Wednesday, July 28, 2021

 புறத்தடைகள் பெரும்பாலும் ஒருவருக்கு அறிமுகமானவர்களால் ஏற்படுத்தப்படுகிறது. சிலர் கெடுதல் செய்வார்கள் .வேறுசிலர் உதவி செய்ய மறுத்துவிடுவார்கள் . தவறான வழிகாட்டி கேடு செய்பவர்களும்  உண்டு ..தானே மற்றவர்களைவிட  யர்ந்தவனாக இருக்கவேண்டும்  என மனத்திற்குள் ஒவ்வொருவரும் நினைப்பதால் . மற்றவர்கள் தன்னைக்காட்டிலும் உயர்ந்த நிலையை அடைந்துவிடக்கூடாது என்று கெடுதல்  செய்கின்றார்கள். எல்லா நேரங்களிலும் எவர் தன்னுடைய வேலைகளைத்    தானே செய்துமுடிக்கவேண்டும் என்று விரும்பிச் செயல்படு கின்றார்களோ  அவர்களுக்கு புறத்தடைகளின் பாதிப்பு    குறைவாகவே இருக்கும் .

 

தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தானே தடை யாக இருக்கமுடியாது  என்பதால் யாரும் அகத்தடைகளைப்பற்றி   அதிகம் சிந்திப்பதில்லை. புறத்தடைகளை இனமறிந்து அகற்றிக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் .எதிரிகளை நண்பனாக்கிக் கொள்ளலாம் ஆனால்  நண்பனாகவே  உடனிருக்கும் உள்ளெதிரியை அவ்வளவு  எளிதில் மாற்றிவிடமுடியாது.அதனால் புறத்தடைகளை விட அகத்தடைகளே ஒருவருடைய சுய முன்னேற்றத்திற்குச்  சத்தமின்றி சலனமின்றி அதிக அளவில் பாதிப்[[பாதிப்பை ஏற்படுத்துகின்றன      ..    

No comments:

Post a Comment