Monday, March 26, 2012

arika ariviyal

மரணம் என்பது என்ன ?




மருத்துவ அறிவியலின் படி மரணம் என்பது உடலிலுள்ள உயிர்ச் செல்களின் இயக்கமின்மை என்று வரையறுக்கலாம் .
முக்கிய உறுப்புக்கள் இயக்கமின்றி செயலற்றுப் போனதையே நாம் மரணம் என்று கூறுகின்றோம்
மருத்துவ அறிவியலில் மரணத்தை இரு வகையாக விவரிக்கின்றார்கள் .அதை நாம் மருத்துவச் சாவு
(Clinical death ) என்றும் ,மூளைச் சாவு (Cerebral death ) என்றும் குறிப்பிடுகின்றோம் .
மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங்களினால் இதயம் இயங்காது நின்று போவதாகும் .அப்போது இதயத் துடிப்பு
சிறிதும் இல்லாதிருக்கும். எலெக்ட்ரோ கார்டியோ கிராமில் (electro cardiogram ) பதிவு செய்ய இதயத்தின் இயக்கம்
தொடர்பான சமிக்கை அலைகள் வெளிப்படுவதில்லை.
ஆனால் மனித மரணத்தை ஆய்வு செய்த உடற்கூறு வல்லுனர்கள் ,இதயம் நின்று விட்டாலும் மூளை இதயத்தோடு
உடன்கட்டை ஏறுவதில்லை .இதயம் நின்று போய்விட்டாலும் ,அரை மணியிலிருந்து 2 மணி நேரம் வரை இந்த
மூளை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது .
இந்த இடைக்காலத்தில் மூளையின் இயக்கத்தை பதிவு செய்யும் எலெக்ட்ரோ என்சிபலோகிராம் (electro encephalogram )
மூளை இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் காட்டியிருக்கிறது. .இக் கால வரம்பிற்குப் பிறகு
மூளையும் இயக்கமற்று செயலிழந்து விடுவதால் ,மூளையிலிருந்து சமிக்கை அலைகள் வெளிப்படுவதில்லை. .
இதையே மூளைச் சாவு என்கிறோம் . மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான சாவாகும். ஏனெனில் இதற்குப்
பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது.
மருத்துவச் சாவிற்கும் ,மூளைச் சாவிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு நோயாளி இரு வேறு சாவு நிலைகளுக்குமிடையே
ஊசலாடிக் கொண்டிருப்பதாகக் கூறலாம் . இக் காலத்தில் இதயத்திற்கு அதிர்ச்சி கொடுத்து அதன் இயக்க நிலையைத்
திரும்பப் பெறமுடியும் வாய்ப்பிருப்பதால் மருத்துவச் சாவை அடைந்தவர் தா உயிரை மீட்டுப் பெற முடியும் . அதற்கான
வாய்ப்பில்லாத போது ,உடலுறுப்புக்கள் அனைத்தும் செயலற்ற நிலையை படிப்படியாக அடையும் . அதனால் ,இக் கால
கட்டத்தில் சிறு நீரகம் ,கண்கள் போன்ற உடலுறுப்பக்களைத் தானமாகப் பெற்று மாற்று அறுவைச் சிகிச்சைக்குப்
பயன்படுத்துவர் .மூளைச் சாவிற்குப் பிறகு அகற்றப் படும் உடலுறுப்புக்கள் மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பயன் படுவதில்லை .
இதயம் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலை உறுப்புகளுக்கு வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது ..அது
நின்று விட்டால் ,ஆற்றல் பகிர்மானம் உடனடியாக நின்று விடுவதில்லை .இதையே lagging என்று அறிவியலில்
குறிப்பிடுகின்றனர் . இதயம் ஓய்ந்த பிறகு, பிற உடலுறுப்புக்கள் படிப்படியாக e -ன் அடுக்குச் சரிவில் (exponential )
ஓய்வடைகின்றன.

No comments:

Post a Comment