Tuesday, June 3, 2025

 


     மக்களிடம் காணப்படும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து சமுதாயத்தை பாழ் படுத்திவிடும் ..இதற்கு பொதுவாக மக்களே காரணமாக இருக்கின்றார்கள் . பொருளாதார ஏற்ற த் தாழ்வுகளை அகற்றி மக்கள் எல்லோரையும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க காவல் துறையும் சட்டத் துறையும் தேவையாக இருந்தன இவ்விரு துறைகளையும் நிர்வகிக்க மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டதே அரசியல்.அரசியல்வாதிகளுக்கு நிர்வாக உரிமையும் ,அதிகாரமும் வழங்கப்பட்டது.ஆனால் இன்றைக்கு நம் அரசியல்வாதிகள் தவறான செயல்களைச் செய்ய அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை த்   தவறாக ப்பயன்படுத்துவத்தை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் .ஏழைகளை முன்னேற்றுகின்றேன் என்று தகுதியில்லாதவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு வேலையில் அமர்த்துகின்றார்கள் . தகுதி இல்லாதவனின் வேலை நாட்டை சீரழித்துவிடும் . பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அகற்றுகின்றோம் என்று இலவசவங்களை அறிவிக்கின்றார்கள் . இந்த இலவசங்கள் அறிவித்தபடி உரியவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் இலவசங்களை பெறுவதற்கு தகுதியானவர்களை சரியாக வரையறுத்து இனமறித்து கொள்வதற்கு முறையான திட்டமில்லாமையே ஆகும். அரசியல்வாதிகள் ,மற்றும் அவர்களுக்கு கூஜா தூக்கும் அதிகாரிகள் மட்டுமே ஏழைகளை ச் சுரண்டி பணம் சம்பாதிக்கிறார்கள் . மற்றபடி நேர்மையாக உழைக்கும் வர்க்கத்தினர் முன்னேற்றமின்றி காலத்தை கழிக்கிறார்கள். ஏழைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் நெடுந் தொலைவு . அது பெரும்பாலும் அரசியல்வாதிகளின் மயக்கும் மொழிகளில் மட்டுமே நிறைந்திருக்கின்றது .இன்றைக்கு பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு மக்களை விட அரசியல்வாதிகளே முதன்மைக்காரணமாக இருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment