Saturday, March 21, 2026

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியம் என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றார்களோ அதைவிட முக்கியம் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்மையானவர்களாக , மக்கள் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக ,உறுதியான கொள்கைப் பிடிப்பும் அறநெறியை ப்பின் பற்றும் குணமும் கொண்டிருக்கவேண்டும். கட்சியின் தலைவருக்கு ஒரு கூலியாகச் செயல்படக்கூடாது. தேர்ந் தெடுக்கப்படுபவர் மக்களால் தேர்தெடுக்கப்படவேண்டுமானால் அவர் அதே மக்களாலும் முன்மொழியப்படவேண்டும் . கட்சித் தலைவர் மட்டுமே முடிவு செய்வாரேயானால் அது சர்வாதிகாரமா ன முடிவாகும் . தேர்தல் என்பது போட்டியில் பங்கேற்பதில்லை. போட்டியாளர்கள் எல்லோரும் ஒரே மேடையில் சந்தித்து ஒவ்வொருவரும் அவர்கள் தேர்தலில் நிற்பதற்கான நோக்கத்தை ,ஆதரப்பூர்வமாக வாதாடவேண்டும். அங்குதான் எது உண்மை எது பொய் என்பது மக்களுக்குத் தெரியவரும் . சட்டத்தை மாற்றுங்கள் .

No comments:

Post a Comment