Thursday, July 10, 2025

 நாடாக இருந்தாலும் சரி , தனிமனிதனாக இருந்தாலும் சரி , சமுதாயமாக இருந்தாலும் சரி  தடையில்லாத  முன்னேற்றத்திற்கு மனித உழைப்பு வேண்டும் . இந்த உழைப்பை த் தரக்கூடிய மனிதர்கள் மிகுதியாக இருக்கும் நம் நாட்டில் முன்னேற்றம் என்பது அரசியல்வாதிகளின் வாய்ப் பேச்சில் மட்டுமேயுள்ளது . ஒரு பக்கம் இந்தியாவில் உழைக்காமலேயே பெரும் செல்வம் சேர்க்கும் ஒரு கூட்டம் உள்ளது . இவர்கள் அரசியலை ஒரு பாதுகாப்புக் கவசமாகக் கொண்டுள்ளார்கள் . இவர்களே அதிகாரமிக்கவர்களாக இருப்பதால் இவர்களை கா வர்களாலோ , நீதிபதிகளினாலோ கட்டுப்படுத்த முடியவில்லை . மற்றொரு பக்கம் எங்கு நோக்கினும் பிச்சைக்காரர்கள் . கோயில்  வாசலில் ஒரு கூட்டம் ஐந்துக்கும் பத்துக்கும் அலைமோதுது . கோயில் உட்புறம் ஒரு கூட்டம் நூறுக்கும் இருநூறுக்கும்  இறைப்பணி யாற்றுகின்றது. கோயிலுக்கே வராமல்  ஒரு கூட்டம் லட்சம் லட்சமாக கொள்ளையடிக்கின்றது. தெருக்களில் , ஹோட்டல் வாசலில் , சிக்னல் நிறுத்தங்களில் , வர்த்தக மையங்களில்  பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. உழைக்கும் தகுதியானவர்களை பயன் படுத்திக்கொள்ளாமல் , உழைப்பை ப் புறக்கணிப்பதால் நாம் நம்முடைய முன்னேற்றத்தை பெரிதும்  இழந்து வருகின்றோம். நாட்டிலுள்ள அரசியவாதிகள் மட்டுமே செல்வந்தர்களாக இருப்பது நாட்டின் முன்னேற்றத்தைக் குறிப்பதில்லை . அது நாட்டின் அவலம்      என்றுதான் நான் கூறுவேன் 

Wednesday, July 9, 2025

 இன்றைக்கு சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை ஆராயும் போது  சுயவருமானத்திற்காக அதிக குற்றங்களைச் செய்வது பொதுமக்களை  விட அவர்கள் நலனில் அக்கறைகொண்டவர்கள் போல நடிக்கும் அரசியல் வாதிகளே. இதை சாட்சியுடன் நிரூபிக்க மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை . அதிகாரம் மிக்க அரசியல்வாதிகள் ,அதிகாரிகளின் துணையுடன் தங்களை எதிர்க்கும் மக்களை நசுக்கிவிடுகின்றார்கள் . இது பல ஆயிரம் முறை சமுதாயத்தில் அரங்கேறியிருக்கின்றது . என்றாலும் அதற்கான நிவாரணத்தை ப்பற்றி யாரும் சிந்திக்க மறுக்கின்றார்கள் . கருத்து சொல்வதற்கே அச்சப்படுகின்றார்கள் . பொது வாழ்வில் ஊழல் குற்றங்களே முதன்மையானது. அரசின் நிதி அங்கே அரசியல்வாதிகளாலும் ,அதிகாரிகளினால் சுரண்டப்படுகின்றது . இதைத் தடுப்பது அதற்கு  பொறுப்புள்ள ஆட்சியாளர்களால் முடியாமல் போனதற்கு காரணம் அவர்களே அதை விரும்பிச் செய்வதுதான்.. எனவே இதைத் தடுக்கும் பொறுப்பை  நீதிபதிகளின் கூட்டமைப்பே மேற்கொள்ளவேண்டும் .