Thursday, August 10, 2023

அனாதைக் குழந்தைகள்

 

அனாதைக் குழந்தைகள் அதிகமாகிவிட்டது என்றால் அனாதை ஆஷ்ரம் அமைத்து பாதுகாப்பீர்களா,அதற்கான செலவுகளை உங்கள் வருமானத்திற்குள் செய்வீர்களா இல்லை நன்கொடை வசூலிப்பர்களா ? இல்லை அரசாங்கம் கவனிக்குமாறு வற்புறுத்துவீர்களா ?

அனாதைகளை  பாதுகாப்பதை விட அவர்கள் உருவாக்கப்படுவதை தவிர்க்கவேண்டும் . பெரும்பாலும் தவறான உறவுகள் மூலம் உண்டாகும் குழந்தைகள் ,சாலை மற்றும் ரயில் விபத்துகள் ,இயற்கைப் பேரிடர் போன்றவற்றால் அனாதைகள் உருவாகிறார்கள் . பெரும்பாலும் அனாதை அஸ்ரமங்கள் வர்த்தக ரீதியில் நடைபெறுவதால் அனாதைகளை ஒரு சமுதாயப் பிரச்சனையாகக் கருதி அவர்களுக்களான சமுதாயப் பாதுகாப்பை அரசாங்கமே செய்யவேண்டும்...அனாதைகளுக்கு இலவச உணவு, கல்வி, உடை ,இருப்பிடம் போன்றவற்றை மக்களுக்கான மக்கள் அரசாங்கமே செய்யவேண்டும்

No comments:

Post a Comment