Sunday, January 7, 2018

short story

ஆன்மீகச் சிறு கதை
கடவுளைக் கண்டேன்                                                                                                                        "கடவுள் இருக்கின்றாரா "                                                                                                              "இருக்கின்றார்"                                                                                                                                  " எங்கே இருக்கின்றார் ?"
"எங்கும் இருக்கின்றார் "
" அப்படியென்றால் கடவுள் ஏன் ஒருவர் கண்களுக்கும் தென்படவில்லை ?"
"எல்லோருக்கும் தென்படவேண்டும் என்பதற்காக ஒருவருக்கும் தென்படவில்லை "
"புரியவில்லை. இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா ?
மின் விசிறியைச் சுட்டிக்காட்டி  " இந்த மின் விசிறியில் எத்துணை இறக்கைகள் இருக்கின்றன ?"
"மூன்று "
"உனக்குத் தெரிகின்றதா ? "
"தெரிகின்றது "
மின் விசிறியை ஓட விட்டுவிட்டு  " இப்பொழுது அந்த விசிறிகள் தெரிகின்றதா ?
"தெரியவில்லை '
"ஏன் ? "
"அவை எங்கும் சுற்றிக் கொண்டிருப்பதால்  கண்களால் பார்க்கமுடியவில்லை ஆனால் தெரிந்து கொள்ள முடிகின்றது "
" சரியாகச் சொன்னாய் .. கடவுள் உனக்கும் எனக்கும் மட்டுமல்ல . எல்லோருக்கும் பொதுவானவர். மின் விசிறி போல உலகைச் சுற்றி ஓயாது வளம் வரும் கடவுளைக் காணமுடியாது , உணரத்தான் முடியும் "
 கடவுளைக் கண்டு விட்ட மகிழ்ச்சியால்  மனம் ஆனந்தக் கூத்தாடியது. 

No comments:

Post a Comment