Tuesday, July 6, 2021

சுய முன்னேற்றத்தைப் பாதிக்கும் அகத்தடைகள்

 சுய முன்னேற்றத்தைப் பாதிக்கும் அகத்தடைகள் 

 

எல்லோரும் என்ன நினைக்கின்றார்கள் என்றால் அவர்களுடைய முன்னேற்றத்தில் ஏற்படும் தடங்கல்களுக்கும் ,  தடைகளுக்கும் மற்றவர்களே காரணமாக இருக்கின்றார்கள் என்றும் அதில் தங்களுக்கு ஒரு சிறிதும் பங்களிப்பு இல்லை என்றே  நம்புகின்றார்கள் . உண்மையில் ஒருவருடைய முன்னேற்றத்தில் அவரால் ஏற்படும் தடை மற்றவர்களால் ஏற்படும் தடையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகம். இது அகத்தடையாக இருப்பதால் தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தானே தடையாக இருப்பதை யாரும் அறிந்திருப்பதும்  இல்லை. சுட்டிக்காட்டினால் ஒப்புக்கொள்வதுமில்லை தனி மனித ஒழுக்கமின்மை ,மறைவொழுக்கத்தால் சமுதாய ஒழுக்க மீறல்கள் ,தொழில் திறமையின்மை ,நேரந் தவறுதல் , ஆளுமைத் திறமையின்மை , பேராசை , முயற்சியின்மை ,நோக்கமின்மை , ஆர்வமின்மை , நம்பிக்கையின்மை ,போன்ற பல அகத்தடைகளால்  ஒவ்வொருநாளும் எல்லோரையும்  எதோ ஒரு வகையில் சறுக்கி  விழுந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த சறுக்களுக்குத் தனக்குப் பிடிக்காத ஒருவரே காரணம்  என்று   .தீர்மானமாய் இருப்பதால் அவர்கள் அவர்களுடைய பிரச்சனைக்கு சரியான தீர்வு காணமுடியாமல் நீண்ட காலம்  தடுமாறி கொண்டிருப்பார்கள்.   .  

No comments:

Post a Comment