நாம் நம்முடைய சமுதாயத்திற்குத் தேவையான வசதிகளை ச் செய்து கொடுப்பதற்கும் தீயவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் தான் வரி காட்டுகின்றோம். ஆட்சியாளர்கள் தங்களுடைய எண்ணங்களைத் திணிப்பதற்காக இல்லை. ஆட்சியாளர்கள் எல்லோரும் தானே அரசனாக இருந்து ஆட்சிபுரியவேண்டும் என்றும் தனக்குப் பிறகு தன் வாரிசுகளே ஆட்சிபுரியவேண்டும் என்றும் பேராசைப்படுகின்றார்கள். நேர்மையான ஆட்சியில் கட்சிகள் இல்லை. வாரிசு ஆட்சிமுறையும் இல்லை. அந்தக்காலத்தில் மன்னராட்சியில் வாரிசுமுறை தொடர்ந்தது என்றால் இளவரசர்களுக்குப் போர் பயிற்சியும் ,நிர்வாகப் பயிற்சியும் கொடுக்கப்பட்டன. போர் என்பது மனித சமுதாயத்திற்கு அழிவை மட்டுமே தரக்கூடியது என்ற எண்ணம் பரவியபோது மன்னராட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டன . அது தன்னலம் மிக்கதாக அமைந்துவிட்டது
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Tuesday, June 3, 2025
மக்களிடம் காணப்படும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து சமுதாயத்தை பாழ் படுத்திவிடும் ..இதற்கு பொதுவாக மக்களே காரணமாக இருக்கின்றார்கள் . பொருளாதார ஏற்ற த் தாழ்வுகளை அகற்றி மக்கள் எல்லோரையும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க காவல் துறையும் சட்டத் துறையும் தேவையாக இருந்தன இவ்விரு துறைகளையும் நிர்வகிக்க மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டதே அரசியல்.அரசியல்வாதிகளுக்கு நிர்வாக உரிமையும் ,அதிகாரமும் வழங்கப்பட்டது.ஆனால் இன்றைக்கு நம் அரசியல்வாதிகள் தவறான செயல்களைச் செய்ய அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை த் தவறாக ப்பயன்படுத்துவத்தை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் .ஏழைகளை முன்னேற்றுகின்றேன் என்று தகுதியில்லாதவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு வேலையில் அமர்த்துகின்றார்கள் . தகுதி இல்லாதவனின் வேலை நாட்டை சீரழித்துவிடும் . பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அகற்றுகின்றோம் என்று இலவசவங்களை அறிவிக்கின்றார்கள் . இந்த இலவசங்கள் அறிவித்தபடி உரியவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் இலவசங்களை பெறுவதற்கு தகுதியானவர்களை சரியாக வரையறுத்து இனமறித்து கொள்வதற்கு முறையான திட்டமில்லாமையே ஆகும். அரசியல்வாதிகள் ,மற்றும் அவர்களுக்கு கூஜா தூக்கும் அதிகாரிகள் மட்டுமே ஏழைகளை ச் சுரண்டி பணம் சம்பாதிக்கிறார்கள் . மற்றபடி நேர்மையாக உழைக்கும் வர்க்கத்தினர் முன்னேற்றமின்றி காலத்தை கழிக்கிறார்கள். ஏழைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் நெடுந் தொலைவு . அது பெரும்பாலும் அரசியல்வாதிகளின் மயக்கும் மொழிகளில் மட்டுமே நிறைந்திருக்கின்றது .இன்றைக்கு பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு மக்களை விட அரசியல்வாதிகளே முதன்மைக்காரணமாக இருக்கின்றார்கள்.