Friday, July 29, 2011

cartoon

அழுவோம் அப்புறம் முடிந்தால் சிந்திப்போம்



"அமைச்சர் கபாலி இந்தத் தேர்தலில் தோத்துப் போயிட்டாரே "

"ஆமாம், இப்போ சும்மா இருக்காம அனுபவங்களைக் கொண்டு

சினிமாப் படம் தயாரிக்கிறார் "

"என்ன படம் ?"

" பகல் கொள்ளைக்காரன்,திருடனுக்குத் திருடன், திருந்தாத திருடன், ,

பக்கா ரௌடி ,சங்கிலித் திருடன் ,பகலில் நடந்த கொலை "



eluthaatha kaditham

தன்னம்பிக்கை பெறுவது எப்படி ?



எல்லோரும் தன்னம்பிக்கை பெற்றவர்கள் போலச்
செயல் படுகின்றார்கள் ,பேசுகின்றார்கள் .ஆனால்
அவர்கள் எல்லோரும் வாழ்கையில் வெற்றி
பெறுவதில்லை .ஒரு சிலர் மட்டுமே வாழ்கையில்
கொண்டுள்ள தன்னம்பிகையினால் வெற்றி
பெறுகின்றார்கள், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டுகளாய்
திகழ்கிறார்கள்.அப்படியென்றால் உண்மையிலேயே
தன்னமைபிக்கை உடையவர்கள் மிகக் குறைவே.
உண்மையில் தன்னம்பிக்கை உடையவர்கள் எப்போதும்
தங்களை அப்படி வெளிக்காட்டிக் கொள்வதில்லை .
ஏனெனில் அது அவர்களுடைய குறிக்கோள் இல்லை.
அப்படிச்செய்ய முயற்சித்தால் குறிக்கோள் தடம் மாறிப்
போகும். அதை நிலை நாட்டுவதே குறிக்கோளாகி ,
குறிக்கோள் எல்லை சுருங்கிப் போய்விடும்.

தன்னம்பிக்கை பெறுவது எப்படி என்று சொல்வது எளிது.
ஆனால் அதைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியம்
இல்லை. இது மனதின் அழகு என்பதால் பிறரால் அது
இருக்கிறதா இல்லையா என்பதை எளிதில் கணித்துவிட
முடிவதில்லை அதனால் எல்லோராலும் அது
இல்லாமலேயே பிறரை ஏமாற்றிவிடமுடிகிறது.
தன்னம்பிக்கை பெறுவதற்கு முதலில் வேண்டுவது மனத் திண்மை,அலைபாயாத மனம்,தேவைக் கேற்ற குறிக்கோள் ,
குறிக்கோளுக்கேற்ற உழைப்பு,உழைப்புக்கேற்ற முன்திட்டம்
இவை எல்லாம் ஒரு சேரத் தேவை .இதில் ஏதேனும் ஒன்று
குறை பட்டாலும் வெற்றி இலக்கை எட்ட முடியாது.

நாம் கொடுக்கக் கூடிய எந்த அறிவுரையும் ,சாதாரண
சூழ்நிலைகளுக்குப் பொருந்தி வரக்கூடியதாகவும் ,
இயல்பாக நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க
வேண்டும். அப்படிப் பட்ட அறிவுரைகள் மட்டுமே இயற்கையானதாகவும்,எல்லோருக்கும்
இணக்கமானதாகவும் இருக்கும் . சில சமயங்களில்
நம்முடைய அபரிதமான ஈடுபாடு காரணமாகக்
கூறப்படும் அறிவுரைகள் பிள்ளைகளின்
பின்னேற்றத்திற்கு காரணமாகி விடுகின்றன.

நோய்க் கிருமிகள் நுழைய முடியாத பாதுகாப்பான
அறைக்குள் வளர்க்கப்படும் ஒரு குழந்தை ,அந்த
அறையை விட்டு வெளியேறி சாதாரண சூழ்நிலைக்கு
வரும் போது அந்தக் குழந்தை எந்த நோயால்
தாக்கப்படக்கூடாது என்று காத்தோமோ,அதே நோயால்
தாக்கப்படுவதற்கு பல நூறு மடங்கு அதிக வாய்ப்பைப்
பெறுகின்றது. .அதைப் போலத்தான் எந்த எண்ணங்களின்
தாக்குதல் இருக்கக் கூடாது என்று கருதி அறிவுரைகள்
என்ற போர்வையால் சில காலம் பாதுகாத்தாலும் ,
அதன் பிறகு அந்த எண்ணம் தீவிரமாக் வலுப்படத்
தொடங்கும்.

இதன் பொருட்டு அறிவுரைகள் தேவை இல்லை என்று
கூறிவிட முடியாது. அறிவுரைகள் கூறும் போது அவை
இயல்பாக ஏற்றுக் கொள்ளத் தக்கனவாக இருக்க வேண்டும். திணிக்கப்படுகிறது என்ற உணர்வை ஒரு சிறிதும் தருவதாக
இருக்கக் கூடாது.

அறிவுரைகள் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பதும்
ஆபத்தானது. அது ஏற்றுக் கொள்ளப் படாமல் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுவதற்கு அதுவே கூட வலுவான காரணமாகி
விடலாம்.

Monday, July 25, 2011

eluthaatha kaditham

எப்போதும் சுதந்திரமாக இருப்போமே .


வாழ்க்கை என்பது மிகமிக எளிமையானது. நாம் தான்அதைச்

சிக்கலாக்கிக் கொண்டு தவியாய் தவிக்கிறோம். இதற்குக்

காரணம் மனதளவில் நாம் எப்போதும் சுதந்திரமாக

இருப்பதில்லை.

சிக்கிக் கொள்வதற்கும்,சிறைப்படுவதற்கும் காரணம்

பிரச்சினைகள் தான். பிரச்சினைகளை தேவையில்லாமல்

நம்முடனேயே தேக்கி வைத்துக்கொள்கிறோம். நம்மைத்

தீண்டாதிருந்தாலும்,தீண்டி விட்டு விலகி இருந்தாலும் ,

நாம் அவற்றை விட்டுவிடுவதில்லை. கை விலங்கைப்

போல மன விலங்கை நமக்கு நாமே மாடிக் கொண்டு

காலமெல்லாம் அவதிப்படுகிறோம்.


சுதந்திரத்தின் உண்மையான பொருள் விளங்காதவர்கள்

தாம், தன மனப் போக்கிலேயே, தவறாக இருந்தாலும்

அப்படியே சிந்திப்பதும், குற்றமாக இருந்தாலும் அதையே

செய்வதும்தான் தனி மனிதச் சுதந்திரம் என்று தவறாகப்

பொருள் கொள்கிறார்கள்.

சுதந்திரம் என்றால் உனக்கு ஒரு பொருள் ,மற்றவனுக்கு

வேறு பொருள் இல்லை. எல்லோருக்கும் ஒரே பொருள்

கூறுமாறு இருந்தால்தான் அது உண்மையான சுதந்திரம்.

இதன் அடிப்படையில்,சுதந்திரம் என்பது காலமெல்லாம்

தொடர்ந்து வெற்றிநடை போடும் இயற்க்கையைப்போல,

இயற்கையான சிந்தனைகளையும் ,செயல்களையும்

செய்வதுதான் என்று பொருள் விளக்கம் கூறலாம். .இப்படிப்

பட்ட அணுகுமுறை மட்டுமே பிறருடைய சுதந்திரத்தில்

குறுக்கீடு செய்வதில்லை.

எதைப் படிக்க வேண்டும் ,எதைப் படிக்கக் கூடாது, எதைப்

பார்க்க வேண்டும் எதைப் பார்க்கக் கூடாது, எதைக் கேட்க

வேண்டும் ,எதைக் கேட்கக் கூடாது,எதைச் செய்ய வேண்டும்

எதைச் செய்யக் கூடாது என எல்லாவற்றிலும் தேர்வு செய்யும்

மனப்பான்மையை ஒருவருடைய சுதந்திரம் வளக்கிறது .

சுதந்திரமாகச் சிந்தித்தாலே சுதந்திரமாக வளர முடியும்,

சுதந்திரமாக வாழ்ந்தாலே சுதந்திரமாகச் செயல் படமுடியும்.

எனவே சுதந்திரமாகச் செயல்படுவதிற்கு மட்டுமிற்றி,

சுதந்திரமாகச் சிந்திப்பதற்குக் கூட ஒரு தைய்ரியம்

இருக்க வேண்டும். (தவறாகச் சிந்திப்பது வேறு,

சுதந்திரமாகச் சிந்திப்பது வேறு )

போட்டி ,பொறாமை,பேராசை,இழப்பு ,துன்பம் துயரம் .

வருத்தம். கோபம் போன்றவற்றால் ஏற்படும் மன

உளைச்சல் சுதந்திரமான சிந்தனைகளைத் தொடக்க

நிலையிலே வேரறுத்து விடுகிறது .

பாசம்,நேசம்,அன்பு,நட்பு, நீதி,நேர்மை,தானம் ,தர்மம் ,

மகிழ்ச்சி,நெகிழ்ச்சி போன்றவை மனதை உற்ச்சாக

மூட்டுகின்றன .இச்சூழல் சுதந்திரத் தனமான

சிந்தனைககள் தோன்ற அனுகூலமாய் இருக்கிறது.

சுதந்திரம் என்பது நற்ப்பண்பினங்களின் சேர்க்கை

என்றால் அதில் காணப்படும் ஒவ்வொரு குறைபாடும்

மனிதர்களுடைய நேர்மைத்தனத்தைச் சீரழிக்கிறது

என்று கூறலாம். இவை இரண்டிற்கும் உள்ள

தொடர்பைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறும் போது

சுதந்திரத் தனமான சிந்தனைகளின் வறுமையால்

ஏற்படும் இழப்புகளையும் தெரிந்து கொள்ளமுடிவதில்லை .

eluthaatha kaditham

எதிரிகளை ஜெய்க்க விடலாமா ?


போட்டித் தேர்வில் பெருவாரியான மாணவர்கள் தோல்வியுற்று

கவலைப் பட்டுக் கொண்டிருந்தனர் . உற்சாக மூட்ட வேண்டிய

அவசியத்தை உணர்ந்த ஒரு பேராசிரியர் அம்மாணவர்களை

அழைத்து ஆறுதலும் அறிவுரையும் கூறினார்.

" யாராவது எதிரிகளை ஜெய்க்க விடுவார்களா ? " என்று

பேராசிரியர் கேட்க ,அதற்கு "மாட்டார்கள் " என்று ஒருமித்த

குரலில் மாணவர்கள் பதில் கூறினார்கள்.

பேராசிரியர் பலமாகச் சிரித்துவிட்டு ,"நீங்கள் எல்லோரும் பொய்

சொல்கின்றீர்கள் . உங்களுக்கு நீங்களே பொய்யராக இருக்கும்

வரை நீங்கள் வெற்றி பெறுவது என்பது உங்கள் முயற்சியின்

பலனாக இல்லாது,குருட்டு அதிருஷ்டமாகவே இருக்கும் "

என்றார்.

மாணவர்களிடையே சலசலப்பு சற்று அடங்கியவுடன்,

"இதை நான் தக்க ஆதாரத்துடன் தான் கூறுகின்றேன் "

என்று கூறிவிட்டு விளக்கத் தொடங்கினார்.

" மாணவர்களே,எதிரிகள் கண்ணுக்குத் தெரியும்படி புற வெளியில்

மட்டும் இருப்பதில்லை. கண்ணுக்குத் தெரியாமல் அக வெளியிலும்

இருப்பதுண்டு. இதைத்தான் உள் எதிரி என்றும் மனிதனுக்குள்

ஒரு மிருகம் என்றும் கூறுகின்றார்கள் .ஒவ்வொரு

மனிதனுக்குள்ளும் இந்த எதிரி வளர்ந்து வருகிறான் .அவன் மாறு

வேஷம் போட்டு ஏமாற்றுவான்,

எண்ணங்களை கலைத்து தீய செயல்களில் ஈடுபடத் தூண்டுவான் ,

சுகம் தேடும் வேலையில்லச் சோம் பேரியாக்குவான் . மனக்

கண்ணாடியில் அவன் உன்னைப் போலவே காட்சிதருவதால் ,அவன்

வேறு நீ வேறு என்பதை அறியமுடிவதில்லை. பெரும்பாலும்

அவனுடைய கில்லாடித் தனமானஏமாற்று வேலைகளில்

எல்லோரும் ஏமாந்தே போகின்றார்கள்

சொல்லப்போனால் நம் மனதிற்குள்ளே இரண்டு மிருகங்கள்

இருக்கின்றன தெரியுமா ? " என்று சொல்லிவிட்டு

மாணவர்களின் முகத்தில்

ஏற்படும் மாற்றங்களை கவனித்தார் பேராசிரியர் .

"அப்படியா ?" ஆச்சரியத்துடன் கேட்டனர் மாணவர்கள்.

" ஆமாம் ,ஒரு மிருகம் பால் தரும் பசு போன்றது. வீட்டில்

வளர்க்கப்படும் சைவ விலங்கு . நற்பண்புகள் ,

ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் ,நேர்மை ,

நியாயம் இவை மட்டுமே இதற்குத் தெரியும். மற்றொரு

மிருகம் கொடிய காட்டு விலங்கு போன்றது. அசைவ

விலங்கு .தீய பண்புகள் ,அழிவுப்பூர்வமான எண்ணங்கள்,

கொடுமை, அநீதி போன்றவைகள்

மட்டுமே இதற்குத் தெரியும். பசு தன் போக்கில் இருந்தாலும் காட்டு

விலங்கு எப்போதும் அதை அழிக்கவே நினைக்கும்.

பசுவை பாதுகாப்பாக நீ வளர்க்காவிட்டால் ,ஒருநாள்

அந்தப் பசு காட்டு விலங்கிற்கு இரையாகிவிடும் .



உனக்குள் உலவும் இந்த காட்டு விலங்கைச் சிறைப் படுத்தி

ஒரு கட்டுக்குள் வைக்காவிட்டால்,உங்கள் எதிரிகள் ஜெய்ப்பதை

ஒருபோதும் தடுத்து நிறுத்திக்கொள்ள முடியாது. அப்போது

உங்கள் வெற்றிக்குத் தோல்விகள் ,

தோல்விக்கு வெற்றிகள் வந்த சேரும்", என்று சொல்லி தன்

நெடிய உரையை முடித்தார் பேராசிரியர்..

Saturday, July 23, 2011

eluthaatha kaditham

மக்களிடையே பெருகி வரும் மாற்றுத் திறனாளிகள்


உடல் உறுப்புகளில் ஒன்றை இழந்தவரை ஊனம் என்று

சொன்னால் அது அவர் மனதைப் புண்படுத்தும் என்று

மாற்றுத் திறனாளி என்றொரு மாற்றுச் சொல்லை

உருவாக்கினார்கள் .இது ஒரு விதத்தில் சரியானதே .

ஏனென்றால் ஊனமுற்றோர் பெரும்பாலும் தங்கள்

திறமையை வேறொரு விதத்தில் வெளிப்படுத்திக்காட்டும்

வலிமையை வளர்த்துக் கொண்டு விடுகிறார்கள்



உடல் ஊனமாக இருந்தாலும் மனம் ஊனமாக

இல்லாதிருந்தால் அவர் இந்த மாற்றுத் திறனை

சுயமாக வளர்த்துக் கொண்டு பிற்காலத்தில்

சிறப்பாக வெளிப்படுத்திக் காட்ட முடியும் .

இதற்ககு ஹெலன் கெல்லர் சரியான எடுத்துக்காட்டு

இவர் குழந்தையாக இருந்த போது நோய்வாய்ப்பட்டு

பார்வை,பேச்சு,கேட்கும்திறன் எல்லாவற்றையும்

இழந்தார் .எனினும் மனம் தளராமல் படித்து பல்கலை

கழகத்தில் பட்டம் பெற்றார். .சமுதாயத்தில் எழுச்சியைத்

தூண்டும் வண்ணம் பல கட்டுரைகளை எழுதினார். .

ஆதரவற்ற மக்களின் குரலை எதிரொலித்து அவர்களின்

மேம்பாட்டிற்காக மிகுந்த பொருள் திரட்டிக் கொடுத்தார் .

பார்வை இழந்தவர்களின் மறுவாழ்விற்காக உதவுவதை

தன வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் .

பார்வை,பேச்சு, கேட்கும்திறன் இல்லாத ஒரு

பெண்மணியால் இப்படி சாதிக்க முடிகிறது என்றால்

எல்லா உடல் தகுதிகளையும் சக்தியும் கொண்ட

நம்மால் என்னென்னவெல்லாம் சாதிக்கமுடியும்.?

என்னுடைய பார்வையில்இந்த உண்மையான

மாற்றுத் திறனாளிகலிருந்து வேறுபட்டு போலியான

மாற்றுத் திறனாளிகள் இன்றைக்கு சமுதாயத்தில்

வெகுவாக அதிகரித்து வருகிறார்கள் .

உறுப்பை இழந்து உடலால் ஊனமாகி அவ்வுறுப்பால்

பயன் பெறமுடியாததால் திறமையை வேறு

விதங்களில் வளர்த்துக் கொண்டு வெளிப்படுத்துவோரை

நேர்மறை (Positive ) மாற்றுத் திறனாளி என்று கூறலாம் .

ஆனால் உடல் உறுப்புகள் யாவும் சரியாக இருந்தும்

சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதவர்களை எப்படி

அழைப்பது ? உறுப்பு இருந்தும் பயன்படுத்திக்

கொள்ளதவரைப் பொறுத்த மட்டில் அவர் அந்த உறுப்பு

இல்லாத ஊனமே ஆவார். மனஊனத்தை மறைப்பதற்காக

அவர் பெரும்பாலும் தீய செயல்களில் மறைமுகமாக

ஈடுபடுவார் . இவர்களை எதிர்மறை (negative ) மாற்றுத்

திறனாளிகள் எனலாம் . சமுதாயத்தில் இன்றைக்கு இந்த

எதிர்மறை மாற்றுத் திறனாளிகள் பல்கிப் பெருகி

வருகின்றார்கள் . கை கால்கள் நன்றாக இருந்தும்

உழைக்க மறுத்து பிறர் உடைமைகளை அபகரித்துக்

கொள்பவர்கள் , மூளை இருந்தும் பாடத்தைப் படித்துப்

புரிந்து கொண்டு தேர்வு எழுதாமல் , காப்பி அடித்து

எழுதுகின்ற மாணவர்கள் ,வாக்குறுதிகளால் மக்களை

ஏமாற்றி பொதுப் பணத்தையும் ,சொத்தையும் கொள்ளை

அடிக்கின்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள்

இவர்களை எதிர்மறை மாற்றுத் திறனாளிகள்

என்று அழைக்காமல் எப்படி அழைப்பது ?



வீட்டிற்கும் நாட்டிற்கும் இவர்காளால் அவப்பெயர்

.இவர்கள் எல்லோரும்

தங்களின் அக ஊனத்தை அறியாதவர்களே ஆவார்.