Wednesday, January 26, 2011

arika iyarppiyal

கோடை கால ஒலி





ஊடகத்தின் அடர்த்தி,வெப்பநிலை,ஈரப்பதம் இவற்றைப்
பொருத்து ஒலியின் திசை வேகம் உள்ளது. இது
ஊடகத்தின் சார்பிலா வெப்பநிலையின் வர்க்க மூலத்திற்கு
நேர் விகிதத்திலும் அடர்த்தியின் வர்க்க மூலத்திற்கு
எதிர் விகிதத்திலும் மாற்றத்திற்கு உள்ளாகின்றது .ஈரப்பதம்
அதிகரிக்க திசை வேகமும் அதிகரிக்கின்றது .நீரின்
பரப்பிற்கு சற்று மேலாக குறிப்பாக கோடை காலத்தில்
ஒலி விரைந்து கடந்து செல்வதேன் ?
                                                      ***************

குளிச்சியான வறண்ட காற்றைவிட ,சூடான வறண்ட
காற்றில் ஒலி விரைவாகச் செல்கிறது . சூடான காற்றில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி வேகம் அதிகம் என்பதால் ,அவை ஒன்றோடொன்று நெருங்கி வரும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றன .அதனால் இறுக்க நெருக்கமும் தளர்ச்சி
விலக்கமும்  விரைந்து பரவிச் செல்கின்றன . கோடையில்
நீரின் வெப்பநி லையை விடக் காற்றின் வெப்பநிலை
அதிகமாக இருக்கும் போது வெப்பநிலை எதிர் மாறு நிலை  தோன்றுகிறது . அதாவது நீரின் பரப்பிற்கு மேலாக உயரம் செல்லச் செல்ல வெப்ப நிலை குறைகிறது .இந்த எதிர் மாறு வெப்ப
 நிலை, மேல் நோக்கிச் செல்லும் ஒலியை நீர் பரப்பை நோக்கி எதிரொலிக்கின்றன. அமைதியான நீர் பரப்பு ஒலியை
மேல் நோக்கி எதிரொலிக்க ,ஒலியின் பெரும் பகுதியை நீர் பரப்பை
ஒட்டிய மெல்லிய காற்றுப் படலத்தில் நெடுந் தொலைவு கடந்து
செல்கிறது .நெடுந் தொலைவில் கேட்கப்படும் ஒலியின் செறிவு ,அதிர்வெண் ,தொடக்கத்தில் ஒலியின் செறிவு ,எதிர்மாறு வெப்பநிலையின் எதிரொளிப்புக் குணகம் போன்றவற்றைப்
பொறுத்தது.




Monday, January 24, 2011

Vinveliyil ulaa-15

கோளகக் கொத்து விண்மீன் கூட்டம்(தொடர்ச்சி)

கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் மாறுபட்ட
சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. முதலாவது
அவற்றின் ஒளிர்திறன் பற்றியது. கோளகக் கொத்து
விண்மீன் கூட்டத்தின் மையத்திலிருந்து உள்ள
தொலைவிற்கு அதிலுள்ள ஒரு விண்மீனின் ஒளிர்திறன்
ஒரு குறிப்பட்ட தொலைவு வரை எதிர் விகிதத்தில்
இருக்கிறது .அதாவது கோள மையத்தை நோக்கிச்
செல்லச் செல்ல ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை
விண்மீனின் பிரகாசம் தொலைவிற்கு ஏற்ப சீராகக்
குறைகிறது.அதன் பின்னர் பிரகாசமின்றி இருக்கின்றன
(level off). இத் தொலைவு பால் வழி மண்டலத்தில் 1 -2
பார்செக் ஆக உள்ளது. இரண்டாவது ஒவ்வொரு
அண்டத்திலும் ஏறக்குறைய 20 விழுக்காடு கோளகக்
கொத்து விண்மீன் கூட்டங்கள் கருச்சிதைவழிவில்
(core collapse ) ஈடுபடுகின்றன.இவற்றின் ஒளிர்திறன்
கோள மையத்தை நோக்கிச் செல்லச் செல்ல
அதிகரிக்கின்றது

M .15 என்ற கோளகக் கொத்து விண்மீன் கூட்டத்தை
இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம் .கருச்சிதைவழிவு
என்பது கோளகக் கொத்து விண்மீன் கூட்டத்திலுள்ள
ஒரு நிறை மிக்க விண்மீன், நிறை தாழ்ந்த துணை
விண்மீனின் நிலைப்புத்தன்மையை சீர்குலைக்கும் போது
விளைகின்றது. இதன் விளைவாக அதிக இயக்க ஆற்றலை
இழக்கும் விண்மீன்கள் கோள மையப் பகுதியில்
இடம்பெற முயலுகின்றன. நீண்ட கால நெடுக்கையில்
நிகழும் இதனால் நிறை மிக்க விண்மீன்களின் நிறை அதிகரித்து மையத்தில் இடம்பெறுகின்றன. இதையே நிறை
ஒதுக்கம் (segregation ) என்பர்.

ஹபுள் தொலைநோக்கியைக் கொண்டு கோளகக்
கொத்து விண்மீன் கூட்டங்களில் நிறை பங்கீட்டுத்
தனத்திற்கான ஓர் உண்மையைக் கண்டறிந்தனர்.
கனமான .நிறைமிக்க விண்மீன்கள் மெதுவாக இயங்கி,
உள்ளகத்தின் பக்கமாக அதிகம் கூடுகின்றன. நிறை
தாழ்ந்த விண்மீன்களின் இயக்க வேகம் அதிகரிந்து,
வெளிப்பக்கமாக விலகிச் சென்று கோளத்தின் விளிம்பு
பகுதிகளில் இடம் பெறுகின்றன.

47 Tucanae




47 Tucanae என்ற கோளாகக் கொத்து விண்மீன் கூட்டம்
(toucan ) என்ற அமெரிக்கப்பறவை ஏறக்குறைய 1
மில்லியன் விண்மீன்களால் ஆனது. விண்வெளியில்
தென்னக அரைக்கோளப்பகுதியில் தெரியும் அடர்த்தி மிக்க
கூட்டமாகும். இதிலுள்ள 15000 க்கும் மேற்பட்ட
விண்மீன்களின் தனி இயக்கத்தைத் துல்லியமாக
வானவியலார் கண்டறிந்துள்ளனர். கருச்சிதைவழிவின்
வெவ்வேறு நிலைகளை மூன்று கட்டங்களாக
வகுத்துள்ளனர். .இள வயது நிலையில் ,கருச்சிதைவழிவு
வழிமுறை கோளத்தின் மையப்பகுதியிலிருந்து தொடங்குகிறது
எனினும்,இரட்டை விண்மீன்களுக்கிடையேயான
இடையீட்டுச் செயல்கள் ,கருச்சிடைவழிவின்
தொடர்ச்சியைத் தடுக்கிறது. இந்நிலையில் கோளகக்
கொத்து விண்மீன் கூட்டம் இடை வயது நிலையை
அடைகிறது.இறுதியில் ,மையப்பகுதியிலுள்ள இரட்டை
விண்மீன்கள் இதனால் மையப்பகுதி அடர்த்திமிக்கதாகின்றது.


பொதுவாக கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள்
கோளவடிவில் இருந்தாலும், ஈர்ப்பின் ஏற்ற வற்றத்தால்
நீள் கோள வடிவிலும் இருக்கும். பால் வழி,ஆண்ட்ரோமெடாவில்
உள்ள கூட்டங்கள், தட்டையான கோள வடிவில் உள்ளன.
(oblate spheroid ) சிறிய மற்றும் பெரிய மெக்லானிக் (small and large
Megellanic cloud ) மேகத்திலுள்ள கூட்டங்கள் நீள் கோள
வடிவில் உள்ளன .
















arika iyarppiyal

இரு பக்கமும் திலான குழாயில் ஒலி எதிரொலிக்க
முடியுமா ?

வெவ்வேறு ஊடகங்களின் வழியாக ஊடுருவிச் செல்லும்
ஒலியின் திசை வேகம் ஒரே அளவினதாக இருப்பதில்லை .
காற்றில் 0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஒலி
வினாடிக்கு 331 . 3 மீட்டர் ஆக இருக்கின்றது .ஒளியைப்
போல ஒலியை எதிரொலிக்கவும்,குவிக்கவும் முடியும்.
இரு பக்கமும் திறவலான குழாயின் நீளத்தை ஒரு
குறிப்பிட்ட அளவு இருக்குமாறு எடுத்துக் கொள்ளும்
போது ,அதன் வழிச்செலுத்தப்படும் ஒலி,வெளிமுனையில்
எதிரொலிக்கப் படுகின்றது .எதிரொலிப்பதற்கு அங்கு
தடுப்பான் ஏதும் இல்லாத போது இது எப்படி
ஏற்படுகின்றது ?

                                        ********************
 
ஒலி ஊடகத்தில் ஊடுருவிச் செல்லும் போது ,அதன்
இயக்கத்திற்கு ஏற்படும் தடையில் மாற்றம் தோன்றும்
போதெல்லாம் ஒலியின் பெரும் பகுதி
எதிரோலிக்கப்படவும்,ஒரு பகுதி கடந்து செல்லப்படவும் ,
ஒரு பகுதி உட்கிரகித்துக் கொள்ளப்படவும் செய்கின்றன.
ஒரு திண்மப் பொருளில் ஒலி விழும் போது ,ஊடகத்தின்
அடர்த்தியில் ஏற்படும் பெருத்த மாற்றத்தினால்
ஒலியின் பெரும்பகுதி எதிரொலிக்கப்படுகிறது .இப்படி
எதிரொலிக்கப்படும் ஒலி ,விழும் ஒலியிலிருந்து
அலைக்கட்டத்தால் வேறுபட்டிருக்கும் .அது எவ்வளவு
வேறுபட்டிருக்கும் என்பது பொருளின் தன்மையைப்
பொறுத்தது .இரு பக்கமும் திறவலான குழாய்வழியாகச்
செல்லும் ஒலி ,முனையில் ஒருபகுதியை எதிரொலிக்கிறது .
இப்படி நிகழவேண்டுமானால் குழாயின் முனையில்
இறுக்க நெருக்கம்  ஏற்படுமாறு ,அதன் நீளம் அமைந்திருக்கவேண்டும் .காற்றில் ஒலி ஊடகத்தில்
உள்ள துகள்களை ஒலி செல்லும் திசையிலேயே அலைவுறச்
செய்வதால்,சீரான அடர்த்தி கொண்டிருந்த ஊடகம் ,
ஒலி பரவும் போது ,மாறி மாறி அடர்த்தி குறைந்த ,அடர்த்தி
மிகுந்த வெளிகளைக் கொண்டிருக்கும் .அடர்த்தி மிகுந்த
வெளி மிகச் சரியாக முனையில் ஏற்படும் போது ஒத்ததிர்வு
ஏற்படுகிறது .அப்போது ஒலியின் பெரும் பகுதி
எதிரொலிக்கப்படுகிறது.

Sunday, January 23, 2011

Valarum Ariviyal Tamil-5

ஒலி என்பது அதிர்வுகளின் வெள்ளோட்டம் .இது செவிப்பறையை அடையும் போது அதை அதிரத் தூண்டி ஒலியைஉணரச்
செய்கிறது . பொதுவாக உணர் உறுப்புகளின் உணர் திறனுக்கு
ஓர் உச்ச வரம்புண்டு .இந்த வரம்பிற்கு அப்பால் ஆற்றல்
கொண்ட வீரியமான ஒலி அதிர்வுகள் செவிப்பறையைத்
தாக்கிக் கிழித்து விடுவதால்,காது செவிடாகக்கூடிய வாய்ப்பு
இருக்கிறது. இரைச்சலால் தொடர்ந்து இன்னல்படுபவர்களின்
கேள் திறன் மந்தப்படுவதால் வல்லொலி காதைப்
பழுதுபடுத்தும் என்ற பொருள் கூறும் பரிபாடல் வரிகள்
பின்வருமாறு

"இடியெதிர் கழறும் காலுறழ்வு எழுந்தவர்


கொடியறு பிறபு செவி செவிடுபடுவு"


இப்பேரண்டம் எவ்வளவு பெரியது ? எப்போது எப்படித்
தோன்றியது ? ஒரு காலத்தில் அது தோன்றியது என்றால்
அதற்கு முன்னாள் அதன் நிலையென்ன ? அதன் இறுதிக்
கட்டம் எப்படி இருக்கும் ?போன்றவை விண் இயற்பியலில்
தீர்மானமாக ஒரு முடிவுக்கு வர முடியாத சில கேள்விகளாகும்.
அறிவியல் வளர்ச்சியுற்ற இன்றைய காலகட்டத்திலேயே விண் இயற்பியலில் இதற்கு வெட்டியும் ஒட்டியும் கருத்துகள் சொல்லப்படுவதைக் காணும்போது ,அன்றைக்கே மிகத் தெளிவாக
பேரண்டத்தின் அழிவு பற்றி பரிபாடலில் கருத்து கூறப்பட்டிருகிறது .பரிபாடலின் இரண்டாவது பாடலின் முதல்
நான்கு வரிகள் அததகைய அறிவியல் சிந்தனையுடன்
தொடங்குகிறது .

" தொன்முறை இயற்கையின் மதி யொ.....


........................................மரபிற்றாகப்


பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட


விசும்பில் ஊழி ஊழூழ் செல்லக்


கருவளர் வானத் திசையில் தோன்றி "


உலகம் அழியும் போது அது உடனடியாக ,முழுமையாக
அழிந்து போவதில்லை..அது அப்படி படிப்படியாக வளர்ந்து
உருவானதோஅதைப்போல படிப்படியாகவே அழியும். முதலில் ஆற்றலிலிருந்து துகள்கள் பிறந்தன .அதன் பின்னர் காற்று,
தீ ,நீர் ,நிலம் தோன்றின.எல்லாவற்றிற்கும் முதலில் தோன்றிய
துகள்களே மற்றவைகளுக்கு மூலமாயின .இதை உலகின் ஐந்து
ஊழிக் காலங்களாக கருதுவர். பெருவெடிப்புக் கொள்கை
(big bang theory ) யின் கருத்தும் இதற்கு ஒப்பானதே .
உலகின் அழிவு கட்டம் தொடங்கும் போது முதலில் நிலம் நீரில் மூழ்கும் .மாலத்தீவு என்ற நாடு கொஞ்சம் கொஞ்சமாக கடலால் சூறையாடப்பட்டு வரும் நிலை அதை உறுதிபடுத்துவதாக
இருக்கிறது. கார்பன்டை ஆக்சைடு என்ற வளிமம் வளி
மண்டலத்தில் பெருகி வருவதால் உலகின் சராசரி வெப்பநிலை அதிகரித்து பனிப்பாறைகள் உருகுவதால் கடலின் நீர்மட்டம்
அதிகரிக்கிறது என்றும் அதனால் வரும் காலத்தில் மேலும் சில நிலப்பகுதிகள் மூழ்கடிக்கப்படலாம் என்றும்,வளி மண்டலத்தில்
பெருகி வரும் கார்பன்டைஆக்சைடு மாசைக் கட்டுபடுத்தத்
தவறிவிட்டால் இந்த உலகம் ஒரே நீர்காடாக மாறிவிடும் என்றும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிவுறுத்தியுள்ளர்கள் .சுனாமி என்ற
நாம வெள்ளம் அதன் முன்னெச்சரிக்கை தானோ! .

நீர் தீயினுள் ஒடுங்கும் .நீரும் நெருப்பும் ஒன்றுக்கொன்று
எதிரியானது என்றல் எப்படி ஒன்றில் மற்றொன்று ஒடுங்கும்
என்ற ஐயம் ஏற்படலாம் .நீர் பரப்பு அதிகமாவதால் அதிக
அளவு நீர் நீராவியாகும் வாய்பிருகிறது. சுற்றுப்புறத்தின்
வெப்பநிலை அதிகரிப்பதால் நீர் ஆவியாகி வெளியேறுவதையே
இச் சொற்றொடர் தெரிவிக்கிறது .தீ காற்றினுள் ஒடுக்கும்
என்பது ,தீயின் வெப்ப ஆற்றலை காற்றிலுள்ள துகள்கள்
எடுத்துச் செல்வதைக் குறிப்பிடுகிறது. ஒரு வளிமத்தின் வெப்ப நிலை  அதிகரிப்[பு என்பது ,அதிலுள்ள துகள்களின்
வெப்பஞ்சர்ந்த தீவிர இயக்கமாகும். இது மிகுந்த வேகத்துடன்
வீசும் காற்றைக் குறிப்பிடுகிறது.ஈர்ப்பிலாத வெளியில் காற்று
எங்கும் பரவிச் செல்லும் என்பதால் ,காற்று வானத்தில்
கலக்கும் என்று கூறி முடித்தார்.


மம் விகுதியின் பயன்பாடு 


மம் விகுதியின் பயன்பாடு மிக அதிகம் .உயர் அறிவியலில் இதைக்கொண்டு பல புதிய சொற்களை உருவாகலாம்

absorber -உட்கவர்மம்

உட்கவரி என்ற சொல் புழக்கத்தில் இருக்கிறது. இது கருவியை
குறிக்கும் சொல்லாகத் தோன்றுமே அல்லாது பொருளைக்
குறிப்பதில்லை.

condensed matter -உறைமம்

lattice -அணிமம்

அணித்தளம் என்ற சொற்றொடர் பயன்பாட்டில் உள்ளது .சிலர் அணிக்கோவை என்றும் கூறுவர்.
அணிக்கோவையை விட அணித்தளம் உடன் பொருள்
உணர்த்துகிறது .அணிமம் மற்றும் அணித்தளம் போன்ற சொற்கள் துணைச் சொற்களுக்கு அனுகூலமாக இருக்கின்றன.

lattice defect -அணிம மரு, அணித்தள மரு

lattice vibration- அணிம அதிர்வு, அணித்தள அதிர்வு

lattice dynamics-அணிம இயக்கவியல், அணித்தள இயக்கவியல்

lattice energy -அணிம ஆற்றல் அணித்தள ஆற்றல் 

lattice plane -அணிமத் தளம்



scalar -எண்மம்

vector- திசைமம்

fringe - வரிமம்
dark fringe இருள் வரிமம்
bright fringe -ஒளி வரிமம்

fringe என்பது நேர்கோட்டில் மட்டும் அமைவதில்லை நியூட்டன் வளையங்களில் வட்ட வளையங்களாகவும் வளைந்த
கண்ணாடித் தகட்டில் ,நீள்வட்ட வளையமாகவோ,
பர வளையமாகவோ இருப்பதுண்டு.எனவே வரி என்பதை விட
வரிமம் என்ற சொல்லைகலைச் சொல்லாகக் கருதலாம் .

buried articles -புதைமங்கள்

maximum  -பெருமம்

minimum -சிறுமம்

adduct -அணைவுச் சேர்மம்

additive compound -கூட்டுச் சேர்மம்

alpha emitter ஆல்பா உமிழ்மம்

antidote- முறிமம்,நச்சு முறிமம்

lubricant-வழுமம்

micro particles நுண்மங்கள்





Friday, January 21, 2011

eluthaatha kaditham

அன்பார்ந்த இந்திய மக்களே,




சாதாரண மக்களுக்கு அவர்களைப் போலவே ஒரு சாதாரண
மனிதனாக இருந்துகொண்டு மற்றவர்களுக்காக
அவர்கள் சொல்லும் விஷயங்கள் தான் சாதாரண மக்களுக்கு
உண்மையிலேயே பயனுள்ளவைகளாக இருக்கின்றன.
அரசியல் வாதிகள் சொல்லும் வார்த்தைகளில் உண்மை
என்பது மருந்துக்குக்கூட இருப்பதில்லை,இராஜ தந்திரம்
என்று திடீரென்று திசை மாறும்; அது நானில்லை என்று
சாதிப்பார்கள்;தன்னுடைய அடியாள் ஒருவரை
சுட்டிக்காட்டி அதற்குக் காரணம் என்று கூறுவார்கள்; இதயத்
தாக்கம் என்று மருத்துவ மனையில் போய் ஓய்வெடுத்துக்
கொள்வார்கள். அரசியல்வாதிக்குக் கொடுக்கும்
முக்கியத்துவத்தில் ஒரு சிறிதளவேணும் சாதாரண மனிதன் சாதாரணமாகச் சொல்லும் விசயங்களுக்கும் கொடுங்கள்

நம் இந்திய அரசு எவ்வளவு பலவீனமானது என்பதைக்
கவனியுங்கள். விதிகளை மீறி ஆதர்ஷ் குடியிருப்பு
கட்டப்பட்டுள்ளதால் அதை இடித்துத் தள்ள சுற்றுச் சூழல்
அமைச்சகம் 17 -1 -2011 அன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த முடிவு எப்பொழுது வருகிறது ?

எல்லாம் முடிந்து முதல் ராத்திரியில் கட்டில் வரை வந்த
பெண்ணுக்கு கணவனைப் பிடிக்கவில்லையாம்
என்ற கதைதான் போங்கள் . ஊடகங்கள் மூலம்
விஷயங்கள் வெளியே வராவிட்டால் அதை அரசு
அப்படியே என்றுக்கொண்டுவிடுமா ?

கடல் வளத்தை பாதுகாக்க அது இடையூறாக
இருக்கிறது என்பதை கட்டடம் பல ஆயிரங் கோடி
செலவில் கட்டி முடித்து, முறை கேடாக
பங்கீட்டுத்தனமும் செய்து,குடியேறியபின் அது எதோ
ஒரு பக்கத்தில் பொத்துக்கொள்ள விஷயம் வெளியே
கசிந்து விபரீதமாகி விடுகிறது. மக்களுக்க் கிடைக்கும்
விஷயங்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கின்றன.
இதில் வேடிக்கை என்னவென்றால் கடைசி வரை எது
உண்மை எது பொய் என்பதை உச்ச நீதிமன்றத்தாலும்
உணரமுடியாது. தான் தப்பிப் பிழைக்க பிரச்னையை
மேலும் மேலும் அரசியல்வாதிகளே சிக்கலாகி குழப்பி
விடுவதால் இது வழக்கமாகி வருகிறது. அரசியல்வாதிகள்
இப்படிச் செய்வதால்,பெருகி வரும் சமூக விரோதிகளும்
தப்பிப் பிழைக்க முன்மாதியான வழி கிடைக்கிறது.

ஆதர்ஷ் குடியிருப்பு கட்டட ஊழல் விவரங்களைத்
துருவித் துருவி ஆராய்ந்து வெளிப்படுத்தி
விபரீதமானபின், அரசு இந்த முடிவைத்
தெரிவித்துள்ளது. இந்த முடிவும் முடிவான முடிவா
என்பது தெரியவில்லை.ஏனெனில் தவறு செய்பவனைத்
தவறு செய்ய விட்டுவிட்டு ,பின்னர் அது தவறு என்று
அவனைத் தண்டிப்பதில் மனு நீதி இருப்பதாகத்
தெரியவில்லை.

கட்டடத்திற்காக இடம் தேர்வு செய்தபோது, கட்டடம்
கட்ட ஒப்பந்தம் செய்தபோது, கட்டடம் கட்டி வளர்ந்த
போது இந்த அரசு இயந்திரம் என்ன செய்து கொண்டிருந்தது?

இந்தியத் தலைவர்கள், அரசியல்வாதிகள் எவரும்
இந்தியாவிற்காக இந்தியாவை அரசாளவில்லை
என்பதைத்தான் இது காட்டுகிறது. அரசாளத் தகுதி
இல்லாதவர்கள் அமர்ந்து விட்டால், விபத்து அவர்கள்
காலத்தில் மட்டுமல்லாது ,விடாது கறுப்புப் போல
விபரீதங்கள் மேலும் மேலும் வலுப்பெற்று,
முன்னைக்காட்டிலும் வலிமையாக நிகழும்,
தகுதியானவர்கள் இருக்கின்றார்கள் என்றாலும்,
அவர்களை மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்
இன்றையக் கால கட்டத்தில் இது நடை பெறுவதற்கான
வாய்ப்பு இல்லை.நல்லவர்கள் உண்மையில்
துஷ்டர்களைக் கண்டு விலகிவிலகிச் செல்கிறார்கள்.
நல்லவர் யாரவது வந்து விட்டால் அவர்களைப்
பின்னுக்குத் தள்ளி விடுகிறார்கள். அவர்களுடைய
நல்ல இமேஜ் மட்டும் தான் அவர்களுக்குத் தேவை.
அப்படியே அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டாலும்
விபரீதங்கள் எதுவும் குறையப்போவதில்லை.
புதியவர்கள் எப்பொழுதும் பழையவர்களின்
வழிகாட்டலில் செயல்படும் நிர்பந்தம் இந்தியாவில்
இருக்கிறது இந்நிலை இருக்கும் வரை
இதற்கு ஒரு நிரந்தரமான, நிலையான ,நேர்மையான
தீர்வு இல்லை.

நீண்ட காலம் பதவில் இருக்கிறார்கள் என்பதால்
அவர்கள் சிறந்த தலைவர்களை இல்லை.
அதிகம் படித்திருக்கிறார்கள் என்பதாலும் அவர்கள்
அரியணைக்குத் தகுதியானவர்கள் இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கும்,உள்நாட்டில் பல மாநிலங்களுக்கும்
பயணம் மேற்கொள்வதால் அவர்கள் புகழ் மிக்க
ஆளுநர்கள் இல்லை. செல்வந்தர்களாக இருந்தாலும்
அவர்கள் நல்லொழுக்கம் கொண்ட தலைவர்களாக
இல்லை.மக்கள் இவர்களை அளவுக்கு மீறி ஏகமாய்
பாராட்டுவதால் (அது மட்டும் தான் முடியும்) அவர்கள்
தங்களை கடவுளுக்கும் மேலாக நினைத்துக் கொள்கிறார்கள்.
இதை உணராத மக்கள் இன்னும் இன்னும் அதே புதை
குழியில் விழுந்து சிக்கிக் கொள்கிறார்கள்
கானல் நீரைத்தேடி அலையும் கழுதைகள் போல
அலைகிறார்கள். அரசியல் வாதிகள் திருந்தமாட்டார்கள்,
திருந்தவே மாட்டார்கள். இதை நான் உறுதியாகச்
சொல்வேன். இனி மக்கள் தாம் திருந்த வேண்டும்.

விலை உயரும் ஒரு பொருளின் பயன்பாட்டை
மட்டுப்படுத்தும் உறுதி மனதில் இருந்தால்
உயந்த விலை தானாகக் கீழே விழுந்து விடாதா?

அன்புடன்

காவேரி





Monday, January 17, 2011

Valarum Ariviyal Tamil-4

Valarum Ariviyal Tamil

கலைச் சொற்களின் தோற்றத் தட்டுப்பாட்டைச் சொல்வளமிக்க
சங்க இலக்கியங்களிலுள்ள சொற்களைப் புத்தாக்கம் செய்து
நீக்கலாம் .கலைச் சொற்களைப் பரவலாக்கம் செய்யாவிட்டால் ,
தோற்றத் தட்டுப்பாட்டை முற்றுமாக அகற்றி விட முடியாது.
எனவே இன்றைய காலகட்டத்தில் பழந்தமிழ்
சொற்களைப் புத்தாக்கம் செய்து பரவலாக்கம் செய்ய
வேண்டியது மொழி ஆர்வலர்களின் இன்றியமையாக்
கடமையாகும்.

'மம்' என்ற விகுதி

'மம்' என்ற விகுதியுடன் பல சொற்கள் இலக்கியங்களில்
காணப்படுகின்றன.பேச்சு வழக்கிலும் அத்தகைய சொற்களில்
சில பயன்பாட்டில் உள்ளன. வன்மம் ,சாமம், காமம், நாமம் ,
உரிமம் போன்ற தமிழ்ச் சொற்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .காவல்,பாதுகாப்பு என்ற பொருளுடைய
ஏமம் என்ற சொல்லும் இத்தகையதே .பரிபாடலில்
பலவிடங்களில் இச்சொல் எடுத்தாளப்பட்டுள்ளது.

பரி .3 வரி 26, பரி 4 ,வரி 53, பரி 7 வரி 40-ல் ஏமம் என்ற சொல் காணப்படுகிறது. .பொருளதிகாரத்தில் மூன்று குறள்களில்
(738 ,766 ,815 ) இச்சொல் கையாளப்பட்டுள்ளது.

இது பல கிளைச் சொற்களையும் தந்துள்ளது..அவற்றையும்
இலக்கியங்களில் ஆங்காங்கே காணமுடிகிறது.
ஏமாப்பு (குறள் 112 ,126 398 ,458 ,459 ,868), ஏமரா (குறள் 448 ),
போன்ற கிளைச் சொற்களையும் ஏமப் புனை (குறள் 1164 )
எமஞ்சாரா(குறள் 815 )போன்ற கூட்டுச் சொற்களையும் இங்கு குறிப்பிடலாம்.

பரி 10 வரி 39 ல் ஏம் உறு என்றொரு சொல் காணப்படுகிறது.
 இவையாவும் அறிவியல் கலைச் சொற்களின்
விரிவாக்கத்திற்குஅனுகூலமயிருக்கின்றன. .

வேதியியல் மற்றும் இயற்பியல் துறையில் ஒரு குறிப்பிட்ட
பொதுப் பண்புடைய பொருட்களை ஒரு குறிப்பிட்ட சொல்லால் குறிப்பிடுவது மரபு. திண் என்றால் வலிமை ,
வலிய தோளை திண்மையான தோள் என்று
குறிப்பிடுவதிலிருந்து அறியலாம் . அதனால் எளிதில்
உருக்குலையாத, வலிமைமிக்க உறுதியான பொருளைத்
திண்மம் (Solid ) என்றனர். இது பொதுத் தன்மையுடைய
பொருட்களைக் குறிப்பிடும் இது பொது சொல்லாகும்
திண்மம் என்பது பொருளின் ஒரு நிலை . பொருளின்
பிற நிலைகளுக்கான கலைச் சொற்களையும் இதை
ஒட்டியே உருவாக்கலாம்.
நீர்த்து உருகிய நிலையில் உள்ள பொருளை நீர்மம் (liquid) என்றும் ,ஆவியாகி ,உறுதியும் உருவமும் இல்லாது
காற்றோடு கலந்துவிட்ட பொருளை வளிமம் (gas ) என்றும்
குறிப்பிடலாம். இதன் அடிப்படையில் ஏமம் என்ற சொல்லை
 'Insulation' என்ற சொல்லுக்குரிய கலைச் சொல்லாக்கிக்
கொள்ளலாம் . மின்சாரம் ,வெப்பம் போன்றவை ஒரு
ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு செல்லாமல்
தடுக்க காப்பீடு செய்யப்படும் .இதையே insulation என்பர்.
இது சில கூட்டுச் சொற்களுக்கும் இணக்கமாக உள்ளது.

electrical insulation - மின்னேமம்
thermal insulation - வெப்பேமம்
magnetic shield - காந்த ஏமம்
radiation shield - கதிரேமம்

மம் விகுதியைப் பெயரடையிலோ ,வினையடையிலோ
சேர்த்துப் பெயர்ச் சொற்களை உருவாக்கும் கொள்கை
வழிமுறையைப் பின்பற்றி பல புதிய கலைச் சொற்களை
எளிதாக உருவாக்கலாம் .அப்படி உருவாக்கப்பட்டு பயனில்
உள்ள சொற்களோடு சில புதிய சொற்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன .

Carbon-கரிமம் (கார்பன் )
Colloid- கூழ்மம் (இடைமிதவலான்துகள்கள் )
Compound- சேமம் (கூட்டுப் பொருள்)
condensed matter - உறைமம் (உறை பொருள் )
element-தனிமம்
emulsion-பால்மம்
enzyme நோதிமம்
exciton -கிளர்மம்
fluid-பாய்மம்
fuel- எரிமம்(எரிபொருள்)
gel களிமம்
isobar-சம அணு நிறைமம்
isotope-சம அணு எண்மம்
ore-கனிமம்
plasma -மின்மம்
plastic-நெகிழ்மம்
phosphor-ஒளிர்மம்
polymer-பல்மம்

Tuesday, January 11, 2011

arika iyarppiyal-31

காதுக்குள் கேட்கும் தொடரோசை




அமைதியான அறைக்குள் கட்டைப் பெரு விரலால்
இரு காதுகளையும் இறுக்கமாக அடைத்துக் கொண்டு ,
கவனமாக உற்றுக் கேட்டால் 25 ஹெர்ட்ஸ் அல்லது
அதற்கும் சற்று குறைவான அதிர்வெண்ணுடன் ஒரு
விதமான தொடரோசை கத்திக் கேட்டுக் கொண்டே
இருக்கும் .இந்த ஒலி எங்கிருந்து பிறந்தது ?

                                            ****************




கை மற்றும் புயத்தில் உள்ள தசைகளில் ஏறக்குறைய
23 ஹெர்ட்ஸ் அதிர்வெண் அலைகள் எழுப்பப் படுகின்றன .
இதுவே காதில் தொடரோசையாகக் கேட்கப்படுகிறது .
தசைகளில் உள்ள ஆக்டின் மற்றும் மையோசின்
போன்ற நுண்ணிழைகள் தொடர்ந்து சிறிய அளவில் நீட்சி யுற்றும்,மீட்சியுற்றும் இயங்குகின்றன .ஒவ்வொரு
சிறிய இயக்கத்தின் போதும் ,தசைகள் ஒன்றோடொன்று
உராயும் வாய்ப்பைப் பெறுகின்றன .அப்போது எழுப்பப்படும் ஒலி ,புயத்திலுள்ள எலும்பின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு ,முன்கையை அடைந்து கட்டைப்
பெருவிரல் வழியாக காதில் ஒலிக்கிறது .

Sunday, January 9, 2011

Vanna vanna ennangal-33

சுமக்க முடியாதவை



தாயின் மடியில் தவழ்ந்த போது

கண்கள் சுமக்கமுடியாத தூக்கங்கள்

பள்ளியில் படிக்கும் போது

முதுகு சுமக்கமுடியாத புத்தகங்கள்

கல்லூரிக்கு வந்த போது

இளமை சுமக்கமுடியாத காதல்கள்

வேலை தேடி அலைந்தபோது

எண்ணம் சுமக்கமுடியாத ஆசைகள்

குடும்பத் தலைவனான போது

தோள்கள் சுமக்கமுடியாத சுமைகள்

வேலை ஒன்றைப் பெற்ற பின்பு

கைகள் சுமக்கமுடியாத ஊழல்கள்

ஓ.........

ஐம்பது வயது இந்தியனே

உன் பிறப்பும் அப்படித்தான் என்பதால்

பழக்கங்களும் வரம்பு மீறிப் போனதோ



வீடு சுமக்கமுடியாத பிள்ளைகள்

நாடு சுமக்கமுடியாத மக்கள்கள்

சுமப்பதை சுமக்கமுடியாத இளைஞர்கள்

உழைப்பைச் சுமக்கமுடியாத உடல்கள்



செலவைச் சுமக்கமுடியாத வரவுகள்

செம்மையைச் சுமக்கமுடியாத உறவுகள்

மனம் சுமக்கமுடியாத பேராசைகள்

மாற்றத்தைச் சுமக்கமுடியாத காலங்கள்



வயல்கள் சுமக்கமுடியாத வறட்சி

நாடு சுமக்கமுடியாத கடன்.

இதற்கு நான் எப்படிப் பொறுப்பு ?

கிடக்கட்டும் விடு



ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

இதை நினைத்து

ஆனந்தக் கூத்தாடுவோமே

arika iyarppiyal-30

குரல் மாறிப்போனது


குரல் என்பது ஒருவரது தனிச் சிறப்பியல்பாகும்.அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குரல்
இருக்கின்றது எனலாம் .முகவெட்டுத் தோற்றம்,
கைரேகை போல குரலைக் கொண்டும் ஒருவரை
இனமறிந்து கொள்ள முடியும்.சிலர் இயல்பான சூழலில்
குரலை மாற்றிப் பேச முயற்சித்தாலும் ,ஒலிச்செறிவில்
மட்டும் எளிதாக மாற்றம் செய்யமுடிகிறது .அதன் சுரம்,
அதிர்வெண் போன்ற பண்புகளில் மாற்றம் செய்ய
முடிவதில்லை அதனால் அந்நிலையிலும் அவரை
இனமறிந்து கொள்ள முடிகின்றது .ஒருவர் ஹீலிய
வளிமம் செறிவுள்ள காற்றைச் சுவாசித்த பின்
அவருடைய குரல் வளம் பெரிதும் மாறுகின்றது .
அதிக அதிர்வெண்ணில் ஒலி எழுப்புகின்றது . இது ஏன்?
                                             ****************
குரல் வளையில் உள்ள நாணின் அதிர்வு ,அதைச்
சுற்றியுள்ள காற்றின் தன்மையைப் பொறுத்ததில்லை .
இது குரல் நாணின் நிறை ,மற்றும் இழுமைத்
தன்மையைச் சார்ந்திருக்கிறது. ஒருவரது குரலின்
அதிர்வுகளின் நிறமாலை மாறாதிருக்கும். நிலையில் ,
ஹீலியம் செறிவுள்ள காற்றைச் சுவாசிக்கும் போது
அதிர்வுகள் உட்குழிவான வாயில் ஒத்ததிர்வு மூலம்
சில இணைச் சுரங்களை(harmonics) உயர்த்தி, அதன்
அதிர்வெண்ணில் மாற்றம் ஏதுமின்றி செறிவில் மாற்றம்
செய்கின்றன.

ஹீலியம் அணுவின் நிறை ,காற்றில் மிகக் குறைவாக
செறிவுற்றுள்ள ஹைட்ரஜன் தவிர்த்து பிற அணுக்களை
விட தாழ்ந்தது .அதனால் ஒலியின் திசை வேகம்
காற்றை விட ஹீலியத்தில் அதிகம் .ஒரு குறிப்பிட
அலை நீளமுள்ள ஒலியின் அதிர்வெண் காற்றை விட
ஹீலியத்தில் அதிகமாக இருக்கிறது .

                                                 *****************

இது என் குரல் தானா ?

ஒலிப் பதிவு செய்யப்பட்ட தனது குரலை ஒருவர்
கேட்கும் போது, அது தன் குரல்தானா என்று பலரும்
ஐயப்படுவார்கள் .அதற்குக் காரணம் அவர் நேரடியாகக்
கேட்டு உணர்ந்த வழக்கமான அவருடைய குரலுக்கும் ,
ஒலிப் பதிவு குரலுக்கும் வேறுபாடு இருப்பதாகும் . இது
வெறும் மனப் பிரமையா அல்லது அந்த வேறுபாடு
உண்மையானதா?
                                 *******************

.இந்தக் குரல் வேறுபாடு உண்மையானதாகும் .ஒருவர்
எழுப்பிய குரல் ஒலி,அவரைக்காட்டிலும் பிறருக்கு
மெலிதாகவே கேட்கும்.இதற்குக் காரணம் ஒருவர்
அவருடைய குரலை மண்டைஓட்டின் எலும்புகளின்
வழியாகக் கடத்தல் மூலமாகவும் ,காற்றில் அலை பரவி
காதில் விழுவதின் மூலமாகவும் அலை ஆற்றலைப்
பெற்று கேட்டு உணர்கிறார் .இதை நாம் எளிதாக உறுதி
செய்தும் பார்க்கலாம். விரலால் செவித் துவாரத்தை
அடைத்து வைத்துக்கொண்டும் ,உதடுகளை மூடிக்
கொண்டும் எழுப்பும் ரீங்கார ஓசை வலுவாகக்
கேட்பதையும் திறவலான நிலையில் மெலிதாகக்
கேட்பதையும் உணரமுடியும். ஒலிப் பதிவு செய்யப்பட்ட
குரலைக் கேட்டும் போது அது இது போல இரு வேறு
வழிகளால் பெற முடிவதில்லை .காற்றின் வழி கடந்து
செல்லும் ஒலியில் பெரும்பகுதி அதிர்வாற்றல்,300 ஹெர்ட்ஸ்
அதிர்வெண்ணுக்கு மேற்பட்ட அதிர் வெண்ணுடைய
அலைகளால் எடுத்துச் செல்லப்படுகிறது.இதற்குக் கீழுள்ள
அதிர்வெண் ஒலிகள் சிறிதளவு ஆற்றலை எடுத்துச்
செல்கிறது .

Friday, January 7, 2011

arika iyarppiyal

உள்ளே இருக்கும் இசை அமைப்பாளர் யார் ?




சங்கு அல்லது தெர்மாஸ் குடுவையின் வாயைக் காதருகே
வைக்க கடுகு தாளிப்பதைப் போன்றதொரு ஓசை
ஒலிப்பதேன் ?அந்த இசையை உள்ளே இருந்து எழுப்புவது
யார்?
                                        ****************

 
 
 
 
சங்கு தெர்மாஸ் குடுவை போன்றவற்றில் உள்ள
உட்குழிவான பகுதி ஒத்ததிர்வானாகச் (resonator)
செயல்படுகிறது.ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடன்
அதிர்வுறும் ஒன்று மற்றொன்றை அதே அதிர்வெண்ணுடன்
அதிர்வுறத் தூண்டுவது ஒத்ததிர்வு(resonance) எனப்படும்.
புறத்திலிருந்து இதனுள் செல்லும் எந்த ஒலியும்
உட்குழிவான பகுதியில் ஒத்ததிர்ந்து ,ஒலிச் செறிவை
பெருக்கிக் கொள்வதால் ஒரு விதமான ஓசை எழுகிறது .
மேலும் சுற்றுப்புற வெப்பநிலையில் இருக்கும் காற்று
அணுக்கள் உட்குழிவான பகுதியில் வெப்பஞ்சார்ந்த
இயக்கத்தைப் பெற்றிருக்கும் .இதனால் அவை
ஒன்றோடொன்று மோதவும், சுவரோடு மோதவும்
செய்கின்றன . இந்த ஓசையும் நிசப்தத்தை ஒழித்து
விடுகிறது .வெந்நீர் ஊற்றி வெளியேற்றிய பின் சூடான சுவர்
பகுதியைக் கொண்ட உட்குழிவுப்பகுதியில் வெப்பஞ் சார்ந்த
இயக்கம் தீவிரமாக இருப்பதால் இந்த ஓசைவலுவாக
இருக்கும்.

உட்குழிவை காதை ஒட்டி வைக்கும் போது
புறவெளியிலிருந்து பிற அதிர்வுகள் செவியை
எட்டுவதில்லை . அதனால் வெப்பஞ் சார்ந்த
துகளின் இயக்கம் எழுப்பும் ஒலியைத் தெளிவாகக்
கேட்க முடிகிறது .

Wednesday, January 5, 2011

arika iyarppiyal

மேகம் கோள வடிவில் இல்லதிருப்பதேன் ?



சிறிய நீர்மத் துளியாகட்டும், சோப்புக் குமிழாகட்டும்
எல்லாம் பரப்பு இழுவிசை காரணமாக கோள வடிவில்
அமைகின்றன. பிரபஞ்ச வெளியில் எங்கும் தற்சுழலும்
விண்ணுருப்புக்கள் யாவும் கோள வடிவம் கொண்டுள்ளன .
முப்பரிமாண உருவங்களில் கொடுக்கப்பட்ட
பருமனுக்கு குறைந்த பரப்பைக் கொண்டுள்ள வடிவம்
கோளமாகும். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில்
பரப்பாற்றலை சிறுமமாக வைத்துக் கொள்ளவே எந்த
அமைப்பும் விரும்பும் என்பதால் இது அப்படி நிகழ்கின்றது
எனலாம். ஆனால் நீர் நீராவியாகி,மேகமாகத் திரளும்
போது கோளவடிவில் அமைவதில்லையே .ஏன் ?

                                                       ***************
 
கொடுக்கப்பட்ட நிறையுடைய பாய்மத்தின் மொத்த ஆற்றல்
என்பது உள்ளாற்றல்,இயக்கவாற்றல்,நிலையாற்றல் மற்றும்
பரப்பாற்றல் இவற்றின் கூடுதலாகும். இவற்றுள் பரப்பாற்றல்
மட்டும் வடிவத்தின் பரப்பிற்கு நேர் விகிதத்தில் இருக்கிறது .
இது பரப்பு மற்றும் பாய்மத்தின் பரப்பு இழுவிசை இவற்றின்
பெருக்கல் பலனாகும் .கொடுக்கப்பட்ட பருமனுடைய பாய்மம்
கோள வடிவில் இருக்கும் போது இது சிறுமமாக
இருக்கிறது .ஒரு பாய்மம் ,வெற்றிடம் அல்லது கலவுறா
பாய்மத்தொடு தொடர்பு பெறும்போது ,பரப்பு இழுவிசை அதன்
புறப்பரப்பில் வெளிப்பட்டுத் தோன்றுகிறது .

மேகத்தில் நிறை வழியில் 99 .5 % வளிமமும் ௦.5 % நீர்மம்/பனிக்
கட்டியும் உள்ளன. காணும் படியான உருவத்தைப்
பெற்றிருந்தாலும் இதன் சராசரிப் பண்பு சற்றேறக்குறைய
வறண்ட காற்றை ஒத்திருக்கிறது.அதனால் அதன் பரப்பிடைத்
தளத்தில் பரப்பு இழுவிசை வெளிப்பட்டுத்
தோன்றுவதில்லை. அதனால் மேகத்தின் வடிவம்
உண்மையில் கீழிருந்து ஊட்டப்படும் நீராவி மற்றும் குளிர்
காற்று ,காற்று வீசும் வேகம் ,அப்பகுதியில்
உள்ள சுற்றுப்புறச் சூழலோடு மேற்கொள்ளும் இடைச் செயல் போன்றவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. இதைப் பொறுத்து ,அரைக்கோளம் ,நீள் உருளை (உயரமாக
வளர்ச்சி பெறும்போது) பரந்த பரப்பில் ஒரே சீராக விரவித்
தோன்றுதல் எனப்பலவிதமாக அமையும் .வீசும் காற்றால்
இழுத்துச் செல்லப்படுதல் என்பது அடர்த்தியைப் பொறுத்தது.
அதனால் ஒரு மேகத்தின் அடர்த்தியால் வேறுபட்ட
வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு வேகத்தில் இழுத்துச்
செல்லப்படுவதால்மேகம் விரிவடைவதைப் போலக்
காட்சியளிக்கும்

Vanna vanna ennangal

அது மட்டும் தெரிந்தால் ......



உறங்கிக் கிடக்கும் கல்லுக்குள்

உருவமொன்று ஒளிந்திருக்கு தெரியுமா?

கற்பனையில் அதை இனமறிய முடியுமா?

அது தெரிந்திருந்தால் உனக்கு

காணும் கனவுகளெல்லாம்

நாளைக்கு நடக்கப்போகும் நிகழ்வுகளாகுமே



இருண்டு கிடக்கும் இருளுக்குள்

உணரமுடியாத ஒளியிருக்கு தெரியுமா ?

எரியா விளக்கால் வழி காட்டமுடியுமா?

அது தெரிந்திருந்தால் உனக்கு

செல்லும் வழியெல்லாம்

வெற்றிக்கு வழிகாட்டும் பாதைகளாகுமே



மின்னி மறையும் மின்னலுக்குள்

மின்சாரம் ஓடுது தெரியுமா ?

கம்பியிலா மின்சாரத்தைக் கட்டுப்படுத்தமுடியுமா ?

அது தெரிந்திருந்தால் உனக்கு

செய்யும் செயலெல்லாம்

தொழில்நுட்பச் சாதனைகளாகுமே

Monday, January 3, 2011

Vanna vanna ennangal

பொழுது விடியுமா?


நீ என்ன சொன்னாலும் ஏனோ

நானும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்

ஏற்றுக் கொண்டதால் தானே

எல்லாம் இடியப்பச் சிக்கலானது

இன்னும் இன்னும் ஏற்றுக்கொண்டால்

என்னவாகும் என் நிலைமை

என்று எண்ணஎண்ண எகுறுதே

நெஞ்சிலோர் அச்சம்



நான் என்ன சொன்னாலும் ஏனோ

நீ ஏற்றுக்கொள்ள வெறுக்கிறாய்

ஏமாந்தவன் ஏமாற்றுகிறான் என்றுதானே

எண்ணியதால் எண்ணமே இடியானது

இன்னும் இன்னும் ஏற்றுக்கொண்டால்

இருக்க இடம் இல்லாமல் போகுமோ

என்று எண்ணஎண்ண கொதிக்குதே

உடலில் ஓடும் இரத்தம்




நாம் இருவருமே இப்பொழுது மட்டுமல்ல

எப்பொழுதும் இந்தியர்கள் தாம்

என்றைக்கோ ஒரு காலம்

வேற்றுநாட்டான் ஆண்டுபோனான்

என்பதற்காக நீயும் நானும்

அந்நியர்களாகி விடுவதில்லை

பிரிந்தே இருந்ததால்

நாம் எதிரிகளும் இல்லை


வார்த்தை அம்புகள் நித்தம்

நெஞ்சைத் தைக்க

மனித நேயத்தை மறந்துவிட்டு

இருவருமே வாழ்கிறோம்

இது ஒருநாளும் நிலையில்லை

என்பதை நமக்குணர்த்த இனி

இப்பூவுலகில் நம்மைத்

தவிர்த்து யாருமே இல்லை

Sunday, January 2, 2011

arika iyarppiyal

பற்றவைப்புத் தண்டுக்கு உகந்த உலோகம் எது ?




மின்னணுவியல் துறையில் மின் வாய்களையும்,
மின் கம்பிகளையும் இணைத்து மின் சுற்றை
ஏற்படுத்த ஈயத்தால் பற்றவைப்புச் செய்வார்கள் .
இதற்கு பற்றவைப்புத்தண்டு பயன்படுகின்றது.
மின்சாரத்தால் சூடுட்டி ஈயத்தை உருக்கி பற்ற வைக்க
வேண்டிய பகுதியை ஒடடியிணைபார்கள். இரும்பின்
வெப்ப ஏற்புத்திறன் செம்பை விட 20 %அதிகமானது .
அதனால் ஒரேயளவு நிறை ,ஒரே வெப்ப மூலம்
இருக்க, அக ஆற்றல் இரும்பாலான பற்றவைப்புத்
தண்டில், செம்பாலானதை விட 20 % கூடுதலாக
இருக்கும் எனலாம் . அப்படி இருக்கும் பொழுது
மலிவான இரும்பை விட, விலை மிக்க செம்பை
பற்றவைப்புத் தண்டு உற்பத்திக்கு பயன்படுத்துவதேன் ?


                                                ***************
பற்றவைப்புத் தண்டில் அகஆற்றல் முக்கியமானதல்ல.
சுயவெப்பம் அதிகமாக இருப்பின் ஒரு குறிப்பிட்ட அளவு
வெப்பங் கொடுக்க அதில் வெப்பநிலை உயர்வு மிகவும்
குறைவாக இருக்கும். அதுமட்டுமன்று பற்றவைப்புத்
தண்டின் பயன்பாடு எந்த அளவிற்கு பொருள்
வெப்பத்தை ஈயத்திற்கு ஊட்டி உருக்குகிறது என்பதையும் பொறுத்திருக்கிறது. செம்பின் வெப்பங் கடத்தும் திறன்
இரும்பை விட 6 மடங்கு உயர்ந்தது. எனவே செம்பாலான
பற்றவைப்புத் தண்டில் வெப்பம் விரைவாக
வெளியேற்றப்படுகிறது. இது தவிர செம்பு இரும்பைவிட
அரிமானத் தடை மிக்கதாகவும் இருக்கிறது .
                                                         ****************
எப்படி மிதந்தாலென்ன ?




ஒரு தடித்த உருட்டுக் கட்டையுடன் ஒரு பாறாங்கல் இறுக்கமாகக்
கட்டப்பட்டு ஒரு பாத்திரத்தில் உள்ள நீரில் விட அது மிதக்கின்றது .
பாறாங்கல் மேற்புறமாக இருக்க சரியாக பாதியளவு மரக்கட்டை
நீரில் அமிழ்கின்றது. மரக்கட்டை மேலாக இருக்கும் பொழுது பாறாங்கல்லும் பாதியளவை விடச் சற்று குறைவான அளவு
மரக்கட்டையும் நீரில் அமிழ்கின்றன .எந்த நிலையில்
அதிக அளவு நீர் இடம்பெறும் ? நீர்மட்டத்தின் உயரத்தில்
மாற்றம் ஏற்படுமா ?

                                                    ******************
மிதவையின் எடை மாறாத பொழுது ,அதனால் இடப்பெயர்வுக்கு உள்ளாகும் நீரின் எடையும் மாறாது. எனவே இரு நிலைகளிலும்
சம அளவு நீரையே இடப்பெயர்வுக்கு உள்ளாக்கும் .
நீரின் மட்டத்தில் மாற்றம் இருப்பதில்லை .