Monday, August 1, 2022

நெகிழியால் ஏற்படும் தீமைகளை தடுப்பது எப்படி ?

 

நெகிழியால் ஏற்படும் தீமைகளை தடுப்பது எப்படி ?

ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பாலிதீன் பைகளைப் பயன்படுத்தக் கூடாது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசுக்கும் உண்டு. பொதுவாக 

விவரம் புரியாமல் அதைப் பயன்படுத்தும்  பல இலட்சக்கணக்கான மக்களைக் கட்டுப் படுத்துவதை விட அதை உற்பத்தி செய்யும் ஒரு சில நூறு உற்பத்தியாளர்களைக் கட்டுப்படுத்துவதே மேலானது.பணம் வாங்கிக் கொண்டு சமுதாயக் கேடுகளை அனுமதித்தால் அதன் பின்விளைவு மக்களை மட்டுமின்றி அதை அனுமதித்தவர்களையும்  சேர்த்தே பாதிக்கும்..ஒரு அரசாங்கம் ஆட்சியாளர்களுக்குப்  பல வசதிகளைத் தருகின்றது என்று வரி  வருவாயில் மட்டும் குறியாக இருக்காமல் மக்கள் நலனையும் பாதுகாக்க வேண்டும் ,அது வெறும் வார்த்தைகளோடு அடங்கிவிடுவதில்லை

        பாலிதீன் பைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மக்கள். இலை, சணல் ,காகிதப் பை , துணிப் பை போன்றவைகளை மட்டுமே பயன்படுத்தினார்கள் அதையே மீண்டும் பயன்படுத்த மக்களை வழிபடுத்தலாம். தவிர்க்க முடியாத நேரத்தில் 40 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட தடித்த பிளாஸ்டிக் பைகளையாவது பயன் படுத்தலாம். இவை மறுசுழற்சி செய்யப்படக் கூடியவை .  . தேனீர் கடைகள் மற்றும் உணவகங்களில் தடித்த பேப்பர் மற்றும் பாக்கு மட்டைகளினால் ஆன குவளைகளைப் பயன்படுத்தலாம். நெகிழிப் பொருட்களில் 10% பொருள்களே 'மீண்டும் பயன்படுத்த'ப் படுகின்றன. 90% பொருட்கள் பெரும்பாலும்  எரிக்கப்பட்டுவிடுகின்றன.. இது புவி வளிமண்டலத்தை மாசு படுத்துவதற்கு முக்கியக் காரணமாக விளங்குகின்றது. எரிப்பதினால ஏற்படும் கரும் புகையும் கார்பன் டை ஆக்ஸைடு வளிமமும் வளிமண்டலத்தின்  ஆக்சிஜன் - கார்பன் டை ஆக்ஸைடு  சமநிலையைப் பாதிக்கின்றது. வளிமண்டலத்தில் கூடுதலாய்ச் சேரும் கார்பன் டை ஆக்ஸைடு புவியின் சராசரி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்றது.. இதனால் பூமியின் பருவங்கள் மாற்றம் பெறுகின்றது .துருவப் பகுதிகளில் உறைந்து கிடைக்கும் பனி மண்டலங்கள் உருகி கடலின் மட்டம் அதிகரிக்கக் காரணமாகின்றது. இதனால் தாழ்வான நிலப்பகுதிகளை நிரந்தரமாக இழக்கவேண்டிய நிலை ஏற்படும் நெகிழிகளை ஒருபோதும் எரிக்கக்  கூடாது  மக்காத குப்பையாகச் சேமித்து மறு சுழற்சிக்குப்  பயன்படுத்தும் அமைப்புகளிடன் வழங்கவேண்டும் . தூய மணலுடன் மக்னீசியத்தைக் கலந்து வேதி வினைகள் மூலம் உண்டாகும் சிலிகான் கூட்டுக் கனிமத்தை நெகிழிக்கு மாற்றாகப்ப் பயன்படுத்தலாம். இது இரப்பரைப் போல நீட்சியுறவும் , மீட்சியுறவும் தன்மையது எளிதில் தீப்பற்றாது . நெகிழியைப் போல எல்லா நற்பண்புகளை மட்டும் கொண்டுள்ளது. நெகிழியின் தீய பண்புகள் சிறிதும் இல்லை . இதன் உற்பத்தி பொருளாதார ரீதியில் இலாபகரமாக இல்லாததால் இது வணிக முறையில் இடம்பெறவில்லை

No comments:

Post a Comment