Saturday, January 26, 2019

SONNATHUM SOLLAATHATHUM -SACHCHIN

"வெற்றி ,தோல்வி இரண்டிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களின் முக்கியத்துவம் சமமானவை.  வெற்றி , மகிழ்ச்சியைக் காட்டிலும், தோல்வியும் துன்பமும் கற்றுக்கொடுப்பதில் சிறந்த பேராசிரியர்களாக விளங்குகின்றன." 
  

 மிகப் பெரிய சாதனை புரிய முயற்சிக்கும் போது தோல்வியைச் சந்தித்தாலும்  அது தோல்வியல்ல.உண்மையில் அது வெற்றியின் முதல் படி .வெற்றியின் ரகசியங்கள் தோல்விகளுக்குள்  தான் புதைந்து இருக்கின்றன .தோல்வியால் துவண்டு முயற்சியை விட்டுவிடுவது தான் மெய்யான தோல்வி . வெற்றிக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன ஒன்று செய்ய வேண்டியத்தைச் சரியாகச் செய்வது , மற்றொன்று  செய்யக்கூடாததைச் செய்யாமல் தவிர்ப்பது. .சரியாகச் செய்து வெற்றி பெற்றவனைக் காட்டிலும் சரியாகச் செய்யாமல் தோல்வி கண்டவன் கூடுதலான அனுபவத்தைப் பெறுகின்றான். அந்த அடிப்படையில் தோல்வி கூட ஒருவருடைய முயற்சிக்கு இயற்கை கொடுக்கும்  பரிசு என்ற நினைக்க வேண்டும் .
"குறை கூறுபவர்கள் நான் எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர்கள் இல்லை. என்னுடைய உடல் வலிமையையும் மனத் திடமும் எத்தகையது  என்பதை அவர்கள் அறிவார்களா ? குறையும் நிறையும் ஒருவரை மற்றவருடன் ஒப்பிடும் போதுதான் தோன்றுகின்றது. .அதனால்  ஒப்பிட்டுப்பார்ப்பதை விட்டுவிட வேண்டும்"
"பந்து என்னை நோக்கி வரும்போது அதை மிகக் குறுகிய நேரத்தில் மதிப்பிட்டு விளையாட வேண்டும். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்கின்றார்கள் என்பதைப் பற்றிப் நான் நினைத்துக் கொண்டிருக்க முடியாது .என்னுடைய செயலை என் உள்ளுணர்வுகளுக்கு அர்ப்பணித்து விடுவேன். என் அக மனத்திற்குத் தெரியும் நான் இனி என்ன செய்யவேண்டும் என்பது . நான் என்னை  அப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றேன் ."
திறமை உண்மையானதாக இருந்தால்  மனதில் நம்பிக்கை இயல்பாக  இருக்கும். ஒவ்வொருவரும் சுயசார்புடன் செயல்படுவதற்கு இந்தத் தன்னம்பிக்கை தேவை. நம்பிக்கை இருக்கும் போதுதான் வழிமுறைகள்  எளிதாகக் கிடைக்கின்றன  வழிகாட்டல்களும்  தாமாகத் தோன்றுகின்றன. முயற்சி செய்வதற்கு வேண்டிய ஆற்றலையும் , வெற்றி பெறுவதற்கு வேண்டிய திறமையையும் தருகின்றது 

No comments:

Post a Comment