Wednesday, April 2, 2014

eluthatha kaditham

 எழுதாத கடிதம்
சரத் பாவர் நேர்மையான அரசியல்வாதியா என்ற ஐயம் எழுந்துள்ளது. இரண்டு இடங்களிலும் வோட்டளிக்குமாறு மக்களைத் தூண்டிவிட்டதாக தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையானால் திரை மறைவில் தன்னுடைய சுய லாபத்திற்காக என்னென்ன செய்திருப்பார்.அரசு அதிகாரிகளை எவ்வளவு தூண்டிவிட்டுக் கெடுத்திருப்பார். இவரை நம்பி நாட்டு மக்கள் ஏமாந்து தான் போகின்றார்கள். இவரை மீண்டும் தேர்ந்தெடுத்து ஆட்சியில் பங்கேற்க மக்கள் வாய்ப்பளித்தால் நிச்சியம் இந்திய மக்கள் நிரந்தரமான முட்டாள்களாகத்தான் இருக்கமுடியும். நம்மை முன்னேற்றி விடுவதாகக் கூறிக் கொண்டே அவர்கள் மட்டுமே தொடர்ந்து முன்னேற்றத்தை முழுமையாக அனுபவித்து வருகின்றார்கள். அவர்கள் எப்போதாவது தரும் சில நூறு ரூபாய்களுக்காக நாம் நம்முடைய வாழ்க்கையைத் தொலைத்து விடுவதோடு நாட்டின் ஒளிமயமான வாழ்க்கையையும் சாகடித்து விடுகின்றோம்.


No comments:

Post a Comment