
அதிர்வெண் எனப்படும். கட்புலனறி ஒளிக்கு இது
7.5x10௦^14 முதல் 3.75x10^14 வரையுள்ள நெடுக்கையில்
உள்ளது. அலை இயக்கத்தின் ஒரு முக்கியமான தொடர்பு ,
அலைநீளம், அதிர்வெண் இவற்றின் பெருக்கல் பலன்
திசைவேகம் என்பதுதான் .ஒளியின் அளிநீளத்தை இரு
மடங்காக்கினால் ஒளியின் திசைவேகம் எவ்வளவு
இருக்கும் ?

அலைநீளம் அதிகரித்தால் அதிர்வெண் குறையும். குறைந்தால் அதிகரிக்கும் .இவற்றின் மாற்றங்கள் ஒன்றையொன்று
சார்ந்தவை.ஆனால் இவற்றின் பெருக்கல்பலன் வெற்றிட
வெளியில் மாறிலியாகும் மேலும் வெற்றிடத்தில்
ஒளியின் திசைவேகம் பெருமம் மட்டுமில்லை ,வேகத்தில்
அதைவிடக் கூடுதலான வேகத்தோடு இயங்கக் கூடியது
வேறெதுவும் இல்லை. எனவே அலைநீளத்தை அதிகரித்தாலும் ,
குறைத்தாலும் அல்லது அதிர்வெண்ணை மாற்றினாலும்
திசைவேகம் மாறுவதில்லை

Sunday, October 9, 2011

arika iyarppiyal

தொடுவானச் சூரியன்

சூரியன் தினமும் காலையில் கிழக்கில் உதித்து மாலையில்
மேற்கில் மறைகிறது. சூரியன் பூமியைச் சுற்றுவதால்
இப்படி நிகழவில்லை .பூமி தற்சுழலுவதால் இப்படித் தோன்றுகிறது .தொடுவானத்தில் சூரியன் சற்று நீள் வட்டமாக
காட்சி யளிக்கிறது.இதற்க்குக் காரணம் என்ன ?

சூரியனைத் தொடுவானத்தில் காணும் போது,உடனடியாக
மறையப் போகும் அடிவிளிம்பு இன்னும் சற்று நேரத்தில்
மறையப் போகும் மேல் விளிம்பை விடக் கூடுதலான
தொலைவை பூமியின் வளிமண்டலத்தில் கடக்க
வேண்டியுள்ளது .இதற்க்குக் காரணம் அவற்றின்
சாய்மைதான்.இதனால் அது கூடுதலான ஒளி விளக்கம்
பெற்று விலக்க முறுகிறது.ஒளி விலக்க வேறுபாட்டால்
பொருளின் உருவம் பிறழ்ச்சி அடைகிறது. அதனால்
தொடுவானச் சூரியன் வட்டமாகத் தெரியாமல் சற்று
நீள் வட்டமாகத் தெரிகிறது .

நீர் தொட்டியின் அடித்தளம்


ஒரு தொட்டியை நீரால் நிரப்பி அதை மேலிருந்து கீழாக
நோக்க அதன் அடிப்பக்கம் குழிவாய்த் தோன்றும்.ஏன் அப்படி?

ஒளி விளக்கம் என்று சொன்னால் அது முழுமையான
விளக்கமாகாது .எவ்வளவுக் கெவ்வளவு சாய்வாக
நோக்குகின்றோமோ அவ்வளவுக் கவ்வளவு நீரடிப் பொருள்
மேலுயர்ந்தது போலக் காணப்படும். நேர் குத்தாக
நோக்கும் போது அடிப்பக்க எல்லைகளிலிருந்து வரும்
கற்றைகள் கூடுதலான சாய்மை காரணமாக அப்பகுதி
மையப் பகுதியைவிடக் கூடுதலாகக் மேலுயர்ந்தது போலத்
தோன்றும் .இதனால் அடிப்பகுதி குழிவாகத் தோன்றும் .

Friday, October 7, 2011

arika iyarppiyal

சிறிய துவாரமும் பெரிய துவாரமும்

ஓர் ஊசி முனைத் துவாரத்தால் சூரியனின் விட்டத்தை
அளவிட்டறிய முடியுமா ?


முடியும். ஒத்த இரு முக்கோணங்களின் வடிவியலை ஒப்பிட்டு ,
மலையின் உயரம் ,வானளாவிய கட்டடத்தின் உயரம்
இவற்றை அளவிடுவதைப் போல சூரியனின் விட்டத்தையும்
அளவிட்டறிய முடியும்.

பகலில் ஓர் இரவு


பகற் பொழுதில் வீட்டிற்கு வெளியில் இருந்து கொண்டு
திறவலான ஜன்னல் வழியே நோக்கினால் ,ஜன்னல் பகுதி
இருளாகத் தெரிவதேன் ?

பகற் பொழுதில் திறவலான ஜன்னல் கருமையாகத்
தெரிவதற்குக் காரணம் ,அதன் வழிச் செல்லும் பெரும் பகுதி
ஒளி எதிரொளிக்கப் பட்டு திரும்பி வெளியேறுவதில்லை .
கண்ணின் மணி கறுப்பாய்த் தோன்றுவதற்குக் கூட இதுதான்
காரணம் .ஆனால் அறைக்குள் ஒரு மின் விளக்கைப் போட்டால் ,
அது உமிழ்ந்து பொருளில் பட்டுச் சிதறும்
ஒளியால் ஒருவர் ஜன்னலுக்கு வெளியிலிருந்து எப்போதும்
உட்பகுதியைக் காண முடியும்

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

உலகின் சிறந்த முதல் 200 பல்கலைக் கழகங்களின் பட்டியலில்
இந்தியப் பலகலைக் கழகம் ஒன்று கூட இடம்பெறவில்லை.
இது இந்தியர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை தரக் கூடிய
விஷயமே.பட்டியலைத் தயாரித்த குழு இந்தியப் பல்கலைக்
கழகத்தை தேர்வு செய்யாதது அவர்கள் குற்றமில்லை .
அதற்குத் தகுதியாக இல்லாததும் அதைப் பெறுவதற்கு முயற்சி
செய்யாததும் நம் குற்றமே .

பொதுவாக நாம் நம்மைப்பற்றி எப்போதும் மிகைப் பாடாகவே
மதிப்பிட்டுக் கொண்டுவிடுகிறோம் .நம்முடைய பேச்சில்
இருக்கும் வீரமும் விவேகமும் செயல்பாடுகளில் இருப்பதில்லை.
நாமே திறமையானவர்கள் என்றும் எதிரிகள் நம்மை விட
திறமைக் குறைவானவர்கள் என்றும் நாமாகவே கற்பனை
செய்துகொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் .
நம்முடைய முன்னேற்றத்திற்கு நாமே தடைக் கல்லாக
இருக்கிறோம்.நம்மைக் குறைத்து மதிப்பிட நாம் தயாராக
இல்லாத போது இதை நாம் ஒருபோதும் உணர்வதுமில்லை .
இந்தியப் பலகலைக் கழகங்கள் ஏன் 200க்கு 1 மதிப்பெண் கூட
வாங்காமல் போனது ?

பொதுவாக கல்வி ஒரு வியாபாரப் பொருளாகிப் போனது.
அதனால் கல்விக் கூடங்கள் இலாப நோக்கிலேயே செயல்பட
துவங்கியுள்ளன. .இது ஒரு வளர்ச்சித் தடைக்கு காரணமாக
உள்ளது.

கல்விக் கூடங்களின் கட்டுமானம் மாணவர்களுக்கு போதிய
வசதி தரக் கூடியதாக இல்லை.மாணவர்களின் எண்ணிக்கைக்கு
ஏற்ப வகுப்பறை இடவசதி ,நூலக வசதியோ, கழிவறை வசதி,
விளையாட்டு துறை வசதிகள் இல்லை.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருப்பதில்லை.
இருக்கும் ஆசிரியர்களும் கற்ப்பித்தல் தவிர்த்த பிற அலுவல்களில்
அதிகம் ஈடுபடுத்தப் படுகின்றார்கள் .

வகுப்புகளில் கணினி, LCD மூலம் presentation ,இன்டர்நெட் ,
மாணவர்கள் - ஆசிரியர் interaction ,question hour போன்றவை
பெரும்பாலும் இருப்பதில்லை.

செய்முறைப் பயிற்சி குறைவு. அதுவும் அவர்களின் செயலாற்றலை தூண்டுவதில்லை .

தங்கும் வசதி ,போக்கு வரத்து வசதி ,சுகாதாரமான சுற்றுச்
சூழல் போன்றவைகள் இன்னும் மேம்படுத்தப் படாமலேயே
இருக்கின்றன.

மாணவர்கள் கற்பதில் முழு அளவில் ஈடுபடவில்லை என்பது
ஒரு புறம் இருக்க ஆசிரியர்களும் முழு அளவில் கற்பித்தலில்
ஈடுபடுவதில்லை.எப்பொழுதும் எதாவது ஒரு காரணத்தைக் காட்டி
போராட்டம் என்று பணியைப் புறக்கணிப்பது.
இதனால் ஆசிரியர்களின் தகுதிப்பாடும் ஒரு கேள்விக்
குறியாகயுள்ளது

இவற்றையும் மீறி ஒரு சில ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள் .
அவர்களால் இன்னும் இந்தியப் பல்கலைக்
கலகங்கள் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன.

வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று சேர்ந்து இந்தியாவில்
உலகத் தரமான ஒரு மாதிரிப் பலகலைக் கழகத்தை
உருவாக்க முன் வரலாமே . ஏனெனில் இது அவர்களால் தான்
முடியும் .தரமான கல்விக்கு உத்தரவாதம் இருந்தால்
கல்விக் கட்டணம் ஒரு பிரச்சனையே இல்லை.

vinveliyil ulaa

அல்கோல் விண்மீனின் பிரகாச மாற்றம்


பிரகாசம் அதிகரிப்பை எதிரொளிப்பு மூலம் விளக்க முடியும் .வெப்ப மிக்க அல்கோல் ,குளிர்ச்சியான துணை விண்மீனின்
நேர் முகப் பரப்பில் கதிர்வீச்சைப் பொழிய ,அது அதைச் சற்று பிரகாச மிக்கதாகக் காட்டுகிறது.
கலைக்கட்டம் சுழி என்ற நிலையில் குளிர்ச்சியான துணை விண்மீன் வெப்ப மிக்க அளகோலை முழுமையாக மறைக்கின்றது.
அப்போது நாம் துணை விண்மீனின் குளிர்ச்சியான இருண்ட முகப்பரப்பையே காண்கிறோம் .அது சுற்றியங்கும் போது
கலைக்கட்டம் அதிகரிக்கின்றது. அப்போது துணை விண்மீனின் பிரகாசமான எதிரொளிப்புப் பகுதியின் அளவு தொடர்ந்து
அதிகரிக்கின்றது .கண்ணோட்டத் திசைக்கு சுற்றுப் பாதையின் ஆரம் செங்குத்தாக இருக்கும் போது இது பெருமமாக
இருக்கிறது. அதன் பின் துணை விண்மீனின் பிரகாசமான எதிரொளிப்புப் பகுதியின் அளவு தொடர்ந்து குறைய அமைப்பின்
மொத்தப் பிரகாசமும் சிறிதளவு குறைகிறது. பின்னர் துணை விண்மீன் அல்கோலால் மறைக்கப்படுகிறது. அல்கோல் துணை
விண்மீனால் மறைக்கப்படுவதற்கும் அல்கோலால் துணை விண்மீன்மறைக்கப்படுவதற்கும் வேறுபாடு உள்ளது.
அல்கோலைத் துணை விண்மீன் மறைக்கும் போது பிரகாசம் பெருமளவு தடைப்படுகின்றது .அதனால் முதன்மைச் சிறுமம்
விளைகிறது. ஆனால் துணை விண்மீனை அல்கோல் மறைக்கும் போது பிரகாசம் பெருமளவு தடைப் படுவதில்லை .துணை
விண்மீனின் எதிரொளிப்பு ஒளி அல்கோலால் தடுக்கப்படுவதால் பிரகாசத்தில் சிறிதளவு மாற்றமே ஏற்படுகிறது.
அதனால் துணைச் சிறுமம் உண்டாகிறது. அல்கோலால் படிப்படியாக மறையும் அல்லது வெளிப்படும் துணை விண்மீன் மீது
அல்கோல் ஒளியை வீசி அதன் கலைத் தோற்றத்தை ஏற்படுத்துவதால் ,சுற்றுக் கால முறைப்படி பிரகாச மாற்றத்திற்கு
உள்ளாகிறது.
இந்த வரை படத்தின் துணை கொண்டு மறைப்பு மாறொளிர் விண்மீனின் சுற்றுக் காலம் ,பரிமாண அளவு ,நிறை ,அடர்த்தி,
போன்ற பல இயற்பியல் பண்புகளை ஒருவாறு கணிக்க முடியும். இதன் படி அல்கோல் மெல்லிய நீலங் கலந்த வெண்ணிறமுடைய
ஓரளவு மிதமான பரிமாண முடைய ஒரு விண்மீனாகும். இத விட்டம் 4 ,183 ,400 கிமீ ( நமது சூரியனின் விட்டம் 1 ,391 ,000 கி மீ ) .
அல்கோல் ,சூரியனை விட உருவ அளவில் 9 மடங்கு பெரியது. .இத புறப் பரப்பு வெப்ப நிலை 15000 டிகிரி கெல்வின் நெடுக்கையில் உள்ளது .
சூரியனை விட 100 மடங்கு பிரகாசமானது .நிறையோ சூரிய நிறையைப் போல 3 .5 - 4 மடங்காக உள்ளது .அடர்த்தியோ சூரியனை விடக் குறைவு.
அல்கோலின் அடர்த்தி சூரிய அடர்த்தியில் 0 .07 மடங்கு தான்.
இதன் துணை விண்மீன் அளகோலை ஒப்பிட சற்று பெரிய அளவினதாகும். அதன் விட்டம் 4 ,827 ,000 கிமீ ஆக மதிப் பிட்டுள்ளனர் .
இது அல்கோலை விடக் குளிர்ச்சியானது என்பதால் இதன் புறப் பரப்பு வெப்ப நிலை 7000 டிகிரி கெல்வின் நெடுக்கையில் உள்ளது .
அதாவது நமது சூரியனை விட 1000 டிகிரி கெல்வின் புறப்பரப்பு வெப்ப நிலையைக் கூடுதலாகப் பெற்றுள்ளது . எனினும் சூரியனை விட மங்கலாக,
ஆரஞ்சு நிறத்தில் காட்சி தருகிறது.. இதற்குக் காரணம் அதன் நிறை சூரிய நிறைக்குச் சமமாகவும், உருவம் பல மடங்கு பெரியதாகவும் இருப்பதால்
அடர்த்தி குறைவாக இருப்பதாகும் .இதன் அடர்த்தி சூரிய அடர்த்தியில் 0 .04 மடங்கு மட்டுமே .
இரட்டை விண்மீன்களில் புறப்பரப்பு வெப்பநிலையில் ஒரு சில ஆயிரம் டிகிரி கெல்வின் வெப்ப நிலை வேறுபாடே ,மறைப்பு விளைவை வெறும்
கண்களுக்குப் புலப்படுத்திக் காட்டப் போதுமானதாக இருக்கிறது என்பதை இதை ஆராய்ந்த பின்னரே தெரிந்து கொண்டனர்.

அல்கோலுக்கும் அதன் துணை விண்மீனுக்கும் உள்ள இடைப்பட்ட தொலைவு 10 ,458 ,500 கிமீ .சூரியக் குடும்பத்தில் புதனின்
சுற்றுப் பாதையின் ஆறாம் 58 ,000 ,000 கிமீ .அதாவது அல்கோல்- துணை விண்மீன் அமைப்பு சூரியன்-புதன் அமைப்பை விட
நெருக்கமாக உள்ளது எனலாம் .அதாவது அல்கோல்-துணை விண்மீன் புரப்பரப்பிடைத் தொலைவு சுமார் ஒரு மில்லியன்
கிமீ மட்டுமே .
கெப்ளரின் விதியைக் கொண்டு இரட்டை விண்மீன்களில் உள்ள விண்மீன்களின் நிறையைக் கணக்கிட முடியும். இதன் படி ஓர்
அமைப்பில் சுற்றுக் காலத்தின் இருமடி அதன் ஆரத்தின் மும்மடிக்கு நேர் விகிதத்தில் இருக்கிறது எனலாம் .
அல்கோலின் பிரகாசம் மாறாது நிலையாக இல்லை என்பது நெடு நாட்களுக்கு முன்பே அறியப்பட்ட உண்மை என்றாலும்
பிரகாசத்தின் அழிவுக் காலத்தில் ஏற்படும் மாற்றங்களும் மாறாது நிலையாக இல்லை என்பதற்கான காரணம் அண்மைக்
காலத்திலேயே கண்டறியப்பட்டது .அல்கோல் விண்மீன் உண்மையில் ஓர் இரட்டை விண்மீன் இல்லை ,அது மூன்று
விண்மீன்களின் கூட்டமைப்பு என்பது உணர்வுநுட்பம் மிக்க தொலை நோக்கி உணர்த்திக் காட்டியது .அல்கோலின் மூன்றாவது
துணை விண்மீன் ,முதன்மை விண்மீனான அளகோலை விட 1 .87 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இதன் சுற்றுத்
தளம் பார்க்கப் படும் திசைக்கு ஓரளவு சாய்ந்து செங்குத்தாக இருப்பதால் மறைப்பு நிகழ்வை ஏற்படுத்துவதில்லை .
எனினும் இதன் இயக்கத்தினால் அல்கோல் மற்றும் அதன் முதல் துணை விண்மீன்களின் சுற்றுக் காலத்தில் குறிப்படும்
படியான மாற்றம் தூண்டப் படுகிறது. அதாவது அலைவு காலம் அலைவுற்று கால முறைப்படியான மாற்றத்திற்கு
உள்ளாகிறது

Thursday, October 6, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்
2011 ஆம் ஆண்டிற்கான அமைதி நோபல் பரிசுக்கு இந்திய
அரசியல் தலைவர் ஒருவர் பரிந்துரைக்கப் பட்டார் என்ற
செய்தி நாளிதழ்களில் கண்டேன் .ஓர் இந்தியர் உலக
அளவில் பெருமை பெற்றார் என்றல் அது நமக்கும்
பெருமைதான் .ஆனால் நமக்கு அனுகூலம் என்றால்
நடுவு நிலைமையை மறந்துவிடுகின்றோம்.
அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கு இன்றைக்கு
இந்தியாவில் எந்த அரசியல் வாதியும் இல்லை.அதைப்
பெறுவதற்கு முழுமையான தகுதியும் தராதரமும் கொண்ட
ஒரே ஒருவர் காந்தியடிகள் என்றொரு மகாத்மா இருந்தார் .
காந்தியம் என்ற மிக அற்புதமான கொள்கையைக் கண்டுபிடித்து,
கடைப்பிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார் .
இறந்த வர்களுக்கு நோபல் பரிசு கொடுப்பதில்லை என்ற
விதிமுறை விடாமல் கடைப்பிடிக்கப் படுவதால்
அவருக்கு அந்தப் பெருமை வழங்கப்படவில்லை.
காந்தியடிகள் நோபல் பரிசுக்காக எதையும் செய்யவில்லை ,
அது அவருடைய நோக்கமும் இல்லை. அதனால் அவருடைய
ஆத்மா அதற்காக வருத்தப்பட்டதுமில்லை .
பொதுவாக ஒருவருடைய கருத்து மக்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும் போது அதை
ஊக்கப் படுத்துவதற்காக அவருக்குப் பரிசு வழங்குவார்கள் .
காந்தியத்திற்க்காக யாருக்குமே பரிசு வழங்கப் படாவிட்டால்
அது வளர்ச்சி பெறாமல் அழிந்து போய்விடாதா.காந்தியத்தை
பின்பற்றி சமாதானம் செய்துகொண்டவர்களுக்கெல்லாம்
நோபல் பரிசு ஆனால் காந்தியத்திக் கண்டுபிடித்தவருக்கு
அந்தப் பரிசு இல்லை என்றால் இதில் எதோ குறைபாடு
உள்ளது போலத் தோன்றுகிறது .
காந்தியைப் போல இன்னொருவர் இனி பிறக்கப்போவதில்லை
எனவே அதற்காக நோபல் பரிசுக் குழுவினர் காத்திருக்கத்
வேண்டியதில்லை. காந்தியின் சார்பாக அதை இந்திய மக்களுக்கு வழங்கலாம் .காந்தியின் அறக்கட்டளைகள் பல இதனால்
புத்துயிர் பெறுமே.
எதுவும் மாறிக்கொண்டே இருப்பது ஒன்றுதான் இந்த
பிரபஞ்சத்தில் மாற்றம் ஏதுமின்றி நடந்துகொண்டே இருக்கிறது.
எனவே விதி விலக்குகளில் ஒரு மாற்றம் கொண்டுவருவது என்பது இயற்க்கைக்கு மாறானதில்லை.
மகாத்மாவிற்காக விதி விலக்குகளில் ஒரு மாற்றம் செய்வது
நோபல் பரிசுக்கு மேலும் பெருமை சேரும்
.

Monday, October 3, 2011

arika iyarppiyal

செங்குத்தான இரு ஆடிகளில் தோன்றும் பிம்பம்

இரு சமதள ஆடிகளை ஒன்றுக்கொன்று செங்குத்தாக
இருக்குமாறு பொருத்தி ,அதன் தொடுகோட்டிற்கு நேர்குத்தாக
இருந்து கொண்டு உன்னுடைய பிம்பத்தை நீயே பார்க்கும்
போது பிம்பம் எப்படித் தோன்றும் ?

இந்த இரட்டைச் சமதள ஆடி அமைப்பில் உங்களை
நீங்களே பார்க்கின்ற போது உங்கள் ஒரு பகுதி பிம்பம் கூட
சாதாரணமாகப் பார்க்கப்படுகின்ற ஒற்றைச் சமதள
ஆடியிலிருந்து கிடைக்கப் பெற்றதில்லை.அமைப்பிலிருந்து
ஏதாவதொரு ஆடியை நீக்கிவிட்டால் ஒரு பிம்பம் கூட
ஏற்பட்டுத் தோன்றுவதில்லை.
இரட்டை ஆடியின் முன்னுள்ள பொருளின் இடப்பக்கம் ,
இடக்கை ப் பக்கமாய் அமைந்துள்ள சமதள ஆடியில்
45 டிகிரி கோணத்தில் விழுந்து எதிரொளித்து வலப்பக்க
சமதள ஆடியில் 45 டிகிரி கோணத்தில் விழுந்து எதிரொளித்து
வலப்பக்கமாய் வெளியேறுகிறது .இது போல பொருளின் வலப்பக்கம்,இடப்பக்கமாய் வெளியேறுகிறது .இதனால்
பிறர் நம்மை எப்படிப் பார்கின்றார்களோ அது போல
நாம் நம்மைப் பார்க்க முடியும்.நிலைக் கண்ணாடியில்
பார்க்கும் போது இடவலம் மாறித் தோன்றுவதைப் போல
இரட்டைக் கண்ணாடியில் தோன்றுவதில்லை.

பிம்பங்களின் பிம்பங்கள்

இரு சமதள ஆடிகளை செங்குத்தாக நிறுத்தி ஒன்றுக்கொன்று
ஒரு குறுங் கோணத்தில் அமையுமாறு வைக்கவும் .
குறுங் கோணத்தை விரிக்கும் போதும் ,சுருக்கி இணையாக
இருக்குமாறு வைக்கும் போதும் ,அவைகளுக்கு
இடையில் வைக்கப்பட்ட மெழுகு வர்த்தியின் பிம்பம் எப்படித்
தோன்றும் ?

இரு சமதள ஆடிகளுக் கிடையேயான கோணம் குறையக்
குறைய பிம்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து
அதிகரிக்கின்றது. இரு ஆடிகளும் ஒன்றையொன்று
பார்திருக்குமாறு இணையாக இருக்கும் போது
ஆடியில் ஒரு நீண்ட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்ட
எண்ணிலா மெழுகு வர்த்தி பிம்பங்களைக் காணலாம் .

Saturday, October 1, 2011

vinveliyil ulaa

அல்கோல் -ஒரு விந்தையான விண்மீன்


93 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள பீட்ட பெர்சியில் பிரகாசமான விண்மீன் ஒன்றும் ,மங்கலான விண்மீன் ஒன்றும் ஒன்றையொன்று சுற்றி
வரும்போது ,அவை 2 நாள் 21 மணி நேரத்திற்கு ஒருமுறையென இடைவந்து ஒன்றையொன்று மறைக்கின்றன .இதனால் இதன் தோற்றப்
பிரகாசம் 2 .1 லிருந்து 3 .4 ஆகக் குறைகிறது .இச் சரிவு 10 மணிநேரம் நீடிக்கிறது .வானத் தாரகைகளை ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த
அரேபிய வானவியலார் ,மதுசாவின் கண்களாக வர்ணிக்கப்பட்ட இரு விண்மீன்களில் ஒன்று நிலையாக , பிரகாசத்தில் மாற்றம் ஏதுமின்றி
இருந்தது. ஆனால் மற்றொரு விண்மீனான அல்கோல் நேரத்திற்கு ஏற்ப அதன் பிரகாசம் மாறி மாறி ஒளிர்ந்தது .இதைக் கண்டு பேய் கண்
சிமிட்டிக் கொண்டிருக்கிறது என்று புனைந்து சொன்னார்கள் .


அல்கொலியன் பிரகாச மாற்றத்திக்குக் காரணமான மூலத்தையோ அல்லது இயற்பியல் விதியையோ முதலில் கற்ப்பிக்க முடியவில்லை..
1782 முதல் 1783 வரையில் ,ஒவ்வொரு இரவும் இந்த விண்மீனை ஆராய்ந்து ,அதன் பிரகாச மாற்றத்திற்கான இயற்பியலை இங்கிலாந்து
நாட்டைச் சேர்ந்த ஜான் குட்ரிக் என்ற வானவியலார் கண்டறிந்தார். ஏறக்குறைய இரண்டரை நாட்கள் அல்கோலின்
பிரகாசம் மாறாமல் நிலையாக 2 .2 என்ற தோற்ற ஒளிபொலிவெண்ணுடன் காணப்படுகிறது.பின்னர் சுமார் 10 மணி நேரம் அதன் பிரகாசம்
மங்கிப் போய் 3 .5 என்ற தோற்ற ஒளிபொலிவெண்ணுடன் தோன்றுகிறது. அப்போது அதன் பிரகாசம் 44 சதவீதம் குறைகிறது .அதன் பிறகு
மீண்டும் பழைய நிலையை அடைகிறது. அடுத்தடுத்த இரு சிறுமப் பிரகாச நிலைக்கிடைப் பட்ட நேரம் 2 நாள் 20 மணி 46 நிமிடம் என்று
ஒளிபொலிவெண்- கால வரைபடம் மூலம் ஜான் குட்ரிக் கண்டறிந்தார். மேலும் இதற்கான காரணத்தையும் கண்டறிந்து விளக்கியவர்
இவரே ஆவார் .அல்கோல் விண்மீனைச் சுற்றி ஒரு பெரிய விண்ணுறுப்பு சுற்றி வருவதால் இப்படி நிகழ வாய்ப்பிருப்பதை அப்போது
இவர் சுட்டிக்காட்டினார் .எனினும் இது ஏறக்குறைய 200 ஆண்டுகள் அனுமானக் கொள்கையாக இருந்து வந்தது. 1889 ல் மேற்கொள்ளப்பட்ட
நிறமாலை சார்ந்த ஆய்வுகள் இதற்கு முழுமையான விளக்க அளித்தன.
அல்கோல் விண்மீனின் நிறமாலை நேரத்திற்கு ஏற்ப மாற்றம் பெறுகிறது. இந்த மாற்றமும் ஒரு வட்டச் சுற்று முறையில் உள்ளது.
அதாவது அல்கோல் விண்மீன் ஒளியின் நிறமாலை வரிகள் ஓர் அலைவு கால முறைப்படி இடம் பெயர்ந்து காணப்படுகிறது..
இதன் அலைவு காலமும் ,பிரகாசத்தின் அலைவு காலமும் மிகச் சரியாக ஒன்றாக இருப்பது பின்னர் தெரிய வந்தது. இது அல்கோல் நிறமாலை சார்ந்த ஓர் இரட்டை விண்மீன் என்பதைத் தெரியப் படுத்தியது. முதன்மை விண்மீனை ஒரு துணை விண்மீன் அலைவு கால முறைப்படி
மறைக்கும் போது அதன் பிரகாசமும் ,நிறமாலை வரிகளின் இடப்பெயர்வும் அலைவு கால முறைப்படி மாற்றம் பெறுகின்றன.
முதன்மை விண்மீனின் சுற்றியக்கத்தை டாப்ளர் பெயர்ச்சி (Doppler Shift ) காரணமாக அதன் நிறமாலையில்; ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு
அறியலாம் .விலகிச் சென்றால் செம்பெயர்ச்சி (Red Shift ) நெருங்கி வந்தால் நீலப் பெயர்ச்சி (Blue Shift ) ஏற்படும் என்று ஏற்கனவே உறுதியாக நிறுவப்பட்ட உண்மையால் இதை அறியமுடிகிறது .துணை விண்மீன் பொலிவின்றி மங்கலாக இருந்தால் .பிரகாசமான முதன்மை
விண்மீனின் ஒளிப் பொலிவில் மறைக்கப்படுவதால் ,அது வெறும் கண்களுக்குப் புலப்படுவதில்லை.




அல்கோல் விண்மீனின் பிரகாச- கால வரைபடத்தில் இரு முதன்மைச் சிறுமப் பிரகாசங்களுக்கு நடுவில் ஒரு சிறிய துணைச் சிறுமப் பிரக்காசம் காணப்
படுகின்றது .இது அல்கோலைச் சுற்றி வரும் துணை விண்மீன் முழுமையான கருமையான விண்ணுறுப் பில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது .
துணை விண்மீன் சூரியனைப் போல நிறையுடையதாக இருப்பினும் ,சூரியனை விட அளவில் பெரியது. இது இப்போது பெருஞ் சிவப்பு விண்மீனாக
பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. நமது சூரியன் இது போன்ற தோற்றத்தைப் பெற அதன் வயது இரு மடங்காக வேண்டும். அதாவது இன்னும்
10 ஆயிரம் மில்லியன் ஆண்டுகள் கடக்க வேண்டும்.
இரட்டை விண்மீன்களில் அல்கோல் பிரகாசமானதாகவும் ,சிறியதாகவும் ,துணை விண்மீன் பிரகாசம் குறைந்ததாகவும் ஆனால் பெரியதாகவும் இருக்கும் போது ,அவை சுற்றி வரும் போது ஒன்றையொன்று மறைக்கும் நிலைகளில் இது
போன்று சிறுமப் பிரகாசம் ஏற்படுகின்றது. பிரகாசமான் அல்கோல் மங்கலான துணை விண்மீனால் மறைக்கப்படும்போது அதாவது
துணை விண்மீனுக்குப் பின்னால் இருக்கும் போது ,முதன்மைச் சிறுமப் பிரகாசம் காணப்படுகின்றது . மங்கலான துணை விண்மீனை
அல்கோல் மறைக்கும் போது அதாவது அல்கோலுக்குப் பின்னால் துணை விண்மீன் இருக்கும் போது, துணைச் சிறுமப் பிரகாசம்
ஏற்படுகின்றது. இவ்விரு வேறுபட்ட மறைப்பு நிலைகளிலும் ,இரட்டை விண்மீனின் சராசரிப் பிரகாசத்தில் குறைவு ஏற்படுகின்றது.
அல்கோலின் பிரகாச- கால வரைபடம் நமக்கு மற்றோர் உண்மையையும் தெரிவிக்கின்றது. அல்கோலின் பிரகாசம் முதன்மைச்
சிறுமத்திலிருந்து துணைச் சிறுமத்தை அடைந்து பின்னர் மீண்டும் முதன்மைச் சிறுமத்தைப் பெருகிண்ட்ரகுடு. அதாவது இரு அடுத்தடுத்த
முதன்மைச் சிறுமத்திற்கு மிகச் சரியாக இடையில் துணைச் சிறுமம் அமைந்துள்ளது. அப்போது முதன்மைச் சிறுமத்திலிருந்து
பிரகாசம் அதிகரித்து துணைச் சிறுமத்தை எட்டி பின் பிரகாசம் குறைகிறது. இது நிலவின் கலைகள் போன்று நிலைக்கட்ட (Phase ) விளைவாகும்.

Friday, September 30, 2011

vinveliyil ulaa

பெர்சியஸ்



இந்த வட்டார விண்மீன் கூட்டத்தில் சுமார் 90 விண்மீன்கள்
காட்சி தருகின்றன. இதன் தோற்ற உருவத்தை கிரேக்க
புராணத்தில் வரும் பெர்சியஸ் என்ற வீரனைப் போல் உருவகப்படுத்தியுள்ளனர் . இவனுடைய வலக் கரத்தில்
ஒரு நீண்ட வாள் இருப்பது போலவும் இடக் கரத்தில்
அருவருப்பாகத் தோற்றம் தருகின்ற மதுசாவின் வெட்டப்பட்ட
தலையை ஏந்தி உள்ளது போலவும் சித்தரிக்கப்
பட்டுள்ளது. பெர்சியசின் தாய் டானே கருவுற்று
பெர்சியஸ்ஸைப் பிள்ளையாகப் பெற்றெடுத்தபோது ,
சீயஸ் பர்ர்க்க வருவது போல வந்து
தாயையும் ,பிள்ளையையும் சிறைப்பிடித்து ,
ஒரு மரத்தாலான பெட்டிக்குள் வைத்து கடலில்
வீசி எறிந்து விடுகின்றான் .பெர்சியஸ்
வளர்ந்து பெரியவனான பின், அவனுடைய தாத்தாவாகவும் ,
அர்கோஸ் நாட்டின் அரசனாகவும் இருக்கும் அக்ரீசியசைக்
கொன்று விடுவான் என்று அசரீறு வாக்குச் சொன்னதால் ,
இது அரசனுடைய உத்தரவால் நடந்தது. ஆனால் மரப்பெட்டி
கடலில் மிதந்து சென்று செரிபஸ் எனும் தீவை அடைய ,
அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த டிக்டைஸ் என்ற
மீனவன் இவர்களைக் காப்பற்றுகின்றான் .
இந்த டிக்டைஸ் அத் தீவிற்கு அரசனாக இருந்த
பாளிடெக்டெஸின் சகோதரனாவான் .இவனுடைய வளர்ப்பில்
பெர்சியஸ் பெரிய வீரனாக் வளர்கின்றான் .
சூன்யக்காரி மதுசா யாரையெல்லாம் பார்கின்றாளோ
அவர்களெல்லாம் வெறும் கல்லாகச் சமைந்து விடுகின்றார்கள் .
அதனால் அவளை வெட்டிக் கொன்று விட்டுத் திரும்பும்
வழியில் ஆண்ட்ரோமெடா என்ற இளவரசியை , சீட்ஸ்
என்ற திமிங்கிலத்தை கல்லாகச் சமைத்து விட்டு ,
அதன் பிடியிலிருந்து காப்பாற்றுகின்றான்.ஆண்ட்ரோமெடா
வட்டார விண்மீன் கூட்டத்திற்கு வடகிழக்கில் அமைந்துள்ள
இக்கூட்டத்தில் சில சிறப்பம்சம் கொண்ட விண்மீன்கள்
உள்ளன .பால்வெளி மண்டலத்தின் செறிவான பகுதி
பெர்சியஸ் வட்டார விண்மீன் கூட்டம் வழியாக ஊடுறுவிச்
செல்கிறது. அதனால் வானவியலாருக்கு இப்பகுதி கவர்ச்சி
மிகுந்ததாக இருக்கிறது. மேலும் பெர்சியசின்
கதையில் வரும் பல கதாபாத்திரங்கள் - பெரிச்யஸ்,
பிகாசஸ் ,இளவரசி ஆண்ட்ரோமெடா, சீட்ஸ் என்ற
திமிங்கிலம் , ஆண்ட்ரோமெடாவின் தாய் கசியோப்பியா ,
அவளுடைய கணவன் அரசன் சீபுஸ் எல்லாம் விண்வெளியில்
காணப்படும் வெவ்வேறு வட்டார விண்மீன் கூட்டங்களை
நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.








மிர்பாக் என அழைக்கப்படும் ஆல்பா பெர்சி வெண்மையும்
மஞ்சளும் கலந்த மாபெரும் விண்மீனாகும். இதன் தோற்ற
மற்றும் சார்பிலா ஒளிபொலிவெண் முறையே 1 .79 , 4 .51
ஆகும். இது 592 ஒளி ஆண்டுகள் தொலைவில்
தளர்ச்சியாகவும் ,பெரிய அளவினதாகவும் உள்ள
மெலோட்(Melotte ) என்ற ஒரு விண்மீன் கூட்டத்தில்
காணப்படும் முதன்மை உறுப்பாகும் .

அல்கோல் எனப் பெயரிடப்பட்டுள்ள பீட்டா பெர்சி
இவ்வட்டார விண்மீன் கூட்டத்தில் காணப்படும் சிறப்புத்
தன்மை மிக்கதொரு விண்மீனாகும்.
அல்கோல் என்றால் அரேபிய மொழியில் பேயின் தலை
என்று பொருள். இது மதுசா என்ற தீய ஆவியின் தலையாகச்
சித்தரிக்கப்பட்டு அவளுடைய கொடூரமான கண்ணாக அல்கோல்
விளங்குகிறது. அல்கோலில் இன்னும் ஹைட்ரஜனே
முக்கிய எரிபொருளாக உள்ளது. இது ஒரு நூறு
மில்லியன் ஆண்டுகள் வயதானதாக இருக்கலாம் என
மதிப்பிட்டுள்ளனர்.

பீட்டா பெர்சி ஒரு மாறொளிர் விண்மீன் என்பதை 1667 ல்
இத்தாலி நாட்டு வானவியலார் கியோ வன்னி மோண்டனாரி
(Giovanni Montanari ) என்பார் கண்டுபிடித்தார் . இது
ஒன்றையொன்று மாறிமாறி மறைக்கின்ற நெருக்கமாக
அமைந்திருக்கும் இரட்டை விண்மீன் என்றும், சுற்றி வரும்
போது ஒன்றையொன்று இடைமறைபபதால் அது மாறொளிர்வது
போலத் தோன்றுகிறது என்றும் பின்னர் தெரிந்து கொண்டனர்.
முதன் முதலாக இனமறியப்பட்ட மறைவு மாறொளிர்
விண்மீன் இதுவாகும். பல நூற்றாண்டு காலம் பீட்டா
பெர்சி இடைமறைப்பு வகை மாறொளிர் விண்மீனுக்கு
எடுத்துக்காட்டாக விளங்கியது. அதற்குப் பிறகு பீட்டா பெர்சி
போல பல விண்மீன்களை விண்வெளியில் வானவியலார்
இனமறிந்தனர் என்றாலும் அவையாவும் அல்கோல் வகை என்றே அழைக்கப்பட்டன.

Thursday, September 29, 2011

arika iyarppiyal

உள்ளீடற்ற முப்பட்டகம்



கண்ணாடியாலான முப்பட்டகத்தின் ஒரு பக்ககத்தில் வெள்ளொளி
விழும் போது நிறப்பிரிகை ஏற்பட்டு நிறங்களால் ஆன
நிறமாலை மறுபக்கத்தில் வெளிப்படுகிறது. ஊதா ஒளி
சிவப்பு ஒளியை விட அதிக அளவிலான விலக்கத்திற்கு
உட்படுகிறது.அதே ஒளியை உள்ளீடற்ற முப்பட்டகத்தின்
வழி செலுத்த நிறமாலை தோன்றுவதில்லை . ஏன் ?

முப்பட்டகத்தின் இரு பக்கப் பரப்புகளை தடிப்புள்ள கண்ணாடித்
தகடுகளாகக் கருதலாம். இதில் விழும் கதிர்கள் படுகதிருக்கு
இணையாக வெளியேறுவதால் நிறப்பிரிகை ஏற்படுவதில்லை .
எனவே நிறமாலை ஏற்படுவதில்லை .

ஒளி விலகல் எண்ணின் சிறுமம்

ஊடகம் எதுவானாலும் ஒளி விலகல் எண் எப்போதும்
ஒன்றைவிடக் கூடுதலான மதிப்பைப் பெற்றுள்ளது. ஏன்?
ஒளி விலகல் எண்ணின் சிறுமம் எது ?

ஓர் ஊடகத்தின் ஒளி விலகல் எண் என்பது வெற்றிடத்தில்
ஒளியின் திசை வேகம் மற்றும் அவ்வூடகத்தில்
ஒளியின் திசை வேகம் இவற்றின் தகவாகும். வெற்றிடத்தில்
ஒளியின் திசை வேகம் பெருமமாக உள்ளது.
வெற்றிடம் தவிர்த்த பிற ஊடகங்களில் ஊடகத்தைப்
பொறுத்து ஒளியின் திசை வேகம் பெருமத்தை விடக்
குறைவாக இருக்கும். எனவே ஊடகங்களின் ஒளி விலகல்
எண் எப்போதும் ஒன்றை விடக் கூடுதலாக
இருக்கும். வெற்றிடத்தின் ஒளி விலகல் எண் 1 ஆகும்.
இதுவே ஒளி விலகல் எண்ணின் சிறுமமாகும்.

Some representative refractive indices Material λ (nm) n .
Vacuum 1 (per definition)
Air at STP 1.000277
(Gases at 0 °C and 1 atm )
Air 589.29 1.000293
Carbon dioxide 589.29 1.00045

Helium 589.29 1.000036
Hydrogen 589.29 1.000132
(Liquids at 20 °C)
Arsenic trisulfide and sulfur in
methylene iodide 1.9
Benzene 589.29 1.501
Carbon disulfide 589.29 1.628
Carbon tetrachloride 589.29 1.461
Ethyl alcohol (ethanol) 589.29 1.361
Silicone oil 1.52045
Water 589.29 1.3330
Solids at room temperature
Titanium dioxide(also called Titania or Rutile)
589.29 2.496
Diamond 589.29 2.419
Strontium titanate 589.29 2.41
Amber 589.29 1.55
Fused silica (also called Fused Quartz) 589.29 1.458
Sodium chloride 589.29 1.544
Other materials
Liquid Helium 1.025
Water ice 1.31
Cornea (human) 1.373/1.380/1.401
Lens (human) 1.386 - 1.406
Acetone 1.36
Ethanol 1.36
Glycerol 1.4729
Bromine 1.661
Teflon 1.35 - 1.38
Teflon AF 1.315
Cytop 1.34
Sylgard 184 1.43
Acrylic glass 1.490 - 1.492
Polycarbonate 1.584 - 1.586
PMMA 1.4893 - 1.4899
PETg 1.57
PET 1.5750
Crown glass (pure) 1.50 - 1.54
Flint glass (pure) 1.60 - 1.62
Crown glass (impure) 1.485 - 1.755
Flint glass (impure) 1.523 - 1.925
Pyrex (a borosilicate glass) 1.470
Cryolite 1.338
Rock salt 1.516
Sapphire 1.762–1.778
Cubic zirconia 2.15 - 2.18
Potassium Niobate (KNbO3) 2.28
Moissanite 2.65 - 2.69
Cinnabar (Mercury sulfide) 3.02
Gallium(III) phosphide 3.5
Gallium(III) arsenide 3.927
Zinc Oxide 390 2.4
Silicon 590 3.96 [13]

Wednesday, September 28, 2011

vinveliyil ulaa

மீராவும் அண்மைக் கால ஆய்வுகளும்


மீராவின் நிறமாலையை நுட்பமாக ஆராய்ந்த போது அது பற்றி
வேறு சில உண்மைகளும் தெரியவந்தன.1919 ல் மீராவின்
நிறமாலையில் வெப்ப மிக்க வெண்ணிற விண்மீன் ஒன்றின்
நிறமாலையும் மேற்பொருந்தி இருப்பதை அறிந்தனர் .
இது ஒரு B 8 வகை விண்மீன் போலத் தோன்றியது .
இவ்வகை விண்மீன்களின் புறப்பரப்பு வெப்பநிலை 18000
டிகிரி கெல்வின் ஆகவும், சாதாரண ஹீலிய அணுவின்
நிறமாலை வரிகளையும் கொண்டதாக இருக்கும். ஏறக்குறைய
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ,மீரா சிறுமப் பிரகாசத்தில்
இருக்கும் போது அதற்கு மிக அருகாமையில் தோற்ற
ஒளிப்பொலிவெண் 10 - 12 உடைய ஒரு சிறிய விண்மீன்
இருப்பதை அட்கின் என்ற வானவியலார் சுட்டிக்காட்டினார் .
இது 9 செகண்டு அளவே மீராவிடமிருந்து அப்போது விலகி
இருந்தது.இவ்விண்மீன் மீராவை சில 100 ஆண்டுகளுக்கு
ஒரு முறை சுற்றி வருகிறது என்று கண்டறிந்துள்ளனர். இவ்
விண்மீனும் ஒரு வகையான மாறொளிர் விண்மீன் என்றும்
இதுவும் உருமாற்றத்தால் பிரகாச மாற்றம் பெறுகிறது என்றும்
ஆராய்ந்து தெரிந்து கொண்டனர் .

மீராவின் துணை விண்மீன் மீராவின் நிறையைக் கணக்கிட
உதவியாய் இருக்கிறது .துணை விண்மீனின் நிறை 2.5
சூரிய நிறை என்றும் ,மீராவின் நிறை 1.5 -2 சூரிய நிறை
என்றும் மதிப்பிட்டுள்ளனர் .இது மீராவின் சராசரி
அடர்த்தி சூரிய அடர்த்தியில் 2 x 10^-7 மடங்கு எனத்
தெரிவித்துள்ளது. இது சற்றேறக் குறைய வெற்றிடத்தின்
அடர்த்திக்கு ஒப்பானது.

நீல நிறங் கொண்ட துணை விண்மீன் வெப்ப மிக்க ஓர்
இடைநிலைக் குள்ள விண்மீனாகும்.இது சாதாரண விண்மீனுக்கும்
சிறு வெள்ளை விண்மீனுக்கும் இடையில் அமைந்திருக்கிறது .
இதன் விட்டம் சூரிய விட்டத்தில் 10 ல் ஒரு பங்கே .
அடர்த்தியோ 3300 மடங்கு .இதன் சுற்றுக் காலம் 260
ஆண்டுகள் .இது மீராவிலிருந்து 8 பில்லியன் கிலோமீட்டர்
தொலைவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது .துணை
விண்மீன் தொடர்ந்து குளுர்ச்சியடையும் போது மீரா நீண்ட
காலத்திற்குப் பிரகாசமாக உள்ளது. மீரா விண்மீன் வீசும்
அடர்த்தியான காற்று ,துணை விண்மீனின் பரப்பில் மோதி
பேரளவு ஆற்றலை உமிழ்கிறது. இந்த ஆற்றல் துணை
விண்மீனால் கதிர் வீச்சாக வெளியே வீசப்படுகிறது என்று
இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

டௌ சீடி என்ற விண்மீனின் தோற்ற மற்றும் சார்பிலா
ஒளி பொலி வெண் முறையே 3.49,5.68 ஆகும். இது
சூரியனைப் போல 0.62 மடங்கு பிரகாசிக்கின்றது .இதன்
நிறை 0.85 சூரிய நிறையாகும். இது மிகவும் உயரளவு
தனித்த இயக்கமுடையதாகக் காணப்படுகின்றது .
விண்வெளியில் ஓராண்டுக்கு இது 2 செகண்டு தொலைவு
கடக்கிறது. இந்த இயக்கத்தை நாம் தெளிவாக உணரக்கூடியதாக
இருப்பதால் இது பூமிக்கு அருகாமையில் உள்ளது எனலாம் .
இது 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக
மதிப்பிட்டுள்ளனர். மிக அருகாமையில் இருக்கும் 20
விண்மீன்களுள் இதுவும் ஒன்று.

டௌ சீடி ஒரு மஞ்சள் நிற குறு விண்மீனாகும் .
சற்றேறக் குறைய நமது சூரியனை ஒத்திருக்கிறது .
என்றாலும் சூரியனை விட சற்று சிறியது ,குளிர்ச்சியானது .
இது இப்போது ஒரு A வகை விண்மீனாக உள்ளது. சூரியன்
ஓர் அச்சைப் பற்றி ஒரு மாத காலத்திற்கு ஒரு முறை
தனைத்தானே சுற்றி வருவதைப் போல ,இந்த விண்மீனும்
தற்சுழலுகிறது என்றாலும் சூரியனை விட விரைவாக
இயங்குகிறது .தூசி போன்று ஒரு படலம் இந்த விண்மீனைச்
சுற்றி காணப்படுகிறது. சூரியனுக்கு ஒரு குடும்பம்
இருப்பதைப்போல இதற்கு ஒரு குடும்பம் என்று அனுமானிக்க
இது இடம் தருகிறது. எனினும் என்று வரை எந்தக் கோளும்
இனமறியப்படவில்லை.

டௌ சீடி யின் நிறமாலை அதில் சிறிய அளவில்
உலோகங்கள் இருக்கலாம் என்பதை உணர்த்தியிருக்கிறது.
டௌ சீடி யின் உலோகத் தன்மையே ,அதற்கு கோள்
இருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. இந்த உலோகத்
தனிமங்கள் டௌ சீடி யால்உமிழப்பட்டு வெளியேறும் போது
கோளாக உறைந்து போக வாய்ப்பிருப்பதால்
வானாவியலார் அவ்வாறு உருவாகியிருக்கலாம் என நம்பினார் .
டௌ சீடி F வகை விண்மீனாகத் தொடங்கி அதன் தற்சுழற்சி
வீதம் திடீரென்று தாழ்ந்திருக்க வேண்டும் என்று
கொள்கையாளர்கள்கருத்துத் தெரிவித்துள்ளனர் .இதற்கு
அந்த குளிர்ந்த விண்மீனைச் சுற்றி வரும் கோள்களே காரணமாக
இருக்கலாம் .இக் கோள்கள் விண்மீனின் கோண உந்தத்தை
உள்வாங்கிக் கொள்வதால் விண்மீனின் சுழற்சி வேகம்
மட்டுப்படுத்தப்படுகிறது. நமது சூரியனைப் போல உயிரினம்
உள்ள கோள்களைப் பெற்றிருக்கலாம் என்று பொதுவாக
நம்பப்படுகிறது . அமெரிக்க விண்வெளி
ஆய்வாளர்கள் இந்த விண்மீனை நோக்கி சமிக்கை
அலைகளை அனுப்பி வைத்தார்கள்.ஆனால் அதற்கு பதில்
மொழியாக எந்த சமிக்கை அலைகளும் எதிரொளிக்கப்
படவில்லை. இது அங்கு உயிரினம் இல்லாததையோ
அல்லது உயிரினம் இருந்து செய்திப் பரிமாற்றம் பற்றிய நுட்பம் அறியாதவர்களாகவோ இருக்கலாம் என்பதைத் தெரிவிக்கிறது .


இவ் வட்டார விண்மீன் கூட்டத்தில் M 77 என்று பதிவு
செய்யப்பட்டுள்ள ஒரு சுருள் புய அண்டம் உள்ளது. இதன் பரந்த
முகப் பரப்பு தெரியுமாறு இது விண்ணில் விரவியுள்ளது .இது
மிகவும் பிரகாசமான மையத்தைப் பெற்றுள்ளது. இதை சைபெர்ட் அண்டம் (Seyfert galaxy ) என அழைக்கின்றார்கள் .

arika iyarppiyal

ஒளி வட்டம்


சில சமயங்களில் நிலவு மற்றும் சூரியனைச் சுற்றி மங்கலான
வெண்ணிற வட்டம் காணப்படுவதுண்டு.இதை
நாம் ஆலவட்டம் என்று அழைக்கின்றோம்.'halo' என்று
ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள் .இது ஏற்படுவதற்கு
என்ன காரணம் ?


வளி மண்டலத்தின் உயர் மட்டத்திலுள்ள சின்னச் சின்னப்
பனிக்கட்டிகளில் விழும் ஒளி ,ஒளி விலக்கத்திற்கு
உட்படுவதால் இந்த ஆலவட்டம் ஏற்படுகிறது. ஆறுமுகிப்
பனிக்கட்டிப் படிகங்கள் ஊசி வடிவிலும் ,தட்டையாகவும்
எல்லாத் திசைகளிலும் அமைந்திருப்பதால் அவற்றில் விழும்
ஒளி பன்னிலை அக ஒளி எதிரொளிப்பை
ஏற்படுத்துகிறது. இதுவே ஆல்வட்டமாகக் காட்சி தருகிறது .
இது ஏறக்குறைய வானவில் ஏற்படுவதை ஒத்தது .
ஆனால் வானவில் சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் தோன்றும்.
ஆலவட்டம் அதே திசையில் தோன்றுவதுடன் எப்போதும் ஒளி
மூலத்தைச் சுற்றியே அமைந்திருக்கும்.பெரிய ஆலவட்டத்தின்
ஆரம் 220 டிகிரி . இது உயர் மட்டத்திலுள்ள காய வைத்த
பஞ்சு போன்ற தோற்றமுள்ள மேகத்தில் உள்ள பனிக்கட்டியால்
சிறும விலக்க முற்று ஏற்படும் ஒளி விலக்கத்தால் ஏற்படுகின்றது.
கொரோனா எனப்படும் சிறிய ஆலவட்டம் சில கோணங்களினால்
ஆன ஆரமுடையது .இது வளி மண்டலத்தில் உள்ள
நீர்த்துளிகளினால் ஏற்படும் விளிம்பு விளைவு ஒளி விலக்கதால்
ஏற்படுகின்றது.