Monday, March 31, 2014

Eluthatha kaditham

எழுதாத கடிதம் 
அரசு அலுவலகங்கள் யாவும் மக்களுக்காகப் பணியாற்றி உதவி செய்யும் அமைப்புக்களாக இல்லாது வர்த்தக அமைப்புகள் போலச் செயல்படுகின்றன. எந்த அலுவலகம் சென்றாலும் நேர்மையான அணுகுமுறையால் ஒரு சிறிய காரியத்தைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடிவதில்லை.தவறான அணுகுமுறையால் தவறான காரியங்கள் கூட நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையயை அளிப்பதற்காக 
எல்லா அலுவலகம் முறை தவறி நடந்து வருகின்றன. .தவறான அணுகுமுறையை மட்டுமே நாட வேண்டும் என்ற நோக்கில் ஏறக்குறைய எல்லாப் பணியாளர்களுமே செயல்பட்டு வருவது மிகுந்த மன வருத்தத்தைத் தருகின்றது
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ,சார் பதிவு அலுவலகம்,ஊராட்சி, பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி அலுவலகங்கள்,தாலுகா,ஆட்சியாளர் அலுவலகங்கள்,கருவூலம்,வணிக்கவரி அலுவலகம்,காவல் துறை அலுவலகங்கள்,என எல்லா வகையான அரசுத் துறை அலுவலகங்களும் மக்களைப் பாடாய்ப் படுத்துகின்றன.சில நிமிடங்களில் முடிக்கக் கூடிய காரியங்கள் எல்லாம் பல மாதங்கள் இழுத்தடிக்கப்படுகின்றன.
கையூட்டுக் கொடுத்தால் மட்டுமே காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற இழி நிலை இன்றைக்கு நிலைப்பட்டு வருகின்றது. தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையில் யாருக்கும் இல்லை. இப் போக்கைத் தடுத்து நிறுத்தி நெறிப்படுத்திக் கொள்ளாவிட்டால் இனி வரும் நாட்களில் எந்தவொரு கால கட்டத்திலும் அதை அகற்றிக் கொள்ளவே முடியாது.அதனால் நமது ஒருங்கிணைந்த முன்னேற்றம் சிறிதும் இல்லாது போகும். ஒருங்கிணைந்த பணி, பணியில் நேர்மை,ஆர்வம்,தொழில் நுட்பம்,செயல் திறன்,போன்றவற்றில் காட்டப்படாத கவனத்தால் நம்முடைய முன்னேற்றம் பெருமளவு பாதிக்கப்படுகின்றது

1-2 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதற்கு நிரந்தரமில்லாத சில காரணங்கள் ஆட்சியாளர்களுக்கு இருக்கலாம்.ஆனால் ஊழல்,இலஞ்சம்  இவற்றை முழுமையாக ஒழித்துக் கட்டிவிட்டால் வேறு எந்த புதிய முயற்சியுமின்றி சும்மா இருந்தாலே வளர்ச்சி வீதம் பல மடங்கு உயரும். 50 சதவீத வளர்ச்சியை எட்டுவது கூட சாத்தியமே

No comments:

Post a Comment