Tuesday, June 3, 2025

 நாம் நம்முடைய சமுதாயத்திற்குத் தேவையான வசதிகளை ச் செய்து கொடுப்பதற்கும் தீயவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் தான் வரி காட்டுகின்றோம். ஆட்சியாளர்கள் தங்களுடைய எண்ணங்களைத் திணிப்பதற்காக இல்லை. ஆட்சியாளர்கள் எல்லோரும் தானே அரசனாக இருந்து ஆட்சிபுரியவேண்டும் என்றும்  தனக்குப் பிறகு தன் வாரிசுகளே ஆட்சிபுரியவேண்டும் என்றும்  பேராசைப்படுகின்றார்கள். நேர்மையான ஆட்சியில் கட்சிகள் இல்லை. வாரிசு ஆட்சிமுறையும் இல்லை. அந்தக்காலத்தில் மன்னராட்சியில் வாரிசுமுறை தொடர்ந்தது என்றால் இளவரசர்களுக்குப்  போர் பயிற்சியும் ,நிர்வாகப் பயிற்சியும் கொடுக்கப்பட்டன. போர் என்பது மனித சமுதாயத்திற்கு அழிவை மட்டுமே தரக்கூடியது என்ற எண்ணம் பரவியபோது மன்னராட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டன . அது தன்னலம் மிக்கதாக அமைந்துவிட்டது 

No comments:

Post a Comment